தைப்பூசம்
தைப்பூசம் (Thaipusam) தமிழர்களின் முக்கியமான ஆன்மீக திருநாளாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு தினங்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் சேர்ந்த நாள் தைப்பூசமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய தெய்வமாக முருகன் விளங்குவதால், அவரை வழிபடுவது வாழ்க்கை தடைகளை வெல்லும் சக்தியை தரும் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை பார்வதி, அசுரனை வதம் செய்ய முருகனுக்கு “வேல்” வழங்கியதாக ஐதீகம் கூறுகிறது. ஆகவே, வேல் என்பது அறிவு, தைரியம், தீய எண்ணங்களை வெட்டும் ஞான ஆயுதம் என மதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் போன்ற முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் கோலாகலமாக நடைபெறுகிறது.
தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..
Tragedy at the Thaipusam festival: இவ்விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்தனர். காலை 10 மணியளவில், பக்தர்கள் கயிறுகளைப் பிடித்து தேரை இழுத்தனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 2, 2026
- 11:37 am IST
தைப்பூச திருவிழா…முருகன் கோயில்களில் அரோகரா கோஷத்துடன் சிறப்பு வழிபாடு!
தைப்பூசத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். முருகன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Feb 1, 2026
- 15:50 pm IST
தைப்பூசம் கோலாகலம்.. அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம்!!
Thaipusam 2026: இன்று காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 1, 2026
- 08:11 am IST
நாளை தைப்பூசம் 2026.. விரத முறையும், வழிபாட்டு நேரமும்.. முருக வழிபாட்டின் முழு விவரம்!
Thaipusam 2026: முருகப்பெருமான் உண்மையான கடவுள், அவர் சத்தியமான தெய்வம். அவர் நெருப்புக்கு சமமானவர், அதனால்தான் நெருப்பிலே இருந்து தோன்றி இந்த உலக மக்களுக்கு மிக அழகா ஆனந்தமா அற்புதமான கருணைகளை வாரி வழங்குகிற வள்ளலாக நமக்கு காட்சி தருகின்றார். என்ன கேட்டாலும் தரக்கூடிய வள்ளல் யாருக்கு? சத்தியம் உள்ளவர்களுக்கு.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 31, 2026
- 14:27 pm IST
பழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்…குவிந்து வரும் பக்தர்கள்…பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!
Palani Dhandayuthapani Temple: பழனி தண்டாயுதபானி கோயிலில் தைப்பூசத்தையொட்டி, இன்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோயிலில் 3 ஆயிரம் போலீசார், 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- Gowtham Kannan
- Updated on: Jan 31, 2026
- 10:52 am IST
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா…இன்று ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி!
Adhiparasakthi Siddhar Peetam: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச நாளன்று ஆன்மீத ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது. இதற்கான ஆன்மீக ஜோதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சித்தர் பீடத்தில் ஏற்றப்படுகிறது. முன்னேற்பாடுகளை சித்தர் பீட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- Gowtham Kannan
- Updated on: Jan 31, 2026
- 09:58 am IST
மருதமலை முருகன் கோயில் தைப்பூசம்…இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
Marudhamalai Traffic Changes: மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, இன்று முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் போக்குவரத்து மாற்ற அறிவிப்பை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Jan 30, 2026
- 08:09 am IST
தைப்பூசம் – சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
Special Trains for Thai Poosam : தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தை பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் முருகர் கோவிலுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jan 29, 2026
- 19:00 pm IST
தைப்பூச திருவிழா..திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!
Tiruchendur Subramania Swamy Temple: தைப்பூசத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, அதற்கேற்றவாறு பக்தர்கள் தங்களது தரிசன திட்டமிடுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தைப்பூச முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- Gowtham Kannan
- Updated on: Jan 29, 2026
- 07:50 am IST
தைப்பூச திருவிழா…பொது மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ஏற்பாடு…நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Thaipusam Special Buses: தைப்பூசம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி, சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Jan 29, 2026
- 06:32 am IST
தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற.. தீப வழிபாட்டின் முக்கியம்சம்..
தீபத்தின் முன், உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை தெளிவாக நினைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, சொந்த வீடு, திருமணம், வேலை, கடன் தீர்வு போன்ற எதுவாக இருந்தாலும், அதை மனதில் உறுதியாக நினைத்து தீபத்தை பார்த்தபடி கீழ்க்கண்ட சக்திவாய்ந்த மந்திரத்தை ஆறு முறை சொல்ல வேண்டும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 27, 2026
- 14:26 pm IST
தைப்பூசம் 2026.. செல்வம் பெருக வீட்டில் இந்த 3 பொருட்கள் கட்டாயம் வேண்டும்..
Thaipusam 2026; தைப்பூசத் திருநாள் என்பது, பார்வதி தேவி தன் ஞானத்தின் வடிவமாக வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு வழங்கிய நாள் என்றும், சூரபத்மனை வதம் செய்ய முருகன் புறப்பட்ட புனித நாளாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தெய்வீக ஞானமும் செல்வ வளமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 26, 2026
- 22:28 pm IST
பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச கொடியேற்றம்…விண்ணை முட்டிய அரோகரோ கோஷம்!
Palani Dhandayuthapani Temple: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடி இன்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
- Gowtham Kannan
- Updated on: Jan 26, 2026
- 11:18 am IST
பழனி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா கொடியேற்றம்…பல்வேறு முன்னேற்பாடுகள்!
Palani Murugan Temple: தைப்பூச திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் தெரிவித்தார். இந்தக் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Jan 25, 2026
- 13:49 pm IST
தைப்பூச திருவிழா…பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Thaipusam Special Trains: தைப்பூசத் திருவிழாவையொட்டி, மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் எந்த தேதியில் இயக்கப்பட உள்ளது. எந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பன உள்ளிட்ட தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan
- Updated on: Jan 25, 2026
- 06:28 am IST