குளிர்காலம் முழுமையாகப் பரவி நிற்கும் இந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள லாதா தர் பகுதி, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. செனானி பகுதியில் அமைந்துள்ள இந்த இடம், இதுவரை அதிகமாக பயணிகள் அதிகம் செல்லாத பகுதி என்பதால், தூய்மையாக வெள்ளை பனியால் மூடப்பட்டு, இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஸ்ரீநகர், பட்னிடாப் போன்ற வழக்கமான சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பயணிகள், தற்போது அவற்றைத் தவிர்த்து, அமைதியும் இயற்கை அழகும் நிறைந்த லாதா தரை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.