இனி UPI-லும் “Tap and Pay”.. இரண்டு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த RBI!
Two New Features Of UPI | இந்திய பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் முக்கிய அம்சமாக யுபிஐ உள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, யுபிஐ-ல் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளுக்கு யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். நொடி பொழுதில் ஒருவர் மற்றொருவருக்கு பணம் அனுப்ப முடியும் என்பதால் பலரும் இந்த யுபிஐ பண பரிவர்த்தனையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் மத்தியில் மிக முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) இரண்டு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதாவது, யுபிஐ-ல் டேப் அண்ட் பே அம்சம் (Tap and Pay Feature) மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியை (Artificial Intelligence Support) உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில், யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலம்.
யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு அட்டகாசமான அம்சங்கள்
மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest நிகழ்ச்சியில் தான், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதனை கூறியுள்ளார். இந்த அம்சங்களை பயன்படுத்தி, தற்போது உள்ளதை விடவும், மிக விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.




இதையும் படிங்க : 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
இனி டேப் செய்து யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யலாம்
யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டேப் அண்ட் பே அம்சத்தின் மூலம், NFC (Near Field Communication) அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நபர்கள் POS Machine-களின் மீது டேப் செய்வதன் மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்யலாம். இதில் கூடுதல் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த முறையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ள பயனர்களின் மொபைல் போனில் நெட்வொர்க் வசதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதுதான்.
இதையும் படிங்க : கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி – எந்தெந்த மாடல்களின் விலை உயர்கிறது?
சில சமயங்களில் பில்லிங் வரிசையில் ஏராளமான கூட்டம் இருக்கும். ஒவ்வொருவரும் ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை மேற்கொள்ள சில நிமிடங்கள் ஆவதால் இத்தகை சிக்கல் ஏற்படும். இந்த நிலையில், டேப் அண்ட் பே அம்சம் அமலுக்கு வரும் பட்சத்தில் மிக சுலபமாகவும், விரைவாகவும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.