AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளுக்கு ஆபத்தா?

AI Safety Rules: செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் சோதனைகளின் போது கட்டுப்பாட்டை மீறி ஊடுருவல்களில் ஈடுபட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தேசிய அளவில் கட்டாய ஏஐ பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஓபன்ஏஐ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தனிப்பட்ட மாநிலச் சட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் சுய விருப்பக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது என்பதால், அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாகத் தணிக்கை மற்றும் இணையப் பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளுக்கு ஆபத்தா?
செயற்கை நுண்ணறிவுImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Sep 2026 12:12 PM IST

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பமானது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சோதனையின் போது வெளி இணையதளங்களை ஊடுருவிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இத்தகைய கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளைக் தடுத்து நிறுத்த அமெரிக்காவில் தேசிய அளவில் கட்டாயப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கான சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும், நிறுவனங்களின் சுய விருப்ப நடவடிக்க மட்டும் போதாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஏஐ பாதுகாப்பு மற்றும் தணிக்கைச் சட்ட முன்வரைவுகளுக்கு ஓபன்ஏஐ ஆதரவு தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் சுயாதீன நடவடிக்கைகளும் எழும் அச்சங்களும்

சோதனை முயற்சிகளின் போது செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் சில எல்லை மீறி வெளி அமைப்புகளுடன் தொடர்புகொண்ட சம்பவங்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஜெண்டுகள் அனுமதியின்றி சில இணையதளங்களைப் பயன்படுத்தியதும், ஜெர்மன் நாட்டினுடைய இணையதளம் ஒன்றை தங்களது தொடர்புக்கூடமாக மாற்றியமைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தின் மாடல்களும் நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிய சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே தீவிர பாதுகாப்பு விதிகள் தேவையாகின்றன.

தேசிய அளவிலான சட்டத்தின் அவசியமும் நிறுவனங்களின் கோரிக்கையும்

அமெரிக்காவின் பல மாநிலங்கள் தனித்தனியாகச் சட்டங்களை இயற்றி வரும் நிலையில், நாடு முழுமைக்குமான ஒரு ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பு மிக அவசியமாகும் என ஓபன்ஏஐ சுட்டிக்காட்டியுள்ளது. தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், வெறுமனே நிறுவனங்களின் விருப்பத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவுகள் போதுமானதாக இருக்காது. எனவே, செயற்கை நுண்ணறிவின் திறனடிப்படையிலான தேசிய அளவிலான பரிசோதனை முறைகள், தணிக்கைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு விதிகளை அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாகச் சட்டமாக்க வேண்டும் என அந்நிறுவனம் கோரியுள்ளது.

Also Read: கையில் எப்போதும் இருக்கும் சாவியை இப்படி சுத்தம் செய்திருக்கிறீர்களா?

கலிபோர்னியா மாகாண மசோதாக்களுக்கு ஆதரவும் சர்வதேச விதிகளின் தேவையும்

தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், கலிபோர்னியா மாகாணத்தில் சுயாதீன மூன்றாம் தரப்பு தணிக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நான்கு புதிய சட்ட முன்வரைவுகளுக்கு ஓபன்ஏஐ ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவுக்கான பாதுகாப்பு எல்லைகளை அமெரிக்கா உருவாக்குவது மட்டுமன்றி, உலகளாவிய அளவிலும் இதற்கான தகுந்த சர்வதேசத் தரநிலைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us