Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாயுடன் தவறான உறவு…4 வயது குழந்தை மீது விழுந்த ஆபாச பார்வை..அடுத்து நடந்த விபரீதம்!

Thoothukudi Crime: தூத்துக்குடியில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து தாயின் கள்ளக்காதலன் கொலை செய்தார். இதில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் அவரது பெண் குழந்தை பலியாகியுள்ளது.

தாயுடன் தவறான உறவு…4 வயது குழந்தை மீது விழுந்த ஆபாச பார்வை..அடுத்து நடந்த விபரீதம்!
குழந்தையை பாலியல் கொலை செய்தவர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 23 Jan 2026 07:59 AM IST

தூத்துக்குடி மாவட்டம், ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் இசக்கி ராஜ் (20 வயது). இவருக்கும் குலசேகரப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்து வந்தது. அப்போது, அங்கு சென்று வந்த இசக்கி ராஜுக்கும், அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே 4 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் உடன்குடியில் உள்ள செட்டியாபாத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு மாறினார். அங்கு, அடிக்கடி இசக்கி ராஜ் சென்று வந்தார். அப்போது, அந்த இளம் பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற இசக்கி ராஜ் அந்த பெண்ணின் 4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில், திடீரென மயக்கம் அடைந்த அந்த குழந்தையை இசக்கி ராஜும், குழந்தையின் தாயும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தையின் உடலில் நக கீறல்கள்

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில், குழந்தையின் உடலில் நக கீறல்கள் இருப்பதும், பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனால், இசக்கி ராஜா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

மேலும் படிக்க: கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக்குத்து – கோவையில் பயங்கரம் – காரணம் இதுவா?

4 வயது குழந்தை மீது விழுந்த ஆபாச பார்வை

இதில், அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் சம்பவத்தன்று அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றேன். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனால், எனது பார்வை அவரது 4 வயது மகள் மீது விழுந்தது. அப்போது, அந்த குழந்தையை நான் பாலியல் ரீதியாக அணுகினேன். இதில், திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியது. அப்போது, அங்கு வந்த குழந்தையின் தாயிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்த போது, மூக்கின் வழியாக தண்ணீர் வந்து குழந்தை மயங்கியதாக தெரிவித்து நாடகம் ஆடினேன்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

இதை தொடர்ந்து, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, மருத்துவர்கள் பரிசோதத்தில் குழந்தை உயிரிழந்ததும், பிரேத பரிசோதனை அறிக்கையில் நான் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!