கோவை ஸ்மார்ட் சிட்டி: ஆத்துப்பாலம், போத்தனூரில் மிளிரும் புதிய பிரம்மாண்ட சிற்பங்கள்… பொதுமக்கள் நெகிழ்ச்சி!
Coimbatore Smart City New Sculptures: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆத்துப் பாலம் மற்றும் போத்தனூர்-குறிச்சி பிரிவு சந்திப்புகளில் பஞ்சபூதங்கள், இயற்கை பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் பிரம்மாண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகரின் பாரம்பரியம், விவசாயத்தின் பெருமை மற்றும் இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆத்துப்பாலம் சந்திப்பு மற்றும் போத்தனூர்–குறிச்சி பிரிவு சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிற்பங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Published on: Jul 26, 2026 02:40 PM
Follow Us
