பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
We The Leaders அமைப்பின் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு!
We The Leaders அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை பொள்ளாச்சியில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வரத் தொடங்கினர். அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டி பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.
- Sekaran S
- Updated on: Jul 13, 2026
- 12:33 am IST
தண்ணீருக்காக ஆற்றங்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.. அழகிய டிரோன் காட்சிகள்!!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியை கடந்து கடந்து செல்லும் யானை கூட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானி நதி. சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றின் கரையோய பகுதியான டேம்காடு என்னுமிடத்தில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டங்களின் அழகிய டிரோன் கேமரா காட்சிகள் காண்போரை கவர்ந்து வருகிறது.
- Sekaran S
- Updated on: Jul 12, 2026
- 2:23 pm IST
கோவை கல்லூரி விடுதி பாத்ரூமில் மாணவி சடலமாக மீட்பு – பெண்ணின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக விடுதி குளியல் அறையில், பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
- Sekaran S
- Updated on: Jul 11, 2026
- 3:10 pm IST
கோவை மாணவர் இந்திய பேட்மிண்டன் அணிக்கு தேர்வு – ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பு
சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க, கோவையைச் சேர்ந்த இளம் பேட்மிண்டன் வீரர் நிகில் இந்திய அணிக்குத் தேர்வாகி, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த சிறப்பான செயல்திறனின் அடிப்படையில், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
- Sekaran S
- Updated on: Jul 11, 2026
- 6:24 pm IST
கோவை அருகே மலையில் திடீர் என பெரும் சத்தத்துடன் மண் சரிவு – அதிர்ச்சி வீடியோ
கோயம்புத்தூர் மாவட்டம் எட்டிமடை பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா கல்லூரி பின் உள்ள மலையில் தீடீர் என பெரும் சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Sekaran S
- Updated on: Jul 10, 2026
- 7:21 pm IST
“விஜய் முதல்வரானது மகிழ்ச்சி; ஆனால் நடிகராக மிஸ் பண்றோம்” – ஐஸ்வர்யா லட்சுமி
கடலூரில் கட்டா குஸ்தி 2 திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விஜய் தமிழ்நாடு முதல்வரானது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். "கருத்துக்கணிப்பில் குறைவான இடங்களே கூறப்பட்டபோதும் மாற்றம் வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அவர் முதல்வரானது மகிழ்ச்சி. ஆனால், நடிகையாக விஜயை திரையில் மிஸ் பண்றோம்" என்றார். மேலும், விளையாட்டை கற்றுக்கொள்வது ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் என்றும் கூறினார்.
- Sekaran S
- Updated on: Jul 9, 2026
- 9:59 pm IST
காங்கிரஸ் பிரமுகரை காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் – கோவையில் பரபரப்பு
கோயம்புத்தூரில் காங்கிரஸ் பிரமுகரை காரில் கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். விசாரணையில் வேறு ஒருவரை மாற்றி கடத்தியது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவரிடம் செல்போன், கார் சாவி மற்றும் வீட்டுச்சாவியை பறித்துக்கொண்டு அவரை பாலக்காடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றது.
- Sekaran S
- Updated on: Jul 9, 2026
- 11:02 am IST
கோவையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பிரிகால் நிறுவன ஊழியரான சசிகுமார் (37) உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Sekaran S
- Updated on: Jul 8, 2026
- 9:29 pm IST
கல்லூரி பட்டமளிப்புவிழாவில் தவெக கொடி வண்ணத்தில் அலங்காரம் – மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் நீக்கம்
கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா பங்கேற்றார். இந்த நிலையில், சட்டக்கல்லூரியில் தவெக கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட பேக்டிராப், மாணவர்கள் கேள்வியெழுப்பிய பின்னர் நீக்கப்பட்டது. மேலும் புலி உருமுது பாடல் பேண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதும் சர்ச்சையானது.
- Sekaran S
- Updated on: Jul 8, 2026
- 9:29 pm IST
கோவையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொலை குறித்து முறையான விசாரணை நடக்காததால் போலீசின் அலட்சியத்தாலும் இந்த கொலை நடந்தது என்று இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- Sekaran S
- Updated on: Jul 7, 2026
- 9:00 pm IST
கோயம்புத்தூரில் ஆவினில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயலட்சுமி!
கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை கேட்டறிந்தார். மேலும் விற்பனை மற்றும் இருப்பு குறித்த பதிவுகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
- Sekaran S
- Updated on: Jul 7, 2026
- 8:56 pm IST
ஏஐ உதவியால் யானைகள் உயிரிழப்பு முற்றிலும் தடுப்பு – குவியும் பாராட்டு
மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுக்கரை பாலக்காடு ரயில்வே பாதையில் யானைகளின் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
- Sekaran S
- Updated on: Jul 7, 2026
- 5:13 pm IST