கோவையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பிரிகால் நிறுவன ஊழியரான சசிகுமார் (37) உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பிரிகால் நிறுவன ஊழியரான சசிகுமார் (37) உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us