மகாராஷ்டிராவின் லோகட் கோட்டையில் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் முதலில் விபத்தாக கருதப்பட்டது. ஆனால், அவரது நிச்சயதார்த்தப் பெண் சியா கோயலிடம் கேதனின் சகோதரி சஞ்சனா எழுப்பிய கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் கிடைத்ததால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், சியா மற்றும் அவரது காதலர் சேதன் சௌதரி இணைந்து கேதனை கொலை செய்ய சதி செய்ததாக தெரியவந்தது.