அந்த படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாதது வருத்தமாக இருந்தது – நடிகர் அசோக் செல்வன்
Actor Ashok Selvan | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அவரது நடிப்பில் முன்னதாக வெளியான படம் ஒன்று திரையரங்குகளில் சரியாக செல்லவில்லை என்பது வருத்தமளிப்பதாக தெரிவித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகின்றார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்து உள்ளார். தொடர்ந்து இந்த அன்பில் அவன் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சமீபத்தில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் வெளியானது. அந்த அடிப்படையில் படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் அசோக் செல்வன் கலந்துகொண்ட போது அவரது நடிப்பில் முன்னதாக வெளியான நித்தம் ஒரு வானம் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாதது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துளார்.




அந்த படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாதது வருத்தமாக இருந்தது:
அந்த பேட்டியில் அசோக் செல்வன் பேசியதாவது, அப்படிப்பட்ட படங்கள் பல உள்ளன. நித்தம் ஒரு வானம் அத்தகைய படங்களில் ஒன்று. நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) வெளியான பிறகு, பலர் இப்படத்தைக் கவனித்து அதைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திரையரங்குகளில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; அது எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது, அதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். அதில் நான் ஏற்ற கதாபாத்திரம் சவாலானதாக இருந்தது. அதே சமயம், நாங்கள் படப்பிடிப்பு நடத்திய சூழலும் கடினமாக இருந்தது. திரையரங்குகளில் படம் சரியாக ஓடாதபோது நான் மிகவும் மனமுடைந்து போனேன்.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, மக்கள் இப்படத்தைப் பற்றி மிகவும் சிறப்பாகப் பேசத் தொடங்கினார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், திரையரங்குகளில் படம் சரியாக ஓடாதது குறித்த ஒரு சிறிய வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது. இந்தப் படம் தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகப் பலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறார்கள். இதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: If a good film had released at the right time, the audience might have paid a little more attention to it.#AshokSelvan: There are many films like that. #NithamOruVaanam is one such film. After it came to #Netflix, a lot of people noticed it and spoke highly about it.… pic.twitter.com/8Tb8tMIBkc
— Movie Tamil (@_MovieTamil) September 9, 2026
Also Read… தனி ஒருவன் 2 – மிருதன் 2 படங்கள் குறித்து அப்டேட் கொடுத்து நடிகர் ரவி மோகன்!