AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைவது உறுதி.. எந்த இடத்தில் தெரியுமா.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Tamilnadu New Secretariat : சென்னை பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், திட்டங்களை செயல்படுத்துவதற்காக 3 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடியில் 16 மாடிகளுடன் அமைகிறது.

ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைவது உறுதி.. எந்த இடத்தில் தெரியுமா.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் புதிய தலைமை செயலகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Sep 2026 17:27 PM IST

தமிழக அரசின் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, இட நெருக்கடி ஏற்பட்டு வருவதன் காரணமாக புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில், ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்ட இருப்பதாக முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரைக்கு அருகே ரூ.1.200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தும் வகையில்,

  • கட்டடக்கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனை குழு.
  • கட்டட வடிவமைப்பு தயார் செய்வதற்காகன குழு.
  • வரைபடம் தயாரிப்பதற்கான குழு ஆகிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை பொதுப் பணித் துறை தயார் செய்ய வேண்டும் என்று அரசின் பொதுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தலைமை செயலகமானது

  • சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 16 மாடிகளுடன் அமைய உள்ளது.
  • அனைத்து துறை செயலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் அறைகள் அமைக்கப்பட உள்ளன.
  • ஒரே இடத்தில் அனைத்து துறைகளையும் அணுகும் வகையில் தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதற்கான நிலத்தின் வழிகாட்டி மதிப்பு ரூ.2,047 கோடி.
  • புதிய தலைமைச் செயலாக வளாகத்தின் திட்ட மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும்.

3 துறைகளிடம் இருந்து பெறப்பட்ட நிலம்

இந்த தலைமைச் செயலகம் அமைப்பதற்கான நிலமானது வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி, வருவாய் துறை ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.  கடந்த 1958- ஆம் ஆண்டு தமிழக அரசால் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டடங்கள் மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் அவை இடித்து அகற்றப்பட்ட நிலையில் இடம் காலியானதாக இருந்தது. தற்போது, அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளது.

கோட்டையிலிருந்து பட்டினப்பாக்கத்துக்கு மாறும் தலைமை செயலகம்

இந்த இடத்துக்கு அருகே காந்தி சிலை உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிறுத்தங்கள் உள்ளன. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மெட்ரோ ரயில்கள் மூலமாகவும் பட்டினப்பாக்கம் தலைமை செயலகத்திற்கு விரைவாக வந்து செல்லலாம். மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்படும் புதிய தலைமை செயலத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை கோட்டையில் இருந்து பட்டினப்பாக்கத்திற்கு தலைமைச் செயலகம் மாற உள்ளது.

மேலும் படிக்க: தவெக வேட்பாளர்கள்… இந்த இருவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு.. நாளை பட்டியல் வெளியீடு?

Follow Us