
Spiritual Events
ஆன்மிக நிகழ்வுகள்
இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்
Kallazhagar Vaigai Entry: கள்ளழகர் உடுத்தும் பட்டின் நிறம்.. என்ன அர்த்தம் தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 2025 மே 12 அன்று நடைபெற உள்ளது. கள்ளழகர் எந்த நிறப் பட்டு உடுத்தி வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பச்சை நிறம் செழிப்பையும், சிவப்பு நிறம் எதிர்பாராத நிகழ்வுகளையும் குறிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 11, 2025
- 09:33 am
Sani Prathosam: சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
2025 மே மாதத்தில் வரும் இரண்டு பிரதோஷ தினங்களும் சனிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாக உள்ளது. பிரதோஷம் என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சிவ, பார்வதி வழிபாடு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம், வியாபார வளர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: May 10, 2025
- 10:45 am
சித்ரா பௌர்ணமி.. லட்சுமி தேவியை இப்படி வழிபட்டால் புண்ணியம் கிட்டும்!
சித்ரா பௌர்ணமி 2025 மே 12 அன்று வருகிறது. இந்து சமயத்தில் மிக முக்கியமான இந்த நாளில், லட்சுமி தேவி வழிபாடு, தான தர்மங்கள் செய்வது மிகுந்த பலனளிக்கும். வெள்ளை இனிப்புகள், பாயசம், தேங்காய், தாமரை மலர் போன்றவற்றை லட்சுமிக்கு காணிக்கையாகப் படைக்கலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 9, 2025
- 17:31 pm
சித்ரா பௌர்ணமி.. இந்த 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி 2025 மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், வீட்டின் நான்கு இடங்களில் விளக்கு ஏற்றுவது செல்வம், மகிழ்ச்சி மற்றும் கடன்களில் இருந்து விடுபட உதவும் என நம்பப்படுகிறது. விஷ்ணு, லட்சுமி, அன்னபூரணி தேவியை வழிபடுவதும் மங்களகரமானது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 8, 2025
- 16:47 pm
Narasimha Jayanthi 2025: நரசிம்ம ஜெயந்தி அன்று இதெல்லாம் கண்டிப்பாக செய்யாதீங்க!
2025 ஆம் ஆண்டு மே 11 அன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தீமையை வென்ற நன்னாளாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, பூஜைகள் செய்கின்றனர். நரசிம்மரை வழிபடும் போது, மனதில் நேர்மறையான எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 16:45 pm
Sani Pradhosm: சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?
2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில் சனி பிரதோஷம் வருகிறது. சிவபெருமானுக்குரிய இந்த முக்கிய தினத்தில், கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக வழிபடலாம். சூரிய உதயத்திற்கு முன் நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 5, 2025
- 17:32 pm
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? – வழிபாடு முறைகள் இதோ!
சித்திரை வளர்பிறை தசமியான வாசவி ஜெயந்தி, மே 6, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. ஆதிபராசக்தியின் அவதாரமான வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், வழிபாட்டு முறைகள், பின்னணி கதை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் இங்கு காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 4, 2025
- 09:35 am
நரசிம்ம ஜெயந்தி எப்போது? – இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
திருமாலின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் அவதரித்த நாளே நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நரசிம்மரை வழிபடுவதன் முக்கியத்துவம், விரதம் இருக்கும் முறை, பூஜை செய்யும் விதம், மற்றும் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் ஆகியவை பற்றி நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 2, 2025
- 11:02 am
Tiruttani: திருத்தணி சித்திரை திருவிழா.. திருத்தேரோட்டம் எப்போது தெரியுமா?
திருத்தணி முருகன் கோயிலில் 2025 மே 1ம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழா, மே 8 வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா, திருத்தேர் பவனி, திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதனைப் பற்றி நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 14:48 pm
மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?
சித்திரை மாத திருவாதிரை நாளில் கடைபிடிக்கப்படும் ஸ்ரீ லாவண்ய கௌரி விரதம், சஸபதி முனிவரின் தவத்தின் பயனாக உருவானது. இந்த விரதம் பெண்களின் மாங்கல்ய பலத்திற்கும், திருமணமானவர்களின் வாழ்வில் இணக்கத்திற்கும் உதவும் என நம்பப்படுகிறது. விரத நடைமுறைகள், பூஜை முறை பற்றி நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 11:01 am
Guru Peyarchi 2025: குருபெயர்ச்சி 2025 எப்போது?.. மேஷ ராசிக்கான பலன்கள் இதோ!
2025-ம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு நடைபெறுகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் குருவின் இருப்பு நல்ல பலன்களைத் தரும். திருமணத் தடைகள் நீங்கும், தொழில் வளர்ச்சி அமையும். பணியிடத்தில் உயர்வு, வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:42 am
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!
சித்ரா பௌர்ணமி, இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பண்டிகையாகும். சித்திரை மாத பௌர்ணமியான இந்நாள், சித்ரகுப்தன் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபாடு செய்வதால் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விசேஷ தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், வீடுகளில் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:43 am
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
மே மாதம் பல முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் உள்ளது. இந்த மாதம் ஏராளமான சுப நாட்கள் மற்றும் கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டுள்ளது. சித்திரை, வைகாசி மாதங்களின் சுபமுகூர்த்தம், அக்னி நட்சத்திரம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், ராகு-கேது மற்றும் குரு பெயர்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:43 am
மதுரை சித்திரை திருவிழா.. கொடியேற்றம் முதல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரை!
2025 ஏப்ரல் 29 முதல் மே 17 வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைபவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் தேதி, நேரம் ஆகியவை பற்றி பார்க்கலாம். இந்த திருவிழா தென்மாவட்டங்களின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:44 am