Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

Aani Month: மாதப்பிறப்பு முதல் திருமஞ்சனம் வரை.. ஆனி மாதத்தின் முக்கிய தினங்கள்!

ஆனி மாதம், தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சுப நாட்கள் வருகின்றன. அருணகிரிநாதர், பெரியாழ்வார் போன்றோரின் பிறந்தநாளும் இம்மாதத்தில் வருகிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

ஆடி மாத ஆன்மிகப் பயணம் – இலவசமா? யார் விண்ணப்பிக்கலாம்? அமைச்சர் சேகா்பாபு சொன்ன தகவல்

Free Spiritual Tour: தமிழ்நாட்டில் ஆடி மாதத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு 60–70 வயதுக்குட்பட்ட ஹிந்து மதத்தவருக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் உள்ளோர் 2025 ஜூலை 11க்குள் விண்ணப்பிக்கலாம். பயணங்கள் 2025 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 15 வரை ஐந்து நாள்களாக நடைபெறும்.

Tirunelveli: 2025 நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் எப்போது தெரியுமா?

Nellaiappar Car Festival: 2025 ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயிலின் ஆனித்தேரோட்டம் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 1505 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 450 டன் எடையுள்ள சுவாமி தேர், 518 ஆண்டுகளாக மனித சக்தியால் இழுக்கப்பட்டு வருகிறது. பத்து நாள் விழாவின் 9-வது நாளில் நடைபெறும் இந்தத் தேரோட்டம், தென் தமிழகத்தில் பிரபலமானதாகும்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்!

வைகாசி விசாக தினத்தன்று, தமிழக முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முருகப்பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் இந்த தினத்தில் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களும் செலுத்தி வழிபடுகின்றனர்.

Tiruchendur: நோட் பண்ணுங்க.. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

Tiruchendur Murugan Temple Festival: முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் 2025, ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புரனமைப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேரம் குறிப்பதில் குழப்பம் நிலவி வந்தது. தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

Palani: களைகட்டும் பழனி.. வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினசரி சுவாமி வீதி உலா, திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஜூன் 8 அன்று திருக்கல்யாணமும், ஜூன் 9 அன்று திருத்தேரோட்டமும் நடைபெறும்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?

வைகாசி விசாக நாளில் வீட்டில் முருகப்பெருமானை வழிபடுவது எப்படி என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய நாளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, முருகன் சிலை அல்லது வேலுக்கு பால், பன்னீர், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பது எப்படி? – இதோ வழிமுறைகள்!

வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதார தினமாகும். இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பானதாகும். இந்நாளில் உண்ணா நோன்பு அல்லது பால், பழம் உண்டு விரதம் இருக்கலாம். முருகன் மந்திரங்கள், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்வதும், கோயில்களில் வழிபாடு செய்வதும் முக்கியமானதாகும்.

June Month: “வைகாசி விசாகம், அமாவாசை, பௌர்ணமி” – ஜூன் மாத விசேஷ தினங்கள்!

ஜூன் மாதம் முக்கிய விசேஷ தினங்கள் பற்றிப் பார்க்கலாம். இந்த மாதத்தில் முருகனுக்குரிய நாளாக வைகாசி விசாகம் வருகிறது. அதேபோல் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையும் வருகிறது. அதேபோல் சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட பல்வேறு தினங்கள் எப்போது வருகிறது என பார்க்கலாம்.

வைகாசி விசாகம்.. முருகனுக்கு 11 நாட்கள் விரதம்.. இவ்வளவு பலன்களா?

வைகாசி விசாகம், முருகப்பெருமானின் அவதார தினமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்நாள் ஜூன் 9 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் பக்தர்கள் 11 நாட்கள், 6 நாட்கள் அல்லது விசாக தினத்தன்று விரதம் இருந்து வழிபடுகின்றனர். இந்த விரதம் குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி, திருமணம் போன்றவற்றிற்கு உதவும் என நம்பப்படுகிறது.

Eid al-Adha: 2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? – தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் காஜி அலுவலகம் 2025 ஆம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்தத் திருநாளில், சிறப்பு தொழுகைகள், விலங்குப் பலியிடுதல் மற்றும் ஈகை நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும். இது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும்

Vaikasi Visakam 2025: கேட்டதெல்லாம் அருளும் முருகன்.. வைகாசி விசாகம் விரதத்தின் பலன்கள்!

வைகாசி விசாகம், முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். 2025-ம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமண வரன் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என சொல்லப்படுகிறது.

2025 வைகாசி விசாகம் எப்போது? .. முருகனுக்குரிய நாள் உருவான கதை!

2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி வருகிறது. இது முருகப்பெருமானின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்ததன் பொருட்டு முருகனை சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்த தீப்பொறிகள் மூலம் உருவாக்கினார். இந்நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விரதம் இருந்து முருகனை வழிபடுவது பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? – ஆன்மிக வழிகள் இதோ!

சனி ஜெயந்தி 2025 மே 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானுக்கு பிரார்த்தனை செய்தல், எண்ணெய் தானம் செய்தல், கருப்பு எள், உளுந்து போன்றவற்றை தானம் செய்தல் போன்ற நற்செயல்கள் செய்யலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சனி பகவான் மந்திரங்களை ஓதுவதும் புண்ணியமானதாக பார்க்கப்படுகிறது.

வைகாசி அமாவாசை.. ஒரே இடத்தில் கூடும் 12 சிவபெருமான்.. எங்கு தெரியுமா?

வைகாசி அமாவாசை 2025 மே 26 அன்று வருகிறது. சீர்காழியில் 12 சிவாலயங்களில் இருந்து 12 ரிஷப வாகனங்களில் ஈசன் வருகை தந்து திருநாங்கூரில் கூடி மதங்க மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பது புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம் குடும்ப பிரச்னைகள், தொழில் தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...