AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

நிம்மதி பெருக: ஆடி அமாவாசை 2026 அன்று இதை செய்ய தவறாதீர்கள்!

Aadi Amavasya 2026: வரவிருக்கும் ஆகஸ்ட் 12, 2026 அன்று அனுசரிக்கப்படும் ஆடி அமாவாசை முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெறுகின்ற மிக முக்கியமான புனித நாளாகும். இந்நாளில் ராமேஸ்வரம் போன்ற புனித நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலும் மக்கள் பெருமளவில் கூடி மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

முன்ஜென்ம ஆசை: உங்கள் மறுபிறவியின் ரகசியம் இதுதானா?

Past Life Desires: மனிதனின் உடல் அழிந்தாலும் நிறைவேறாத ஆசைகளும் லட்சியங்களும் ஆன்மாவின் கர்மப் பதிவுகளாகத் தொடர்வதால், அவற்றை நிறைவேற்றிக் கொள்ளவும் அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் பிரபஞ்சம் மறுபிறவி எனும் வாய்ப்பை அளிக்கிறது. இருப்பினும், முற்பிறவி ஆசைகள் இந்த ஜென்மத்தில் முழுமையடைய பிரபஞ்சம் தரும் வாய்ப்புகளோடு, மனிதனின் சுயமுயற்சியும் புண்ணிய கர்ம பலன்களும் மிக அவசியமாகும்.

பிரியாணி இலை வைத்தால் வீட்டில் நல்ல ஆற்றல் பெருகுமா?

Bay Leaves: பிரியாணி இலை உணவிற்கு நறுமணத்தை அளிப்பதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் மற்றும் அமைதியை வரவேற்கும் பாரம்பரிய அடையாளமாகவும் பலரால் நம்பப்படுகிறது. இதுபோன்ற சடங்குகள் மனநிம்மதியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க உதவலாம் என்றாலும், எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்ற கருத்துக்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

சுக்கிரன் – கேது சேர்க்கை: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்குமா?

Zodiac Signs: சுக்கிரன் மற்றும் கேது ஒரே ராசியில் இணைவது முக்கியமான கிரக அமைப்பாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. தொழிலில் புதிய வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு கிடைக்கும் சூழல் உருவாகலாம்.

பால்கனியில் காகம் கூவினால் நல்லதா? கெட்டதா? ஜோதிட ரகசியங்கள்!

Crow Astrology: வீட்டின் பால்கனியில் காகம் அடிக்கடி வந்து கூவுவது விருந்தினர்களின் வருகை மற்றும் சுபசெய்திகள் வரப்போவதைக் குறிக்கும் நல்ல சகுனமாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. மேலும், காகங்கள் பித்ருக்களின் (முன்னோர்கள்) வடிவமாகப் பார்க்கப்படுவதால், இந்த நிகழ்வு அவர்களின் ஆசியையும் நினைவூட்டலையும் உணர்த்துகிறது.

வாஸ்துப்படி உங்கள் வீட்டு வாசலுக்கு ஏற்ற மிதியடியின் நிறம் என்ன?

Vastu Doormat Rules: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் திசைக்கு ஏற்ப மிதியடியின் நிறம் மற்றும் வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் செல்வ வளத்தையும் கொண்டுவரப் பெரிதும் உதவுகிறது. கிழக்கு மற்றும் வடக்கு திசை வாசல்களுக்குப் பச்சை, நீலம் அல்லது மஞ்சள் நிறத்தில் சதுர/செவ்வக வடிவ மிதியடிகளையும், மேற்கு மற்றும் தெற்கு வாசல்களுக்கு வெள்ளை, சாம்பல் அல்லது சிவப்பு நிறத்தில் வட்டம்/சதுர வடிவ மிதியடிகளையும் பயன்படுத்துவது மிகவும் நன்மையளிக்கும்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் இடுக்கு பிள்ளையாரை வழிபட தவறக்கூடாது ஏன்?

Idukku Pillayar Temple: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில், குறுகிய குகை போன்ற அமைப்பைக் கொண்ட மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலமாகும். இடைக்காட்டு சித்தர் பதித்த யந்திரங்களின் சக்தியால், பக்தர்கள் இக்குறுகிய வழியில் ஊர்ந்து சென்று வழிபாடு செய்யும் அபூர்வ நிகழ்வு இங்கு நடைபெறுகிறது.

8 அணா முதல் உலகப் புகழ் வரை: திருப்பதி லட்டின் சுவைமிகு பயணம்!

Tirupati Laddu: பல்லவர் காலத்தில் பக்தர்களின் பசி தீர்க்கத் தொடங்கப்பட்ட 'திருப்பொங்கம்' பிரசாதமே திருமலை நைவேத்திய மரபின் தொடக்கமாகும். பல நூற்றாண்டுகளாக வடை, அதிரசம், பூந்தி எனப் பல்வேறு வடிவங்களை எடுத்த பிரசாத முறை, 1940-ஆம் ஆண்டில் லட்டாக உருவெடுத்தது. தொடக்கத்தில் எட்டு அணாவிற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரசாதமாக விளங்குகிறது.

மண்ணின் மகிமையை பேசும் காஞ்சியின் ஏகாம்பரநாதர் திருக்கோயில்!

Ekambaranathar Temple: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில், பஞ்சபூதத் தலங்களில் பூமி தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புனித சிவாலயமாக போற்றப்படுகிறது. பார்வதி தேவியின் தவத்துடன் தொடர்புடைய தலமாக பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். தொன்மையான மாமரம், பிரம்மாண்டமான கோபுரம் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

வடக்கு திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை வைக்கலாமா? சாஸ்திரம் கூறும் உண்மை!

Living People Photos: வடக்கு திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை வைப்பது வாஸ்து நம்பிக்கையின்படி நல்ல பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது. மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களை அங்கு வைக்காமல் தெற்கு சுவரில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. வடக்கு சுவரை சுத்தமாக வைத்திருப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பதும் வாஸ்து கருத்தாகும்.

தென்னாப்பிரிக்காவில் ஒலிக்கும் ‘சமயபுரத்தாள்’ நாமம்

Samayapuram Mariamman: தென்னாப்பிரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் டர்பன் நகரில் கோயில் அமைத்துச் சமயபுரம் மாரியம்மனைத் தங்களின் காவலா தெய்வமாக வழிபட்டனர். ஸ்ரீரங்கநாதரின் தங்கையான இவருக்குத் தைப்பூசம் மற்றும் சித்திரை விழாக்களின் போது ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில்களில் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன.

ஆடி பௌர்ணமி கிரிவலம்: இந்த நேரத்தில் வலம் வந்தால் என்ன பலன் தெரியுமா?

Aadi Pournami Girivalam Time: ஆடி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்வது சிவபெருமானின் அருளைப் பெறும் சிறப்பு வழிபாடாக கருதப்படுகிறது. முழுநிலவு நாளில் பக்தியுடன் மலையை வலம் வருவது மன அமைதியையும் ஆன்மிக நிறைவையும் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மாலை நேரத்தில் பெருமாளை வழிபட ஏன் சிறந்த நேரமாக கருதப்படுகிறது?

Vishnu Muhurat: விஷ்ணு முகூர்த்தம் என்பது மாலை நேரத்தில் பெருமாளை பக்தியுடன் வழிபட உகந்த ஆன்மிக நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் விளக்கேற்றி, திருநாமம் ஜபித்து வழிபடுவது மன அமைதியையும் இறைநம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வழிபாட்டில் நேரத்தை விட மனதின் தூய்மையும் பக்தியும் முக்கியமானவை என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை கருத்தாகும்.

அம்மன் அருள் முழுமையா கிடைக்க… மறந்தும் இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

Amman Temple Worship Rules: அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் போது ராஜகோபுர வாசற்படிகளை மிதிக்காமலும், கோபுரம் மற்றும் கொடிமரத்தின் நிழல்களை மிதிக்காமலும் செல்வது காவல் தெய்வங்களுக்கும் இறைவனுக்கும் செலுத்தும் மரியாதையாகும். காளியம்மன், துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்களை தரிசிக்கும் போதும் தீபாராதனையின் போதும் கண்களை மூடாமல் அம்மனின் திருமுகத்தை நேராகப் பார்த்து அருட்பார்வையைப் பெற வேண்டும்.

மதுரையின் பெருமை மீனாட்சி அம்மன் கோயில்: கும்பாபிஷேக வரலாறு என்ன சொல்கிறது?

Meenakshi Temple Kumbabishekam: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழர் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் கட்டிடக் கலையின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. கும்பாபிஷேகம் என்பது ஆலயத்தின் தெய்வீக ஆற்றலை புதுப்பிக்கும் புனித நிகழ்வாக ஆகம முறைகளின்படி நடத்தப்படுகிறது.