AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

கடன் தொல்லைகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த கோவிலுக்கு போங்க போதும்..!

Vimochaneeswarar Temple: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை ருண விமோசனீஸ்வரர் ஆலயம், கடன் பிரச்சனைகளில் சிக்கிய மக்களுக்கு நம்பிக்கையின் தலமாக விளங்குகிறது. முடங்கிக் கிடந்த பணம் திரும்பக் கிடைத்தது, தொழில் மீண்டும் வளர்ச்சி பெற்றது போன்ற அனுபவங்களை பல பக்தர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ஆலயத்தின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறைவன் உங்களைத் தொடர்புகொள்ளும் 6 ஆன்மிக ரகசியங்கள் என்ன?

Divine Encounters: அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் திடீரென தினமும் தூக்கம் கலைவதும், உங்களைச் சுற்றிலும் யாரும் இல்லாதபோதும் ஒரு தெய்விக ஆற்றலின் அமானுஷ்யத் தொடுதலை உணர்வதும் இறைசக்தி உங்களைத் தொடர்புகொள்ள முயல்வதன் முதல் அறிகுறியாகும். மேலும், இது உங்கள் முன்னோர்கள் (பித்ருக்கள்) உங்களைத் தொடர்புகொண்டு தங்களின் ஆசிகளை வழங்க முயல்வதையும் குறிக்கிறது.

திருமணத்திற்குப் பின் அசுர வளர்ச்சி காணும் ராசிகள் என்னென்ன?

Success and Growth After Marriage: ஜோதிடக் கணிப்புகளின்படி சிம்மம், துலாம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் மீனம் ஆகிய ஆறு ராசியினருக்குத் திருமணத்திற்குப் பிறகே அதிர்ஷ்டமும் அசுர வளர்ச்சியும் உண்டாகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைத்துணையின் ஆதரவோடும், முறையான ஆலோசனைகளோடும் இணைந்து செயல்படும்போது பொருளாதார ரீதியாகப் புதிய உச்சங்களைத் தொடுகிறார்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: ராசிப்படி முருகனை வழிபட்டால் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

Murugan Worship: ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கேற்ற முறையில் முருகப்பெருமானை வழிபட்டால் மன அமைதி மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட மலர்கள், தீபம், அபிஷேகம் மற்றும் மந்திர ஜெபங்கள் மூலம் வாழ்க்கைத் தடைகள் குறையலாம் என கூறப்படுகிறது. குடும்ப நலம், தொழில் முன்னேற்றம் மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிவனின் திருக்கழுத்தில் வாசுகி பாம்பு வீற்றிருப்பது ஏன்?

Lord Shiva Vasuki Snake: சிவபெருமான் மரண பயத்தையும் கொடிய நஞ்சையும் தரும் வாசுகி பாம்பைத் தனது கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பதன் மூலம், மனிதர்கள் தங்களின் அக பயங்களை வென்று வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்துகிறார். யோக மரபின்படி மனித உடலில் சுருண்டிருக்கும் 'குண்டலினி' பேராற்றலை தியானத்தின் மூலம் விழித்தெழச் செய்து, ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைவதையே இந்த நாகம் குறிக்கிறது.

செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரத் தலம்: செறுகுடி கோயிலின் தல வரலாறு!

Serugudi Sukshmapureeswarar: திருவாரூர் மாவட்டம் செறுகுடியில் அமைந்துள்ள சூட்சுமபுரீஸ்வரர் ஆலயம் செவ்வாய் தோஷம் மற்றும் திருமணத் தடைகளைப் போக்கும் மிக முக்கிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. கயிலாயத்தில் மறைந்த ஈசனைத் தேடி வந்த பார்வதி தேவி, இங்கு மணலால் லிங்கம் அமைத்து தவம் புரிந்து சிவபெருமானின் ஆலிங்கன தரிசனத்தைப் பெற்றார் என்பது தல வரலாறாகும்.

நவகிரக தோஷம் குறைய வேண்டுமா? இந்த பழக்க மாற்றங்களே போதும்!

Planetary Alchemy: நம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்கி நற்பலன்களைப் பெற, விசேஷ வழிபாடுகளைத் தாண்டி அன்றாட நற்பழக்க வழக்கங்களைச் சீரமைப்பதே முதன்மையான எளிய வழியாகும். அதிகாலையில் எழுந்து சோம்பலின்றி உழைப்பதும், பெற்றோரையும் பெரியோர்களையும் மதித்து நேர்மையாக நடப்பதும் சூரியன், சந்திரன் மற்றும் குருவின் ஆற்றலை வலுப்படுத்தும்.

சிவன் சொத்து குல நாசம்: ஆன்மீகப் பின்னணியும் உண்மைகளும்!

Shiva Property: கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொதுச்சொத்துக்களை சுயநலத்திற்காக அபகரிப்பது தர்மத்திற்கு எதிரானது என்பதால், அவ்வாறு செய்பவர்களின் வம்சமே அழியும் என்ற எச்சரிக்கையாக "சிவன் சொத்து குல நாசம்" என்ற பழமொழி உருவானது. இறைவனின் அருளை மட்டுமே உண்மையான சொத்தாக நினைத்து வாழ்பவர்களின் பிறவிப் பிணியும், தீய கர்ம வினைகளும் முற்றிலும் நாசமாகிவிடும் என்ற உன்னதமான மாற்றுத் தத்துவப் பொருளும் இந்த ஆன்மீக வாக்கியத்திற்குள் மறைந்துள்ளது.

பெருமாள் கோவிலில் இந்த தவறுகள் செய்தால் பக்திக்கு தடையா?

Perumal Temple: பெருமாள் கோவிலில் சத்தமாக பேசுதல், கைபேசி பயன்படுத்துதல் மற்றும் அசுத்தம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். சுத்தமான உடையுடன் அமைதியாக தரிசனம் செய்வது முக்கியமாக கருதப்படுகிறது. கோவில் விதிகளை மதித்து மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். பக்தியுடனும் ஒழுக்கத்துடனும் வழிபட்டால் ஆன்மிக நிறைவு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

புதிய முயற்சிகளை தொடங்க ரம்பா திரிதியை ஏன் சிறந்த நாள்?

Rambha Thirithiyai: ரம்பா திரிதியை புதிய முயற்சிகள் தொடங்க ஏற்ற சுபமுகூர்த்த நாளாக கருதப்படுகிறது. தொழில், முதலீடு, வீடு கட்டுதல் போன்ற முக்கிய செயல்களை இந்த நாளில் தொடங்குவது நல்லது என நம்பப்படுகிறது. குடும்ப நலன் மற்றும் செழிப்புக்காக மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். புதிய தொடக்கங்களுக்கு நம்பிக்கையும் அதிர்ஷ்டமும் தரும் நாளாக இது பார்க்கப்படுகிறது.

துன்பம் போக்கி இன்பம் தரும் வெற்றிலை பரிகாரம்: எந்த ராசிக்கு என்ன பலன்?

Zodiac Remedies,ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளும் தங்களின் கவலைகள் மற்றும் கிரக தோஷங்களை நீக்க வெற்றிலையைப் பயன்படுத்தி எளிய ஆன்மீகப் பரிகாரங்களைச் செய்யலாம். மாம்பழம், மிளகு, வாழைப்பழம், மாதுளை, கிராம்பு, பேரிச்சை, கற்கண்டு, வெல்லம், நெய் மற்றும் சர்க்கரை போன்ற எளிய பொருட்களை அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வெற்றிலையுடன் வைத்து வழிபட வேண்டும்.

ஆனி மாத ஆன்மீகத் திருவிழாக்கள்: 2026-இன் முக்கிய விசேஷங்களின் தொகுப்பு!

Auspicious Days of Aani Month: 2026-ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனப் பெருவிழா ஜூன் 22 அன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த மாதத்தில் வரும் யோகினி ஏகாதசி மற்றும் பிரதோஷ விரத தினங்கள் மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமானின் அருளைப் பெற்றுத் தரும் முக்கிய ஆன்மீக நாட்களாக அமைகின்றன.

சிதம்பரத்தில் களை கட்டிய ஆனித்திருமஞ்சன உற்சவம்… கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்…

Chidambaram Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம் தொடங்கியது. அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டு எண் 9-ன் மேஜிக்: 27-ஆம் தேதி பிறந்தவர்கள் இவ்வளவு ஸ்பெஷலா?

Numerology 27: எண் கணிதத்தின்படி எந்த மாதத்திலும் 27-ஆம் தேதியில் பிறந்தவர்கள் சமநிலை, ஆன்மீக ஞானம் மற்றும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் '9' என்ற கூட்டு எண்ணின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கினால் உறுதியான லட்சியவாதிகளாகத் திகழும் இவர்கள், வாழ்வில் வரும் எவ்வளவு பெரிய சவால்களையும் பதற்றமின்றி நிதானமாக எதிர்கொண்டு வெற்றிக்கனியைப் பறிப்பதில் வல்லவர்கள்.

பிரதோஷம் தினம் அன்று சிவ பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

Pradosham Day: பிரதோஷம் தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. மாலை பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை தரிசித்து “ஓம் நமசிவாய” மந்திரம் ஜபிப்பது நன்மை தரும் என நம்பப்படுகிறது.