Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

Spiritual Events: செப்டம்பர் மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ தினங்கள்!

2025 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கியமான ஆன்மீக விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிக் காணலாம். மிலாடி நபி, ஓணம், மஹா பரணி, மஹாளய அமாவாசை, நவராத்திரி போன்ற முக்கிய நிகழ்வுகளின் இம்மாதத்தில் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆன்மிக மாதமாக அறியப்படும் புரட்டாசியும் வருகை தருவது கூடுதல் சிறப்பாகும்.

Tiruchendur: கோலாகலமாக தொடங்கிய திருச்செந்தூர் ஆவணி திருவிழா!

Tiruchendur Aavani Festival: திருச்செந்தூர் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்திற்குப் பின் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Gokulashtami: கிருஷ்ணர் பிறப்பின் அர்த்தம் தெரியுமா? – இதைப் படிங்க!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளாக குறிப்பிடப்படுகிறது. இது கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இதன் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

Raksha Bandhan: நிதி பிரச்னைகளை தீர்க்கும் ரக்‌ஷா பந்தன் இறை வழிபாடு!

சகோதர அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் விநாயகர், சிவன், லட்சுமி தேவி ஆகியோரை வழிபடுவது செல்வம், அமைதி, குடும்ப ஒற்றுமைக்கு உதவும். பூஜை முறைகள், மந்திரங்கள், சிறப்பு வழிபாடு பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தி, இந்துக்களின் முக்கிய பண்டிகை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர், விஷ்ணுவின் 8வது அவதாரமாகும். கிருஷ்ண பகவான் தீமை ஒழித்து நன்மை செய்பவர். இந்நாளில் விரதம், வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெறலாம் என நம்பப்படுகிறது. இப்பண்டிகை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது.

August Spiritual Events: கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்!

ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் கலந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2025 ஆம் ஆண்டு சில முக்கிய நிகழ்வுகள் முன்கூட்டியே வருகை தருகிறது. குறிப்பாக கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம் ஆகியவை ஆடி மாதத்திலேயே வருகிறது. அதேபோல் மாதக் கடைசியில் விநாயகர் சதுர்த்தி வருகிறது.,

வேதகிரீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேத கிரீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Spiritual Events: ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்.. ஜூலை மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ நாட்கள்!

2025 ஜூலை மாதம், தமிழர்களின் ஆன்மிக மாதமான ஆடி மாதத்தின் பிறப்பைக் கொண்டாடும் மாதம். ஆனி உத்திரம், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் போன்ற முக்கியமான பண்டிகைகள் இந்த மாதத்தில் வருகின்றன. காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவும் இந்த மாதத்தில் நடைபெறுகிறது.

கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை.. நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

நெல்லையப்பர் கோயிலின் 2025 ஆம் ஆண்டு ஆனித் திருவிழா ஜூன் 30 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது. கொடியேற்றம், பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்மன் திருவீதி உலா, பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். திருத்தேரோட்டம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aani Thirumanjanam: 2025 ஆனி திருமஞ்சனம் எப்போது? – அதன் சிறப்புகள்!

ஆனி திருமஞ்சனம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் மிக முக்கியமான விழாவாகும். சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் இந்த நாள், துன்பங்களை நீக்கி, செல்வம், கல்வி, பதவி உயர்வு போன்றவற்றைப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Vaikasi Amavasya: வைகாசி அமாவாசை.. இதெல்லாம் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது!

வைகாசி அமாவாசை, ஜூன் 25, 2025 அன்று வருகிறது. இந்நாள் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், லட்சுமி தேவியை வழிபட்டு செல்வத்தை ஈர்க்கலாம். நெய் தீபம் ஏற்றுதல், துளசி மாலைடன் காயத்ரி மந்திரம் 108 முறை உச்சரித்தல், கற்பூரம், குங்குமப்பூ, கிராம்புடன் வழிபாடு, புனித நீர்நிலைகளில் நீராடுதல் ஆகியவை செழிப்பை தரும் என நம்பப்படுகிறது.

Aani Month: மாதப்பிறப்பு முதல் திருமஞ்சனம் வரை.. ஆனி மாதத்தின் முக்கிய தினங்கள்!

ஆனி மாதம், தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சுப நாட்கள் வருகின்றன. அருணகிரிநாதர், பெரியாழ்வார் போன்றோரின் பிறந்தநாளும் இம்மாதத்தில் வருகிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

ஆடி மாத ஆன்மிகப் பயணம் – இலவசமா? யார் விண்ணப்பிக்கலாம்? அமைச்சர் சேகா்பாபு சொன்ன தகவல்

Free Spiritual Tour: தமிழ்நாட்டில் ஆடி மாதத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு 60–70 வயதுக்குட்பட்ட ஹிந்து மதத்தவருக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் உள்ளோர் 2025 ஜூலை 11க்குள் விண்ணப்பிக்கலாம். பயணங்கள் 2025 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 15 வரை ஐந்து நாள்களாக நடைபெறும்.

Tirunelveli: 2025 நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் எப்போது தெரியுமா?

Nellaiappar Car Festival: 2025 ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயிலின் ஆனித்தேரோட்டம் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 1505 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 450 டன் எடையுள்ள சுவாமி தேர், 518 ஆண்டுகளாக மனித சக்தியால் இழுக்கப்பட்டு வருகிறது. பத்து நாள் விழாவின் 9-வது நாளில் நடைபெறும் இந்தத் தேரோட்டம், தென் தமிழகத்தில் பிரபலமானதாகும்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்!

வைகாசி விசாக தினத்தன்று, தமிழக முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முருகப்பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் இந்த தினத்தில் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களும் செலுத்தி வழிபடுகின்றனர்.