AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

அனுமரின் அளவுக்கு மீறிய பாசம் எப்படி பலவீனமாக மாறியது?

Love Became a Weakness in Ramayana: இந்திரஜித்தின் தாக்குதலால் ராமரும் லட்சுமணனும் மயங்கி விழுந்தனர். அதனால் வானர படையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விபீஷணன் அளவுக்கு அதிகமான பாசம் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறினார். பின்னர் அனுமன் கொண்டு வந்த மூலிகையால் இருவரும் மீண்டனர்.

பல மாதங்கள் தூங்கிய கும்பகர்ணன்: இதுதான் அதிர்ச்சியூட்டும் காரணமா?

Kumbhakarna Slept for Months: கும்பகர்ணன் நீண்ட நேரம் தூங்கியதற்கான காரணம் குறித்து மருத்துவமும் புராணமும் பல விளக்கங்களை தருகின்றன. அவரது அறிகுறிகள் அரிய தூக்க நோயுடன் ஒப்பிடப்படுகின்றன. புராணங்களில், தேவர்கள் அஞ்சியதால் அவருக்கு நீண்ட தூக்க வாழ்க்கை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கும்பகர்ணன் இராமாயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரமாக உள்ளார்.

பெருமாள் கோயில்களில் சடாரி சேவை – ஆன்மீக அர்த்தம் என்ன?

Sadari Blessing in Perumal Temples: பெருமாள் கோயில்களில் தரிசனத்திற்குப் பிறகு தலையில் வைக்கப்படும் சடாரி, இறைவனின் திருவடிகளை குறிக்கும் புனிதச் சின்னமாகும். இது பக்தர்கள் இறைவனிடம் முழுமையான சரணாகதி அளிப்பதை வெளிப்படுத்துகிறது. வாமன அவதாரத்துடன் தொடர்புடைய இந்த மரபு, அகந்தையை நீக்கி அருளைப் பெறுவதைக் குறிக்கிறது.

சித்ரா பௌர்ணமி 2026: பாவநிவர்த்தி தரும் புனித பௌர்ணமி நாள்!

Chithra Pournami 2026: சித்ரா பௌர்ணமி தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமி என்பதால் ஆன்மிக ரீதியாக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் துலாம் ராசியிலும் இருப்பதால் கிரக நிலைகள் விசேஷமாக அமைகின்றன. சித்திரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுவதால் பாவ நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்யப்படுகிறது.

அதிகாலை நேரம்: ஆன்மிக வளர்ச்சிக்கான பொன்னான தருணம்

Early Morning Spiritual Growth: அதிகாலை நேரம் அமைதியும் மனத் தெளிவும் நிறைந்த நேரமாகும். இந்த நேரத்தில் தியானம் மற்றும் ஆன்மிக பயிற்சிகள் சிறப்பாக நடைபெறும். உடல்-மனம் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளார்ந்த அமைதி கிடைக்கிறது. தினமும் அதிகாலை எழுவது ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்க்கிறது. இதனால் ஆன்மிக வளர்ச்சி எளிதாக முன்னேறுகிறது.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Sani Peyarchi 2026 : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6, 2026 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. 2026 மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சனி பகவானின் அருள் கிடைத்ததைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன?

Saturn’s Blessings in Astrology: சனி மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனியின் வக்ர பார்வை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் என நம்பிக்கை. கருப்பு நாயை காண்பது சனி அருளின் அறிகுறி என கூறப்படுகிறது. யாசகரை சாப்பிடுவது காண்பதும் சுபமாக கருதப்படுகிறது. சனி அருள் கிடைத்தால் முன்னேற்றம் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது. மேலும் விரிவான தகவலை காணலாம்.

October Spiritual Events: தீபாவளி, கந்த சஷ்டி.. அக்டோபர் மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!

2025 அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களை உள்ளடக்கியது. தீபாவளி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, புரட்டாசி சனிக்கிழமை, வள்ளலார் பிறந்தநாள், சுபமுகூர்த்த தினம், சனிப் பிரதோஷம் என பல ஆன்மிக நிகழ்வுகள் வருகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

புரட்டாசி 2ஆம் சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த தினங்களாக அறியப்படுகிறது. இந்நாளில் விரதம், அதிகாலை நீராடல், வீட்டு சுத்தம், பெருமாள் வழிபாடு, விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுதல், கோவில் வழிபாடு ஆகியவை நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் கிரக தோஷம் நீங்கி, சுபகாரிய தடைகள் விலகும் என்பது ஐதீகமாகும்.

Spiritual Events: செப்டம்பர் மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ தினங்கள்!

2025 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கியமான ஆன்மீக விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிக் காணலாம். மிலாடி நபி, ஓணம், மஹா பரணி, மஹாளய அமாவாசை, நவராத்திரி போன்ற முக்கிய நிகழ்வுகளின் இம்மாதத்தில் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆன்மிக மாதமாக அறியப்படும் புரட்டாசியும் வருகை தருவது கூடுதல் சிறப்பாகும்.

Tiruchendur: கோலாகலமாக தொடங்கிய திருச்செந்தூர் ஆவணி திருவிழா!

Tiruchendur Aavani Festival: திருச்செந்தூர் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்திற்குப் பின் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Gokulashtami: கிருஷ்ணர் பிறப்பின் அர்த்தம் தெரியுமா? – இதைப் படிங்க!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளாக குறிப்பிடப்படுகிறது. இது கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இதன் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

Raksha Bandhan: நிதி பிரச்னைகளை தீர்க்கும் ரக்‌ஷா பந்தன் இறை வழிபாடு!

சகோதர அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் விநாயகர், சிவன், லட்சுமி தேவி ஆகியோரை வழிபடுவது செல்வம், அமைதி, குடும்ப ஒற்றுமைக்கு உதவும். பூஜை முறைகள், மந்திரங்கள், சிறப்பு வழிபாடு பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தி, இந்துக்களின் முக்கிய பண்டிகை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர், விஷ்ணுவின் 8வது அவதாரமாகும். கிருஷ்ண பகவான் தீமை ஒழித்து நன்மை செய்பவர். இந்நாளில் விரதம், வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெறலாம் என நம்பப்படுகிறது. இப்பண்டிகை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது.

August Spiritual Events: கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்!

ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் கலந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2025 ஆம் ஆண்டு சில முக்கிய நிகழ்வுகள் முன்கூட்டியே வருகை தருகிறது. குறிப்பாக கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம் ஆகியவை ஆடி மாதத்திலேயே வருகிறது. அதேபோல் மாதக் கடைசியில் விநாயகர் சதுர்த்தி வருகிறது.,