ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற 13 வயது சிறுவன் ஆஸ்டின் ஆப்பிள்பீக்கு வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையாக மாறியது. கடலில் திடீரென அலைகள் அதிகரித்ததால், அவரது தாய் ஜோயன் மற்றும் சகோதரர்கள் போ மற்றும் கிரேஸ் கடலுக்குள் இழுக்கப்பட்டனர். உதவி கேட்க ஆஸ்டின் கரையை நோக்கி வந்த நிலையில், அவர் சென்ற படகு பழுதடைந்து கவிழ்ந்தது.