துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு, திமுக கொடிக்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். டெல்டா பகுதிக்கு வந்த உதயநிதியை வரவேற்க, திருமண மண்டபம் அருகே கொடிக்கம்பம் நாட்டும் போது, உயரழுத்த மின்கம்பியில் கம்பம் மோதியது. இதில் சேலத்தைச் சேர்ந்த கோகுல் (29), கார்த்தி (45) உயிரிழந்தனர்.
