அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் உஷா ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 7) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தல் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் உஷா ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 7) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தல் ஆகும். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும். நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
