Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
“SIR பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு”.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் இன்று வரை 6.41 கோடி பேருக்கு (95.58 சதவீதம்) வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் பிஎல்ஓக்கள் உள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 22, 2025
- 09:56 am IST
கோவை வந்த பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு
EPS Welcomes PM Modi : கோவை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். கோவை வருகை தந்துள்ள பிரதமருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்
- Karthikeyan S
- Updated on: Nov 19, 2025
- 15:35 pm IST
+2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்ததால் +2 மாணவி ஒருவர் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் முனிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சித்துள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 19, 2025
- 14:03 pm IST
SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!
Seeman on SIR; எஸ்ஐஆர் நடைமுறையை இந்த அளவுக்கு அவசர கதியில் அமல்படுத்துவது, மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தையும், நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கிறது என பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டையே பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 18, 2025
- 11:29 am IST
ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..
South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 20:26 pm IST
திமுகவை கண்டித்து அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியிட்ட அதிமுக – காரணம் என்ன?
AIADMK Protest Postponed : சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆளும் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, அதனை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 16, 2025
- 15:03 pm IST
‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து SIR படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 16, 2025
- 09:18 am IST
‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!
Edappadi Palaniswami: பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் தங்கள் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 15, 2025
- 10:28 am IST
நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 கட்டங்களாக 172 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் தனது சுற்றப்பயணத்தை தொடங்க அவர் முனைப்பு காட்டி வருகிறார். அதோடு, கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க மண்டல மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 14, 2025
- 08:55 am IST
மனிதாபிமானமற்ற செயல், போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
EPS Urges Swift Action : இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், மாலியில் 5 தமிழர்கள் கடத்தப்பட்டது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Nov 12, 2025
- 18:45 pm IST
‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!
Special Intensive Revision (SIR): வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, SIR பணிகளை மேற்கொள்ள ஒரு மாத காலம் போதும் என்றும் கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 10, 2025
- 12:46 pm IST
டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 12:33 pm IST
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.. Total Failure மாடல் அரசு – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
Edappadi Palniswami: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 9, 2025
- 14:58 pm IST
அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..
Admk Internal Issue: அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல், முருகன் நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 7, 2025
- 10:19 am IST
“தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ்!!
Admk district secretaries meet: சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக SIR சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை நிர்வாகிகள் மிக கவனமாக கையாள வேண்டுமென்றும், அதிகாரிகளுடன் வீடு வீடாக நேரில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 5, 2025
- 14:53 pm IST