Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
“நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் துரோகம்!”.. தவெக அரசின் தனித் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு.. பேரவையில் இபிஎஸ் உரை!!
TN Assembly Tax Devolution Resolution: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நிதி இழப்புகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசு முன்மொழிந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மாற்றங்களால் தமிழ்நாட்டின் நிதிப் பங்கு தொடர்ந்து குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 7, 2026
- 12:30 pm IST
மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
Edappadi Palaniswami : தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற முயன்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, இது போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 6, 2026
- 15:01 pm IST
“இபிஎஸ்-ஐ நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும்?”.. அமைச்சர் ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் திடீர் சந்திப்பு!!
CV Shanmugam Attacks EPS: எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் அமைச்சர் ஆனந்தை சந்தித்தது குறித்து அளித்த விரிவான விளக்கத்தை காணலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒதுக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை ஏற்கச் சம்மதிக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய தலைவர்கள், அமைச்சரைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 6, 2026
- 13:28 pm IST
விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami : தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் அளிப்பதாக அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். மேலும், பட்ஜெட் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பேசினார் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 6, 2026
- 12:38 pm IST
தவெக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை.. எடப்பாடி கடும் விமர்சனம்!
T. V. K. Government Budget : தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பன உள்ளிட்ட கருத்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 5, 2026
- 13:37 pm IST
“காவிரி விவகாரத்தில் வாய் மூடி மௌனமாக இருக்கும் முதல்வர் விஜய்!”.. இபிஎஸ் கடும் கண்டனம்!!
EPS Slams CM Vijay Over Cauvery Dispute: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்தும் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 31, 2026
- 13:12 pm IST
அதிமுகவில் மீண்டும் அதிர்ச்சி.. கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி அவுட்!
Puratchi Bharatham Party : அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகியதாக அந்த கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறிய கருத்துக்ககளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 30, 2026
- 18:41 pm IST
காவிரி விவகாரம்.. தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
Edappadi Palaniswami Regarding Cauvery Issue: காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 25, 2026
- 21:42 pm IST
விழுப்புரத்தில் வெடித்த அதிமுக உட்கட்சிப் பூசல்.. இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சி.வி.சண்முகம்!
EPS AIADMK meeting Villupuram: விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 1,150 ஆதரவாளர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைச் சி.வி. சண்முகம் புறக்கணித்துள்ளார். சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடிப் புறக்கணிப்பு விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 24, 2026
- 12:36 pm IST
அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!
AIADMK CV Shanmugam MLA Resign: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் எம். எல். ஏ. தலைமையிலான 1,300-க்கும் அதிகமான அந்தக் கட்சியினர் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 20, 2026
- 15:11 pm IST
“எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!”.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!
TVK Salem Mega Event: சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், எடப்பாடியின் எஃகு கோட்டையான சேலத்தில் தவெக ஓட்டை போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
- Sathis S
- Updated on: Jul 20, 2026
- 11:45 am IST
அதிமுகவில் இருந்து கூண்டோடு விலகும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்.. சென்னை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள்!!
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் மேலும் 30-க்கும் மேற்பட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 10:14 am IST
2 மாத ஆட்சிக்கே இவ்வளவு மமதையா? முதல்வர் விஜய்யை விளாசி தள்ளிய எடப்பாடியார்!
Edappadi Palaniswami Criticizes Joseph Vijay : தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற 2 மாதங்களில் முதல் அமைச்சருக்கு மமதை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 18, 2026
- 18:59 pm IST
தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக-விற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியாகியுள்ள கரூர் தொகுதியை இடைத்தேர்தலில் மீண்டும் கைப்பற்ற இபிஎஸ் தீவிர வியூகம் வகுத்து வருகிறார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 18, 2026
- 13:04 pm IST
சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 16, 2026
- 12:34 pm IST