Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..

AIADMK Candidate selection; இந்த நேர்காணலின்போது, ​​வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்கு அவர்கள் செய்த பணிகள் மற்றும் திமுக குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுக்கு எதிரான தொகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்..! எடப்பாடி பழனிசாமி முன்னிலை அதிமுகவில் இணைந்தார் தர்மர்!

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஆர். தர்மர் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!

Dharmar MP: அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம். பி. அவரிடம் இருந்து விலகி இன்று மாலை எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார்.

“மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!

இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த மிரட்டலோ, அழுத்தமோ இல்லை. ஏப்ரல் 2017-க்கு முன்பு இருந்ததைப் போலவே, நாங்கள் சகோதரர்களாக மீண்டும் இணைந்துள்ளோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டாக கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் ஒரே மேடை.. திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

மதுராந்தகத்தில் பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ பேரணியில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, "கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே 'தகுதியற்ற' உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. ஆளும் ஒரு குடும்பத்தால் 8 கோடி தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள்"என்று தெரிவித்தார். 

மதுராந்தகத்தில் இன்று NDA-வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. 5 லட்சம் பேர் திரள வாய்ப்பு..

PM Modi visiting Tamil Nadu today: இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கேரளாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு சொன்ன எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். ஓட்டுக்காக பல வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் எதையுமே நிறைவேற்றவில்லை என்றார் 

தேர்தல் அறிக்கையை காப்பியடித்தோமா? .. திமுக லேப்டாப் கொடுத்தது ஏன்? கொதித்த இபிஎஸ்..

EPS about election manifesto: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போதே குலவிளக்கு திட்டம், மகளிருக்கு ரூ.1,500 உதவித்தொகை, மகளிருக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, அம்மா இல்ல திட்டம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என்றார்.

இபிஎஸ் குறித்த கேள்வி.. பேச்சை நிறுத்திக்கொண்ட டிடிவி தினகரன்.. நடந்தது என்ன?

TTV Dhinakaran: எடப்பாடி கே. பழனிசாமி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவரை பதில் அளிக்க விடாமல் மத்திய அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தடுத்தது பேசும் பொருளாகி உள்ளது. இதே போல, எடப்பாடி பெயரை டிடிவி தினகரன் குறிப்பிடாமல் செய்தியாளருக்கு பதிலளித்தார்.

“என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்”.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணையாமல், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்பு கூட்டணியில் இணைந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Edappadi Palaniswami Defamation Case : சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை…ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்…அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

AIADMK Election Promises: தமிழகத்தில் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை மற்றும் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இதே போல, மேலும் சில தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் .

பழைய ஓய்வூதியத் திட்டம்.. திமுகவின் கண் துடைப்பு நாடகம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

Edappadi Palaniswami Statement: அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்?” அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி!!

நேர்காணலுக்குப் பின், வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடனும் ஒன்றாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் முடிவை ஏற்று, குறிப்பிடப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் உரிய பதவியிடங்கள் வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

எடப்பாடியுடன் சந்திப்பு…உறுதி செய்யப்பட்டதா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு…நயினார் கூறுவது என்ன!

Nainar Nagendran- Edappadi K Palaniswami meeting: அ. தி. மு.க பாெதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்துள்ள நிலையில், இந்த சந்திப்புக்கான காரணத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .