AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!

AIADMK CV Shanmugam MLA Resign: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் எம். எல். ஏ. தலைமையிலான 1,300-க்கும் அதிகமான அந்தக் கட்சியினர் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.

“எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!”.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!

TVK Salem Mega Event: சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், எடப்பாடியின் எஃகு கோட்டையான சேலத்தில் தவெக ஓட்டை போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

  • Sathis S
  • Updated on: Jul 20, 2026
  • 11:45 am IST

அதிமுகவில் இருந்து கூண்டோடு விலகும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்.. சென்னை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள்!!

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் மேலும் 30-க்கும் மேற்பட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது.

2 மாத ஆட்சிக்கே இவ்வளவு மமதையா? முதல்வர் விஜய்யை விளாசி தள்ளிய எடப்பாடியார்!

Edappadi Palaniswami Criticizes Joseph Vijay : தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற 2 மாதங்களில் முதல் அமைச்சருக்கு மமதை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக-விற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியாகியுள்ள கரூர் தொகுதியை இடைத்தேர்தலில் மீண்டும் கைப்பற்ற இபிஎஸ் தீவிர வியூகம் வகுத்து வருகிறார்.

சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..

Palani Temple Land Scam: பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்குத் தனியாருக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், "இதன் பின்னணியில் இருக்கும் அந்த பவர் சென்டர் யார்?" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு!

AIADMK District Secretaries Meeting: அதிமுக பாெதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜூலை 20- ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் 'கூட்டுக் களவாணிகள்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். அதிமுக கூட்டுக் களவாணி அல்ல. அதிமுக எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யாமல் தனது கட்சியில் இணைத்ததுதான் உண்மையான களவாணித்தனம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.. தவெக அரசு- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி நறுக் கேள்வி!

Edappadi Criticized CM Vijay: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எச்சரிக்கை விட தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், விமர்சனத்தை முன்வைத்தார்.

அதிமுகவில் வெடித்த அடுத்த புயல்.. இபிஎஸ்-க்கு டிமிக்கி கொடுத்த முக்கிய புள்ளிகள்.. பின்னணியில் வேலுமணி?

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களிடையே மறைமுக மோதல் வலுத்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, சென்னையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியின் சீனியர் நிர்வாகிகள் புறக்கணித்துள்ளது கட்சி வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் அல்லது கிரிமினல் பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் கடைசி புகலிடமும் நம்பிக்கையும் நீதிமன்றங்கள் தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்குகள் தள்ளிப்போகும்போது, ஏழை வழக்காளிகள் தங்களுடைய வழக்கறிஞர்களுக்குத் தொடர்ந்து ‘பீஸ்-கட்டணம்’ கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை உருவாகிறது.

“அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்”.. இபிஎஸ்-யிடம் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, "டிடிவி தினகரனும், நீங்களும் (இபிஎஸ்) இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக டெல்டா பகுதியில் கட்சி சற்று சோர்வாக இருக்கிறது என்றனர்.

வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

KP Munusamy : அதிமுகவை இனிமேல் விமர்சித்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்தார். மேலும், கடுமையாக விமர்சித்தார் .

அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!

AIADMK Former MLA Pon. Jayaseelan: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.