Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

முதல்வர் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும் – அண்ணாமலை விமர்சனம்

EPS Meeting Clarification: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு காரில் திரும்பினார். இந்த நிலையில் அவர் திரும்பி வரும்போது முகத்தை மறைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

Edappadi K. Palaniswami : அமித் ஷாவை சந்திக்க சென்றது வெளிப்படையானது என்றும் வெளியே வரும்போது முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லிட்டு தான் போகணும் போல. அப்படிப்பட்ட நிலைக்கு இன்றைய அரசியல் சென்றுவிட்டது என்றும் கூறினார்.

‘இனி முகமூடியார் பழனிசாமி என அழைக்கனும்’ டிடிவி தினகரன் விமர்சனம்!

TTV Dhinakaran : மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன எனவும், இனி பழனிசாமியை முகமூடி பழனிச்சாமி என அழைக்க வேண்டும் எனவும் அமமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். எப்போதும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Edappadi Palaniswami: அமித்ஷாவுடன் ஆலோசனை.. முகத்தை மூடிக்கொண்டு சென்றாரா இபிஎஸ்? – அதிமுக விளக்கம்!

AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் உட்கட்சி கருத்து வேறுபாடுகள், 2026 தேர்தல் வியூகங்கள், பாஜகவுடனான கூட்டணி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்ததாகத் தெரிகிறது. தலைவர்களுடன், தனியாகவும் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?

Edappadi Palaniswami Meet With Amit Shah: செப்டம்பர் 16, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

Annamalai Pressmeet: சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது” என தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!

AIADMK: 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதில் பாஜகவின் பங்கு இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி பொய் கூறுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edappadi Palaniswami: டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மோதல் முடிவுக்கு வருமா?

AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள்ளிருக்கும் உள் கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கும் நிலையில் டெல்லி சென்றுள்ளார். அங்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இந்த பயணம் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

10 நாட்கள் கெடு ஓவர்.. அடுத்த திட்டம் என்ன? செங்கோட்டையன் சொன்ன முக்கிய சேதி

AIADMK Internal Issue : அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு விதிக்கப்பட்ட கெடு 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

Edappadi Palanisamy Delhi Visit : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி  பழனிசாமி மாற்றியுள்ளார்.   டெல்லி  செல்ல உள்ள நிலையில்,  2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் நடக்கும் பரப்புரை திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றியுள்ளது.

கூட்டம் தொடங்கினால் ஆம்புலன்ஸ் வருது – எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயம்

2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி , ஐசியூவில் திமுக இருப்பதாக குறிப்பிட்டார். கூட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்து ஆம்புலன்ஸை அனுப்புவதாக புகார் தெரிவித்தார்

’அதிமுக ஆட்சிக்கு வராது.. உதயநிதி சொன்னது உண்மை தான்’ டிடிவி தினகரன் பேட்டி

TTV Dhinakaran On Edappadi Palanisamy : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்கு அவரே காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மன நலத்துடன் இருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin: செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மனநலத்துடன் வாழ வேண்டும். அதிமுகவை வழிநடத்த அவருக்கு மட்டுமே தகுதியுள்ளது. அவர்தான் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் விளங்குமா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கேள்வி..

Minister TRB Raja Statement: தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ‘திராவிட மாடல் அரசு’ கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. வெள்ளை அறிக்கை கொடுத்தால்தான் விளங்குமா” என கேட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரவு தர தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் டிடிவி தினகரன்..

TTV Dinakaran: ஸ்ரீவில்லிப்புத்தூரில் சாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் கூட்டணிக்கு செல்ல முடியாது. அதிமுக சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் ஆதரிக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்,