Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசார வேலைகளில் இறங்கியுள்ளன. அதன்படி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.  நேற்று, திருப்பத்தூர் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் வரவேறு அளித்தனர்

207 அரசு பள்ளிகள் மூடல்.. பதிலளிக்குமா பள்ளி கல்வித்துறை – எடப்பாடி பழனிசாமி கேள்வி..

207 Government School Closure: தமிழகத்தில் இருக்கக்கூடிய 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உடனடியாக அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!

AIADMK BJP Alliance : அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், கூட்டணிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இப்படியான சூழலில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் ஒரே மேடையில் ஏறுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tamil Nadu News Updates: தவெக மாநாடு.. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

Tamil Nadu Breaking News Today 13 August 2025, News Updates: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 75 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது.

Tamil Nadu News Updates: தேர்தல் ஆணையம் கதவை தட்டிய ராமதாஸ்.. நடந்தது என்ன?

Tamil Nadu Breaking News Today 12 August 2025, Updates: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9ல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் புகாரளித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?

Edappadi Palanisamy Campaign: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தனது 3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார், அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 11, 2025) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து சாலைவலம் மேற்கொண்டு உரையாற்றுகிறார்.

”கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” – சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் சண்முகம்

CPIM State Secretary Shanmugam: எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கொள்கை இழந்துள்ளதாகவும், வரும் தேர்தலில் காணாமல் போய்விடும் என பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி விமர்சனம்..

Edappadi K Palanisamy Campaign: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழ்கத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ராஜபாளையத்தில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை இழந்து உள்ளது, 50 மாதங்களில் திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கை விட்டுள்ளனரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tamil Nadu News Updates: பாமக பொதுக்குழு வழக்கு.. நீதிமன்றம் வந்த அன்புமணி

Tamil Nadu Breaking News Today 8 August 2025, News Updates: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி தன் தலைமையில் நடக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Edappadi Palaniswami: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

2026 Tamil Nadu Assembly Elections: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சங்கரன்கோயிலில் பேசிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, 20,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

Thirumavalavan: திமுகவிடம் கூட்டணி கட்சிகள் அடிமையா..? எழுந்த விமர்சனம்.. திருமாவளவன் பதில்..!

Thirumavalavan on DMK Alliance: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ, சிபிஎம் மாநிலச் செயலாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரிக்கை வைத்தனர். எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த நிலையில், திருமாவளவன் மற்றும் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளனர்.

மக்கள் பிரச்சனை.. மீஞ்சூர் போரூராட்சியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

ADMK Protest: தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 6, 2025ஆம் தேதி மீஞ்சூர் பேரூராட்சியில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami: ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.. திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

ADMK's Pledge: தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் போதைப்பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்படும், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் அமைக்கப்படும் என உறுதியளித்தார். திமுக அரசின் தோல்விகளையும், அதிமுகவின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

கிருஷ்ணகிரி முதல் செங்கல்பட்டு வரை… எடப்பாடி பழனிசாமியின் 3 ஆம் கட்ட பயண விவரம்

AIADMK Statewide Campaign : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனது மூன்றாம் கட்ட பயணத்தை கிருஷ்ணகிரியில் இருந்து துவங்குகிறார். அவரது பயண விவரம் குறித்து பார்க்கலாம்.

’கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எடப்பாடி பழனிசாமி உறுதி!

Ramanathapuram Edappadi Palanisamy Campaign : அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.