Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

Edappadi Palaniswami: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பை குழி தோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம்,” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக குழப்பம்.. எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயம்

2026ல் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன. இந்த நேரத்தில் அதிமுகவுக்குள் சில குழப்பங்கள் எழத்தொடங்கியுள்ளன. பழனிசாமியை எதிர்த்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த குழப்பங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Sengottaiyan : கடந்த அக்டோபர் 31, 2025 அன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒன்றாக கலந்துகொண்டார். இந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எட்ப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த எடப்பாடி பழனிசாமி!

தேவர் சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியும் அரசியல் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று அதாவது 2025 அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும், துரோகமும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? – முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: தென்காசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நெல் கொள்முதலில் அடிப்படை அறிவே இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய வரலாறு பொய்யும் துரோகமும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

Edappadi Palaniswami: மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நெற்பயிர்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..

Edappadi Palaniswami: அதிமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் எடையிடப்பட்டன. இரவு பகலென பாராமல் 100 நாட்கள் போராடி நுழைவுத்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்காக இந்த அரசு?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் – தீபாவளி வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palaniswami Diwali Wishes: எடப்பாடி பழனிசாமியின் தீபாவளி வாழ்த்தில், இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதி தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமைகள் அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

மாசுபட்ட இருமல் மருந்து! குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேசத்தில் மாசுபட்ட இருமல் மருந்து காரணமாக குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாட்டை மாநில அரசு கண்காணித்திருக்க வேண்டும். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொண்டாட்டம்.. மகிழ்ச்சி.. அதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்க விழா!

தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்று அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா என பெரும் ஆளுமைகளால் கொண்டு வரப்பட்டு தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற நிலையில் இயங்கி வருகிறது. இக்கட்சியில் 54ம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள், தலைவர்கள் வருகை தந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்தனர்

எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் – ஈபிஎஸ்!

Edappadi Palanisamy About TVK Members | தனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு தனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Sellur Raju: எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!

TVK Flag at ADMK Meeting: எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொன்னதால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் தவெக கொடியையும் எடுத்து சென்றனர்.

நாங்கள் தவெகதான்.. கூட்டணி எதிர்பார்க்கிறோம் – அதிமுக கூட்டத்தில் இளைஞர்கள்!

2026 தேர்தல் வரவுள்ளதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் வேலை சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். சில நாட்களாக அவரது கூட்டத்திற்கு தவெக கொடியுடன் தொண்டர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அந்த இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

அதிமுக – தவெக கூட்டணி? பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்.. புயலை கிளப்பும் தினகரன்!

AIADMK - TVK Alliance : அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்றும் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி விஜய் தலைமையை ஏற்க தயாராகிவிட்டாரா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..

Admk TVK Alliance: அதிமுக தவெக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியபோது, “ எல்லோருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கின்றன. தமிழக வெற்றி கழகம் ஒரு லைனில் இருக்கிறது; நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம். அது எந்த அளவிற்கு ஒருங்கிணையும் என தெரியவில்லை — பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.