AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!

Maduranthakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெருங்கும் இடைத்தேர்தல்.. வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் தவெக.. பாமகவுக்கு ரகசிய தூது விட்ட விஜய்.. பின்னணி என்ன!

TVK Seek PMK Support : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரகசிய தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!

Madurantakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் என கூறப்படும் நிலையில், எந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.

மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Aiadmk Candidates Announced : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இடைத்தேர்தல் களம்: அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?.. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

AIADMK Probable Candidate List: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் மகேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த விரிவான தகவல்கள் இதோ!

பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!

Perundurai Constituency Election Case : பெருந்துறை தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Aiadmk Applications Distribution : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாள்களுக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் .

உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..

ADMK District Secretaries Meeting: சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா வழக்கு.. உயர்நீதிமன்றம் வைத்த செக்.. அலறவிட்ட இபிஎஸ்!!

ADMK MLA's Resignation Case: 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற அனுமதி கோரி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் முழு விவரங்கள் இதோ.

“தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

TVK Governance is an Accident: தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்றும், இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் கூறிய அவர், அரசின் கடன் சுமையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசும்போதே மின்வெட்டு… தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என விமர்சனம்

Edappadi K Palaniswami : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் இது தான் தவெக ஆட்சியின் லட்சணம் என விமர்சனம் செய்தார். மேலும் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் பேசினார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏவின் பேச்சு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக அதிரடி பாய்ச்சல்!

TVK MLA Remarks Jallikattu : தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ கருப்பையாக ஜல்லிக்கட்டு குறித்து அவதூறாக பேசிய தற்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தலைமை வலியுறுத்தி உள்ளது .

சவிதியில் தமிழக மீனவர் உயிரிழப்பு.. அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..

TN Assembly: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரான் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!

Edappadi Palaniswami Speech: சவுதியில் ஈரானியக் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை மீட்கக் கோரும் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழர்களைக் காப்பதாகக் கூறும் அரசு, வெளிநாட்டில் சுடப்பட்ட தமிழனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!

Speaker JCD Prabhakar : அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .