
Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
Nainar Nagendran: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.. கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு!
Tamil Nadu Assembly Elections 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியே 2026-ல் முதலமைச்சராவார் எனக் கூறியுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jun 14, 2025
- 15:04 pm
‘நீங்கள் தான் போலி விவசாயி…. விளம்பரம் மூலம் ஆட்சி புரியும்…’ – முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Edappadi K Palaniswami Replies to CM MK Stalin : தோளில் துண்டு போட்டுக் கொண்டே வேஷம் போடும் போலி விவசாயிகள் அல்ல நாம் என முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் அறியாத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Jun 13, 2025
- 19:39 pm
தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
Tamil Nadu Farmer Dies: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான விவசாயி ஜெயராமன், நிலப் பத்திரப் பிரச்சினையைத் தீர்க்க எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்று தீக்குளித்து உயிரிழந்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 10, 2025
- 11:25 am
AIADMK : அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.. கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami About AIADMK Alliance | தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 8, 2025
- 12:40 pm
‘கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை…’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
Kilambakkam Bus Crisis : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Jun 15, 2025
- 07:55 am
Anna University Assault Case: இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்.. எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
Gnanasekaran life Imprisonment: அண்ணா பல்கலைக்கழக பாலியல் தொல்லை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 மாதங்களில் வழக்கு முடிந்தது என அரசு சாற்ற, எடப்பாடி பழனிசாமி 'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பினார். சட்ட அமைச்சர் ரகுபதி, இது இழிவான அரசியல் என பதிலளித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Jun 2, 2025
- 17:14 pm
“SIR-ஐ காப்பாற்றியது யார்?” அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் கேள்வி!
Anna University Harassment Case Verdict : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jun 2, 2025
- 13:18 pm
‘வருடம் குறிப்பிடவில்லை.. அதிமுக கூட்டணி தொடருமா..’ பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
DMDK Chief Premalatha Vijayakanth : தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படாத நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கடலூரியில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்போம். தேர்தலை நோக்கி தான் தேமுதிகவின் அரசியல் நகர்வும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jun 1, 2025
- 13:46 pm
தேமுதிகவுக்கு சீட் இல்லை.. ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
AIADMK Rajya Sabha candidates : மாநிலங்களவை தேர்தல் 2025 ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படவில்லை
- Umabarkavi K
- Updated on: Jun 1, 2025
- 12:46 pm
விஜயை விமர்சிக்க தடை? அதிமுகவினருக்கு ஆர்டர் போட்ட இபிஎஸ்.. என்ன மேட்டர்?
Edappadi Palanisamy On Tvk Vijay : சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த மாவட்ட செலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பற்றி விமர்சிக்க வேண்டாம் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 31, 2025
- 08:10 am
L.K சுதீஷ் – பழனிசாமி சந்திப்பு: தேமுதிகவிற்கு ஒரு இடம் உறுதி?
Tamil Nadu Rajya Sabha Elections 2025: தமிழக மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19, 2025 அன்று நடைபெற உள்ளது. திமுக 4 இடங்களில் 3 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் செய்து வருகிறது. தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: May 31, 2025
- 07:16 am
“தேமுதிகவுக்கு ராஜ்சயபா சீட் தருவது அதிமுகவின் கடமை” பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
Tamil Nadu Rajya Sabha Election : தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டிய அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நம்பிக்கை முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 29, 2025
- 14:04 pm
Tamil Nadu CM MK Stalin: அரைத்த மாவையே அரைக்கும் அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
Arakkonam Arms Seizure: அரக்கோணத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பதிலளித்து, அதிமுகவின் ஆட்சிக்கால சம்பவங்களை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: May 27, 2025
- 14:48 pm
NITI Aayog: டெல்லி பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
Tamil Nadu CM Stalin Delhi visit explanation: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை தொடர்ந்து, ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலனுக்காகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு மாறாக, திமுக தனது நிலைப்பாட்டை உறுதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: May 25, 2025
- 20:18 pm
“ரெய்டுக்கு பயந்து தான் டெல்லி சென்றார்” முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisamy : கடந்த மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல், தற்போது முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது ஏன் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமலாக்கத்துறைக்கு சோதனைக்கு பயந்து தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி சென்றார் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 25, 2025
- 11:31 am