Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
அணுக்கனிம சுரங்க விவகாரம்.. தவெக அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Accused TVK Government: அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.
- Gowtham Kannan s
- Updated on: Jul 1, 2026
- 21:21 pm IST
அதிமுகவில் வளர்மதி பதவி பறிப்பு.. எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி உத்தரவு!
AIADMK Former Minister Valarmathi : அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 1, 2026
- 19:02 pm IST
இப்படி ஒரு ஆட்சி நடத்த முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 1, 2026
- 18:15 pm IST
எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்… எஸ். பி. வேலுமணி தரப்பு அதிரடி அறிக்கை!
SP Velumani Declining Party Post: அதிமுகவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவி வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடப்பாடிக்கு அனுப்பி உள்ளனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 1, 2026
- 15:27 pm IST
அதிமுகவில் அடுத்த முக்கிய விக்கெட்.. கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்!
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்நிலையில், தனது விலகலுக்கான காரணங்களாக அவர் முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டுகள். தலைமை சுயநலமாக சிந்திப்பதாகவும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைமை எவரையும் அழைத்து பேசவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 1, 2026
- 13:17 pm IST
அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!
SP Velumani : அதிமுக துணை பொதுச் செயலர் பதவியை ஏற்க மாட்டேன் என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏவான எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். இது பேசும் பொருளாகியுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 30, 2026
- 16:08 pm IST
எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
RB Udhayakumar : தமிழகத்தில் ஜனநாயக திருவிழாவில் எம்எல்ஏக்களை பிடிக்கும் வேலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சளைக்காமல் ஈடுபட்டு வருவதாக அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 30, 2026
- 15:35 pm IST
அதிமுக வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா பதில் மனு!
Isakki Subbiah Files Affidavit : சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில், தனக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 29, 2026
- 22:00 pm IST
இபிஎஸ்-க்கு அடுத்த இடி.. MLA பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..
சில நாட்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவர் தவெகவில் இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைகிற அதே மேடையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 29, 2026
- 12:29 pm IST
மீண்டும் பதவி கொடுத்த இபிஎஸ்.. அதிருப்தியில் புலம்பும் சீனியர்கள்.. அதிமுகவுக்குள் வெடித்த சர்ச்சை!!
கட்சியைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவியே அதிகாரம் மிக்கதாகும். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பரிந்துரை, போராட்டங்களை முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அதிகாரங்கள் மாவட்ட செயலாளர்களுக்கே உள்ளன. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர் பதவிக்கு எந்தவித தனி அதிகாரமும் இல்லை என அவர்கள் கருதுகின்றனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 27, 2026
- 09:00 am IST
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி – நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி.. எடப்பாடி அடித்த ஆர்டர்!
SP Velumani And Natham Viswanathan: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணை பொதுச்செயலர் பதவி அளித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 25, 2026
- 20:27 pm IST
அதிமுக டூ தவெக.. என்.ஆனந்த் – சி.விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு.. ஜூன் 29-இல் அதிரடி ட்விஸ்ட்?
Vijayabaskar Meet N Anand : தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்துடன் அதிமுகவிலிருந்து விலகிய விஜயபாஸ்கர் திடீரென சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, கட்சியில் இணைவது தொடரபாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 24, 2026
- 21:57 pm IST
தேர்தல் தோல்வி.. நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!!
இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக மீண்டும் ஒரு பெருத்த பின்னடைவைச் சந்தித்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் ஏன் சாதகமாக அமையவில்லை என்பதற்கான பின்னணிகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 21, 2026
- 12:42 pm IST
சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
மேலும், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என விமர்சித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 18, 2026
- 12:45 pm IST
பயிர் கடன் தள்ளுபடி விவகாரம்.. தவெக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுகிறது.. எடப்பாடி குற்றச்சாட்டு!
Edappadi K Palaniswami : தமிழக விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். மேலும், பல்வேறு விமர்சனம் வைத்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 16, 2026
- 20:34 pm IST