Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 16, 2026
- 12:34 pm IST
பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..
Palani Temple Land Scam: பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்குத் தனியாருக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், "இதன் பின்னணியில் இருக்கும் அந்த பவர் சென்டர் யார்?" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 16, 2026
- 07:29 am IST
அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு!
AIADMK District Secretaries Meeting: அதிமுக பாெதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜூலை 20- ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 19:52 pm IST
அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் 'கூட்டுக் களவாணிகள்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். அதிமுக கூட்டுக் களவாணி அல்ல. அதிமுக எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யாமல் தனது கட்சியில் இணைத்ததுதான் உண்மையான களவாணித்தனம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 14, 2026
- 17:30 pm IST
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.. தவெக அரசு- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி நறுக் கேள்வி!
Edappadi Criticized CM Vijay: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எச்சரிக்கை விட தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், விமர்சனத்தை முன்வைத்தார்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 9, 2026
- 20:11 pm IST
அதிமுகவில் வெடித்த அடுத்த புயல்.. இபிஎஸ்-க்கு டிமிக்கி கொடுத்த முக்கிய புள்ளிகள்.. பின்னணியில் வேலுமணி?
தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களிடையே மறைமுக மோதல் வலுத்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, சென்னையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியின் சீனியர் நிர்வாகிகள் புறக்கணித்துள்ளது கட்சி வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 8, 2026
- 13:32 pm IST
ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!
சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் அல்லது கிரிமினல் பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் கடைசி புகலிடமும் நம்பிக்கையும் நீதிமன்றங்கள் தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்குகள் தள்ளிப்போகும்போது, ஏழை வழக்காளிகள் தங்களுடைய வழக்கறிஞர்களுக்குத் தொடர்ந்து ‘பீஸ்-கட்டணம்’ கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை உருவாகிறது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 8, 2026
- 07:56 am IST
“அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்”.. இபிஎஸ்-யிடம் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை!!
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, "டிடிவி தினகரனும், நீங்களும் (இபிஎஸ்) இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக டெல்டா பகுதியில் கட்சி சற்று சோர்வாக இருக்கிறது என்றனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 7, 2026
- 07:33 am IST
வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!
KP Munusamy : அதிமுகவை இனிமேல் விமர்சித்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்தார். மேலும், கடுமையாக விமர்சித்தார் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 5, 2026
- 18:00 pm IST
அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!
AIADMK Former MLA Pon. Jayaseelan: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 4, 2026
- 11:11 am IST
“தவெக-வின் தாக்கத்தைக் கணிக்கத் தவறிவிட்டோம்”.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட இபிஎஸ்.. பரபர பின்னணி!!
கட்சியின் நிலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக நோக்கிச் செல்லும் இளைஞர் வாக்குகளைத் தடுக்க, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகத் தீவிரப்படுத்தி, புதிய இளைஞர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 4, 2026
- 06:21 am IST
மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும், கழகத்திற்காக முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்புதான் என்பதை நான் உணர்ந்தேன். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அதிமுக சமரசப் போக்குக்கு மாறியதால், தனது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டது என வைகை செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 3, 2026
- 14:26 pm IST
தவெக-வுக்கு படையெடுக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.. கட்சியை பலப்படுத்த இபிஎஸ் அவசர ஆலோசனை!!
முக்கியத் தலைவர்கள் விலகிய மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்/இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அடிமட்ட அளவில் இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர்களையும் சென்னைக்கு நேரில் அழைத்து இபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 3, 2026
- 12:04 pm IST
தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!
CPM Shanmugam : அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருவது முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முமம் குற்றம் சாட்டியுள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 2, 2026
- 20:49 pm IST
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!
Inbadurai Complaint To EC: அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்று அந்தக் கட்சியை சேர்ந்த இன்பதுரை எம்பி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 2, 2026
- 20:01 pm IST