Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
அதிமுகவின் கூடாரம் காலியாகிறதா? முன்னாள் எம்.பி. இளவசன் எடுத்த திடீர் முடிவு!
AIADMK Former MP Ilavarasan : அதிமுகவின் முன்னாள் எம். பி. ஆன இளவரசன் திடீரென அந்தக் கட்சியில் இருந்து விலகினார். அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். விலகலுக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: May 29, 2026
- 12:15 pm IST
15 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்.. புதிய இல்லத்திற்கு குடியேற்றம்.. காரணம் என்ன?
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும், பதவியையும் இழந்தார். பதவி பறிபோனதைத் தொடர்ந்து, அரசு பங்களாவை கா利 செய்ய வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 29, 2026
- 11:02 am IST
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
முதலமைச்சர் விஜய், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்கும் குதிரை பேர வேலைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைத் தன்னிச்சையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 29, 2026
- 07:41 am IST
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா? சி.விஜயபாஸ்கர் நிலைப்பாடு என்ன!
C. Vijayabaskar Latest PressMeet : அதிமுகவில் ஏற்பட்டு வரும் உள்கட்சி பூசலுக்கு நடுவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி . விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: May 28, 2026
- 15:11 pm IST
“ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள்”.. சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா!!
அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவது குறித்துப் பேசிய அவர், "எந்த எம்எல்ஏ-வுக்கும் தவெக எவ்வித ஆஃபரும் கொடுத்துக் கூப்பிடவில்லை. அப்படிப்பட்ட தலைமை எங்களுடையது அல்ல. தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் உள்ள நம்பிக்கையால் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். தவெக ஒரு குடும்பம் போன்றது என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 28, 2026
- 12:45 pm IST
43 ஆகக் குறைந்த அதிமுக பலம்… உட்கட்சி பூசலால் 4 MLAக்கள் இழப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!
இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடந்த 25ஆம் தேதி ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 28, 2026
- 08:56 am IST
மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும், ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
- Aarthi Govindaraman
- Updated on: May 27, 2026
- 11:39 am IST
அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. கோரிக்கைகளை ஏற்க மறுத்து இபிஎஸ் பிடிவாதம்!!
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், நேற்று ஒரு திடீர் திருப்பமாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்தவர்களின் கார்கள் அணிவகுத்து வந்தன. கட்சி இரு பிரிவாகச் செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து, கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் ஒன்றிணைக்க இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 27, 2026
- 07:27 am IST
BREAKING: அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்… எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா.. காரணம் இதோ!
AIADMK MLA Esakki Subbaiah Resigns: அதிமுகவில் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கெனவே, 3 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்துள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: May 26, 2026
- 12:35 pm IST
விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
“எனது தலைமையிலான அதிமுக அரசு 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: May 26, 2026
- 11:35 am IST
அதிமுகவில் இருந்து விலகும் மற்றொரு எம்எல்ஏ.. தவெகவில் இணைய முடிவு?
Ambasamudram AIADMK MLA Esakki Subaya: அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் இருந்து வரும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வான இசக்கி சுப்பையா அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- Gowtham Kannan s
- Updated on: May 26, 2026
- 08:07 am IST
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
மேலும், “ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல், அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களது அரசியல் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்டக் குழுவிற்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: May 25, 2026
- 18:47 pm IST
விழுப்புரம் சிறுமி பாலியல் சீண்டல்.. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால் அவற்றை மீண்டும் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: May 24, 2026
- 21:39 pm IST
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..
தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார் என்பதுதான் நிதர்சனம். எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும்” என உறுதியாக தெரிவித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: May 24, 2026
- 14:54 pm IST
தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.. இபிஎஸ் வலியுறுத்தல்..
தற்போது நிலவும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கூடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் கடும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 24, 2026
- 10:51 am IST