Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
“இபிஎஸ் தான் எங்களின் பொதுச்செயலாளர்”… வேலுமணி தரப்பு திடீர் பல்டி.. பின்வாங்க காரணம் இதுதான்?..
முன்னதாக, தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ உத்தரவை மீறி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அவர்கள் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடியாரால் நீக்கப்பட்டனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 22, 2026
- 14:06 pm IST
சி.வி.சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார்… அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!
AIADMK whip Agri SS Krishnamoorthy : தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி சுகத்துக்காக ஆதரவு தெரிவித்ததுடன், அதிமுகவை அழித்து வருவதாக எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகத்தை அதிமுக கொறடாவக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டி உள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: May 20, 2026
- 15:39 pm IST
எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லையென்றால் துரோகியா – சி.வி சண்முகம் ஆவேசம்..
முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருக்கலாம். அதிமுகவில் இணைய வந்த ஓ. பன்னீர்செல்வத்தைக் கூட அடிப்படை உறுப்பினராக ஏற்கவில்லை. ஒருபுறம் பேசலாம் என கூறிவிட்டு, மறுபுறம் பதவியில் இருந்து நீக்குகிறார். பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகள் மிரட்டப்பட்டுள்ளனர். இதுவரை 31 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: May 19, 2026
- 15:33 pm IST
5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் – எடப்பாடி பழனிசாமி..
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அதுபோல, நமது கட்சியிலும் பிரச்சினைகள் இருந்தால், அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்.
- Aarthi Govindaraman
- Updated on: May 18, 2026
- 20:13 pm IST
முற்றிய உட்கட்சி விவகாரம்.. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..
ADMK Internal Clash: இரண்டு அணிகளும் சட்டமன்றத்தில் தங்களது தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Aarthi Govindaraman
- Updated on: May 18, 2026
- 16:28 pm IST
அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.. ஈகோவால் கட்சி பலவீனமாகிவிட்டதாக வருத்தம்!!
"இன்று நிலவி வரும் சுயநல உட்கட்சி சண்டைகளால் ஒட்டுமொத்த அதிமுக-வின் பெயரும், பாரம்பரியமும் பொதுவெளியில் அசிங்கப்படுகிறது. பிரபல ஆங்கில நாளிதழ்கள் கூட அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்துப் பரிகாசம் செய்யும் அளவிற்கு கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது" என்று தற்போதைய தலைமை மீதான தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 18, 2026
- 10:57 am IST
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு.. இபிஎஸ்-க்கு புதிய நெருக்கடி!!
அதிமுகவில் மொத்தமுள்ள 1,800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் (அதாவது சுமார் 59% உறுப்பினர்கள்) பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என வேலுமணி தரப்பில் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி, கட்சியில் 5-ல் 1 பங்கு (20%) உறுப்பினர்கள் கோரினாலே பொதுக்குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 18, 2026
- 07:34 am IST
அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா? கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்!
Minister KA Sengottaiyan : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிமுக எம். எல். ஏ.க்களுக்கு இடம் வழங்கப்படுமா என்பது குறித்து கேள்விக்கு நிதித்துறை அமைச்சரும், கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே. ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: May 17, 2026
- 18:44 pm IST
அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி பூசல்.. மேலும் 2 மாவட்ட செயலர்களை நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
AIADMK 2 District Secretaries Removed : அதிமுகவில் கட்சி விதிகளை மீறியதாக மேலும் புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்ட செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: May 16, 2026
- 19:52 pm IST
தவெக அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுக விவகாரம்.. சென்னை வந்தடைந்த தமிழக ஆளுநர்..
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவு செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: May 16, 2026
- 09:06 am IST
25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!
இந்தச் சூழ்நிலையில், சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 16, 2026
- 06:47 am IST
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.. “நிலைமையை உணராத இபிஎஸ்”.. எஸ்.பி.வேலுமணி பகிரங்கக் குற்றச்சாட்டு!!
மிக முக்கியமாக, அதிமுகவின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வேலுமணி அறிவித்துள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அரசியல் அறத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியைப் பிரிக்கும் எண்ணம் தங்களுக்கு யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 15, 2026
- 12:09 pm IST
அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி
AIADMK General Secretary Edappadi K Palaniswami: அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: May 14, 2026
- 20:03 pm IST
பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!
Palaniswami And 22 MLAs Shoud Disqualified: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 எம். எல். ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் எஸ்.பி.வேலுமணி.
- Gowtham Kannan s
- Updated on: May 14, 2026
- 16:27 pm IST
சி.வி.சண்முகம் தரப்பு மீது இபிஎஸ் டீம் மூவ்! தவெக ஆதரவு விவகாரத்தில் ஆளுநரிடம் புகார் அளிப்பு!
Edappadi Complaint CV Shanmugam: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர் புகாரளித்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: May 14, 2026
- 14:36 pm IST