AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் அல்லது கிரிமினல் பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் கடைசி புகலிடமும் நம்பிக்கையும் நீதிமன்றங்கள் தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்குகள் தள்ளிப்போகும்போது, ஏழை வழக்காளிகள் தங்களுடைய வழக்கறிஞர்களுக்குத் தொடர்ந்து ‘பீஸ்-கட்டணம்’ கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை உருவாகிறது.

“அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்”.. இபிஎஸ்-யிடம் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, "டிடிவி தினகரனும், நீங்களும் (இபிஎஸ்) இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக டெல்டா பகுதியில் கட்சி சற்று சோர்வாக இருக்கிறது என்றனர்.

வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

KP Munusamy : அதிமுகவை இனிமேல் விமர்சித்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்தார். மேலும், கடுமையாக விமர்சித்தார் .

அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!

AIADMK Former MLA Pon. Jayaseelan: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

“தவெக-வின் தாக்கத்தைக் கணிக்கத் தவறிவிட்டோம்”.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட இபிஎஸ்.. பரபர பின்னணி!!

கட்சியின் நிலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக நோக்கிச் செல்லும் இளைஞர் வாக்குகளைத் தடுக்க, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகத் தீவிரப்படுத்தி, புதிய இளைஞர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..

தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும், கழகத்திற்காக முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்புதான் என்பதை நான் உணர்ந்தேன். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அதிமுக சமரசப் போக்குக்கு மாறியதால், தனது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டது என வைகை செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தவெக-வுக்கு படையெடுக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.. கட்சியை பலப்படுத்த இபிஎஸ் அவசர ஆலோசனை!!

முக்கியத் தலைவர்கள் விலகிய மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்/இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அடிமட்ட அளவில் இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர்களையும் சென்னைக்கு நேரில் அழைத்து இபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!

CPM Shanmugam : அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருவது முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முமம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!

Inbadurai Complaint To EC: அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்று அந்தக் கட்சியை சேர்ந்த இன்பதுரை எம்பி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக முழு விவரத்தை பார்க்கலாம்.

அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றம்.. புதிய செயலாளர்கள் களமிறக்கல்.. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு!

AIADMK New Secretaries Appointing: அதிமுகவில் அமைப்பு சாரா புதிய செயலாளர் பதவிகளில் புதியவர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தலைமையின் தவறான முடிவால் தள்ளாடும் அதிமுக.. தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள் பேச்சு!

MR Vijayabhaskar And C Vijayabaskar Join TVK : தலைமையின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடி வருவதாக அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினர். தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் இந்த கருத்தை முன் வைத்திருந்தனர்.

அணுக்கனிம சுரங்க விவகாரம்.. தவெக அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்த எடப்பாடி பழனிசாமி!

Edappadi Accused TVK Government: அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் வளர்மதி பதவி பறிப்பு.. எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி உத்தரவு!

AIADMK Former Minister Valarmathi : அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

இப்படி ஒரு ஆட்சி நடத்த முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா – எடப்பாடி பழனிசாமி காட்டம்..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்… எஸ். பி. வேலுமணி தரப்பு அதிரடி அறிக்கை!

SP Velumani Declining Party Post: அதிமுகவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவி வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடப்பாடிக்கு அனுப்பி உள்ளனர்.