Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

“திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!

Aiadmk district secretaries meet: தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால், மிக தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்றும், ஐடி விங் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

AIADMK district secretaries meet: திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் தற்போது வரை வாய்திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

1999ஆம் ஆண்டு திமுக – பாஜக கூட்டணி குறித்து சரமாரி கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palniswami Campaign: திமுகவில் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவிகளும் அதிகாரங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..

Tiruvallur Crime: சென்னையிலிருந்து திருத்தணிக்கு புறநகர் ரயிலில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே இந்த வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு பைக்… மாணவர்களுக்கு லேப்டாப்… எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்

Edappadi K Palaniswami: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனமும், மாணவர்களுக்கு லேப்டாப்பும் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி..!

மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார். 

அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்… – ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

OPS Remarks on EPS: சென்னையில் தொண்டர் உரிமை மீட்பு குழு சந்திப்பில் நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், பழனிசாமியை பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் பழனிசாமி தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.

விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்

TVK Vijay: பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் குறித்தான பேச்சின் போது அவர் ஒரு ஸ்பாயிலர் என பியூஶ் கோயல் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..

ADMK BJP: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை பெரிதளவில் அதிகரித்து, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

ADMK - BJP Alliance: இந்த சூழலில், டிசம்பர் 15, 2025 தேதியான நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

கர்நாடகா காங்கிரஸிற்கு லாலி பாடும் முதல்வர்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாதுவில் புதிய அணை கட்டி தமிழ் நாட்டை காங்கிரஸ் பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் வாதாடவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து

Rajinikanth birthday: மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.

நெருங்கும் சட்டசபை தேர்தல்: நேற்று அதிமுக பொதுக்குழு.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!

TN Assembly elections: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.

திமுக ஊழல் பணத்தை வைத்து ஓராண்டுக்கான பட்ஜெட் போடலாம் – எடப்பாடி பழனிசாமி தாக்கு..

Edappadi Palaniswami: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.