Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
2025–26ஆம் ஆண்டில் கம்ப்ரெசர் ஸ்ப்ரே, பவர் ஸ்ப்ரே இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், மினி புகையடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.16.40 கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 16, 2026
- 20:29 pm IST
“திமுக – காங்., கூட்டணி நீடிக்காது.. புகையத் தொடங்கிவிட்டது”.. இபிஎஸ் பரபர பேச்சு
DMK - Congress alliance will not last: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டு உள்ளது. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருக்குமா? என்பது சந்தேகம் என்று பேசியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 16, 2026
- 06:45 am IST
நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு
Eps to start election campaign: முதல் கட்சியாக அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதன்படி, அதிமுகவுடன், பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட இதுவே கூட்டணி இறுதியான நிலைதான்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 15, 2026
- 11:30 am IST
ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால் மட்டுமே என்ன நிலைமை என்பது தெரியும். தேர்தலுக்கு முன்பாக எதையும் சொல்ல முடியாது. எந்தக் கட்சி வந்தால் நன்மை கிடைக்கும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 14, 2026
- 07:16 am IST
திமுகவின் ‘Patchwork’ – முதல்வரின் அறிவிப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
AIADMK vs DMK : மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கூடுதலாக கோடைகால சிறப்பு நிதி என ரூ.5000 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை திமுகவின் பேட்ச்வொர்க் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Feb 13, 2026
- 15:42 pm IST
‘ஆட்சியில் பங்கு’.. அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இபிஎஸ் பரபர பேச்சு!!
AIADMK alliance stance: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனடிப்படையில் தான் கூட்டணி அமைக்கப்படும். 2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம். அதை இழந்த காரணத்தினால் எதிர்க்கட்சியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 12, 2026
- 08:43 am IST
வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!
TNPSC Group 2 exams postponed; டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 8, 2026
- 13:23 pm IST
திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
Edappadi Palaniswami On DMK: “மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக 2.0 ஆட்சி அமையும்” என ஸ்டாலின் கூறி வருவது, தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றும் முயற்சியே என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 7, 2026
- 10:01 am IST
“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 6, 2026
- 14:29 pm IST
“125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..
AIADMK hold protests: மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை வழங்கும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளன. இந்தச் சட்டம் மாநில அரசிற்கு வெளிப்படையாகவே கீழ்க்கண்ட அதிகாரத்தை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 6, 2026
- 07:54 am IST
அதிமுக தேர்தல் அறிக்கை குழு என்ன செய்கிறது..? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் அறிக்கைக்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டது குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "இது எனக்குப் புரியவில்லை. அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழு என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது" என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Feb 4, 2026
- 23:32 pm IST
ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS responds to TVK Vijay: அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக விஜய்க்கு ஒன்றும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.
- Karthikeyan S
- Updated on: Feb 4, 2026
- 14:58 pm IST
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Feb 4, 2026
- 13:48 pm IST
அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- Vinalin Sweety
- Updated on: Feb 3, 2026
- 20:34 pm IST
அண்ணா நினைவு நாள்.. சென்னையில் அமைதிப் பேரணி சென்ற முதல்வர் ஸ்டாலின்..
மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 3, 2026
- 10:58 am IST