Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
‘தோல்வி நிச்சயம்’ என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால், திமுக வெற்றி பெறும் என்ற பொய்யான படிமத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவும், கலவரம் ஏற்படுத்தவும் முயற்சிகள் இருக்கலாம். எனவே, 04.05.2026 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 20:17 pm IST
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
உலக தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு சங்கிலிகளைத் தவிர எதுவுமில்லை’ என அழைத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு சொல்லாலும் செயலாலும் உழைப்பாளர்களை போற்றும் இந்த மே தினத்தில், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 16:51 pm IST
“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!
Edappadi Palaniswami Condemns: இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 26, 2026
- 07:35 am IST
“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது”.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..
Tamilnadu Assembly Election: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 25, 2026
- 14:03 pm IST
சட்டமன்ற தேர்தல்… ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள்!
Tamilnadu Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர் .
- Gowtham Kannan
- Updated on: Apr 23, 2026
- 10:43 am IST
இளைஞர்களுக்கு பைக் மானியம்.. எடப்பாடியின் கடைசி நிமிட ‘மெகா’ தேர்தல் வாக்குறுதிகள்!
AIADMK 10 Election Promises: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுகவின் கடைசி தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பன 10 வாக்குறுதிகள் உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Apr 22, 2026
- 07:52 am IST
வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வரும் 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியது அதிமுக அரசு. வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 20:24 pm IST
தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில்வும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்து வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 15:03 pm IST
பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
Congress President Rahul Gandhi: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர். எஸ். எஸுக்கு அதிமுக தலைவர்கள் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 20, 2026
- 13:40 pm IST
தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi Criticized Senthil Balaji : கரூர் தொகுதியில் தற்போதைய எம். எல். ஏ.வான செந்தில்பாலாஜி தனது பலவீனம் காரணமாக வேறு தொகுதியில் போட்டியிட சென்று விட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தாார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 19, 2026
- 20:50 pm IST
தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..
Edappadi Palaniswami About Delimitation: இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 17ஆம் தேதி நேற்று மாலை இந்த மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 18, 2026
- 17:49 pm IST
ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!
Eps Criticized Sengottaiyan : அதிமுகவில் செங்கோட்டையன் இருந்த போது, ஓட்டு வீட்டில் வசித்து வந்த அவர் பங்களா வீடு கட்டியது எப்படி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ததுடன் கேள்விகளை எழுப்பினார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 18, 2026
- 10:58 am IST
“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..
Tamilnadu Assembly Election: கடந்த 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்து, பாஜக தமிழகத்திற்கு வழங்கிய சிறப்புத் திட்டம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாரா?
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 18, 2026
- 08:18 am IST
ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!
KA Sengottaiyan: அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக நான் பதவி ஏற்றிருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக்கக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 15:01 pm IST
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?.. ரகசியம் உடைத்த இபிஎஸ்..
Edappadi Palaniswami reveals the secret; தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக அவதூறு பரப்புவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்று ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டச் சொன்னார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 08:40 am IST