Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!
KA Sengottaiyan: அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக நான் பதவி ஏற்றிருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக்கக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 15:01 pm IST
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?.. ரகசியம் உடைத்த இபிஎஸ்..
Edappadi Palaniswami reveals the secret; தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக அவதூறு பரப்புவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்று ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டச் சொன்னார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 08:40 am IST
“கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!
Tamilnadu Assembly Election: செந்தில் பாலாஜியை மனிதாபிமானம் இல்லாத, இரக்கமற்ற ஒரு "அரக்கன்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தத் திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்று சாடினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 16, 2026
- 13:18 pm IST
தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசுகிறார் – எடப்பாடி பழனிசாமி..
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறும் தருணம் இது; அதனால் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. பெண்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயமும் இதுதான். இதனை ஜீரணிக்க முடியாததால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தினாலேயே அவர் இப்படி பேசுகிறார் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 21:59 pm IST
திமுக நினைத்திருந்தால் விவசாயிகளின் பிரச்னைகளை சரிசெய்து இருக்கலாம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திராவிட முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. அவர்கள் நினைத்திருந்தால், கேரளாவுக்கு சென்று விவசாயிகளின் பிரச்னைகளை சரிசெய்து இருப்பார்கள். கூட்டணி அமைக்க வேண்டும், அதன் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 14, 2026
- 21:48 pm IST
தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்பது எப்போதும் வடக்கில் இருந்து தான் வரும் – திமுக தலைவர் ஸ்டாலின்..
தமிழ்நாடு என்ற பெயரே சிலருக்கு கண் உருத்தலை ஏற்படுத்துகிறது. ‘தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடாது என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் குரல் அல்ல; அது ஆர்எஸ்எஸ் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 13, 2026
- 22:34 pm IST
2 – ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.. திமுகவின் வரலாற்றை கூறி சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi K Palaniswami: ரூ.1.74 லட்சம் கோடி 2- ஜி ஸ்பெக்டரம் ஊழலில் திராவி முன்னேற்றக் கழகத்தின் அப்போதையை மத்திய அமைச்சர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நம்மை பற்றி குறை கூற முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 20:16 pm IST
துரோகம் பாஜவுக்கு பழக்கம்… துணை போவது அதிமுகவுக்கு வழக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்!
Dmk Leader M.K.Stalin : தமிழகத்துக்கு பாஜக துரோகம் செய்வது பழக்கமாகவும், அதற்கு அதிமுக துணை போவது வழக்கமாக இருந்து வருவதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 19:10 pm IST
“ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால் கடன் தான் வரும்!”.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய இபிஎஸ்!!
Tamilnadu Assembly Election: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 11, 2026
- 07:25 am IST
“நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..
Tamilnadu Assembly Election: விஜய் தொடர்ந்து திமுகவை 'ஏமாற்ற அரசு', தீய சக்சி என்று விமர்சிப்பது குறித்துப் பேசிய அமைச்சர், விஜய் பாரதிய ஜனதா கட்சியால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளரைப் போலச் செயல்படுகிறார் என்று சாடினார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 10, 2026
- 14:31 pm IST
விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!
Tamilnadu Assembly Election: அதிமுகவின் அடுத்த இலக்கு அஜித் ரசிகர்களா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "அஜித் ரசிகர்கள் 90 சதவீதம் பேர் ஏற்கனவே அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் விரும்பித் தலைவரிடம் புகைப்படங்களைக் கொடுக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 10, 2026
- 09:06 am IST
பழனிச்சாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்!
CM MK Stalin Slams Eps: பெரிய பெரிய தலைவர்களுடன் பழகும் அனுபவம் கிடைத்த எனக்கு எடப்பாடி கே. பழனிசாமிக்கெல்லாம் பதில் அளிக்கும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி வருத்தம் அடைவதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 9, 2026
- 15:05 pm IST
வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் மிக தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 8, 2026
- 19:46 pm IST
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!
Tamilnadu Assembly Election: திமுகவினர் கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கேட்கும் ஊழியர்களைத் தாக்குவதாகவும் அவர் புகார் கூறினார். இத்தகைய அநாகரிகமான அரசியல் மற்றும் மிரட்டல் போக்குகளுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 8, 2026
- 13:04 pm IST
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் உஷா ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 7) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தல் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 7, 2026
- 22:28 pm IST