AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.. “நிலைமையை உணராத இபிஎஸ்”.. எஸ்.பி.வேலுமணி பகிரங்கக் குற்றச்சாட்டு!!

மிக முக்கியமாக, அதிமுகவின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வேலுமணி அறிவித்துள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அரசியல் அறத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியைப் பிரிக்கும் எண்ணம் தங்களுக்கு யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி

AIADMK General Secretary Edappadi K Palaniswami: அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!

Palaniswami And 22 MLAs Shoud Disqualified: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 எம். எல். ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் எஸ்.பி.வேலுமணி.

சி.வி.சண்முகம் தரப்பு மீது இபிஎஸ் டீம் மூவ்! தவெக ஆதரவு விவகாரத்தில் ஆளுநரிடம் புகார் அளிப்பு!

Edappadi Complaint CV Shanmugam: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர் புகாரளித்தனர்.

எடப்பாடி vs சி.வி.சண்முகம்.. அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன? பரபரக்கும் தமிழக அரசியல்!!

தன் மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்ததாகவும், ஆனால் எடப்பாடி தனது 'சர்வே' முடிவுகளைக் காரணம் காட்டி அதைத் தன்னிச்சையாக நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்… அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு!

AIADMK Inbadurai : தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாகவும், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த இன்பதுரை குற்றம் சாட்டி உள்ளார் .

அதிமுகவில் அடுத்த அதிரடி.. புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

AIADMK New Secretaries : தவெக அரசுக்கு ஆதரவளித்தாக அதிமுகவில் 17 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் யார் என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிமுகவில் அதிரடி மாற்றம்.. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி காலி… எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்சன்!

Sp Velumani And CV Shanmugam : தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுகவை பிளவுபடுத்தி உடைக்கும் எண்ணம் இல்லை… எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Former Minister S P Velumani : அதிமுகவை இரண்டாக பிளவு படுத்தி உடைக்கும் எண்ணம் எங்கள் தரப்பு எம். எல். ஏக்களுக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார். அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.

“அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!

அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உலவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. "அதிமுக உருவானதே திமுகவிற்கு எதிரான கொள்கையில்தான். திமுகவை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம், அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் – விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?

இதனிடயே, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரும் செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கரை அருகே அழைத்த சி.வி.சண்முகம், அவரது காதில் முனுமுனுத்தார். தொடர்ந்து, விஜய்பாஸ்கர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இருக்கைக்கு எழுந்துச்சென்று பேசினார். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.

திமுக – அதிமுக கூட்டணி பேசியதா? உண்மைதான் என்ன? விளக்கமளித்த தலைவர்கள்!

AIADMK - DMK Alliance: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கு அரசியில் கட்சிகளை சேர்ந்த ஆர். எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு

ADMK Politics: சொந்த மாவட்டத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் எடப்பாடியார் வழங்கிய வாய்ப்பால் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது அதிகாரத்திற்காக தி.மு.க மற்றும் த.வெ.க-வுடன் ரகசிய பேரம் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையையும், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையும் கைகழுவிவிட்டு சுயநலத்திற்காகச் செயல்படுவது ஈனத்தனமான அரசியல் துரோகமாகும் என அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா முதல்வர் விஜய்? நடந்தது இதுதான்!

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அதிமுகவின் ஒரு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்க்கு பின்னால் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வணங்கியதாகவும், முதல்வருக்கு வணக்கம் வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்..

சி.வி. சண்முகம் தலைமையில் இருக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சட்டப்பேரவைக்குள் அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.