Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

பழைய ஓய்வூதியத் திட்டம்.. திமுகவின் கண் துடைப்பு நாடகம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

Edappadi Palaniswami Statement: அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்?” அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி!!

நேர்காணலுக்குப் பின், வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடனும் ஒன்றாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் முடிவை ஏற்று, குறிப்பிடப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் உரிய பதவியிடங்கள் வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

எடப்பாடியுடன் சந்திப்பு…உறுதி செய்யப்பட்டதா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு…நயினார் கூறுவது என்ன!

Nainar Nagendran- Edappadi K Palaniswami meeting: அ. தி. மு.க பாெதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்துள்ள நிலையில், இந்த சந்திப்புக்கான காரணத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .

எடப்பாடி-நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு…முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

Nainar Nagendran Meet Edappadi K. Palaniswami: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் என்னென்ன ஆலோசிக்கப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!

TTV dhinakaran in the NDA alliance: அதிமுக வலுவாக உள்ளதாகவும், கடந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்தாகவும், அதனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இந்த சந்திப்பில் கூட்டணி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுக – பாமக இயற்கையான கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி!

அதிமுக - பாமக இயற்கையான கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில் இன்றைய தினம் நானும், அன்புமணியும் சந்தித்து வெற்றிக்கூட்டணிக்கான அச்சாரமிட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..

EPS trip to delhi: அதனால், இன்றைய சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு, இறுதி செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

“அதிமுக வேட்பாளராக போட்டியிட யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்”.. இபிஎஸ் எச்சரிக்கை!

Edappadi Palaniswami warning: வரும் ஜன.9ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது. சரியான நபர்களை அடையாளம் கண்டு, ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து, இறுதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எனவே, போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருவோம் என்று யாரிடம் வேண்டியும் செல்ல வேண்டாம்.

4 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக – பழனிசாமி சொன்ன தகவல்கள்!

எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் , அது தொடர்பான விவரங்களை ஆளுநர் ரவியிடம் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தெரிவித்தார். 

ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..

AIADMK candidate interview: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடன் நேர்காணல் ஜனவரி 9ம் தேதி முதல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு.. இபிஎஸ் களம் இறங்க 2,187 பேர் விருப்பம்!!

AIADMK assembly elections applications forms: விருப்ப மனு பெறுவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, விருப்ப மனுக்​களை பெறு​வதற்​கான அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை அதிமுக நீட்டித்தது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

“திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!

Aiadmk district secretaries meet: தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால், மிக தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்றும், ஐடி விங் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

AIADMK district secretaries meet: திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் தற்போது வரை வாய்திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

1999ஆம் ஆண்டு திமுக – பாஜக கூட்டணி குறித்து சரமாரி கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palniswami Campaign: திமுகவில் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவிகளும் அதிகாரங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.