Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

அதிமுக தேர்தல் அறிக்கை குழு என்ன செய்கிறது..? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் அறிக்கைக்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டது குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "இது எனக்குப் புரியவில்லை. அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழு என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது" என்றார்.

ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி

EPS responds to TVK Vijay: அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக விஜய்க்கு ஒன்றும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!

AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அண்ணா நினைவு நாள்.. சென்னையில் அமைதிப் பேரணி சென்ற முதல்வர் ஸ்டாலின்..

மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.

அதிமுக தனிக்கட்சி அல்ல…அது பாஜகவின் கிளை…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Chief Minister MK Stalin: தமிழகத்தில் அதிமுக தனிக் கட்சி அல்ல என்றும் அது பாரதீய ஜனதா கட்சியின் கிளையாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெஞ்சை உறைய வைத்த கொலை முயற்சி.. இதற்கு மேல் சட்டம் – ஒழுங்கு சீர்கெட முடியாது.. கொதித்த இபிஎஸ்..

தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல - தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா? – எடப்பாடி பழனிசாமியின் பதிலால் பரபரப்பு

EPS clear response to OPS: செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என கேள்வி எழுப்பியிரு்தார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?

O Panneerselvam: அதிமுகவில் இணைய தயாராக உள்ளதாகவும், எங்களை இணைக்க அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தயாராக உள்ளாரா என்று தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு டிடிவி தினகரன் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

தேமுதிக-அதிமுக கூட்டணி உறுதியாகிறது…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…சீனிவாசன் கொடுத்த அப்டே்!

Dindigul Srinivasan: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், திமுக, தவெகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!

Edappadi k Palaniswami: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக் கட்டு போட்டியில் பங்கேற்று எதிர்பாரதவிதமாக மரணம் அடையும் மாடுபிடி வீரருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..

AIADMK Candidate selection; இந்த நேர்காணலின்போது, ​​வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்கு அவர்கள் செய்த பணிகள் மற்றும் திமுக குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுக்கு எதிரான தொகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்..! எடப்பாடி பழனிசாமி முன்னிலை அதிமுகவில் இணைந்தார் தர்மர்!

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஆர். தர்மர் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!

Dharmar MP: அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம். பி. அவரிடம் இருந்து விலகி இன்று மாலை எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார்.

“மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!

இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த மிரட்டலோ, அழுத்தமோ இல்லை. ஏப்ரல் 2017-க்கு முன்பு இருந்ததைப் போலவே, நாங்கள் சகோதரர்களாக மீண்டும் இணைந்துள்ளோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டாக கூறியுள்ளனர்.