Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி..!
மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Dec 23, 2025
- 22:34 pm IST
அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்… – ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
OPS Remarks on EPS: சென்னையில் தொண்டர் உரிமை மீட்பு குழு சந்திப்பில் நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், பழனிசாமியை பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் பழனிசாமி தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.
- Karthikeyan S
- Updated on: Dec 23, 2025
- 23:05 pm IST
விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்
TVK Vijay: பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் குறித்தான பேச்சின் போது அவர் ஒரு ஸ்பாயிலர் என பியூஶ் கோயல் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Dec 23, 2025
- 17:09 pm IST
எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..
ADMK BJP: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை பெரிதளவில் அதிகரித்து, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 23, 2025
- 13:43 pm IST
அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..
ADMK - BJP Alliance: இந்த சூழலில், டிசம்பர் 15, 2025 தேதியான நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
- Aarthi Govindaraman
- Updated on: Dec 13, 2025
- 19:07 pm IST
கர்நாடகா காங்கிரஸிற்கு லாலி பாடும் முதல்வர்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாதுவில் புதிய அணை கட்டி தமிழ் நாட்டை காங்கிரஸ் பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் வாதாடவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Dec 12, 2025
- 19:38 pm IST
”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து
Rajinikanth birthday: மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 12, 2025
- 11:58 am IST
Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Dec 11, 2025
- 17:28 pm IST
நெருங்கும் சட்டசபை தேர்தல்: நேற்று அதிமுக பொதுக்குழு.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!
TN Assembly elections: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 11, 2025
- 12:00 pm IST
திமுக ஊழல் பணத்தை வைத்து ஓராண்டுக்கான பட்ஜெட் போடலாம் – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
Edappadi Palaniswami: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 8, 2025
- 19:40 pm IST
“தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
Edappadi K Palaniswami: எம்மதமும் சம்மதம் - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 5, 2025
- 07:44 am IST
எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்து உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் கொண்டம்பாளையத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பதும் அவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 30, 2025
- 21:19 pm IST
அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொது்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையில் செங்கோட்டையன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா? என கேள்வி எழுப்பினார்.
- Karthikeyan S
- Updated on: Nov 30, 2025
- 19:54 pm IST
தவெகவில் செங்கோட்டையன்.. பதில் சொல்ல மறுத்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து பதில் சொல்ல தேவையில்லை” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 27, 2025
- 20:51 pm IST
29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 25, 2025
- 16:21 pm IST