AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

பயிர் கடன் தள்ளுபடி விவகாரம்.. தவெக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுகிறது.. எடப்பாடி குற்றச்சாட்டு!

Edappadi K Palaniswami : தமிழக விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். மேலும், பல்வேறு விமர்சனம் வைத்துள்ளார்.

காலாவதியான நோட்டரி சான்று? செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு!

K. A. Sengottaiyan Against Case: கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. ஏ. செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் .

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?

Aiadmk Mla C Vijayabaskar Resigned : அதிமுகவை சேர்ந்த சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் .

காலியான 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக்கோரி அதிமுக மனு.. நாளை மறுநாள் விசாரணை..

இது தொடர்பான மனுவில், “சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது, அதனை தவிர்க்கும் வகையில் அவர்கள் ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சி தாவல் தடைச் சட்டத்தையும் மக்கள் தீர்ப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள்.. ஷாக் கொடுத்த அதிமுக.. இடைத்தேர்தல் நடத்த தடை கோரி மனு!

தமிழக அரசின் சார்பில் ஆஜரான தற்போதைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடுகையில், "அந்த 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது அவர்களுடைய சொந்த முடிவு; இதில் எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது நிர்பந்தங்களோ இல்லை. தகுதி நீக்கம் தொடர்பாகச் சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மேலும் 4 பேர் இருந்ததால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.

“50 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை”.. குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆளுங்கட்சி நிர்வாகிகளே.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

தற்போதைய ஆட்சியில் குற்றம் செய்யும் ஆளுங்கட்சியினர் மட்டும்தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. தன் சொந்தக் கட்சித் தலைவரே முதலமைச்சராகப் பொறுப்பில் இருப்பது பற்றியோ, அல்லது அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இந்த குற்றவாளிகளுக்கு எந்தவிதமான பயமும் வராமல் இருப்பது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!

Actress Gautami quits AIADMK: இந்தத் தொடர் விலகல்கள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி மீண்டும் மீண்டெழும் என்கிற நம்பிக்கையைத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் விதைக்கத் தலைமை தவறிவிட்டது. தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர்.

“சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!

தேர்தலுக்குத் தேர்தல் கழகத்தின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது; மக்கள் மத்தியில் அதிமுக தன் நன்மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது. திமுகவில் கேள்வி கேட்டதற்காகவே தந்தை எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இது. ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, யாரும் கருத்துச் சொல்லக் கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது.

“தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!

Expose TVK govts errors through Reels: அதிமுகவிற்கென பிரத்தியேகமாகச் சமூக வலைதளங்களை ஒருங்கிணைக்கத் தனி 'வார் ரூம்' அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தவெக-வின் வெற்றி என்பது நிலையாக இருக்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!

இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு – அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு

பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

Edappadi Palaniswami : தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த முதல் வழக்கு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்து உள்ளார் .

21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!

Speaker J. C. D Prabhakar : அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி இல்லை”.. ஸ்டாலின், இபிஎஸ் கூறியது தவறு.. விளாசிய சிபிஎம் சண்முகம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய கட்சி, மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று விமர்சிப்பது தவறானது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என யார் அப்படிப் பேசினாலும் அது தவறு என்று கண்டித்த அவர், ஒரு புதிய அரசு தங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றிவிட முடியாது என்றும் கூறினார்.