Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
இடைத்தேர்தல் களம்: அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?.. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
AIADMK Probable Candidate List: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் மகேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த விரிவான தகவல்கள் இதோ!
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 9, 2026
- 13:31 pm IST
பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!
Perundurai Constituency Election Case : பெருந்துறை தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Sep 8, 2026
- 12:20 pm IST
மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Aiadmk Applications Distribution : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாள்களுக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Sep 8, 2026
- 12:20 pm IST
உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..
ADMK District Secretaries Meeting: சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 6, 2026
- 12:11 pm IST
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா வழக்கு.. உயர்நீதிமன்றம் வைத்த செக்.. அலறவிட்ட இபிஎஸ்!!
ADMK MLA's Resignation Case: 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற அனுமதி கோரி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் முழு விவரங்கள் இதோ.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 2, 2026
- 08:13 am IST
“தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!
TVK Governance is an Accident: தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்றும், இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் கூறிய அவர், அரசின் கடன் சுமையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 30, 2026
- 11:35 am IST
எடப்பாடி பழனிசாமி பேசும்போதே மின்வெட்டு… தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என விமர்சனம்
Edappadi K Palaniswami : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் இது தான் தவெக ஆட்சியின் லட்சணம் என விமர்சனம் செய்தார். மேலும் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் பேசினார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 29, 2026
- 19:15 pm IST
ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏவின் பேச்சு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக அதிரடி பாய்ச்சல்!
TVK MLA Remarks Jallikattu : தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ கருப்பையாக ஜல்லிக்கட்டு குறித்து அவதூறாக பேசிய தற்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தலைமை வலியுறுத்தி உள்ளது .
- Gowtham Kannan s
- Updated on: Aug 29, 2026
- 12:05 pm IST
சவிதியில் தமிழக மீனவர் உயிரிழப்பு.. அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..
TN Assembly: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரான் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 20, 2026
- 11:31 am IST
சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!
Edappadi Palaniswami Speech: சவுதியில் ஈரானியக் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை மீட்கக் கோரும் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழர்களைக் காப்பதாகக் கூறும் அரசு, வெளிநாட்டில் சுடப்பட்ட தமிழனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 19, 2026
- 11:34 am IST
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!
Speaker JCD Prabhakar : அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 18, 2026
- 05:57 am IST
முதல்வர் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி தவெக வேட்பாளர்.. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!
TVK Candidate Joined ADMK : எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமார், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கு தவெகவில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 15, 2026
- 19:37 pm IST
ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!
Edappadi Palaniswami Criticizes CM Vijay : தமிழக வெற்றிக் கழக அரசு ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதையுமே சாதனையாக செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 15, 2026
- 15:54 pm IST
முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்.. தஞ்சாவூரில் ஆவேசமாக வெடித்த இபிஎஸ்!!
ADMK farm loan waiver Protest: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் மற்றும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 14, 2026
- 12:12 pm IST
“அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!
ADMK Crisis Former Ministers Meet: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். டெல்லி பாஜக தலைமையின் சமரச அறிவுறுத்தலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உட்கட்சிப் பூசல் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 13, 2026
- 14:00 pm IST