தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்.
பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்.. அறிவிப்பு எப்போது வெளியாகும்.. ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பு!
PMK Founder Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற தகவலை அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவை இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 17:10 pm IST
தவெகவினர் முன் அனுமதி பெறாமல் இதை செய்யக்கூடாது… கட்சி தலைமை போட்ட புதிய ரூல்ஸ்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கட்சியினர் பேட்டிகள், விவாதங்களில் பங்கேற்பதற்கு முன்னதாக கட்சி தலைமையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 16:15 pm IST
தவெக நிர்வாகி மீது கொடி கம்பம் சாய்ந்து விபத்து.. கரூரில் பரபர சம்பவம்..
நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. அதனை பொருட்படுத்தாத தொண்டர்கள், நாற்காலிகளை தங்களது தலையில் கவிழ்த்தபடி சம்பத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்ட மேடை அருகே இருந்த மின்விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக சரிந்து, மேடையில் நின்றுகொண்டிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் விழுந்தது.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 26, 2026
- 16:15 pm IST
நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..
இதுவரை திமுக தரப்பில் முழுமையான பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை சந்தித்து மாநிலங்களவை இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!
Annamalai Criticized DMK : கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளதாகவும், இதற்கான பதிலை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெளிபடுத்துவார்கள் என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி… திமுக வீட்டு மக்களுக்கான கட்சி.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Edappadi K Palaniswami : அதிமுக நாட்டு மக்களுக்கும், திமுக வீட்டு மக்களுக்கும் ஆட்சி செய்து வருவதாக திருவள்ளூரில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்த அ. தி. மு. க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
வி.கே.சசிகலா தொடங்கிய கட்சிக்கு இதுதான் பெயரா… வெளியான ரகசிய தகவல்!
VK Sasikala Party Name: வி. க. சசிகலா தொடங்கிய கட்சிக்கு கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சிக்கான பெயர் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது கட்சியின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
“என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..
CM Stalins confident speech: தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை முடக்க எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்ததாகவும், அதை முறியடிக்கவே ₹5,000 முன்தொகையாக வழங்கப்பட்டதாகவும் முதல்வர் கூறினார். திமுக அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில், "சூப்பர் ஹிட்" ஆகியுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
“திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம்”.. டிடிவி தினகரன் அட்டாக்!!
TTV Dhinakaran attacks Sasikala: அந்தவகையில், நேற்று கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல, இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் சசிகலா பரபரப்பாக பேசியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.. ஆலோசனைக்கு பின் தேர்தல் தேதி அறிவிக்க திட்டம்?
2026 Assembly Election: நாளை சென்னைக்கு வரும் இந்த குழு, தமிழக தலைமைச் செயலர், மாநில காவல்துறை தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
ராமதாஸ் தலைமையில் நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு?
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பின் படி கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்றும், மாம்பழ சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கான உரிமை தற்போது அன்புமணியிடம் உள்ளது. இதன் காரணமாக, கட்சி நிறுவனர் ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
“அதிமுகவிடம் 35 தொகுதிகள் கேட்கும் பாஜக”.. நாளை தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு?
NDA alliance seat sharing: இந்த பட்டியலில் இருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் தற்போது பாஜக வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கியிருந்தனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 26, 2026
- 16:16 pm IST
புதிய கட்சியை தொடங்கிய சசிகலா – கட்சி கொடியும் வெளியீடு
விகே சசிகலா தலைமையில் கமுதியில் பிப்ரவரி 24, 2026 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவத்த அவர் தன் கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
- Karthikeyan S
- Updated on: Feb 26, 2026
- 16:17 pm IST
“எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்”.. ஓபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு..
O.Pannerselvam statement: அதிமுக இணைப்பு குறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியும், அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? ஏதேனும் சங்கரமடத்தில் சென்று சேர்ந்துவிடவா? உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வேன்? என்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 26, 2026
- 16:17 pm IST
ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!
AIADMK election promise: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 26, 2026
- 16:17 pm IST