AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் "மையப்புள்ளியாக" மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது.

இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 May 2026 14:15 PM IST

திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து, தற்போது அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் ‘சினிமா டூ முதலமைச்சர்’ என்ற லட்சியப் பயணம், நேற்றிரவு மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஐயுஎம்எல் மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து மொத்தம் 3 இடங்களை வென்றுள்ளன. இதில் இரண்டு இடங்கள் தங்களுக்குக் கிடைக்கும் என விஜய் நம்பியிருந்தார். தவெக தற்போது 108 இடங்களை வைத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இந்த ஆதரவு மிக அவசியமாக இருந்தது.

ஒட்டுமொத்த கவனமும் விசிக மீது:

ஆனால், ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேற்று மாலை விஜய் சந்தித்த சில மணி நேரங்களிலேயே இந்த ‘டீல்’ முறிந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, 118 ஆதரவுக் கடிதங்களை நேரடியாகக் காட்ட வேண்டும் என ஆளுநர் பிடிவாதம் காட்டியது தவெகவுக்குப் பின்னடைவாக அமைந்தது. இந்த சூழ்நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் அதன் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கம் திரும்பியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு விசிக அறிவிப்பு:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் “மையப்புள்ளியாக” மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு விஜய் மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கொடுத்த ‘கிரீன் சிக்னல்’ – நடந்தது என்ன?

கடந்த புதன்கிழமை விசிக மற்றும் இடதுசாரி தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசித்தனர். அப்போது, கட்சிகள் தங்கள் சுய விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என ஸ்டாலின் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார். காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், விஜய்க்கு இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன. வியாழக்கிழமை வரை இடதுசாரி கட்சிகள் தயக்கம் காட்டினாலும், இறுதியில் ‘ஆட்சி அமைக்க ஆதரவு’ அளிக்க ஒப்புக்கொண்டன. ஆனால், விசிக ஒரு அமைச்சரவை பதவியோடு சேர்த்து, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வேண்டும் என நிபந்தனை விதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை அரங்கேறிய அதிரடி திருப்பங்கள்:

வெள்ளிக்கிழமை மாலை ‘விஜய்க்கு ஆதரவு’ என அறிவித்த விசிக, திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் 120 இடங்கள் (பெரும்பான்மைக்கும் அதிகம்) இருப்பதாகக் கருதி ஆளுநரைச் சந்திக்கத் தயாரான விஜய்க்கு, ஐயுஎம்எல் மற்றும் அமமுக பின்வாங்கியது பேரிடியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விசிகவும் தனது ஆதரவை நிறுத்தி வைத்ததால், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

முடிவுக்கு வரும் காலக்கெடு:

தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10 (திங்கட்கிழமை) உடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவியேற்காவிட்டால், ஆளுநர் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட நேரிடும். இதனால் கடந்த மாதம் விஜய் ஈட்டிய தேர்தல் வெற்றி வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பதே தமிழக மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow Us