AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அன்புமணி.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

ஏப்ரல் 4ஆம் தேதி (நாளை), சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் – அண்ணாமலை பதிவு..

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாவட்டம் தோறும் சென்று, சட்டமன்றத் தொகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், சாலைப் பயணம் மேற்கொண்டு மக்களின் மனநிலையையும் கள ஆய்வு செய்து வருகிறார்.

மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அதேபோல், மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவகுமார், கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீநிவாசன், அறந்தாங்கி தொகுதியில் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்… தேசிய கட்சிகள் 8 தொகுதியில் நேரடி போட்டி… மக்கள் ஆதரவு யாருக்கு!

National Parties Direct Contest: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகிக்கும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. உட்கட்சி பூசலை தீர்க்க நிர்வாகிகளுக்கு அதிரடி வாக்குறுதிகள்!!

Tamilnadu Assembly Election: இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்த நிலையில், 164 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீட் கிடைக்காத பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பரபரக்கும் தேர்தல் களம்: பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த அழைப்பு… முழு விவரம் உள்ள!

Bjp Former Leader K. Annamalai: தமிழக பாஜகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று பாஜக மையக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு கட்டாய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல்.. பாஜக நிர்வாகியை அதிரடியாக நீக்கிய நயினார் நாகேந்திரன்..

Tamilnadu Assembly Election: இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த R. முரளீதரன், தன்னிச்சையாகத் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்… தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவரும், திமுக அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா.

சிறையிலிருந்தே தேர்தல் களம் காணும் ஹரி நாடார்.. ஆலங்குளத்தில் மீண்டும் சவால்!!

Tamilnadu Assembly Election: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ஹரி நாடார் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக, சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே, தனது வழக்கறிஞர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முதல்வர் ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் என நான்கு அதிகார மையங்கள் இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனங்களுக்குப் மத்தியில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேற்றைய தினம் சபரீசன் தயக்கமின்றி பதிலளித்துள்ளார்.

விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… பெரம்பூரில் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? என்ன காரணம்!

Tvk Leader Vijay Nomination Perambur : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் புதிய குளறுபடி ஏற்பட்டதே காரணமாக தெரியவந்துள்ளது.

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்”.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

Tamilnadu Assembly Election: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைவிட மோசமாக தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்றார். குடியரசு தினவிழா அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு இடம் இல்லை என்று மறுத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என்று எங்கள் மக்கள் சொல்கிறார்கள் என்றார்.

தபால் வாக்குகளை கையாள புதிய யுக்தி… திருச்சியில் அமைந்தது சிறப்பு மையம்!

Postal Vote Distribution: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!

PM Narendra Modi Arrives Chennai and Puducherry: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.