Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..
Naam Tamilar Party Conference: திருச்சியில் வரக்கூடிய 2026 பிப்ரவரி 21ஆம் தேதி மக்களின் மாநாடு நடத்த இருப்பதாகவும், அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் வரக்கூடிய தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 2, 2025
- 08:52 am IST
தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள்.. பைஜயந்த் ஜெய் பாண்டா பேட்டி!
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பைஜயந்த் ஜெய் பாண்டா இன்று அதாவது 2025 நவம்பர் 28ம் தேதி 2025-26 காலத்திற்கான பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், “தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக, மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 28, 2025
- 22:16 pm IST
யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
PMK Alliance In Assembly Election: செய்தியாளர்களை சந்தித்த கட்சி நிறுவனர் ராமதாஸ், “சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் 2025 டிசம்பர் 30 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 25, 2025
- 15:22 pm IST
கூட்டணியை இறுதி செய்ய தயாராகும் காங்கிரஸ்; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக அல்லது தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற சலசலப்பு நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பது தெரியவில்லை.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 22, 2025
- 13:35 pm IST
பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?
TVK Election Symbol: தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றான சின்னம் தேர்ந்தெடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பேட், விசில், பந்து ஆகியவை அடங்கும்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 20, 2025
- 10:13 am IST
‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு இன்னும் 5 மாத காலமே அவகாசம் உள்ளது. இந்த சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 17, 2025
- 15:14 pm IST
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா? செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்!
தவெக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, இந்த பேச்சுவார்த்தையானது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறாமல், மத்தியில் உள்ள தலைவர்களுடன் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 17, 2025
- 15:18 pm IST
“தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்”.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு!!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்களிப்பும் முக்கியமானது என்று பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்துள்ளார். அதோடு, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வரலாற்று சிறப்பு மிக வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 17, 2025
- 08:46 am IST
கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பளிச் பேட்டி..
Premalatha Vijayakanth On Alliance: அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தேமுதிக யாரிடமும் பேசவில்லை இதுதான் உண்மை எங்களின் கட்சி வளர்ச்சியை மட்டுமே நாங்கள் முன்னிறுத்தி வருகின்றோம். மாநாடு நெருங்கும்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் வரும் அதை உறுதி செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 21:10 pm IST
Bihar Election 2025 : இளம் பாடகி முதல் சினிமா நடிகர் வரை.. பீகாரில் ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் என்ன?
Bihar election 2025 celebrity candidates result: 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல வேட்பாளர்களான கேசரி லால் யாதவ், ரித்தேஷ் பாண்டே, மைதிலி தாக்கூர் ஆகியோரின் வருகை அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. ஆர்ஜேடி, ஜான்சுராஜ், பாஜக சார்பில் போட்டியிடும் இவர்களின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்
- C Murugadoss
- Updated on: Nov 14, 2025
- 13:38 pm IST
Bihar Election Results 2025 : பீகாரில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. மெஜாரிட்டியை நெருங்கியது!
Bihar elections 2025 Results : பீகாரில் 243 சட்டமன்ற இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது. இரண்டு கட்டத் தேர்தலுக்கான 46 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது . மேலும் விவரங்களை எண்ணிக்கை வாரியாக தெரிந்துகொள்ளலாம்
- C Murugadoss
- Updated on: Nov 14, 2025
- 10:46 am IST
Bihar Election Result: பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்..
Bihar Election Result: பீகார் சட்டமன்ர தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளை எண்ணுவதற்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 243 தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும், அவர்களுடன் 243 பார்வையாளர்களும் வருவார்கள்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 14, 2025
- 09:45 am IST
தேமுதிக கூட்டணி எப்போது வெளியிடப்படும்..? பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் இன்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,” சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டு, அதன்பின்னர் கூட்டணி அமைக்கப்பட்டும். இது தொடர்பான அறிவிப்பை மாநாட்டிலேயே அறிவிப்போம்” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 13, 2025
- 23:00 pm IST
தேர்தல் வேலையை தொடங்கிய தேமுதிக.. இன்று முக்கிய ஆலோசனை!
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. இந்நிலையில் தேமுதிகவும் தன்னுடைய தேர்தல் திட்ட வேலைகளில் இறங்கிவிட்டது. இன்று மாவட்ட செயலாளர்களின் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது
- C Murugadoss
- Updated on: Nov 13, 2025
- 14:32 pm IST
வாக்காளர் கணக்கீட்டு படிவம்: ஆன்லைனிலும் நிரப்பலாம்.. எப்படி தெரியுமா?
Special Intensive Revision (SIR): இந்த சேவையை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மற்றும் அதே முகவரியில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்படுத்தலாம். அதோடு, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பதையும் தனியே தேடும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வைத்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 10, 2025
- 10:47 am IST