Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

Annamalai Pressmeet: சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது” என தெரிவித்துள்ளார்.

எங்களை யாரும் வீழ்த்த முடியாது.. மல்லை சத்யாவுக்கு துரை வைகோ பதிலடி!

MDMK Trichy Conference: திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், துரை வைகோ பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அதேசமயம் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவுக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்… 2026 தேர்தலில் புதிய கூட்டணி.. அவரே சொன்ன விஷயம்!

TVK - AMMK Alliance : 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் எனவும் அதில் அமமுக இணைவது குறித்து தற்போது முடிவு எடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார். மேலும், தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி தான் இருக்கும் என கூறியுள்ளார்.

” அஜித், ரஜினி வந்தால் இதை விட கூட்டம் வரும்” – விஜயின் பிரச்சாரம் குறித்து சீமான் கருத்து..

Seeman: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்நிலையில், அஜித், ரஜினி வந்தால் இதைவிட அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதி..

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 அன்று தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

Edappadi Palanisamy Delhi Visit : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி  பழனிசாமி மாற்றியுள்ளார்.   டெல்லி  செல்ல உள்ள நிலையில்,  2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் நடக்கும் பரப்புரை திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றியுள்ளது.

விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?

TVK Chief Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 12 மணி ஆகியும் பெரம்பலூர் சென்றடைய முடியாததால், குன்னம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் கையசைத்து விட்டு, உரையாற்றாமல் அவசரமாக சென்னை புறப்பட்டு சென்றார்.

பெண்கள் பாதுகாப்பில் நோ காம்பிரமைஸ் – அரியலூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை..

TVK Vijay Campaign: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2026 தேதியான இன்று முதல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். முதலில் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர் விஜய், அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

TVK Vijay: திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..

TVK Vijay Campaign: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது தொண்டர்கள் வெள்ளம் மத்தியில் உரையாற்றிய விஜய், “ அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், திருப்பு முனையாக அமையும். முதலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்ததே ஒரு திருப்புமுனையாகும்” என தெரிவித்துள்ளார்.

TVK Vijay: முதல்முறையாக அரசியல் பிரச்சாரம்.. திருச்சியில் தொடங்கும் விஜய்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மாவட்ட வாரியாகத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். திருச்சியில் தொடங்கும் இப்பிரச்சாரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது.

திருச்சியில் 23, அரியலூரில் 25.. விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை நிபந்தனைகள்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது. அரியலூரில் நடைபெறும் இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை 25 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் பிரச்சாரம் இடை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’ உங்க விஜய்.. நா வரேன்’ – தமிழக வெற்றிக் கழக பிரச்சார இலட்சினை வெளியீடு..

TVK Election Badge: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 தேதியான நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், அக்கட்சி தரப்பில் பிரச்சார இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

நான் ஏன் பதவி விலக வேண்டும்? எந்த அவசியமும் இல்லை – நயினார் நாகேந்திரன்

BJP Leader Nainar Nagendran: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ நான் ஏன் பதவி விலக வேண்டும்? ஜே.பி. நட்டாவும் அமித்ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனக்கு பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை” என தெரிவித்துள்ளார்.

’அதிமுக ஆட்சிக்கு வராது.. உதயநிதி சொன்னது உண்மை தான்’ டிடிவி தினகரன் பேட்டி

TTV Dhinakaran On Edappadi Palanisamy : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்கு அவரே காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு கொடுத்த கெடு.. கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கும் ராமதாஸ்?

PMK Ramadoss: அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் 10, 2025க்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணி பதில் அளிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.