AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்த காலம் முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 4 முறை தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து தற்போது எம்எல்ஏவாக இருந்து வரும் நத்தம் ஆர். விஸ்வநாதன் மீண்டும் அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் களமிறக்கப்படுவாரா.

சென்னையில் EVM, VVPAT ஒதுக்கீடு எப்படி நடைபெறுகிறது?

Chennai Begins First Phase Allocation: சென்னையில் தேர்தலுக்கான EVM, VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு தொடங்கியது. 4,079 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வேட்பாளர் பட்டியல் பிறகு அடுத்த கட்டத் தேர்வு நடை பெறும். அடுத்த 3 நாட்கள் இயந்திரங்கள் பிரிக்கும் பணி நடைபெறும்.

நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு… திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. உத்தேச பட்டியலும் வெளியீடு!

Vck Seat Sharing: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 6 தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது .

Tamilnadu Assembly Election: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்?

What Happens After Election Results: தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிய அரசு அமைக்கப்படுகிறது. முதல்வர் அல்லது பிரதமர் பதவியேற்று நிர்வாகம் தொடங்குகிறது. எதிர்க்கட்சிகள் கண்காணிப்புடன் ஜனநாயகம் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்காணித்து ஜனநாயகத்தை சமநிலைப்படுத்துகின்றன. இதுவே அரசியல் மாற்றத்தின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது.

பாமக போட்டியிடும் 18 சட்டமன்ற தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!

Pmk Contest Constituencies : தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 உத்தேச சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்பன குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிமுக கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு… ஜி. கே. வாசன் அறிவிப்பு!

Tamil Maanila Congress Party: தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். இதனால், தேஜ கூட்டணியில் தமாகா கூட்டணி உறுதியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டி… தொல்.திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!

Puducherry Vck : புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் கட்சியினர் மன அழுத்தத்தில் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!

Udhayanidhi Stalin: கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு அளித்தார்.

எலுமிச்சை பழம் மூலம் வேட்பாளர் தேர்வு… புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸில் விசித்திரம்!

NR Congress Party Candidate: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அப்பா பைத்தியம் சுவாமி அருள்வாக்கு கூறிய நபர் மற்றும் எலுமிச்சை பழம் பெறும் நபரே வேட்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த நிகழ்வு 2011- ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

“அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!

Tamil Nadu Assembly Election: நாங்களோ, எங்கள் கட்சி தலைவர்களோ டெல்லிக்குச் சென்றால், திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சரின் வாடிக்கையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கருத்துகளை பறிமாறிக்கொள்ள டெல்லி செல்கிறோம். தோல்வி பயத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின், நாங்கள் டெல்லிக்கு சென்றாலே அச்சப்படுகிறார் என்றார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு குறி.. அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி.. யார் வசம் செல்கிறது!

Nanguneri Assembly Constituency: நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் அமமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில், எந்தக் கட்சியின் வசம் நாங்குனேரி சட்டமன்ற தொகுதி செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..

Tamil Nadu Assembly Election: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில், பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஜி.கே.வாசன் கேட்ட தொகுதிகளுக்கு கூட்டணியில் யாரும் செவி சாய்க்காததால், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

252 முறை தோல்வி… ரூ.1 கோடி டெபாசிட் இழப்பு.. சற்றும் தளராத வேட்பாளர்.. யார் அவர்!

Election king K Pathmarajan: தேர்தல் மன்னன் அழைக்கப்படும் கே. பத்மராஜன் என்பர் 252 தேர்தல்களில் போட்டியிட்டதுடன், சுமார் ரூ.1 கோடி வரை டெபாசிட் தொகை இழந்துள்ளார். எனது இறுதி மூச்சு உள்ளவரை தேர்தல்களில் போட்டியிடுவேன் என்று கே. பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்… சேலம் தவெக மாவட்ட செயலர் மீது வழக்குப்பதிவு… முழு விவரம் என்ன!

Salem Tvk : சேலம் மாவட்டத்தில் இப்தார் நிகழ்வில் பங்கேற்ற பொது மக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக சேலம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசிக – திமுக தொகுதி பங்கீடு.. அரும்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் படிப்படியாக நிறைவு பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.