Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
Sangakiri Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் சங்ககிரி சட்டமன்ற தொகுதி.. கள நிலவரம் என்ன?
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி, நாமக்கல் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இந்த சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். சங்ககிரி, எடப்பாடி அருகிலுள்ள பகுதிகள், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. சங்ககிரி தொகுதியில் நெசவு மற்றும் கைத்தொழில் முக்கியமாக உள்ளது. அதேபோல், நெல், கரும்பு போன்ற விவசாயமும் அதிகமாக நடைபெறுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 2, 2026
- 21:00 pm IST
பூர்வீக சொத்து ஏதுமில்லை.. துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இன்று வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடி என்றும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும், பூர்வீக சொத்து எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 2, 2026
- 18:58 pm IST
திமுக–பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – திருச்சியில் விஜய் பரப்புரை..
Vijay Campaign: எதையும் செய்ய முடியாதபோது, வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை. கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடாமல் தடுத்தது ஒரு கூட்டு சூழ்ச்சி. இந்த தேர்தலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் தடுத்துள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 2, 2026
- 18:23 pm IST
பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா.. வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்றதால் பரபரப்பு..
இந்த சூழலில், இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கையில் தராசை ஏந்தியபடி சென்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதி கோரி அவர் கையில் தராசு ஏந்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 2, 2026
- 16:16 pm IST
ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடையநல்லூரில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில்; ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை தெற்கு; ஏப்ரல் 9ஆம் தேதி மொடக்குறிச்சி; ஏப்ரல் 10ஆம் தேதி சீர்காழி; ஏப்ரல் 11ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 2, 2026
- 15:47 pm IST
திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!
Tamilnadu Assembly Election: தொடர்ந்து, திருச்சி தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய், ரோடு ஷோவில் ஈடுபட்டார். இதனிடையே, பல்வேறு எச்சரிக்கைகளை மீறி, அவரது வாகனத்துக்கு பின்னால் பல இளைஞர்களும், சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 2, 2026
- 12:55 pm IST
பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!
PM Modi's Visit to Chennai: மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் ரோடு ஷோ அல்லது வாகனப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையையொட்டிச் சென்னையின் முக்கியச் சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 2, 2026
- 11:38 am IST
“மக்களை நம்பாதவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவார்”.. விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!!
Tamilnadu Assembly Election: திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே எல்லோரையும் இணைத்து கூட்டணி அமைத்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் என்று சொல்லும் கட்சிகள் ஏன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன? தனித்து நிற்க வேண்டியது தானே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 2, 2026
- 08:54 am IST
“நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!
Tamilnadu Assembly Election: திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டு காலத்தில் 18 ஆயிரம் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கோர்ட்டு மூலமாக 6 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 2, 2026
- 08:18 am IST
வேட்பாளர்களை அறிவிக்காத தேசிய கட்சிகள்.. டெல்லியில் காத்திருக்கும் தமிழக நிர்வாகிகள்!!
Tamilnadu Assembly Election: பாஜகவை பொறுத்தவரை அது தேர்ந்தெடுத்த உத்தேச பட்டியலை கட்சித்தலைமை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் ஏற்கனவே வெளியாகி இருக்கும். கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் 2 நாளில் பட்டியல் வெளியாகி விடும் என நேற்று தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 2, 2026
- 07:32 am IST
மீனவர்களுக்கு MLA சீட் வேண்டும்.. சென்னை தெற்கு மீனவர் பிரிவினர் போராட்டம்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி தமிழ்நாடு சென்னை தெற்கு மீனவர் பிரிவினர், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேண்டும் வேண்டும் மீனவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் வேண்டும் என்று அவர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Vinalin Sweety
- Updated on: Apr 2, 2026
- 00:04 am IST
மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர்.. எம்.பி கனிமொழி!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் என்ன சாதனைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை மக்கள் கண்டுள்ளனர். அவர்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 1, 2026
- 23:55 pm IST
Thangam Thenarasu Tamil Nadu Election: 5 முறை அடுத்தடுத்து வெற்றி… 6- ஆவது முறை வெற்றியை தன்வயப்படுத்துவாரா தங்கம் தென்னரசு!
Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து 5 முறை வெற்றியை பதிவு செய்த, வரும் சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி தொகுதியில் மீண்டும் வெற்றியை பதிவு செய்து கொள்வாரா தங்கம் தென்னரசு.
- Gowtham Kannan
- Updated on: Apr 1, 2026
- 13:50 pm IST
4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!
Tamilnadu Assembly Election: தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 4 தொகுதிகள் ஒதுக்கியதற்கு மதிமுக அதிருப்தியும் தெரிவித்தது.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 1, 2026
- 13:51 pm IST
ரூ.5 ஆயிரம் உதவித்தொகை – பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் ஏராளமான வாக்குறுதிகள்.. பாமக தேர்தல் அறிக்கையில் தகவல்!
Pmk Election Manifesto : தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 1, 2026
- 12:26 pm IST