Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?
AIADMK General Secretary Edappadi: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணும் பணி நெருங்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: May 2, 2026
- 18:33 pm IST
வாக்கு எண்ணும் பணி… புதுச்சேரியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு!
Puducherry Vote Counting: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், ஏதேனும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Gowtham Kannan
- Updated on: May 2, 2026
- 16:08 pm IST
திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..
தேர்தல் பிரசாரத்தின் போது பல தொகுதிகளில் திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. திமுக வேட்பாளர்கள் நின்ற இடங்களில் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக உழைத்ததாகவும், ஆனால் கூட்டணிக் கட்சியினர் நின்ற தொகுதிகளில் திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் மெத்தனமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: May 2, 2026
- 13:59 pm IST
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள புதிய இணையதளம்.. மொபைல் செயலியும் அறிமுகம்..
5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் செயல்படும். இதற்குபின், “ECI NET” மற்றும் Voter Helpline செயலிகள் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: May 2, 2026
- 13:12 pm IST
வாக்கு எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள்.. உச்சநீதிமன்றத்தை அணுகிய மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு!!
இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்துக் கட்சிகளின் முகவர்களும் அங்கே இருப்பார்கள். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரியாக (Returning Officer) மாநில அரசு ஊழியரே செயல்படுகிறார். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் இருப்பதை தவறு என்று கூற முடியாது என்றது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 2, 2026
- 12:39 pm IST
வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!
நயினார் நாகேந்திரன், "தவெக ஒரு இடத்தில் கூட வெல்லாது" என்று கூறியதற்குப் பதிலளித்த அவர், நயினாருக்கு இதுதான் இறுதித் தேர்தல் என்றும், அவருக்கு கட்சியில் பதவி இருக்குமா என்பதே கேள்விக்குறி என்றும் விமர்சித்தார். இளம் தலைமுறையினரின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக வைகோ அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அவரது நேர்மையான கருத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 2, 2026
- 10:42 am IST
தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..
மற்ற கட்சிகளின் குதிரை பேரங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு தற்காப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய விஜய், வெற்றி பெறும் வேட்பாளர்கள் சான்றிதழைப் பெற்றவுடன் எவ்வளவு நேரம் ஆனாலும், நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 2, 2026
- 07:54 am IST
விஜய்க்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்.. கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி..
தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தன. சில கருத்துக்கணிப்புகள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு சுமார் 30% வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.
- Aarthi Govindaraman
- Updated on: May 2, 2026
- 07:10 am IST
“வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இருகட்டங்களைவிட வருகிற 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் 3ம் கட்டம்தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்குத்தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்துகொள்ளமுடிந்தது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 2, 2026
- 06:36 am IST
ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..
கருத்துக்கணிப்புகளை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; மாலை 5 மணிக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்பது தெரிந்து விடும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: May 1, 2026
- 16:54 pm IST
“200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!
பிரதமர் மோடி மற்ற மாநிலங்களில் தமிழகத்திற்கு எதிராகப் பேசுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "பிரதமர் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிப் பேசுகிறார். தமிழகம் வந்தால் பண்பாடு, கலாச்சாரம் எனப் புகழ்கிறார்; பீகார் அல்லது ஒரிசா சென்றால் தமிழர்களைத் திட்டுகிறார்" என்று சாடினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 13:45 pm IST
தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம்.. நாளை வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டம்!!
TVK Vijay: தேர்தலுக்குப் பிறகான ஓய்வு நேரத்தை ஆன்மீகப் பயணங்களாக மாற்றியுள்ள விஜய், மும்மதங்களையும் சமமாகப் போற்றும் வகையில் தனது பயணத் திட்டங்களை அமைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது நாகை மாவட்டத்திற்கு அவர் வருகை தரும் செய்தி, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 12:36 pm IST
“நோட்டாவுக்கு சென்ற வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கலாம்”.. திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்!!
Tamilnadu Assembly Election: திமுகவிற்கு இந்தத் தேர்தலில் 42% முதல் 45% வரை வாக்குகள் உறுதியாகக் கிடைக்கும் என்று அவர் கணித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நோட்டாவிற்குப் பதில் ஒரு மாற்று சக்தியாக டிவிகே-விற்கு வாக்கு அளித்திருக்கலாம், இது திமுகவின் வாக்குகளைப் பாதிக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 09:46 am IST
வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு வளையம்.. ‘கியூ.ஆர். கோடு’ அடையாள அட்டைகள் அறிமுகம்!
‘QR Code’ ID Cards Introduced by ECI: தேர்தல் ஆணையம் கடந்த ஓராண்டில் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) இதே போன்ற கியூ.ஆர். கோடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 08:14 am IST
2026 தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்கும் – செங்கோட்டையன்..
2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு “விசில் புரட்சியாக” இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும், தமிழகத்தின் இனி நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 22:56 pm IST