Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு யாருக்கு?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!
Tamilnadu Assembly Election: இதன் மூலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தமிழகத்தில் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 12:23 pm IST
கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை
Tamilnadu Assembly Election: தான் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், "சொந்த வீட்டில்தான் உரிமை கேட்க முடியும்" என்ற அடிப்படையில் தனது கோரிக்கையை முன்வைத்ததாகவும் பிளஸ்சி தெரிவித்தார். பிளஸ்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 11:32 am IST
“அதிமுக, பாமகவிற்கு செக்”.. சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் புதிய தேர்தல் வியூகம்.. வெடிக்கும் அரசியல் போர்!!
Tamilnadu Assembly Election: அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார். அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, சசிகலா தரப்பில் ஏ.எல்.சுரேஷ் போட்டியிடுகிறார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 10:34 am IST
விஜய்யின் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்தாவது ஏன்?.. ஆதங்கத்தில் தொண்டர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..
Tamilnadu Assembly Election: கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென்று ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர் தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டது. காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால், பேசாமல் திரும்பினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 08:42 am IST
தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல் தொடக்கம்..
Tamilnadu Assembly Election: இந்த ‘பூத் சிலிப்புகள்’ வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்குவார்கள். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த ‘பூத் சிலிப்புகளை’ வாக்காளர்களுக்கு வழங்கலாம். உதவிக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களை அழைத்துச் செல்லலாம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 07:54 am IST
கடையநல்லூரில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி கனிமொழி.. பேசியது என்ன?
முதல்வர் சொல்வதை நிறைவேற்றுவார். அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 22:19 pm IST
துரை வைகோ வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் தருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் வாகனம் இன்று கோவில்பட்டி அருகே சோதனை செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 22:01 pm IST
பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!
Ntk Chief Coordinator Seeman: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்ட 4 தேர்தல்களில் பணம் இல்லாத காரணத்தால் தோல்வியை சந்தித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக பேசினார். மேலும், வாக்குக்காக பணம் தரமாட்டேன் என்றார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 21:52 pm IST
Gummidipoondi Constituency Election 2026: தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். சென்னை நகரின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய தொழிற்துறை பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இது பொதுத்தொகுதியாகும். திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 21:10 pm IST
ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்வார்.. திருநாவுக்கரசர் எம்பி பேச்சு!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கி நிச்சயம் தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 11, 2026
- 21:26 pm IST
ஜனநாயக படுகொலை.. ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியானது குறித்து தவெக கு.ப.கிருஷணன்!
இதனை எவர் செய்திருந்தாலும் அது ஜனநாயக படுகொலை. இதனை நிச்சயமாக நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம், எதிர்ப்போம். தேவைப்பட்டால் திரைப்படம் எடுத்த நிறுவனத்துடன் இணைந்து வழக்கு தொடர்வோம் என்று விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றிக் கழக கு.ப.கிருஷணன் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 11, 2026
- 21:17 pm IST
2 – ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.. திமுகவின் வரலாற்றை கூறி சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi K Palaniswami: ரூ.1.74 லட்சம் கோடி 2- ஜி ஸ்பெக்டரம் ஊழலில் திராவி முன்னேற்றக் கழகத்தின் அப்போதையை மத்திய அமைச்சர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நம்மை பற்றி குறை கூற முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 20:16 pm IST
திருச்சியில் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்பில் மகேஸ்!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 11, 2026
- 20:52 pm IST
துரோகம் பாஜவுக்கு பழக்கம்… துணை போவது அதிமுகவுக்கு வழக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்!
Dmk Leader M.K.Stalin : தமிழகத்துக்கு பாஜக துரோகம் செய்வது பழக்கமாகவும், அதற்கு அதிமுக துணை போவது வழக்கமாக இருந்து வருவதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 19:10 pm IST
தேர்தல் ஆணையம் “யு-டர்ன்”.. மீண்டும் ஊழல் தடுப்பு டிஜிபியாகும் டேவிட்சன்.. என்ன காரணம்?
Davidson Devasirvatham Reappointed: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மூத்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 17:09 pm IST