Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள்.. தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் களம்!!
Tamil Nadu 2026 Assembly polls: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 15, 2025
- 13:20 pm IST
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்..
PMK Nomination: மிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 14, 2025
- 11:57 am IST
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்.. இன்றே கடைசி நாள்..
SIR Work: வாக்காளர் நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தங்களிடம் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களை வீட்டில் வசிப்பவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டு, அதற்கான படிவங்களை வழங்குகின்றனர். அந்தப் படிவங்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் வாக்காளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 14, 2025
- 08:05 am IST
சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை
Election Commission: இந்த சோதனையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருந்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. இந்த சோதனை நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தேர்தல் அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 12, 2025
- 06:15 am IST
Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Dec 11, 2025
- 17:28 pm IST
தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!!
Tamilnadu Assembly Election: தற்போதைய இயந்திரங்களில் இருந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு பொத்தானும் சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். பழுதான இயந்திரங்களை சம்பந்தப்பட்ட பெல் பொறியாளர்கள் சரி செய்கிறார்கள், சரி செய்ய முடியாவிட்டால் அந்த இயந்திரங்கள் மட்டும் அகற்றப்படுகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 11, 2025
- 13:41 pm IST
நெருங்கும் சட்டசபை தேர்தல்: நேற்று அதிமுக பொதுக்குழு.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!
TN Assembly elections: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 11, 2025
- 12:00 pm IST
மக்களின் நம்பிக்கையை இழந்த திமுக அரசு.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 2025 டிசம்பர் 10ம் தேதி தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Dec 10, 2025
- 23:20 pm IST
“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!
Free Laptops For College Students: திமுக அரசு ஆட்சிக்கு வந்து 55 மாதங்களாக தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சொன்ன, மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தற்போது அறிவிப்பது ஏன் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 7, 2025
- 08:26 am IST
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
2026 Assembly election: அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை டிசம்பர் 11 முதல் தொடங்க உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் செய்யப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மீண்டும் திறக்கப்படும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 7, 2025
- 07:36 am IST
234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..
Naam Tamilar Party Conference: திருச்சியில் வரக்கூடிய 2026 பிப்ரவரி 21ஆம் தேதி மக்களின் மாநாடு நடத்த இருப்பதாகவும், அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் வரக்கூடிய தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 2, 2025
- 08:52 am IST
தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள்.. பைஜயந்த் ஜெய் பாண்டா பேட்டி!
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பைஜயந்த் ஜெய் பாண்டா இன்று அதாவது 2025 நவம்பர் 28ம் தேதி 2025-26 காலத்திற்கான பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், “தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக, மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 28, 2025
- 22:16 pm IST
யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
PMK Alliance In Assembly Election: செய்தியாளர்களை சந்தித்த கட்சி நிறுவனர் ராமதாஸ், “சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் 2025 டிசம்பர் 30 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 25, 2025
- 15:22 pm IST
கூட்டணியை இறுதி செய்ய தயாராகும் காங்கிரஸ்; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக அல்லது தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற சலசலப்பு நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பது தெரியவில்லை.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 22, 2025
- 13:35 pm IST
பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?
TVK Election Symbol: தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றான சின்னம் தேர்ந்தெடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பேட், விசில், பந்து ஆகியவை அடங்கும்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 20, 2025
- 10:13 am IST