Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி வேட்புமனு வழங்கப்பட்டது. தவெக நிர்வாகிகளிடம் ஜோசப் விஜய்யின் பெயரில் முதல் வேட்புமனு விண்ணப்பம் பெறப்பட்டது. அதன்படி, விரைவில் விஜயின் தொகுதி அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அடுத்த இரண்டு நாட்களில் தனது தொகுதி குறித்து முடிவெடுப்பார் என்றும், தகவல்களின்படி விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மயிலாப்பூர் தொகுதிக்கு குறி…திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!

Mylapore Assembly constituency: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை பெறுவதில் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மவுசு கூடியுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்… தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!!

தேர்தல் அலுவலர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் முன்கூட்டியே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!

Co operative Bank Loan Waiver: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் என்பதால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் குவிந்து வருகின்றனர் .

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!

Election Commission: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் வருகிற பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்கள் சென்னையில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் .

ராமதாஸ், பிரேமலதா முடிவுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக.. நீடிக்கும் இழுபறி!!

DMK and AIADMK are awaiting: திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கை குழுக்கள் மற்றும் பிரச்சாரக் குழுக்களை அறிவித்திருந்தாலும், அவை தங்களின் கூட்டணிகளை இறுதி செய்யவில்லை. மேற்கூறிய கட்சிகளின் முடிவுகளைப் பொறுத்து தங்களின் கூட்டணிகளை இறுதி செய்ய திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன.

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!

AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!

DMK - Congress Seat Sharing: காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை கொடுத்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் ஆபத்து என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவின் கூட்டணி கணக்கும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!

Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வதற்கான வாகனங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வாகனங்களில் பல்வேறு பிரத்யேகமான அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கூட்டணி தொகுதிப் பங்கீடு.. விரைவில் திமுக அழைக்கும்.. செல்வப்பெருந்தகை நம்பிக்கை

திமுகவிடமிருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். உண்மையில், தமிழ்நாடே அவரிடமிருந்து விலகிச் செல்லப் போகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

DMK begins its election campaign today: திமுக கடந்த மாதம் 20ஆம் தேதி, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'தமிழ்நாடு பணியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி 1ஆம் தேதி (அதாவது இன்று) முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய்.. தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பாஜக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய வாகனப் பிரச்சாரத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 2026 தேர்தல்களுக்கான பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அமீஞ்சிக்கரையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அறிக்கையை ஒரு கட்சி கதாநாயகன் என்கிறது. மற்றொரு கட்சி கதாநாயகி என்கிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை எல்லாவற்றுக்கும் தாயாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அமைச்சரவைக் கூட்டம் அடுத்த மாதம் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் எந்த மாதிரியான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!

New parties will join in DMK alliance: நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“மக்கள் கருத்துப் பெட்டி”.. தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக புதிய யோசனை..

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு 'மக்கள் கருத்துப் பெட்டி' அமைக்கப்பட உள்ளது.