Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

DMK begins its election campaign today: திமுக கடந்த மாதம் 20ஆம் தேதி, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'தமிழ்நாடு பணியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி 1ஆம் தேதி (அதாவது இன்று) முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய்.. தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பாஜக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய வாகனப் பிரச்சாரத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 2026 தேர்தல்களுக்கான பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அமீஞ்சிக்கரையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அறிக்கையை ஒரு கட்சி கதாநாயகன் என்கிறது. மற்றொரு கட்சி கதாநாயகி என்கிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை எல்லாவற்றுக்கும் தாயாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அமைச்சரவைக் கூட்டம் அடுத்த மாதம் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் எந்த மாதிரியான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!

New parties will join in DMK alliance: நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“மக்கள் கருத்துப் பெட்டி”.. தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக புதிய யோசனை..

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு 'மக்கள் கருத்துப் பெட்டி' அமைக்கப்பட உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?

DMK - DMDK Alliance: ஆளும் கட்சியான திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கைகோர்க்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு சம்மதம் கிடைக்காத நிலையில், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!

Tamil Nadu Interim Budget: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 4 நாள்கள் பேரவையை நடத்தி முடிக்க உள்ளனராம்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்

O Panneerselvam Meeting: செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், தை மாதம் முடிவில் முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

“திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்

Thirumavalavan; 1965 காலகட்டத்தில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதை ராஜேந்திரன் போன்றவர்கள் எதிர்த்திருக்காவிட்டால், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ரத்தம் சிந்தி இருக்காவிட்டால், இன்று நாம் அனைவரும் இந்தி பேசும் மக்களாக மாறியிருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..

DMK Campaign: திமுக கூட்டணியில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது, யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில், வரக்கூடிய பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேச்சாளர்களும் அடங்குவார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!

Edappadi k Palaniswami: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக் கட்டு போட்டியில் பங்கேற்று எதிர்பாரதவிதமாக மரணம் அடையும் மாடுபிடி வீரருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.

“நாதகவுக்கு போட்டி யாரும் இல்லை”.. 16% வாக்கு பெறுவோம்.. சீமான் நம்பிக்கை..

No competition for the NTK: இந்த முறை மு.க.ஸ்டாலின். ஆட்சியில் மாற்றம் வந்துவிடுமா? ஒரே சித்தாந்தம் கொண்ட கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. ஆனால், என் சித்தாந்தத்திற்குப் போட்டியிட யாரும் இல்லை. என் போன்ற கருத்துக்கள் கொண்ட கட்சிகள் இல்லாததால், நான் தனியாகப் போட்டியிடுகிறேன் என்று அவர் கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. டிடிவி தினகரனின் அதிரடி ட்விஸ்ட்..

TTV Dinakaran: னியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் என்ன செய்வது?” என அவர்கள் கேட்டபோது, அதற்கான பதில் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!

Makkal Needhi Maiam: வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழக தலைமையிடம் மக்கள் நீதி மய்யம் 2 இலக்க தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான பட்டியலை தயார் செய்த நிலையில், திமுக தலைமையிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…2-ஆவது முறையாக அமித் ஷா தமிழகம் வருகை…முக்கிய ஆலோசனை!

Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2- ஆவது முறையாக வருகிற ஜனவரி 28- ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.