Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
“தீய சக்தி திமுக” – விஜய் பாணியில் வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. அனல் பறந்த பேச்சு!
Annamalai Latest Speech: தமிழக சட்டமன்ற தேர்தலில் தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை விரட்டி அடித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 16:22 pm IST
பிரதமர் மோடி வருகை.. எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கோவை.. கழுகு பார்வையில் 3 ஆயிரம் போலீசார்!
PM Modi Campaigning Kovai: தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 15:42 pm IST
ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!
KA Sengottaiyan: அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக நான் பதவி ஏற்றிருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக்கக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 15:01 pm IST
திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் துணை முதலமைச்சர் பிரசாரம்!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மு.பே.சாமிநாதன் மற்றும் இந்திராணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 17, 2026
- 14:32 pm IST
வேடசந்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 17, 2026
- 14:24 pm IST
ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!
Tamilnadu Assembly Election: அதிமுகவினர் 10,000 ரூபாய் மதிப்பிலான போலி காசோலைகளை விநியோகம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடினார். இந்த செக் வடிவிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பரப்புரை செய்து வருவதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 14:19 pm IST
ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
Rahul Gandhi: தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தியுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளமாட்டார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 13:49 pm IST
கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி.. பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா கொடுத்த வாக்குறுதி..
வருமானம் குறித்து வேதனை தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம், தினசரி உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதி அளவிற்காவது அரசு உதவினால் நன்றாக இருக்கும்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார். மேலும், “என்னை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து உங்களது குறைகளை தெரிவியுங்கள்; உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்க உதவுகிறேன்” என உறுதியளித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 17, 2026
- 13:22 pm IST
Neyveli Constituency Election 2026: தொழிற்சாலை நகரமாக இருக்கும் நெய்வேலி.. மக்களின் ஆதரவு யாருக்கு?
நெய்வேலி சட்டமன்ற தொகுதி என்பது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மறுவரையறைக்கு பிறகு உருவாக்கப்பட்ட தொகுதியாகவும், இது கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஒரு தொழிற்சாலை நகரமாகும்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 17, 2026
- 13:12 pm IST
வாக்காளர்களுக்கு ரூ.10,000 போலி செக்.. வீடு வீடாக விநியோகம்.. நிலக்கோட்டையில் பரபரப்பு!
Tamilnadu Assembly Election: இது குறித்த தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளைக் கண்டதும் டோக்கன் விநியோகம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, போலி காசோலைகள் வழங்கப்பட்ட வீடுகளில் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 12:46 pm IST
விஜய்யை இமை போல காக்கும் 6 அடி உயர மனிதன்.. 360 கோணத்தில் சுழலும் பாதுகாப்பு அரண்.. யார் இந்த நயீம் மூசா!
TVK leader Vijay Body Guard Naeem Musa: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை இமை போல பாதுகாத்து வரும் நபர் தான் பவுன்சர் நயீம் மூசா. யார் இவர் இவரை பற்றிய முழு விவரத்தை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 11:49 am IST
“அநீதி இழைத்தால் புரட்சி வெடிக்கும்!”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது, இந்த நற்செயலுக்குத் தண்டனை வழங்குவது போல உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. புரட்சி ஏற்படும். தமிழ்நாடு மக்கள் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 11:34 am IST
ஜனநாயகத் திருவிழா 2026: வசதிகள் நிறைந்த வாக்குச்சாவடிகளுடன் தமிழகம் தயார்!
Tamil Nadu Election 2026: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை மற்றும் போதுமான மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்வுத்தளங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தரைத்தளத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Apr 17, 2026
- 11:00 am IST
திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!
Nainar Nagendran Latest Speech: தமிழகத்தின் முதல்வராக உதயநிதியை அமர வைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஒற்றை நோக்கமாக இருந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 10:44 am IST
“நடிகனைப் பார்த்தால் விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்க முடியுமா?”.. திமுக கூட்டணி ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை!!
Tamilnadu Assembly Election: பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது ஒரு டப்பா சர்க்கார். பதவி ஆசைக்காக அதிமுகவினர் பாஜக என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். அந்தப் பாம்பு, அதைத் தூக்கி வந்தவர்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்" என்று எச்சரித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 09:59 am IST