Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
மயிலை திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்.பி கனிமொழி..
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு முன்னேற்றமான மாநிலமாக மாறியதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்றும், அடுத்த முறையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 15, 2026
- 20:43 pm IST
பிரச்சாரம் முடித்து வீடு திரும்பிய விஜய்க்கு உற்சாக வரவேற்பு..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, போதிய நேரமின்மை காரணமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீலாங்கரை வீட்டிற்கு திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 15, 2026
- 20:39 pm IST
திமுகவின் தவறான ஆட்சியையும் ஊழலையும் தமிழகம் இனிமேலும் விரும்பவில்லை – பிரதமர் மோடி
இதற்காக, டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் வந்தார். அதனைத் தொடர்ந்து, மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வேப்பமூடு சந்திப்பிற்கு காரில் சென்றார். அங்கு மாலை 4.30 மணியளவில், வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மேற்கொண்டார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 15, 2026
- 19:32 pm IST
சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..
அந்த வகையில், கடந்த சில நாட்களாக திருப்பூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னை நகரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னை தியாகராய நகரில், தமிழக வெற்றி கழகம் சார்பில் என். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜய் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 15, 2026
- 17:36 pm IST
தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்பு… ஜூலி மீது வழக்கு… பின்னணியில் நடந்தது என்ன!
TVK Leader Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியின்றி திமுகவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகையும், ஜல்லிக்கட்டு பிரபலமுமான ஜூலி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Gowtham Kannan
- Updated on: Apr 15, 2026
- 13:28 pm IST
நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!
Tamil Nadu 100% voting Awareness: தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் வாட்ஸ் ஆப் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் நாம் அனைவரும் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 15, 2026
- 08:38 am IST
சட்டமன்ற தேர்தல்.. சிறையில் இருந்து ஜனநாயக கடமை… 61 கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு!
Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 61 கைதிகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் சிறைகளில் இருந்தவாறு தபால் மூலமாக தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். இது தொடர்பான முழு விவரம்.
- Gowtham Kannan
- Updated on: Apr 15, 2026
- 08:01 am IST
“அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!
Tamilnadu Assembly Election: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவரின் சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர்த்த பார்க்கிறார்?. அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால், இந்த தேர்தலில் அது சாத்தியமா? என்பது அவருக்கே தெரியும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 15, 2026
- 07:37 am IST
ஊழல் அரசியல்வாதிகள் ரத்தம் கக்க வேண்டும்.. சுடுகாட்டில் விபரீத பூஜை செய்த சுயேட்சை வேட்பாளர்.. முழு விவரம் உள்ளே!
Madurai Crematorium Puja: மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவும், தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் சுயேட்சை வேட்பாளர் சுடுகாட்டில் பூஜை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 15, 2026
- 07:21 am IST
பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!
PM Modi Roadshow In Nagercoil: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களைை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் நேர்ந்திர மோடி இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார். அப்போது, தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 15, 2026
- 06:36 am IST
வீடுவிடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கோகுல இந்திரா, அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், “இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 22:03 pm IST
திமுக வேட்பாளரை ஆதரித்து கன்னியாகுமரியில் கனிமொழி பிரசாரம்!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திரவிட முன்னேற்ற கழக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 14, 2026
- 21:56 pm IST
வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..
TVK Vijay Campaign: பெருமாநல்லூரில் பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களே” என உரையை தொடங்கினார். “நாளை மறுநாள் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடுகிறோம்; அதற்கு முன் சில முக்கிய அறிவிப்புகளை பகிர்கிறேன்” என்றார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 18:22 pm IST
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா ? நள்ளிரவில் நடந்த சோதனை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் உள்ளே சென்ற அதிகாரிகள் மேலோட்டமாக மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அங்கிருந்த ஹேண்ட் பேக்கில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 15:53 pm IST
“பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..
Tamilnadu Assembly Election: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 14, 2026
- 13:03 pm IST