AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

“நடிகனைப் பார்த்தால் விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்க முடியுமா?”.. திமுக கூட்டணி ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை!!

Tamilnadu Assembly Election: பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது ஒரு டப்பா சர்க்கார். பதவி ஆசைக்காக அதிமுகவினர் பாஜக என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். அந்தப் பாம்பு, அதைத் தூக்கி வந்தவர்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்" என்று எச்சரித்தார்.

தமிழகத்தில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. நாளை வருகிறார்!

Rahul Gandhi Election Campaign for Two Days | 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி திமுக உடன் இணைந்து களம் காண உள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 18, 2026) தமிழகம் வர உள்ளார்.

தவெக தலைவர் விஜய் மீது 3 வழக்குப்பதிவு.. விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு!

Cases Filed On TVK Leader Vijay | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் சென்னையில் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!

Special Buses For 2026 Assembly Election | 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வானதி சீனிவாசன் உடல்நிலை.. எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை அதிகாரப்பூர்வ விளக்கம்!

Vanathi Srinivasan Mla: கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதில், வானதி சீனிவாசன் முழுமையாக குணமடைந்த நிலையில் நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணை குத்த வந்த முருகன் வேல்… நூலிழையில் தப்பிய விஜய்.. திகைத்து நின்ற கட்சியினர்.. என்ன நடந்தது!

TVk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் விஜய்யின் கையில் இருந்த முருகன் வேல் அவரது கையில் இருந்து நழுவி கண்களை குத்த வந்தது. இதில், நூலிழையில் விஜய் தப்பித்தார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Vellore Constituency Election 2026: திமுகவின் கோட்டையாக இருக்கும் வேலூர் சட்டமன்ற தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

Tamil Nadu Elections 2026: வேலூர் தொகுதி அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாக உள்ள பகுதியாக கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை திமுக 5 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், வரவிருக்கும் தேர்தலிலும் திமுகக்கு சாதகமான சூழல் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

Ramadoss Files Petition: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு எதிராக, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கும், அன்புமணிக்கும் தொடர்பு இல்லை என்பன உள்ளிட்ட வார்த்தைகளை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பிரதமர் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறார்.. அண்ணாமலை பேச்சு!

உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என கூறுவார். பிரதமர் நேரந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ராமநாதபுர தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.

மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!

TVK Leader Vijay Speech: தமிழக மக்களை பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்ற மாட்டேன். நீங்கள் என்னை 100 சதவீதம் நம்பலாம். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று தமிழக வெற்றிக் கழக முழு தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வில் விஜய் தெரிவித்தார்.

வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்பு.. பல்வேறு அதிரடி வாக்குறுதிகள்… தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

TVK Full Election Manifesto: தமிழகத்தில் வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு அறிவித்தார். முழு விவரம் இந்தப் பதிவில்.

“கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!

Tamilnadu Assembly Election: செந்தில் பாலாஜியை மனிதாபிமானம் இல்லாத, இரக்கமற்ற ஒரு "அரக்கன்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தத் திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்று சாடினார்.

“காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!

Tamilnadu Assembly Election: காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தைத் தேவையில்லாமல் சீண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர் எல்லை மீறிப் பேசினால் காங்கிரஸார் தகுந்த பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்றும் கூறினார். அவ்வாறு பதிலடி கொடுத்தால் அது சீமானுக்குப் பெரும் சங்கடத்தையே விளைவிக்கும் என்றார்.