AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!

Tamilnadu Assembly Election: திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும், மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“சௌமியா அன்புமணியை எதிர்க்க அழுத்தம்”.. திமுக மீது வேல்முருகன் பகிரங்க குற்றச்சாட்டு!!

Tamilnadu Assembly Election: "ஒரு சீட்டுக்காக திமுக அல்லது அதிமுக அலுவலகத்தில் போய் நிற்பதைக் காட்டிலும், தன்மானத்தோடு தனித்து நின்று போராடி மடிவதே மேல்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தனக்கு ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை என்றும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதே தனது அடுத்தகட்டப் பணி என்றும் கூறினார்.

தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..

இந்த தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக என் பெயரை பரிந்துரைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை மே 4ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கிறேன்” என கூறினார்.

தலைவருக்காக உங்கள் வீட்டு படியேறினேனே.. இறக்கமில்லாமல் மறுத்தவர் தானே நீங்கள்.. இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்!!

Tamilnadu Assembly Election: சாதனைகளைச் செய்துவிட்டு, எதிர்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிவிட்டு, நான் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றேன். ஆனால், டபுள் எஞ்சின், டப்பர் எஞ்சின் என்று வரும், அமித்ஷா ஆட்டுவிக்கும் பழனிசாமி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..

Tamil Nadu Assembly Election: இந்த நிலையில், சசிகலா தொடங்கியுள்ள “அனைத்து இந்தியா புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” தரப்பில் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக டிஜிபி மாற்றம்: யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?

Midnight DGP Change Sparks : தமிழகத்தில் நள்ளிரவில் டிஜிபி மாற்றம் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டது. அரசியல் அழுத்தம் முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் சூழலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் முடிவில் இதன் தாக்கம் காணப்படும்.

நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

“காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்”.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..

Tamilnadu Assembly Election: பாஜக, அதிமுக முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்குள் நுழைய இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இந்த ஜனநாயகமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும், இந்த தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.

தவெகவில் நூற்றுக்கணக்காணோர் புதியதான இணைந்தனர்!

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஏராளமான தொண்டர்கள் இணைந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் மொத்த வளர்ச்சிக்காக தவெக தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று கூறியுள்ளார். 

27 பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

தமிழகத்தில் 27 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 27 பேரும் வெற்றி பெற வேண்டும். பாஜாக வேட்பாளர்கள் மட்டுமன்றி தேசிய ஜனநாய கூட்டணியின் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி.. சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை..

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, புதுச்சேரி முழுவதும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சாலைப் பயணம் மேற்கொண்ட பிரதமருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..

Congress Candidate List 2026 Assembly Election: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், திமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் 30க்கும் மேற்பட்ட இடங்கள் கோரப்பட்டிருந்தாலும், 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தொகுதி விபரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அன்புமணி.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

ஏப்ரல் 4ஆம் தேதி (நாளை), சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் – அண்ணாமலை பதிவு..

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாவட்டம் தோறும் சென்று, சட்டமன்றத் தொகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், சாலைப் பயணம் மேற்கொண்டு மக்களின் மனநிலையையும் கள ஆய்வு செய்து வருகிறார்.