AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

பெரம்பூரில் சொந்தமாக பங்களா வாங்கிய தவெக தலைவர் விஜய்? எதற்காக தெரியுமா?

Tvk leader Vijay: சென்னை பெரம்பூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொந்தமாக பங்களா வாங்கி உள்ளார். அவர் அந்த பங்களாவில் தங்கி இருந்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பங்களா வீட்டுக்கு இன்று பூஜைகள் நடைபெறுகிறதாம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… கடைசியில் ஒரு ட்விஸ்ட்!

Tamil Maanila Congress: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஜி. கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

வேலூரில் ரூ.14 லட்சம் பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.14 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

ரூ.2 லட்சம் வரை பணத்தை எடுத்துச் செல்ல ECI அனுமதி வழங்க வேண்டும்.. வணிக சங்க தலைவர் விக்ரமராஜா!

மார்ச் 31, 2026-க்குள் ரூ.2 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிக சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தேர்தலில் போட்டியிட கட்சிகள் எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன!

How Political Parties Choose Candidates | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், கட்சிகள் எவ்வாறு தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

Virugambakkam Constituency Election 2026: திமுக VS அதிமுக.. போக்குவரத்து நெரிசல் முதல் குடிநீர் பிரச்சனை வரை.. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு?

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. இது சென்னை நகரில் அமைந்துள்ள முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாகும். நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, விருகம்பாக்கம், கோயம்பேடு, சாலிகிராமம், நெசப்பாக்கம், வடபழனி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..

இந்நிலையில், எங்களுக்கு வழங்கப்படவிருந்த தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், எங்கள் கட்சியினருக்கும் எனக்கும் ஏற்றதாக இல்லை. இருப்பினும், கூட்டணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் புரிந்துகொள்கிறோம். “பேட்டரி டார்ச்” சின்னம் எங்களுக்கு வெறும் சின்னமல்ல; அது எங்களின் அடையாளம்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு!

DMDK Gets 10 Seats In DMK Alliance | திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட பரப்புரை.. சென்னை, செங்கலபட்டு, காஞ்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி.. அட்டவணை வெளியீடு..

அடுத்த கட்ட சுற்றுப்பயண திட்டப்படி, மார்ச் 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் மக்கள் சந்திப்பு நடைபெறும். மார்ச் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளில் கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 28ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் – வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..

ADMK Election Manifesto 2026: அந்த வகையில் அதிமுக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.  இந்த 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்த காலம் முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 4 முறை தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து தற்போது எம்எல்ஏவாக இருந்து வரும் நத்தம் ஆர். விஸ்வநாதன் மீண்டும் அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் களமிறக்கப்படுவாரா.

சென்னையில் EVM, VVPAT ஒதுக்கீடு எப்படி நடைபெறுகிறது?

Chennai Begins First Phase Allocation: சென்னையில் தேர்தலுக்கான EVM, VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு தொடங்கியது. 4,079 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வேட்பாளர் பட்டியல் பிறகு அடுத்த கட்டத் தேர்வு நடை பெறும். அடுத்த 3 நாட்கள் இயந்திரங்கள் பிரிக்கும் பணி நடைபெறும்.

நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு… திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. உத்தேச பட்டியலும் வெளியீடு!

Vck Seat Sharing: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 6 தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது .

Tamilnadu Assembly Election: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்?

What Happens After Election Results: தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிய அரசு அமைக்கப்படுகிறது. முதல்வர் அல்லது பிரதமர் பதவியேற்று நிர்வாகம் தொடங்குகிறது. எதிர்க்கட்சிகள் கண்காணிப்புடன் ஜனநாயகம் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்காணித்து ஜனநாயகத்தை சமநிலைப்படுத்துகின்றன. இதுவே அரசியல் மாற்றத்தின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது.

பாமக போட்டியிடும் 18 சட்டமன்ற தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!

Pmk Contest Constituencies : தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 உத்தேச சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்பன குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.