AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

வீடுவிடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கோகுல இந்திரா, அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், “இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து கன்னியாகுமரியில் கனிமொழி பிரசாரம்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திரவிட முன்னேற்ற கழக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

 TVK Vijay Campaign: பெருமாநல்லூரில் பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களே” என உரையை தொடங்கினார். “நாளை மறுநாள் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடுகிறோம்; அதற்கு முன் சில முக்கிய அறிவிப்புகளை பகிர்கிறேன்” என்றார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா ? நள்ளிரவில் நடந்த சோதனை.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் உள்ளே சென்ற அதிகாரிகள் மேலோட்டமாக மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அங்கிருந்த ஹேண்ட் பேக்கில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..

Tamilnadu Assembly Election: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி.

“படிக்காவிட்டாலும் அரசு வேலை, 5 இடங்களில் தலைநகரம்”.. சீமானின் புதிய தேர்தல் முழக்கம்..

Tamilnadu Assembly Election: திமுகவுக்கு, மாற்று அதிமுக. கிடையாது. அதுபோல, அதிமுகவுக்கு மாற்று திமுக கிடையாது. இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே ஏமாற்று வேலையைத்தான் பார்க்கிறார்கள். ஆள் மாறும், ஆட்சி மாறும், ஆனால் ஆட்சி முறை மாறாது. கட்சி மாறும், ஆனால் காட்சி மாறாது.

“தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்வு”.. வெள்ளை அறிக்கை கேட்கும் சரத்குமார்!!

Tamilnadu Assembly Election: கடன் சுமையை பாதியாக குறைத்திருக்கலாம். பல மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி நடக்கிறது என கூறுகிறார்கள். தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

“மக்களைச் சந்தியுங்கள்.. சிறு கூட்டங்களை நடத்துங்கள்”.. தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சொன்ன தேர்தல் ‘மந்திரம்’!

Tamilnadu Assembly Election: வழக்கம்போலத் தனது பேச்சில் தமிழகத்தின் தொன்மை மற்றும் திருக்குறள் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பது எவ்வளவு ஈனமான செயல் – சரத்குமார் காட்டம்..

இணையத்தில் வெளியான விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளரிடம் தான் உள்ளது. இதில் எப்படி சிபிஐ அதிகாரி குமரகுருபரனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தோம்; அதுதான் சரியான முறை,” என தெரிவித்தார்.

சென்னையில் தபால் வாக்குப்பதிவு.. ஏப்ரல் 16, 17 மற்றும் 18 நடக்கும் என அறிவிப்பு..

Tamil Nadu Assembly Election: தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வரும்போது அவர்களுக்கு ரேம்ப் அமைத்தல், வாக்காளர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் ஓரிரு நாட்களில் களத்தில் உங்களை சந்திப்பேன் – மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பாஜக நிர்வாகிகள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வானதி ஸ்ரீனிவாசன் வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.. மீண்டும் திராவிட மாடல் அரசு தான் அமையும் – துரை வைகோ..

தமிழ்நாட்டுக்கு தேவையான மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உங்களுடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து, மக்களுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோவுக்கு உதவியாளராக மாறினார். அவர் படித்தவர், பண்பாளர். நீங்கள் எளிதாக அணுகக்கூடிய வேட்பாளராக இருப்பார் என துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

3 நாட்கள் மது விற்பனைக்கு தடை… மீறினால் பாயும் நடவடிக்கை.. கலால் துறை அதிரடி உத்தரவு!

Liquor Shops Closed: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, வருகிற ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் ஏப்ரல் 23- ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும், இதை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!

Rahul Gandhi Boycott Campaign: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு என்று கூறப்படுகிறது.

நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!

TVK Leader Vijay To Conduct Road Show In Tiruppur | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 14, 2026) திருப்பூரில் அவர் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார்.