Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம்.. நாளை வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டம்!!
TVK Vijay: தேர்தலுக்குப் பிறகான ஓய்வு நேரத்தை ஆன்மீகப் பயணங்களாக மாற்றியுள்ள விஜய், மும்மதங்களையும் சமமாகப் போற்றும் வகையில் தனது பயணத் திட்டங்களை அமைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது நாகை மாவட்டத்திற்கு அவர் வருகை தரும் செய்தி, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 12:36 pm IST
“நோட்டாவுக்கு சென்ற வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கலாம்”.. திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்!!
Tamilnadu Assembly Election: திமுகவிற்கு இந்தத் தேர்தலில் 42% முதல் 45% வரை வாக்குகள் உறுதியாகக் கிடைக்கும் என்று அவர் கணித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நோட்டாவிற்குப் பதில் ஒரு மாற்று சக்தியாக டிவிகே-விற்கு வாக்கு அளித்திருக்கலாம், இது திமுகவின் வாக்குகளைப் பாதிக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 09:46 am IST
வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு வளையம்.. ‘கியூ.ஆர். கோடு’ அடையாள அட்டைகள் அறிமுகம்!
‘QR Code’ ID Cards Introduced by ECI: தேர்தல் ஆணையம் கடந்த ஓராண்டில் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) இதே போன்ற கியூ.ஆர். கோடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: May 1, 2026
- 08:14 am IST
2026 தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்கும் – செங்கோட்டையன்..
2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு “விசில் புரட்சியாக” இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும், தமிழகத்தின் இனி நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 22:56 pm IST
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
‘தோல்வி நிச்சயம்’ என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால், திமுக வெற்றி பெறும் என்ற பொய்யான படிமத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவும், கலவரம் ஏற்படுத்தவும் முயற்சிகள் இருக்கலாம். எனவே, 04.05.2026 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 20:17 pm IST
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
நேற்றைய தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும், 15 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் மட்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறியுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 20:01 pm IST
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும். விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும், என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 19:10 pm IST
அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும்.. பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா!
BJP Rule: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவில் அனைத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் எனவும், தாமரை மலரும் என வெளிப்படுத்துவதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 30, 2026
- 11:15 am IST
கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முடிவுகளைத் தருகின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கணிப்புகள் பெரும்பாலும் எதார்த்த நிலைக்கு மாறாக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, சில ஊடகங்கள் தவெக-விற்கு குறைந்த இடங்களையே கணித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 30, 2026
- 11:06 am IST
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
Tamilnadu Assembly Election: வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் என கூடுதல் போலீசாரை நியமிக்க முடிவு
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 30, 2026
- 09:35 am IST
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
Tamilnadu Assembly Election Exit Poll Result: தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் வெவ்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், ஒரு குழப்பமான மற்றும் விறுவிறுப்பான சூழல் நிலவுகிறது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 30, 2026
- 07:37 am IST
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி சட்டப்பேரவை.. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
Puducherry Assembly Renovating Work: புதுச்சேரி மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த மாநில சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அறைகள், பேரவை வளாக தரைகள் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
- Gowtham Kannan
- Updated on: Apr 30, 2026
- 07:31 am IST
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
Tamil Nadu Assembly Election Result: தமிழகத்தில் மே 4- ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள், பின்னர் மின்னனு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Apr 30, 2026
- 07:16 am IST
சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நடிகர் விஜய் தனது ஆன்மீக சுற்றுழாவில் உள்ளார். அதன்படி நடிகர் விஜய் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று சீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 29, 2026
- 22:31 pm IST
Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
Puducherry Assembly Election Exit Poll Results 2026 : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
- Gowtham Kannan
- Updated on: Apr 29, 2026
- 21:45 pm IST