Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை…தொகுதி பங்கீடு-கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு!

BJP Election Incharge Piyush Goyal: தமிழக பாஜக தேரதல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று சென்னை வர உள்ளார். இவரின் வருகையை தொடர்ந்து, தேசிய ஜனநாய கூட்டணி இறுதி செய்யப்படுவதுடன், தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தவெகவின் அடுத்தக் கட்ட பாய்ச்சல்…10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்!

TVK Election Campaign Committee: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார குழுவை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில், 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவானது 234 தொகுதிகள் வாரியாக சென்று தேர்தல் பணி ஆற்ற உள்ளது.

வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுகவின் அடுத்தடுத்த மூவ் இதுதான்..

வரும் வாரம் முதல் தேர்தல் பணிகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை இறுதி செய்துவிடும் எனத் தெரிகிறது. அந்தவகையில், திமுகவும் பொங்கலுக்கு பின் தனது அடுத்தடுத்த நகர்களில் வேகமெடுக்க திட்டமிட்டு வருகிறது.

“கூட்டணி பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தடை”.. செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு!!

நேற்றைய தினம் கடலூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்ததற்கு பதிலளித்தார். அதன்படி, காங்கிரஸ் எப்போதும் கொல்லைப்புறமாக அரசியல் செய்யாது, நேர்மையான அரசியல் செய்யும் இயக்கம். எந்த காலத்திலும் தரகர் வேலை செய்வது காங்கிரஸ் பேரியக்கத்தின் வேலையல்லை என்றார்.

“மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்?” அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி!!

நேர்காணலுக்குப் பின், வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடனும் ஒன்றாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் முடிவை ஏற்று, குறிப்பிடப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் உரிய பதவியிடங்கள் வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

PMK Contesting Constituencies: 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் தயாராகி உள்ளதா கூறப்படுகிறது. இந்த பட்டியலில் எந்தெந்த தொகுதிகள் உள்ளன என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

இன்று வேப்பூரில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு 2.0.. கூட்டணியை அறிவிக்கிறார் பிரேமதா..

DMDKs Rights Restoration Conference 2.0: சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இன்று நடைபெறும் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்திருந்தனர்.

ஆண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டி.. தை மாதம் கூட்டணி முடிவு வெளியாகும் – டிடிவி தினகரன் திட்டவட்டம்..

TTVK Dinakaran: வரும் தேர்தலில் அமமுக சட்டமன்றத்தில் நுழைவது உறுதி என்றும், எங்களுக்கு புனித பூமியாக இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதிதான் என்றும், ஆகவே நிச்சயமாக ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும், ஆண்டிப்பட்டி தொகுதி வழங்கப்பட்டால் கூட்டணியில் செல்லலாம்; இல்லையெனில் தனித்தும் நின்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை.. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க இபிஎஸ் ஒப்புதல்?

AIADMK-BJP discussion: பாமக உள்ளிட்ட பிற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, திமுகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்காக பழைய கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது

அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி..!

மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார். 

நெருங்கும் தேர்தல்.. சூடுபிடிக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்.. தீர்வு என்ன?

2026 Tamilnadu assembly elections: இத்தனை ஆண்டுகளாக அதிமுக, திமுக என்று மட்டுமே இருந்த தமிழக தேர்தல் களம் இம்முறை, விஜய் வருகையால் 4 முனைத் தேர்தலாக பிரிந்துள்ளது. இந்த தேர்தல் பல்வேறு வகையிலும் தமிழக மக்களுக்கு புதுமையான தேர்தலாகவே இருக்கிறது.

விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள்.. தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் களம்!!

Tamil Nadu 2026 Assembly polls: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்..

PMK Nomination: மிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்.. இன்றே கடைசி நாள்..

SIR Work: வாக்காளர் நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தங்களிடம் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களை வீட்டில் வசிப்பவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டு, அதற்கான படிவங்களை வழங்குகின்றனர். அந்தப் படிவங்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் வாக்காளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை

Election Commission: இந்த சோதனையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருந்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. இந்த சோதனை நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தேர்தல் அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.