Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
புதுச்சேரி தேர்தல் 2026.. வாக்காளர்களுக்கு மலர் கொடுத்து, ‘வணக்கம்’ கூறி வரவேற்கும் ‘நிலா’ ரோபோ.. வாக்குச்சாவடியில் நூதனம்!
Puducherry Assembly Elections: வாக்குச் சாவடியில் நிலா ரோபோ நிற்பதைக் கண்ட பொதுமக்கள், குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தொடர்ந்து, ரோபோவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பல வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நவீன முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 9, 2026
- 08:51 am IST
அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் அறிவிப்பு.. குலுக்கல் முறையில் ஒதுக்கீடு..
Tamilnadu Assembly Polls: சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். ஆனால் சின்னங்களை பெறாத அது போன்ற கட்சிகள் இருந்தால், அவர்கள் என்னென்ன பொதுச்சின்னங்களை வேட்புமனுவில் கேட்டுள்ளனர் என்று அதிகாரி ஆய்வு செய்வார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 9, 2026
- 08:28 am IST
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமாக வாக்களிக்கும் பொதுமக்கள்!
புதுச்சேரியில் உள்ள காரைக்கால், ஏனாம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்த 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Apr 9, 2026
- 08:33 am IST
கேரளம், அசாமில் வாக்குப்பதிவு தொடக்கம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..
Assembly Election: 140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மா.கம்யூ., தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. 3வது முறையாக ஆட்சியில் அமர மா. கம்யூ.,, மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 9, 2026
- 07:27 am IST
தமிழக சட்டமன்ற தேர்தல்.. இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
Final Election Candidates List Will Be Released | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. மேலும் வேட்புமனுக்களை திரும்ப பெறும் கடைசி நாளாகவும் உள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Apr 9, 2026
- 06:50 am IST
Chengalpattu Constituency Election 2026: திமுக அதிமுக இடையே நிலவும் கடுமையான போட்டி.. செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி யாருக்கு?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சூழலில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதியாகும். இந்த தொகுதியில் செங்கல்பட்டு நகரம், பாளையம் மற்றும் சுற்றியுள்ள வளர்ந்து வரும் புறநகர் பகுதிகள் அடங்குகின்றன. வேகமாக வளர்ந்து வரும் தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 8, 2026
- 22:34 pm IST
11 கி.மீ தூரம் சாலை வலம் சென்ற விஜய்.. உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 8, 2026
- 19:59 pm IST
திருநெல்வேலி பிரசாரம்.. விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தவெக தலைவர் விஜய்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காணும் நிலையில், அந்த கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விஜய் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அவர் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 8, 2026
- 20:32 pm IST
தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் தேர்தல்கள் நடந்தபோது, அங்கு டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் அதே நிலை தான். அங்கு கூட டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திரும்பி, பாஜக தூண்டுதலின் பேரில் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 8, 2026
- 18:46 pm IST
வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் மிக தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 8, 2026
- 19:46 pm IST
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தலைமை செயலாளராக சாய் குமார், ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 8, 2026
- 16:05 pm IST
தமிழகத்தில் முதன் முறையாக வாக்களிக்கும் 14.59 லட்சம் பேர்.. வெளியான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல்..
Tamil Nadu Assembly Election: தமிழகத்தின் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான பகுதிகளாக 3,222 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் முழுமையான சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 8, 2026
- 14:55 pm IST
கரூர் சம்பவம் முதல் விவாகரத்து வரை… திமுக – பாஜகவை விமர்சித்து கர்ஜித்த விஜய்!
Tvk Leader Vijay Speech Nellai: கரூர் சம்பவம் முதல் விவகாரத்து விவகாரம் வரை எனது அரசியல் பயணத்துக்கு பல்வேறு தடைகளை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் விதித்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 8, 2026
- 13:49 pm IST
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!
Tamilnadu Assembly Election: திமுகவினர் கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கேட்கும் ஊழியர்களைத் தாக்குவதாகவும் அவர் புகார் கூறினார். இத்தகைய அநாகரிகமான அரசியல் மற்றும் மிரட்டல் போக்குகளுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 8, 2026
- 13:04 pm IST
கிடைத்தது அனுமதி… விஜய் பேச்சுக்கு தயாராகும் கடலூர்… நாளை பிரம்மாண்ட பரப்புரை!
Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து 3 இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. நாளை விஜய் கடலூர் பயணம் மேற்கொள்கிறார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 8, 2026
- 11:37 am IST