AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..

CM MK Stalin Meeting: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளது.

85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..

இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கம் வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

Tamilnadu Assembly Election: 232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது.

வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை… கிளம்பியது சர்ச்சை!

Kamal Haasan And Shruti Haasan Gets VIP Treatment In TN Assembly Election: நேற்று தமிழகம் முழுவது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்ற நிலையில் வாக்களிக்க சென்ற கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசனைச் சுற்று தற்போது சர்ச்சை கிளம்பி உள்ளது.

அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!

அஜித் முன்கூட்டியே வாக்களித்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரசிகர்கள் கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவர் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது. இருப்பினும், "நேரம் தொடங்கும் முன்பே ஒரு தனிநபரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம்?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

ஹூக்ளி நதிக்கரையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பயணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

PM Narendra Modi: மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து அடுத்தகட்ட பிரச்சாரங்களை பிரதமர் தொடங்கியுள்ளார். கிருஷ்ணாநகர் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "நான் 'ஜால்முரி' (மசாலா பொரி) சாப்பிட்டது சிலருக்குத் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கேள்விப்பட்டேன் என்றார்.

தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

Tamilnadu Assembly Election: தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முதல் சாதாரண வாக்காளர் வரை, தேர்தலின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும். இது பாலின சமத்துவத்தை (Gender Equality) நோக்கிய ஒரு முக்கியப் படிக்கட்டாகக் கருதப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை…

Tamil Nadu Assembly Election: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் வாக்குப்பதிவு சதவீதம் என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அது மக்களின் அரசியல் எழுச்சியின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. 1952 முதல் 2026 வரை தமிழகம் கடந்து வந்த தேர்தல் பயணத்தை விரிவான புள்ளிவிவரங்களுடன் இங்கே காண்போம்.

விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!

Bjp National Leader Nitin Nabin: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபீன் தெரிவித்தார். மேலும், திமுகவை விமர்சித்தார்.

தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..

Tamilnadu Assembly Election: சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த 72 வயதான மனோன்மணி என்ற மூதாட்டி, தனது குடும்பத்தின் மீதான பிணைப்பையும் ஜனநாயகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்தினார். அவர் தனது மகன், பேரன், பேத்திகள் என மொத்தம் 18 வாக்காளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்.. இரு நாள்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!

Special Train Operation : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்காளர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக போத்தனூரில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .

75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு..

Tamil Nadu Election 2026 Voting Updates: தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 84% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆர்.கே.நகர் தொகுதி 91 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் 90% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மயிலாப்பூரில் மிகக் குறைவாக 75 சதவீதமும், சைதாப்பேட்டையில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கழுத்தில் அணிந்திருந்த விசில்.. திமுகவினர் திடீர் பிடிவாதம்.. திகைத்து நின்ற துணை ராணுவ வீரர்கள்!

Whistle Symbol: தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படை வீரர்கள் வைத்திருந்த விசிலை அகற்ற கோரி திமுகவினர் பிடிவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

ஜனநாயக கடமையை புறக்கணித்த செந்தில் பாலாஜி.. திமுக நிர்வாகிகள் கூறிய காரணம்…!

Senthil Balaji Did Not Vote : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடைசி வரை தனது வாக்கை செலுத்தவில்லை. இதற்கான காரணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளது. என்ன அது.

எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்து சீல் வைக்கப்பட்ட EVM..

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது.