Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!
DMK President MK Stalin : தமிழகத்தில் காலூன்றி ஆட்சி அமைக்க தொடங்கும் பாரதீய ஜனதா கட்சி என்ற பருந்தை விரட்டி அடிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அதிமுகவை விமர்சித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 12, 2026
- 18:48 pm IST
மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள்… அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்.. என்னென்ன உள்ளன!
Tvk Leader Vijay Promises To Fishermen : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீனவர்களுக்கான பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரம், மீனவர்கள் படகு பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கன்னியாகுமரி பரப்புரையில் வெளியிட்டார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 12, 2026
- 17:57 pm IST
கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்.. தொண்டர்கள் உற்சாகம்!
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரியில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அங்கு திரண்ட ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- Vinalin Sweety
- Updated on: Apr 12, 2026
- 17:17 pm IST
வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள்.. விஜய் வெளியிட்ட பக்கா மாஸ் அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ!
TVK Leader Vijay Speech : கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- Gowtham Kannan
- Updated on: Apr 12, 2026
- 17:10 pm IST
சாத்தூரில் பாஜக தேசிய தலைவர் ரோடுஷோ.. நயினார், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு!
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ரோடு ஷோ மேற்கொண்டார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Apr 12, 2026
- 16:36 pm IST
நெருங்கும் தேர்தல்.. பிரதமர் வருகைக்கு தயாராகும் கன்னியாகுமரி.. பிரம்மாண்ட ரோடு ஷோவில் மோடி!
PM Narendra Modi: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 15- ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். இதற்காக தனி விமானத்தில் வருகை தர உள்ளார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 12, 2026
- 16:19 pm IST
“நா ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்”.. ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!
Tamilnadu Assembly Election: ஏற்கனவே பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சியில் 'அன்பில்' அலை வீசுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 13:52 pm IST
எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!
Tamilnadu Assembly Election: இதன் மூலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தமிழகத்தில் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 14:59 pm IST
கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை
Tamilnadu Assembly Election: தான் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், "சொந்த வீட்டில்தான் உரிமை கேட்க முடியும்" என்ற அடிப்படையில் தனது கோரிக்கையை முன்வைத்ததாகவும் பிளஸ்சி தெரிவித்தார். பிளஸ்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 11:32 am IST
“அதிமுக, பாமகவிற்கு செக்”.. சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் புதிய தேர்தல் வியூகம்.. வெடிக்கும் அரசியல் போர்!!
Tamilnadu Assembly Election: அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார். அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, சசிகலா தரப்பில் ஏ.எல்.சுரேஷ் போட்டியிடுகிறார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 10:34 am IST
விஜய்யின் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்தாவது ஏன்?.. ஆதங்கத்தில் தொண்டர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..
Tamilnadu Assembly Election: கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென்று ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர் தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டது. காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால், பேசாமல் திரும்பினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 08:42 am IST
தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல் தொடக்கம்..
Tamilnadu Assembly Election: இந்த ‘பூத் சிலிப்புகள்’ வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்குவார்கள். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த ‘பூத் சிலிப்புகளை’ வாக்காளர்களுக்கு வழங்கலாம். உதவிக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களை அழைத்துச் செல்லலாம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 07:54 am IST
கடையநல்லூரில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி கனிமொழி.. பேசியது என்ன?
முதல்வர் சொல்வதை நிறைவேற்றுவார். அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 22:19 pm IST
துரை வைகோ வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் தருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் வாகனம் இன்று கோவில்பட்டி அருகே சோதனை செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 22:01 pm IST
பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!
Ntk Chief Coordinator Seeman: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்ட 4 தேர்தல்களில் பணம் இல்லாத காரணத்தால் தோல்வியை சந்தித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக பேசினார். மேலும், வாக்குக்காக பணம் தரமாட்டேன் என்றார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 11, 2026
- 21:52 pm IST