AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..

234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Chief Minister MK Stalin: தமிழகம் பொருளாதாரத்தில் தொடர்ந்து 2- ஆவது ஆண்டாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமையுடன் கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் மக்கள் ஆதரவுடன் வெற்றி தொடரும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் “ஜனநாயகன் ஷோ”.. அதிரடியில் இறங்கிய போலீசார்!

Strong Room Jana Nayagan Movie: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்ததை சமூக வலைதலங்களில் பதிவிட்ட சிசிடிவி கேமரா ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் பணி.. இந்த துறை ஊழியர்களுக்கு விலக்கு.. தேர்தல் ஆணையம் அதிரடி!

Rural Development Department : தமிழகத்தில் மே 4- ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குகள் எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார் .

விஜய் நள்ளிரவில் திடீர் பயணம்.. திருச்செந்தூரில் அதிகாலை சுவாமி தரிசனம்.. எதிரிகளை வீழ்த்த சிறப்பு யாகம்?

Tvk Leader Vijay Swamy Darshan: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு, அரசியலை எதிரிகளை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்

தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும்.

விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

Vijay Perambur Nomination: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களில் முரண்பாடு காரணமாக அந்த மனுவை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?

Airfares To Chennai Increased: தமிழகத்தில் சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்த பொது மக்கள் வெளியூர் திரும்பும் நிலையில், இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!

Tamilisai Soundararajan:l தமிழகத்தில் வாக்களித்தவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஓய்வுக்காக சுற்றுலா சென்றுள்ளதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் விமர்சனம் செய்தார்.

“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!

Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!

Airline Ticket Prices: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதால் விமானங்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த டிக்கெட் கட்டணம் எப்போது குறையும் என புலம்பி வருகின்றனர்.

தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்..

Tamilnadu Assembly Election: தற்போதைய தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!

Edappadi Palaniswami Condemns: இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார்.

சென்னை போறீங்களா.. இன்று முதல் அதிரடி போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் உள்ளே!

Traffic Changes In Chennai: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்காக சொந்த ஊர் சென்ற பொது மக்கள் சென்னை திரும்ப உள்ளனர். இதனால், இன்று மற்றும் நாளை சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்த அஇபுதமமுக வேட்பாளர்!

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்தி, 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களை குழப்பமடைய செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் 13 வேட்பாளர்களை நிறுத்தியதாக கோயம்புத்தூர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.