AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

பரிதாபமான நிலையில் தவெக.. திமுக – தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி..

Rajendra Balaji: திமுக ஆட்சியில் அத்தியாவசிய குடும்ப செலவு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது. கோடைக்கு பணம் கொடுத்துள்ளேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். பொய்யைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அவர்கள் செய்த வேலைதான், தேமுதிகவை வளைத்த வரலாறு.

காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!

DMK Congress Allaince: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளை மட்டுமே திமுக தலைமை வழங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இதே கருத்தை முன்வைத்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக களமிறக்கிய 7 பேர் குழு… நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. யார் யார் இடம் பெற்றுள்ளனர்!

DMK Seat Sharing Committee : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் அமைத்து உத்தரவிட்டுள்ளார் .

பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

Tamil Nadu Assembly Election : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் 3 கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லுதல், கையாளுதல் என்பன உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

திமுகவிடம் 10+1 தொகுதிக்கான பட்டியலை அளித்த தேமுதிக… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

DMDK Requests Assembly Seats: திராவிட முன்னேற்ற கழகத்திடம் 10 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களையும் தே மு தி க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த கேட்டுள்ளதாகவும், அது தொடர்பான பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..

Dmdk joined in dmk alliance: முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். விஜயகாந்த் இருந்தபோதே 2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்.. 23ம் தேதி முதல் வீடு, வீடாக பிராசாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப். 23 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகப் பிரசாரத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் வருகை!

Chief Election Commissioner: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தமிழகம் வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி, அவர் வருகிற பிப்ரவரி 26, 27- ஆம் தேதிகளில் வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது முக்கிய ஆலோனை மேற்கொள்ள உள்ளார்.

திமுகவிடம் 20 தொகுதிகள் குறி வைக்கும் மார்க்சிஸ்ட்…பட்டியலையும் தயார் செய்தது!

Marxist Communist Party: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 சட்டமன்ற தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான பட்டியலை தயார் செய்து திமுக தலைமையிடம் அளித்து வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!

Tamil Nadu Assembly Election Dates: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் மத்தியில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கல்..பறந்த புகார்…களமிறங்கும் சிபிஐ?

Kalaignar Magalir Urimai Thogai: தமிழகத்தில் ஒரே நாளில் மகளிர்களுக்கு ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…வாடகை வாகனங்களுக்கு திடீர் மவுசு…பிரசாரத்துக்கு முன்பதிவு செய்யும் கட்சிகள்!

Election Campaign Vechicle: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்காக வாடகை வாகங்களை முன்பதிவு செய்து வருகின்றன. இதனால், வாடகை வாகனங்களின் வாடகை மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன், அதன் மவுசும் அதிகரித்துள்ளது.

நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு

Eps to start election campaign: முதல் கட்சியாக அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதன்படி, அதிமுகவுடன், பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட இதுவே கூட்டணி இறுதியான நிலைதான்.

புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Union Home Minister Amit Shah: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், 60 சதவீத வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!

Manickam Thakur MP: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை என்றும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளை தான் காங்கிரஸ் கேட்பதாகவும், இதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.