Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு?

TVK State Conference Meeting: ஆகஸ்ட் மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

சட்டமன்ற தேர்தலில் மதிமுக-வுக்கு திமுக 10 சீட்டுகளை ஒதுக்க வேண்டும்… துரை வைகோ

MDMK Election Strategy: மதிமுக தலைவர் துரை வைகோ, கட்சியின் அங்கீகாரத்திற்காக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதிமுகவுடனான கூட்டணி வரலாற்றுப் பிழை என ஒப்புக்கொண்டார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்.. எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

Chennai High Court: தேர்தல் ஆணையம், அதிகாரவரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்குமாறு தேர்தல ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..

Edappadi Palnisamy Campaign: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் மனநிறைவு அடையும் வரையில் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை தவிற விட்டீர்களே என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி! – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

PMK Internal Rift : பாமக நிறுவனர் ராமதாஸ், தன் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பதுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிகாரப் போட்டியில் தந்தை மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், பாமக எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

நெருங்கும் தேர்தல்.. வரும் ஜூலை 27 தமிழகம் வரும் பிரதமர் மோடி..

PM Modi Visit To Tamil Nadu: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். குறிப்பாக இந்த பயணத்தின் போது அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறார் அதேபோல் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற இருக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிதியை கல்லூரிக்கு செலவு செய்வதில் என்ன தவறு.. அறநிலை கல்லூரி விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கருத்து..

MP Karti P Chidambaram: அறநிலை கல்லூரி விவகாரம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், கோயில் நிதியில் இருந்து கல்லூரிக்கு செலவு செய்வது தவறில்லை, சொல்லப்போனால் கல்லூரிகளுக்கு தான் கோயிலை விட அதிக செலவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்.. நயினார் நாகேந்திரன் பேட்டி!

பாஜகவின் டம்மி வாய்ஸ்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு மதுரை விமான நிலையத்தில் பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி பேச வேண்டியதை சரியாக பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Nainar Nagendran: பாஜகவின் டம்மி வாய்ஸா எடப்பாடி பழனிசாமி..? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

AIADMK - BJP Alliance: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி பேசுபொருளானது. திமுகவின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள அதிமுக, இக்கூட்டணி மக்கள் நலனுக்கானது என வாதிடுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க திராவிட கட்சி அல்ல, அந்தக்காலம் மலையேறி போச்சு‌: செல்வப்பெருந்தகை

Tamil Nadu Congress' 2026 Strategy: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை முழுமையாக சீரமைத்து வருவதாகவும், அதிமுக திராவிடக் கட்சி அல்ல என்றும், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று கோயம்புத்தூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், அதிமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டத்தின் போது நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், எதிர்காலத்தில் அதிமுக வெற்றிக்காக பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தனர்.விழாவின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, போர்களத்தில் சிப்பாய்கள் எப்படி இருப்பார்களோ அதே போல தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு நம் இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லையா? திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

EPS Breaks Silence : திருவள்ளூரில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பலவீனமடைந்தால் தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அதிமுக, பாஜகவுடன் இணக்கமாக இல்லை எனவும் கருத்து வெளியிட்டார். இந்த நிலையில் திருமாவளவனின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

PMK Power Struggle: அன்புமணி புறக்கணிப்பு! கூட்டணி முடிவு ராமதாஸூக்கு மட்டுமே.. பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

PMK Internal Conflict: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகாரப் போர் கட்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழு கூட்டத்தில், அன்புமணியின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2026 தேர்தல் கூட்டணி முடிவை ராமதாஸ் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்த சர்ச்சை பாமகவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Edappadi Palaniswami: நடைப்பயிற்சியில் எளிமையாக எலுமிச்சை வாங்கிய எடப்பாடி பழனிசாமி.. வியாபாரிகளிடம் நலம் விசாரிப்பு!

Edappadi Palaniswami Street Vendor Interaction: கோவை பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி தெரு வியாபாரியிடம் பழம் வாங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். ரேஸ்கோர்ஸ் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் டீ அருந்தினார். "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர் கோவையின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.