AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

Celebrities who attended Vijays swearing-in ceremony as Chief Minister: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாகவும், தற்போது முழு அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் இன்று 2026 மே 10ம் தேதியில் சென்னை நேரு அரங்கத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் என விவரமாக பார்க்கலாம்.

பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?

ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில் தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம்.

இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?

தந்துள்ள தகவல்களின்படி, வரும் 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்கவில்லை என்றால், தமிழகத்தில் பின்வரும் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. யாரும் பதவியேற்காத பட்சத்தில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் குறிப்பிட்டு, அரசியலமைப்புச் சட்டம் Article 356-ஐ அமல்படுத்த ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் எழுதுவார்.

இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் "மையப்புள்ளியாக" மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது.

“ரூட்டை மாற்றும் காங்கிரஸ்”.. விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், "திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?

தமிழகத்திலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக அரசுக்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்தது.

5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!

Puducherry Rangasamy Set to Become CM for the 5th Time: இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Jana Nayagan: ஜன நாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன?

Jana Nayagan Producer Met Governor With Thalapathy Vijay: சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, தற்போது தமிழக அரசியலிலும் உச்சமாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் முதல்வராக ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று 2026 மே 8ம் தேதியில் ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், அவருடன் மற்ற அரசியல்வாதிகளும் சந்தித்திருந்த நிலையில், ஜன நாயகன் பட தயாரிப்பாளரும் அதில் இடம்பெற்றுள்ளார்.

“திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய அவர், "இவை அனைத்தும் ஊடகங்களில் உலவும் யூகங்களே. இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் தெரியாது" என்று கூறினார். மேலும், இது போன்ற முக்கிய முடிவுகளைத் தேசியத் தலைமைதான் எடுக்கும் என்றார்.

“வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?”.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!

விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு 'இளவரசரைப் போல' முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை "மன்னராட்சி" என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?

இருப்பினும், வாக்காளர்களிடமிருந்து வரக்கூடிய கடுமையான எதிர்ப்பை இரு தரப்பும் உணர்ந்துள்ளன. விஜய் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதும், இரு கட்சிகளின் தீவிரத் தொண்டர்களும் இந்த வினோதமான கூட்டணியை ஏற்கமாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். முரணாக, இந்த இணைப்புக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.

ராகுல் – விஜய் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியைத் தகர்க்குமா?.. தேசிய அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்!!

திரிணாமுல் தோல்வியடைந்த பிறகு, பாஜக வங்காளத்தில் "வாக்குகளைத் திருடியது" மட்டுமல்லாமல் "அரசாங்கத்தையும் திருடிவிட்டது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், திரிணாமுல் பக்கம் நிற்பது திமுகவுடனான நிலையைச் சரிசெய்ய காங்கிரஸுக்கு உதவுமா அல்லது மற்ற கூட்டணிக் கட்சிகள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..

தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் ஆதரவுடன் ஒரு தனிப்பெரும் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது என்றார். "தலைவர் (விஜய்) கூறியது போல, இதெல்லாம் அவருக்குப் பழகிவிட்டது; நீதியை யாராலும் தடுக்க முடியாது, நீதி கண்டிப்பாக வெல்லும்" என்றார்.