Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு

Eps to start election campaign: முதல் கட்சியாக அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதன்படி, அதிமுகவுடன், பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட இதுவே கூட்டணி இறுதியான நிலைதான்.

புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Union Home Minister Amit Shah: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், 60 சதவீத வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!

Manickam Thakur MP: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை என்றும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளை தான் காங்கிரஸ் கேட்பதாகவும், இதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

திறக்காத கூட்டணி கதவு.. செய்வதறியாது கையறு நிலையில் பன்னீர்செல்வம்.. எதிரே இருக்கும் ஒரே சான்ஸ்!

O Panneerselvam Alliance Stance: வருகிற சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தை பிறந்தால் வழி பிறக்கும் அப்போது தெரிவிக்கிறேன் என கூறி வந்த ஓபிஎஸ் தை மாதம் முடிவடைந்தும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளார். அவரது தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை..2 நாள்கள் விசிட்…பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேர்வு?

Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, பாஜக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

Congress Coalition Government: திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கே கேட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சிக்கான கதவை அடைத்துவிட்டநிலையில், காங்கிரஸ் தலைமை எந்த மாதிரியான முடிவெடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?

NDA Alliance Conference: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சிகளிம் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை காணப்பட்டது. இந்த ஒற்றுமை வருகிற சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெருவதற்கு முன்னுதாரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி வேட்புமனு வழங்கப்பட்டது. தவெக நிர்வாகிகளிடம் ஜோசப் விஜய்யின் பெயரில் முதல் வேட்புமனு விண்ணப்பம் பெறப்பட்டது. அதன்படி, விரைவில் விஜயின் தொகுதி அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அடுத்த இரண்டு நாட்களில் தனது தொகுதி குறித்து முடிவெடுப்பார் என்றும், தகவல்களின்படி விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மயிலாப்பூர் தொகுதிக்கு குறி…திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!

Mylapore Assembly constituency: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை பெறுவதில் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மவுசு கூடியுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்… தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!!

தேர்தல் அலுவலர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் முன்கூட்டியே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!

Co operative Bank Loan Waiver: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் என்பதால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் குவிந்து வருகின்றனர் .

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!

Election Commission: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் வருகிற பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்கள் சென்னையில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் .

ராமதாஸ், பிரேமலதா முடிவுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக.. நீடிக்கும் இழுபறி!!

DMK and AIADMK are awaiting: திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கை குழுக்கள் மற்றும் பிரச்சாரக் குழுக்களை அறிவித்திருந்தாலும், அவை தங்களின் கூட்டணிகளை இறுதி செய்யவில்லை. மேற்கூறிய கட்சிகளின் முடிவுகளைப் பொறுத்து தங்களின் கூட்டணிகளை இறுதி செய்ய திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன.

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!

AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!

DMK - Congress Seat Sharing: காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை கொடுத்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் ஆபத்து என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவின் கூட்டணி கணக்கும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.