AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

சொத்து குவிப்பு வழக்கு.. முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Former Minister Senguttuvan Assets Case : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் குடும்பத்தினருக்கு திருச்சி விசா ரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது .

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!

Speaker JCD Prabhakar : அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

முதல்வர் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி தவெக வேட்பாளர்.. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!

TVK Candidate Joined ADMK : எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமார், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கு தவெகவில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!

Edappadi Palaniswami Criticizes CM Vijay : தமிழக வெற்றிக் கழக அரசு ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதையுமே சாதனையாக செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிமுக அதிருப்தியாளர்கள் அணியில் பிளவு?.. எஸ்.பி.வேலுமணி முடிவை எதிர்த்து இபிஎஸ் போராட்டத்தில் தங்கமணி பங்கேற்பு!!

Rift Among AIADMK Dissidents: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டு வந்த அதிருப்தி தலைவர்களிடையே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்க அனுமதி தராததால் போராட்டத்தைப் புறக்கணிப்பதாக எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் முடிவெடுத்த நிலையில், அதை மீறி முன்னாள் அமைச்சர் தங்கமணி சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்.. தஞ்சாவூரில் ஆவேசமாக வெடித்த இபிஎஸ்!!

ADMK farm loan waiver Protest: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் மற்றும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

“அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!

ADMK Crisis Former Ministers Meet: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். டெல்லி பாஜக தலைமையின் சமரச அறிவுறுத்தலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உட்கட்சிப் பூசல் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

“தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு”.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!

Edappadi Palaniswamy Assembly Speech: சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் 7.18% எம்பி பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை எதிர்த்த அவர், மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகப் பிரகடனப்படுத்தினார்.

“நீட்டை கொண்டு வந்தது யாருங்க?”.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!

NEET Exemption Resolution: தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு தனித்தீர்மானம் மீதான விவாதத்தில், "நீட் தேர்வை நாட்டிற்குள் கொண்டு வந்தது யார்?" என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்கு பெறப்பட்ட வரலாறு குறித்து அவையில் விரிவாக விளக்கப்பட்டது.

“திமுக – அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?”.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!

Tamil Nadu Assembly: தமிழக சட்டமன்றத்தில் "திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறிய கருத்து பெரும் புயலைக் கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் எ.வ. வேலுவும் அவையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து விவாதம் ஓய்ந்தது.

“முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!

Tamil Nadu Assembly Debate: தமிழக சட்டமன்றத்தில் "முதலில் கட்சி மாறியது யார்?", "சட்டைப் பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது?" என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் திமுக எம்.எல்.ஏ ஓ. பன்னீர்செல்வம் இடையே சுவாரசியமாகவும் காரசாரமாகவும் நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபாநாயகர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உட்கட்சி மாற்றங்கள் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். இன்று தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முன்னிலையில் சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!

R.B. Udhayakumar controversial remarks CM Vijay: முதலமைச்சர் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நிர்வாகி புகார் அளித்தார். இதனால், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“ஜெயலலிதா செஞ்ச மாதிரி செய்ய தைரியம் இருக்கா?”.. இபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!!

அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு நிர்வாகிகள்தான் காரணம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா என கேள்வி எழுப்பியதுடன், தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்காமல் பழியை மற்றவர் மீது போடுவதாகச் சாடினார்.

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அங்கீகாரம்.. கட்சி தலைமை கொடுத்த கிப்ட்!

Former Minister Given Posts TVK : தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் எம், எல். ஏ. இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு பதவி வழங்கி கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது .