AIADMK
அஇஅதிமுக
அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.
அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
AIADMK 4 Former MLAs : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சட்டப் பேரவை செயலர் சாந்தி கடிதம் அனுப்பி உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 26, 2026
- 15:16 pm IST
காவிரி விவகாரம்.. தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
Edappadi Palaniswami Regarding Cauvery Issue: காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 25, 2026
- 21:42 pm IST
மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு! சபாநாயகரிடம் நேரில் வலியுறுத்தல்!
Mannargudi MLA S Kamaraj: மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி, அமமுக பொருளாளர் கரிகாலன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் டி.டி.வி. தினகரனின் மனுவை நேரில் வழங்கியுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 24, 2026
- 13:07 pm IST
விழுப்புரத்தில் வெடித்த அதிமுக உட்கட்சிப் பூசல்.. இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சி.வி.சண்முகம்!
EPS AIADMK meeting Villupuram: விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 1,150 ஆதரவாளர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைச் சி.வி. சண்முகம் புறக்கணித்துள்ளார். சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடிப் புறக்கணிப்பு விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 24, 2026
- 12:36 pm IST
விஜய் தலைமை மீது அதிருப்தி? தவெகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்.. அதிமுகவில் திடீர் சேர்க்கை!
TVK -Congress Members Joined AIADMK: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதனால், விஜய் தலைமை மீது அதிருப்பதி ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 21, 2026
- 19:42 pm IST
அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!
AIADMK CV Shanmugam MLA Resign: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் எம். எல். ஏ. தலைமையிலான 1,300-க்கும் அதிகமான அந்தக் கட்சியினர் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 20, 2026
- 15:11 pm IST
“எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!”.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!
TVK Salem Mega Event: சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், எடப்பாடியின் எஃகு கோட்டையான சேலத்தில் தவெக ஓட்டை போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
- Sathis S
- Updated on: Jul 20, 2026
- 11:45 am IST
அதிமுகவில் இருந்து கூண்டோடு விலகும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்.. சென்னை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள்!!
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் மேலும் 30-க்கும் மேற்பட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 10:14 am IST
2 மாத ஆட்சிக்கே இவ்வளவு மமதையா? முதல்வர் விஜய்யை விளாசி தள்ளிய எடப்பாடியார்!
Edappadi Palaniswami Criticizes Joseph Vijay : தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற 2 மாதங்களில் முதல் அமைச்சருக்கு மமதை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 18, 2026
- 18:59 pm IST
தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக-விற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியாகியுள்ள கரூர் தொகுதியை இடைத்தேர்தலில் மீண்டும் கைப்பற்ற இபிஎஸ் தீவிர வியூகம் வகுத்து வருகிறார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 18, 2026
- 13:04 pm IST
2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!
MDMK General Secretary Vaiko : அதிமுக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்ததை நான் செய்த இரு பெரும் தவறுகள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்து உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 17, 2026
- 15:04 pm IST
விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ADMK Resignation Dispute: தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது இயந்திரத்தனமாகச் சபாநாயகர் எடுத்த முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அதிமுக கொறடா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சட்டமன்றச் செயலாளர் மற்றும் இரு முன்னாள் அமைச்சர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 16, 2026
- 14:15 pm IST
சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 16, 2026
- 12:34 pm IST
பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..
Palani Temple Land Scam: பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்குத் தனியாருக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், "இதன் பின்னணியில் இருக்கும் அந்த பவர் சென்டர் யார்?" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 16, 2026
- 07:29 am IST
அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு!
AIADMK District Secretaries Meeting: அதிமுக பாெதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜூலை 20- ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 19:52 pm IST