AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

எடப்பாடியின் மாஸ் மூவ்.. மதுராந்தகம்- தாராபுரத்தை தூக்க இறக்கப்பட்ட Special Squad.. களம் இனி வேற மாதிரி இருக்கும்!

AIADMK Election Campaign Committee : தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

“முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!

EPS Slams CM Vijays london Visit: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், அதிகரித்து வரும் விலைவாசி, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாதது என திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் வீணாகும் நெல்மணிகளைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!

Maduranthakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெருங்கும் இடைத்தேர்தல்.. வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் தவெக.. பாமகவுக்கு ரகசிய தூது விட்ட விஜய்.. பின்னணி என்ன!

TVK Seek PMK Support : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரகசிய தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!

Madurantakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் என கூறப்படும் நிலையில், எந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.

மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Aiadmk Candidates Announced : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?.. டி.டி.வி. தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TTV Dhinakaran Announces Support: வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளிக்கும் என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், விஜய் தலைமையிலான அரசு நிர்வாகத் திறனற்று 'துக்ளக் பாணி' ஆட்சியை நடத்துவதாகவும் அவர் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்.. முக்கோணப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?.. கள நிலவரம் என்ன?

Dharapuram Assembly By-Election: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்தியபாமா தவெகவில் இணைந்தது, அருந்ததியர் சமூக வாக்கு வங்கியின் முக்கியத்துவம் மற்றும் திமுக-அதிமுக-தவெக இடையேயான மும்முனைப் போட்டி ஆகியவை இத்தொகுதியின் வெற்றித் தீர்மானிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.

இடைத்தேர்தல் களம்: அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?.. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

AIADMK Probable Candidate List: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் மகேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த விரிவான தகவல்கள் இதோ!

சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. வெற்றி பெற தீவிர வியூகம்.. பாஜகவிடம் நேரில் ஆதரவு கோரிய அதிமுக!!..

Tamil Nadu Assembly Bypolls: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவைக் கோரி அதிமுக நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் நயனார் நாகேந்திரனைச் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவோம் என அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!

Perundurai Constituency Election Case : பெருந்துறை தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Aiadmk Applications Distribution : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாள்களுக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு… 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்.. முழு விவரம்!

Tamil Nadu By Election Announcement : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மற்றும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளுக்கு அறிவிப்பு இல்லை. இந்த இடைத்தேர்தல் எப்போது நடைபெறுகிறுது என்பன முழு விவரத்தை பார்க்கலாம்.

உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..

ADMK District Secretaries Meeting: சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

Esaki Subbiah MLA Resignation : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா தொடர்பா ன நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .