AIADMK
அஇஅதிமுக
அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.
”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
Udhayanidhi Stalin Criticism: இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்ற பெயரில் இருக்கும் பேக் ஐடியே அ.தி.மு.க. அந்த பேக் ஐடியின் உண்மையான அட்மின் அமித்ஷாதான். அப்படிப்பட்ட முழு ‘சங்கியாக’ எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 7, 2025
- 13:14 pm IST
எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்து உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் கொண்டம்பாளையத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பதும் அவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 30, 2025
- 21:19 pm IST
தவெகவில் செங்கோட்டையன்.. பதில் சொல்ல மறுத்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து பதில் சொல்ல தேவையில்லை” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 27, 2025
- 20:51 pm IST
“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். இதில், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணைந்தனர். அதோடு, அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் அவருடன் தவெகவில் இணைந்தார். அவர்களுக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 27, 2025
- 15:34 pm IST
29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 25, 2025
- 16:21 pm IST
‘டிச.15க்குள் இறுதி முடிவு’.. இபிஎஸ்-க்கு கெடு; ஓபிஎஸ் தலைமையில் உருவாகும் புதிய கட்சி?
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் நோக்கமே, அதிமுகவில் தான் இழந்த பதவி, உரிமையை மீட்டெடுப்பதாக இருந்தது. எனினும், இதனால் தனக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்காத நிலையில், தற்போது தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாக தெரிகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 25, 2025
- 08:03 am IST
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை”.. அதிமுக எம்.பி தம்பிதுரை சூசக பதிலடி!!
தமிழ்நாடு அரசியல் அமைப்பில், கூட்டணி என்பது தேர்தல் வெற்றிக்கான அரசியல் தந்திரமாகவே இருந்து வருகிறது. மாநிலத்தில் கூட்டு அமைச்சரவை அமைப்பது என்பது அரிதானது. இங்கு பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் திமுகவும், அதிமுகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அதிகாரத்தை பகிர்ந்தது கிடையாது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 21, 2025
- 10:55 am IST
ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..
South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 20:26 pm IST
திமுகவை கண்டித்து அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியிட்ட அதிமுக – காரணம் என்ன?
AIADMK Protest Postponed : சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆளும் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, அதனை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 16, 2025
- 15:03 pm IST
‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!
Special Intensive Revision (SIR): வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, SIR பணிகளை மேற்கொள்ள ஒரு மாத காலம் போதும் என்றும் கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 10, 2025
- 12:46 pm IST
டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 12:33 pm IST
‘உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது’ செங்கோட்டையன் பளார்!!
Sengottaiyan about eps: செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைவரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி வருவதாகவும் குற்றம்சாட்டிய செங்கோட்டையன், இப்படி கட்சியில் இருந்து எவ்வளவு பேரை அவர் நீக்குவார் என்றும் கவலை தெரிவித்திருந்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 9, 2025
- 15:24 pm IST
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.. Total Failure மாடல் அரசு – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
Edappadi Palniswami: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 9, 2025
- 14:58 pm IST
எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்
ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 8, 2025
- 06:40 am IST
நான் இல்லாவிட்டால் இபிஎஸ் முதல்வராகி இருக்க முடியாது.. செங்கோட்டையன் பளார்!!
உட்கட்சி மோதல் காரணமாக அதிமுக எனும் பெரும் பலம் கொண்ட கட்சி, மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இதுபோன்ற சம்பவங்கள் சட்டமன்ற தேர்தலில் புதிதாக உருவாகியுள்ள விஜய்யின் தவெக கட்சிக்கு பெரும் பலத்தை அளிக்கும் என்றும் கூறுகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 7, 2025
- 14:17 pm IST