Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!

TNPSC Group 2 exams postponed; டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகள் நம்பிக்கை இழந்து வருகின்றன…தமிழிசை செளந்தர ராஜன் தாக்கு!

Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகள் நம்பிக்கை இழுந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் .

திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

Edappadi Palaniswami On DMK: “மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக 2.0 ஆட்சி அமையும்” என ஸ்டாலின் கூறி வருவது, தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றும் முயற்சியே என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

அதிமுக பிரமுகருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு…ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க பிரிந்த உயிர்..பரபரப்பில் மதுரை!

Madurai Crime: மதுரை அருகே முன் பகை காரணமாக அதிமுக பிரமுகரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர் தொகுதிக்கு குறி…திமுக-அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி!

Mylapore Assembly constituency: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியை பெறுவதில் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மவுசு கூடியுள்ளது.

“125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

AIADMK hold protests: மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை வழங்கும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளன. இந்தச் சட்டம் மாநில அரசிற்கு வெளிப்படையாகவே கீழ்க்கண்ட அதிகாரத்தை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!

Co operative Bank Loan Waiver: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் என்பதால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் குவிந்து வருகின்றனர் .

ராமதாஸ், பிரேமலதா முடிவுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக.. நீடிக்கும் இழுபறி!!

DMK and AIADMK are awaiting: திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கை குழுக்கள் மற்றும் பிரச்சாரக் குழுக்களை அறிவித்திருந்தாலும், அவை தங்களின் கூட்டணிகளை இறுதி செய்யவில்லை. மேற்கூறிய கட்சிகளின் முடிவுகளைப் பொறுத்து தங்களின் கூட்டணிகளை இறுதி செய்ய திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கை குழு என்ன செய்கிறது..? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் அறிக்கைக்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டது குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "இது எனக்குப் புரியவில்லை. அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழு என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது" என்றார்.

ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி

EPS responds to TVK Vijay: அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக விஜய்க்கு ஒன்றும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!

AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அண்ணா நினைவு நாள்.. சென்னையில் அமைதிப் பேரணி சென்ற முதல்வர் ஸ்டாலின்..

மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.

“சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை”.. செல்லூர் ராஜூ விளக்கம்!!

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார். ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை.