Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?.. அதிமுக உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றியதால் பரபரப்பு!!

டிச.23ம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியை தொடங்கிய நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமும் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

ADMK - BJP Alliance: இந்த சூழலில், டிசம்பர் 15, 2025 தேதியான நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?

டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும் என கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார். மேலும், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.

நெருங்கும் சட்டசபை தேர்தல்: நேற்று அதிமுக பொதுக்குழு.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!

TN Assembly elections: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.

காலியாகும் மாநிலங்களவை சீட்.. திமுக – அதிமுக போடும் புது கூட்டணி கணக்கு!!

வரும் தேர்தலில் எதிர்பாராத பல திருப்பங்கள் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதுபோன்ற போட்டிகளை சமாளிக்க திமுகவும், அதிமுகவும் தங்கள் மாநிலங்களவை சீட்டை வைத்து புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ, தவெக இம்முறை அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.

மக்களின் நம்பிக்கையை இழந்த திமுக அரசு.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 2025 டிசம்பர் 10ம் தேதி தெரிவித்தார்.

ஸ்டாலினை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி…அனல் பறந்த பேச்சு!

EPS Strongly criticized C M Stalin: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது எடப்பாடி கே. பழனிசாமி வார்த்தைக்கு வார்த்தை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்து போனது .

“அதிமுக உஷாராக இருக்க வேண்டும்”… பொதுக்குழுவில் எச்சரித்த சி.வி.சண்முகம்!!

AIADMK General Council meeting: செங்கோட்டையனை போல், அடுத்தடுத்து கட்சியில் முக்கிய தலைவர்கள் பலர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. அந்த லிஸ்டிலில், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் முதல் ஆளாக பங்கேற்றுவிட்டனர்.

ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!

Edappadi k. Palaniswami Speech: பல்வேறு ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு 2026- இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தண்டனை பெற்று தரப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார் .

திமுகவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்…என்ன அது!

Aiadmk Resolution Against Dmk: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அதிமுக பொதுக் குழுவில் திமுக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!

Resolutions passed at the AIADMK general meeting: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும், எடப்பாடியை மீண்டும் முதல்வர் ஆக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2026 சட்டமன்ற தேர்தல்.. பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிமுக!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியின் பணிகள் மற்றும் பல முக்கிய அரசியல் காரணிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஊழல் பணத்தை வைத்து ஓராண்டுக்கான பட்ஜெட் போடலாம் – எடப்பாடி பழனிசாமி தாக்கு..

Edappadi Palaniswami: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..

Udhayanidhi Stalin Criticism: இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்ற பெயரில் இருக்கும் பேக் ஐடியே அ.தி.மு.க. அந்த பேக் ஐடியின் உண்மையான அட்மின் அமித்ஷாதான். அப்படிப்பட்ட முழு ‘சங்கியாக’ எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.