Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு..

TTV Dinakaran: சிவகங்கை மாவட்டத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணமே நயினார் நாகேந்திரன் தான். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியே வேறு விதமாக பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு

AIADMK Internal Issues : அதிமுகவில் உட்கட்சி பிரச்னை நடந்து வரும் நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக சத்தியபாமாக கூறியதை சில நிமிடங்களில், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!

AIADMK Internal Issues : அதிமுகவில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அவரை விரைவில் சந்திப்பேன் என்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் சலசலப்பு.. 5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்.. விவரம் வெளியீடு

Edappadi Palanisamy Campaign : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் 5ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 17ஆம் தேதி 26ஆம் தேதி நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல் – சசிகலா அறிக்கை..

Sasikala Statement: செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல். இது கட்சி நலனுக்கு உகந்ததல்ல. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் என சசிகலா, எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.. அதிமுக நிர்வாகிகள் 300 பேர் ராஜினாமா..

Admk Internal Clash: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக, ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர். மேலும், இந்த பொறுப்புகள் முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்

AIADMK Former Minister Sengottaiyan : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் நிலவி வருகிறது. தற்போது கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு 7 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக உட்கட்சி மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

AIADMK Former Minister Sengottaiyan : அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு

TTV Dhinakaran : பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது என்றும் நயினார் நாகேந்திரன் தான் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்.. மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை கருத்து..

Congress Leader Selvaperunthagai: அதிமுகவின் உட்கட்சி விவகாரம் வெளியே வந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ” அதிமுக–பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல். அதில் ஏறினால் மூழ்கிவிடுவோம் என்பதால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜக–அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!

AIADMK Internal Issues : அதிமுகவின் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் எனவும் சசிகலா அறிக்கை வாயிலாக தெரிவித்து இருக்கிறார். மனதின் குரலாகவே செங்கோட்டையன் பேசுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!

AIADMK Leader Sengottaiyan : அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். அப்படி இல்லையெனில் ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியை ஒருங்கிணைத்தால் தான் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

KA Sengottaiyan: மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். இதனிடையே செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறக்க உள்ளதாக கூறியிருந்தார். தற்போது அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன்.. ரிப்ளை கொடுத்த செங்கோட்டையன்.. அடுத்து என்ன?

Sengottaiyan On TTV Dhinakaran : என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விலகியது குறித்து செங்கோட்டையன் பதில் கொடுத்துள்ளார். டிடிவி தினகரன் கூறியது அவரது கருத்து என்றும் அதற்கு என்னால் பதில் கூடி முடியாது என்வும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.. விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்..

BJP Meeting At Delhi: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், டெல்லியில் செப்டம்பர் 3 2025 தேதியான இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.