AIADMK
அஇஅதிமுக
அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.
அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ
Sellur raju about admk alliance: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்க்கு நேரடியாக கூட்டணி அழைப்பு விடுத்து வரும் நிலையில், அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக கூறியுள்ளார். தங்கள் மீதான நம்பிக்கையை இழந்து கூட்டணிக்கு அடிபோடுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இவரது இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Oct 24, 2025
- 13:32 pm IST
நெற்பயிர்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..
Edappadi Palaniswami: அதிமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் எடையிடப்பட்டன. இரவு பகலென பாராமல் 100 நாட்கள் போராடி நுழைவுத்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்காக இந்த அரசு?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 23, 2025
- 06:52 am IST
‘மீண்டும் திமுக வந்தால் தவெக கதி அவ்வளவு தான்’ – ஆர்.பி.உதயகுமார்!
AIADMK - Tamilaga Vettri Kazhagam: 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக வெற்றிக் கழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நடிகர் விஜய் அ.தி.மு.க-வுடன் பயணிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 22, 2025
- 08:23 am IST
கொண்டாட்டம்.. மகிழ்ச்சி.. அதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்க விழா!
தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்று அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா என பெரும் ஆளுமைகளால் கொண்டு வரப்பட்டு தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற நிலையில் இயங்கி வருகிறது. இக்கட்சியில் 54ம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள், தலைவர்கள் வருகை தந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்தனர்
- C Murugadoss
- Updated on: Oct 17, 2025
- 12:34 pm IST
Sellur Raju: எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!
TVK Flag at ADMK Meeting: எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொன்னதால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் தவெக கொடியையும் எடுத்து சென்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Oct 11, 2025
- 19:30 pm IST
தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்
Thirumavalavan On AIADMK Alliance : அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி தான் என்றும் அப்படி கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்சி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 11, 2025
- 13:43 pm IST
இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
Edappadi Palaniswami: அக்டோபர் 9, 2025 அன்று நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதால் இந்தியாவில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த மருந்து நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்ததே மாநில சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 10, 2025
- 06:10 am IST
அதிமுகவுடன் கூட்டணியா? – இபிஎஸ் பரப்புரையில் தவெக கொடி!
AIADMK-TVK Alliance: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகக் கொடி பறந்தது அரசியல் உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது அதிமுக-தவெக கூட்டணி குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. விஜய் திமுகவுக்கு மாற்று என்று அறிவித்தாலும், அரசியல் நெருக்கடியால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 9, 2025
- 08:25 am IST
காசு இருந்தா… திருச்செங்கோட்டில் பரப்புரை – அசுரன் பட வசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி
Edappadi Palaniswami Quotes Asuran: அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோட்டில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கல்வி குறித்து பேசிய அவர் அசுரன் பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Oct 8, 2025
- 20:26 pm IST
கச்சத்தீவு விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பாலக்கோடு தொகுதியில் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். மேலும் ராமநாதபுரத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறினார்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 4, 2025
- 09:19 am IST
என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..
TVK Leader Vijay: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், “ 2026 இல் போட்டி என்பது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே மட்டும்தான். நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே என் மீது இவ்வளவு நம்பிக்கையா? பார்த்து விடலாம்... ஒரு கை பார்த்து விடலாம்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 27, 2025
- 16:10 pm IST
டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு.. 20 நிமிடம் நடந்த மிட்டீங்.. என்ன மேட்டர்?
TTV Dhinakaran O Paneerselvam Meet : சென்னையில் நடந்த திருமண விழாவில் அமமு பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்த இருவரும் அருகருகே அமர்ந்து, நலம் விசாரித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது இருவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
- Umabarkavi K
- Updated on: Sep 27, 2025
- 06:20 am IST
திடீரென சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்!
Nainar Nagendran Meets CV Shanmugam : சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 26, 2025
- 19:56 pm IST
மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என இழிவுப்படுத்துவதா? ஊர்ந்து சென்று முதல்வரான இவரெல்லாம் பேசலாமா? – செல்வப்பெருந்தகை..
Selvaperunthagai: பிச்சைக்காரன் என செல்வப்பெருந்தகையை இழிவுப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது ஒரு தனிநபரை பழிப்பது மட்டுமல்ல கோடிக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயல் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 26, 2025
- 06:45 am IST
முதலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை..
Selvaperunthagai: எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருங்தகை, “ எடப்பாடி பழனிசாமி முதலில் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கட்டும். எங்கள் கட்சி பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் அருகதையும் கிடையாது” என தெரிவித்து உள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 25, 2025
- 07:06 am IST