AIADMK
அஇஅதிமுக
அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.
Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 29, 2026
- 19:24 pm IST
Tamil Nadu Exit Polls 2026 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இன்று வெளியாகிறது Exit Poll!
2026 Tamil Nadu Assembly Election Exit Poll | தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக உள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Apr 29, 2026
- 09:54 am IST
“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!
Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 26, 2026
- 14:02 pm IST
“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!
Edappadi Palaniswami Condemns: இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 26, 2026
- 07:35 am IST
“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது”.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..
Tamilnadu Assembly Election: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 25, 2026
- 14:03 pm IST
2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!
Tamilnadu Assembly Election: மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், வாக்குகள் சில இடங்களில் பிரிந்திருந்தாலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். தேசிய அரசியலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 25, 2026
- 09:52 am IST
எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
Tamilnadu Assembly Election: 232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 24, 2026
- 13:30 pm IST
இளைஞர்களுக்கு பைக் மானியம்.. எடப்பாடியின் கடைசி நிமிட ‘மெகா’ தேர்தல் வாக்குறுதிகள்!
AIADMK 10 Election Promises: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுகவின் கடைசி தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பன 10 வாக்குறுதிகள் உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Apr 22, 2026
- 07:52 am IST
வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வரும் 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியது அதிமுக அரசு. வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 20:24 pm IST
வில்லிவாக்கம் 2026: “வாக்குறுதி அல்ல.. வாழ்வாதார மீட்பு!” – தி.மு.க-வை அதிர வைக்கும் அ.தி.மு.க
Villivakkam 2026: வில்லிவாக்கம் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார், ஆளுங்கட்சியின் நிர்வாகத் தோல்விகளை விமர்சித்துத் தனது அதிரடித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் நீண்டகாலக் குடிநீர் பிரச்சனைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
- Sivasankari Bose
- Updated on: Apr 21, 2026
- 15:59 pm IST
தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில்வும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்து வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 15:03 pm IST
ரூ.600 கோடி சொத்துகளை மறைத்த சுந்தர் சி?.. தேர்தல் களத்தில் கிளம்பிய அதிரடிப் புயல்!
Tamilnadu Assembly Election: ஒட்டுமொத்தமாக சுமார் 604 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இந்தத் தம்பதியினர் மறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சேட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மற்றும் விளம்பர வருமானங்கள் ஆகியவையும் அடங்கும். என கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 14:21 pm IST
“சொந்தமாக கார் கூட இல்லையா?”.. முதல்வரின் சொத்து விவரம் குறித்து காளியம்மாள் கடும் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காளியம்மாள் குற்றம் சாட்டினார். குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம். ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை. தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிவழங்கும் திட்டம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 12:50 pm IST
இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
Tamilnadu Assembly Election: சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரச்சாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 07:36 am IST
பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
Congress President Rahul Gandhi: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர். எஸ். எஸுக்கு அதிமுக தலைவர்கள் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 20, 2026
- 13:40 pm IST