AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

“தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!

Expose TVK govts errors through Reels: அதிமுகவிற்கென பிரத்தியேகமாகச் சமூக வலைதளங்களை ஒருங்கிணைக்கத் தனி 'வார் ரூம்' அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தவெக-வின் வெற்றி என்பது நிலையாக இருக்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!

இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு – அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு

பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

Edappadi Palaniswami : தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த முதல் வழக்கு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்து உள்ளார் .

“அதிமுகவுடன் அமமுக இணைப்பு?” என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் ஆளுங்கட்சியை நோக்கிப் போவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சியால் பல்வேறு பலன்களைப் பெற்றவர்கள், இன்றைக்குத் தேர்தல் தோல்வி அடைந்தவுடன் கட்சி மாறுவது நியாயமற்றது. தோல்விக்குக் கட்சி மட்டுமே பொறுப்பல்ல, அங்கே அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த அவர்களுக்கும் அதில் பொறுப்பு உள்ளது.

21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!

Speaker J. C. D Prabhakar : அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி இல்லை”.. ஸ்டாலின், இபிஎஸ் கூறியது தவறு.. விளாசிய சிபிஎம் சண்முகம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய கட்சி, மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று விமர்சிப்பது தவறானது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என யார் அப்படிப் பேசினாலும் அது தவறு என்று கண்டித்த அவர், ஒரு புதிய அரசு தங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றிவிட முடியாது என்றும் கூறினார்.

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

Former Aiadmk Minister Joins Tvk: அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பனையூர் த வெ க தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் இணைந்தனர்.

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்.. அடுத்தடுத்து அதிரடி ட்விஸ்ட்!

அதேபோல், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம் அணியினர், பின்னர் அது சரிவராத காரணத்தினால் வேறு வழியின்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூகமாக சென்றுவிட்டனர். எனினும், அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது நிலைப்பாட்டை தற்போது வரை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அதேபோல், சி.வி.சண்முகமும் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

வெற்றி செல்லாது என அறிவித்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவேன் என அதிமுக இன்பதுரை உறுதி!

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு எதிராக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். 5 முறை போட்டியிட்டு 5 முறையும் மகத்தான வெற்றி பெற்றுள்ளேன். எப்போதும் கட்சி நிர்வாகிகளை நட்பு உறவாக பழகி வருகிறேன் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கான உயிரை மாய்த்த தொண்டர்.. அஞ்சலி செலுத்திய கட்சியினர்!

மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி பூக்கடை மகேந்திரன் மறைவுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுகவினர் இணைந்து ஜான்சி பார்க் பகுதியில் பூக்கடை மகேந்திரனின் இரங்கல் பேனருக்கு முன்னதாக நின்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக பிளவால் மனம் பொறுக்கவில்லை.. உலகை விட்டே போகிறேன்.. தஞ்சாவூர் நிர்வாகி தீக்குளித்த தற்கொலை!

AIADMK Member Suicide : அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் மன வறுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் தஞ்சாவூர் வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .

அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் தவெக அரசு.. குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி தரப்பு பரபரப்பு புகார்!

TVK Horse Trading : அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பரபரப்பு புகார் மனு அளித்தனர் .

ஒரே நாளில் தவெகவில் இணையும் 3 அதிமுக முன்னாள் எம்எல்ஏகள் – பரபரப்பு தகவல்

சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் ஒரே நாளில் அதிமுகவை சேர்ந்த 3 முன்னாள் எம்எல்ஏகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.