100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தரப்பில் இன்று அரியலூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கக்கூடாது என்றும், பழையபடி இருந்த பெயரையே தொடர வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த பெயர் நீக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
