சென்னை, அரியலூர் உட்பட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் – வெளியான அறிவிப்பு
Key IAS Transfers : தமிழ்நாட்டில் கடந்த மே 10, 2026 முதல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அலுவலர்கள் மற்றும் சென்னை உட்பட5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே 10, 2026 முதல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மே 29, 2026 நேற்று ஒரே நாளில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மே 30, 2026 இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அலுவலர்கள் மற்றும் சென்னை உட்பட5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டு வசதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமிக்கப்பட்டுள்ளார்