பக்தர்களுக்கு குட் நியூஸ் – திருப்பதி – தமிழ்நாடு இடையே வந்தே பாரத் ரயில் சேவை
திருப்பதிக்கு விரைவில் மற்றொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே துறை சமீபத்தில் திருப்பதியில் நடத்தியது. இந்த வந்தே ரயில் தமிழ்நாடு மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதிக்கு விரைவில் மற்றொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை ரயில்வே துறை சமீபத்தில் திருப்பதியில் நடத்தியது. இந்த ரயில் தமிழ்நாடு மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
விரைவில் திருப்பதி – தமிழ்நாடு இடையே வந்தே பாரத் ரயில்
திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்கத் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு மேலும் பல நற்செய்திகளை வழங்க ரயில்வே துறை தயாராகி வருகிறது. திருப்பதி வழியாக ஏற்கனவே பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் பக்தர்கள் திருப்பதிக்கு விரைவாகச் செல்ல பெரிதும் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது, திருப்பதிக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த சோதனினை ஓட்டம் இது குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!




சமீபத்தில் திருப்பதி ரயில் நிலையத்தில் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் காணப்பட்டது. அது நிலையத்தின் ஃபிட் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. ரயிலின் முன்புறம் மற்றும் பின்புறம் இருந்த ஓட்டுநர்களைத் தவிர, வேறு யாரும் அதில் காணப்படவில்லை. இது வெள்ளை மற்றும் நீல நிறக் கலவையுடன் கூடிய எட்டு பெட்டிகளைக் கொண்ட அமைப்பைக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து திருப்பதிக்குச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாகவும், ரேணிகுண்டா வழியாக ரயில் திருப்பதியை வந்தடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனை ஓட்டங்களின் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ரயில் திருப்பதியில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ரயில் விரைவில் சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், அதற்கான குறிப்பிட்ட வழித்தடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டத்திற்காகவே திருப்பதிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஆந்திரப் பிரதேசம் வழியாக ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் மொத்த எண்ணிக்கை ஆறாக உயரும். இதற்கிடையில், விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்கவும் ரயில்வே துறை தயாராகி வருகிறது. அதன் கால அட்டவணை குறித்த விவரங்களும் சமீபத்தில் வெளியாகியுள்ளன; மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!
இந்த ரயில் தமிழ்நாடு மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால், இது குறித்த முழு விவரங்களும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டையும் திருப்பதியையும் இணைக்கும் வகையிலான வந்தே பாரத் சேவை ஏதுமில்லை என்பதால், இப்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுவது, இவ்விரு பகுதிகளுக்கும் இடையே இச்சேவையை இயக்குவதற்கான திட்டங்கள் இருப்பதை உணர்த்துகிறது.