AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Samantha talks about school days memories: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னதாக இவர் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
சமந்தா ரூத் பிரபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 17:35 PM IST

தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. தமிழ் சினிமாவில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாய படத்தில் சிறிய காட்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu) நடித்து இருந்தாலும் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சம்ந்தா ரூத் பிரபு இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதில் பெரும்பாலானா படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்தும் வருகின்றார். இந்த நிலையில் தற்போது சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடிக்கும் மா இண்டி பங்காரம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா ருத் பிரபு இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி? வைரலாகும் தகவல்

லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன்:

சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தினாலும் அவர் சென்னை பொண்ணு தான். தனது குடும்பத்தினர் உடன் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தான் வசித்து வந்தார். அவர் அளித்தப் பேட்டியில் 11-ம் வகுப்பு படித்த போது ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த சமந்தாவின் தந்தை பல்லாவரத்திற்கு உள்ளேயே ஓட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சமந்தாவோ ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு மீனம்பாக்கம் வரை சென்று போலீஸிடம் மாட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து போலிஸிடம் அழுத்துக்கொண்டே கெஞ்சி அங்கு இருந்து வீட்டிற்கு திரும்பியதாக மிகவும் நகைச்சுவையாக அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… உங்கள் திறமையில் 10 சதவீதம் எனக்கு வேண்டும் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Follow Us