பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!
PM Modi Roadshow In Nagercoil: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களைை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் நேர்ந்திர மோடி இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார். அப்போது, தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரல் விட்டு என்னும் வகையில் ஒரு வாரமே உள்ளது. தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அரசியல் கட்சியினர் தங்களது வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டு தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கிருந்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4:10 மணி அளவில் நாகர்கோவில் வந்து சேர்கிறார். தொடர்ந்து, 4:15 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு பகுதியில் இருந்து வேப்பமூடு பகுதிக்கு காரில் வருகிறார்.
1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் ரோடு ஷோ
அங்கு, மாலை 4:30 முதல் 5:30 வரை வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ வில் பங்கேற்கிறார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். ரோடு ஷோ நிறைவடைந்த பிறகு மாலை 5:45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 6:20 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
மேலும் படிக்க: திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..




கோவையில் 18- ஆம் தேதி பிரதமர் பங்கற்கும் பொதுக்கூட்டம்
இதேபோல, வருகிற 18-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த இரு கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார். இதே போல, திருச்சியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்தார்.
மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரதமர் ரோடு ஷோ
அந்த பகுதியில், பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு கட்ட தேர்தல் மற்றும் கட்சி பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது, அந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..