Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu
பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.
அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதன்பின், அண்ணாமலை நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திடமும், டிடிவி தினகரனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படியான சூழலில் அவர் டெல்லி சென்றுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 10, 2025
- 12:30 pm IST
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?
Annamalai Delhi Visit: இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். மேலும், டிசம்பர் 8, 2025 அன்று கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 9, 2025
- 09:04 am IST
ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..
Annamalai On Tiruparankundram Issue: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .......... அரசியலா?” என ஒரு பதிவு போடுகிறார். இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா? என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 6, 2025
- 06:40 am IST
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..
Tiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத் தூணில் விளக்கை ஏற்ற முயன்றபோது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழக அரசு பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 5, 2025
- 08:28 am IST
தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள்.. பைஜயந்த் ஜெய் பாண்டா பேட்டி!
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பைஜயந்த் ஜெய் பாண்டா இன்று அதாவது 2025 நவம்பர் 28ம் தேதி 2025-26 காலத்திற்கான பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், “தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக, மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 28, 2025
- 22:16 pm IST
“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். இதில், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணைந்தனர். அதோடு, அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் அவருடன் தவெகவில் இணைந்தார். அவர்களுக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 27, 2025
- 15:34 pm IST
எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..
Tamilisai Soundararajan: தமிழ்நாடு முதலமைச்சர் கோவையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றாலே அது ‘பொய் ஒப்பந்தம்’ என்று சொல்லலாம். முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி தான் திமுக அரசு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 26, 2025
- 06:40 am IST
நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, பாஜக மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 25, 2025
- 14:24 pm IST
பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
BJP Annamalai: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கடும் எதிர்ப்பையும் மீறி நடந்து வரும் இப்பணிகளுக்கு, தங்களுக்கு அதிக பணிசுமை தரப்படுவதாக பல்வேறு மாநிலங்களிலும் பிஎல்ஓக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 22, 2025
- 07:32 am IST
ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..
South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 20:26 pm IST
கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த 5 சிறுவர்கள்.. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி..
தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்து உள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 20:32 pm IST
எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்
ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 8, 2025
- 06:40 am IST
“SIR” குறித்து உதயநிதிக்கே சரியாகத் தெரியவில்லை: விளாசிய தமிழிசை செளந்தரராஜன்!
Tamilisai soundararajan explains about SIR: சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, SIR குறித்து திமுக பயப்பட வேண்டியது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 2, 2025
- 19:18 pm IST
ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..
Annamalai: அண்ணாமலையில் எக்ஸ் வலைத்தள பதிவில்,” திமுக அரசின் கீழ் நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடமிருந்து உடனடி பொறுப்புக்கூறலைக் கோருகிறது. நீதித்துறையால் கண்காணிக்கப்படும் ஒரு முழுமையான சிபிஐ விசாரணை மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 29, 2025
- 15:24 pm IST
2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
Nainar Nagendran: அரியலூர் மாவட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 26, 2025
- 06:40 am IST