AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

கோவையில் ஆய்வு மேற்கொண்ட பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்!

தவெக ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 1.2 கிமீ மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்… முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த வார்த்தை.. ஏன் இந்த திடீர் மாற்றம்!

CM Vijay Letter To Pm Modi: நெய்வேலி என்எல்சி பங்குகள் விற்பனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எழுதிய கடிதத்தில் இந்திய அரசு என 7 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்த மாற்றம் என கேள்வியெழுந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் பலி.. “முதல்வர் விஜய் நேரில் செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது”.. நயினார் நாகேந்திரன் சாடல்!!

தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகப் புகாரளித்துள்ள நயினார் நாகேந்திரன், அதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த சில அதிர்ச்சித் தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23, 2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை.. கட்சி அலுவலகத்தில் நீக்கப்படாத புகைப்படம்.. கிளம்பிய சர்ச்சை!!

இந்நிலையில், அவர் கட்சியை விட்டு வெளியேறி 2 வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், கோவை மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அண்ணாமலையின் புகைப்படம் இன்னும் காட்சியளிக்கிறது. கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஒரு முன்னாள் தலைவரின் புகைப்படம், கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்து நீடிப்பது தொண்டர்கள் மத்தியில் குழந்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Sekaran S
  • Updated on: Jun 24, 2026
  • 14:29 pm IST

தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!

Bjp Leader Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைப்பதற்காக எந்தெந்த கட்சிகளுடன் தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான பட்டியலை வெளியிடவா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Nainar Nagendran Condemned: திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் தீப எற்றுவதறக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக அரசு மேல் முறையீடு செய்யதாக கூறப்படும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சின் மாநில தலைரர் நயினார் தெரவித்தா்.

பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த பாட்டி வரை பாதுகாப்பில்லை.. ஈரோடு மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு நயினார் கண்டனம்!

Erode Elderly Woman Harassment: ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி இரு போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை என்று தவெக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!

Union Home Minister Amit Shah : மத்திய உள்துறை அமித் ஷா ஜூலை 2- ஆவது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகையின்போது, தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்களி நிகழ போவதாக கூறப்படுகிறது .

பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி கைது.. சட்டம் ஒழுங்கு எங்கே? நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு!

Tiruvarur TVK Offical Arrest : திருவாரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உள்பட இருவர் 22 வயது இளம் பெண்ணிடம் அத்து மீறிய சம்பவத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை நயினார் நாகேந்திரன் சந்தித்தது ஏன்?

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் பாஜக முக்கிய தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முற்றிலும் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற நலம் விசாரிப்பு நிகழ்வு என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் இந்த இரு ஆளுமைகளின் சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெக ஆட்சியில் 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வர் ஜோசப் விஜய் ப்ரோ! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Nainar Nagendran Criticizes CM Vijay: தமிழகத்தில் கடந்த 48 மணி நேர்த்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Nainar Nagendran Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமையை ஆரம்பித்தால் தடுக்காவிட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..

அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளில், விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக விஜயதரணி களம் இறக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் சுமார் 45,600-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற போதிலும், இறுதியில் தோல்வியைத் தழுவினார்.

அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..

சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. சிடி நிர்மல் குமார் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய முடிவு அல்ல. இது நீதிமன்றத்தின் முடிவு. இந்துக்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.