Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..

Nainar Nagendran Condemns DMK: 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் சம்பவம் – பாஜக சார்பில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Karur Stampede : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இதுகுறித்து விசாரிக்க பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு.. 20 நிமிடம் நடந்த மிட்டீங்.. என்ன மேட்டர்?

TTV Dhinakaran O Paneerselvam Meet : சென்னையில் நடந்த திருமண விழாவில் அமமு பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்த இருவரும் அருகருகே அமர்ந்து, நலம் விசாரித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது இருவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

திடீரென சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்!

Nainar Nagendran Meets CV Shanmugam : சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

’இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!

TTV Dhinakaran On NDA Alliance : தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய தேவையில்லை என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்? உள்ளே வந்த ரஜினி.. அண்ணாமலை பளீச்!

TTV Dhinakaran Annamalai Meet : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Nainar Nagendran - JP Nadda: டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ அக்டோபர் மாதம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பங்கேற்க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் – அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?

Annamalai Meets TTV Dhinakaran : சென்னையில் அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்திற்கு சென்றே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாக தெரிகிறது.

எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன? – தமிழிசை சௌந்தராஜன்

Tamilisai Soundarajan: கமல் ஹாசன் குறித்து பேசிய தமிழிசை சௌந்தராஜன், “ நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்து எம்.பி ஆகிவிட்டார். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களின் நிலை என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

Edappadi Palaniswami - Nainar Nagendran Meet : சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடந்துள்ளது.

இபிஎஸ்ஸை ஏளனம் செய்யும் திமுக.. குற்றச்சாட்டை அடுக்கிய நயினார்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தினம் தினம் தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

‘இனி முகமூடியார் பழனிசாமி என அழைக்கனும்’ டிடிவி தினகரன் விமர்சனம்!

TTV Dhinakaran : மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன எனவும், இனி பழனிசாமியை முகமூடி பழனிச்சாமி என அழைக்க வேண்டும் எனவும் அமமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். எப்போதும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

களத்தில் இறங்கும் நயினார் நாகேந்திரன்.. அக். முதல் வாரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம்..

BJP Nainar Nagendran: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவிருக்கும் 2025 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மூன்று தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

Annamalai Pressmeet: சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள்.. மருத்துவ முகாமை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன." என்றார்.