Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த 5 சிறுவர்கள்.. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி..

தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்து உள்ளனர்.

எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

“SIR” குறித்து உதயநிதிக்கே சரியாகத் தெரியவில்லை: விளாசிய தமிழிசை செளந்தரராஜன்!

Tamilisai soundararajan explains about SIR: சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, SIR குறித்து திமுக பயப்பட வேண்டியது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..

Annamalai: அண்ணாமலையில் எக்ஸ் வலைத்தள பதிவில்,” திமுக அரசின் கீழ் நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடமிருந்து உடனடி பொறுப்புக்கூறலைக் கோருகிறது. நீதித்துறையால் கண்காணிக்கப்படும் ஒரு முழுமையான சிபிஐ விசாரணை மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

Nainar Nagendran: அரியலூர் மாவட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..

Annamalai: ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..

Nainar Nagendran On Madurai: பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான மர்மம் எப்போது விலகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

தமிழகத்தில் வாழ்கின்ற முன்னேறிய வகுப்பை சார்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிக்காத 70 சாதிகள் இருக்கிறார்கள். முன்னேறிய வகுப்பு என்றால் ஒன்றோ, இரண்டோ மட்டுமே இங்கு கண்களுக்கு தெரிகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் முதற்கொண்டு 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பலனை அனுபவிக்காமல் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை. இதை சுட்டிகாட்டி பேசும்போது அவை தலைவர் வேறு ஒன்றை பேசுகிறார். இதற்கான பதில் தமிழ்நாடு அரசிடம் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..

Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டும் – அண்ணாமலை பேச்சு

2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் நயினார் இன்று முதல் பரப்புரையை தொடங்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டுமென தெரிவித்தார்

நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நிறைய மாறியுள்ளது.. லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை..

Annamalai on DMK: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ போடுவது என மாறி உள்ளது. 2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கட்டிலில் அமர வைக்க மோடி முடிவெடுத்து அமித்ஷா அறிவித்து விட்டார்கள்” என பேசியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..

Nainar Nagendran: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ 2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது” என பேசியுள்ளார்.

தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்

Thirumavalavan On AIADMK Alliance : அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி தான் என்றும் அப்படி கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்சி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுக – தவெக கூட்டணி? பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்.. புயலை கிளப்பும் தினகரன்!

AIADMK - TVK Alliance : அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்றும் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி விஜய் தலைமையை ஏற்க தயாராகிவிட்டாரா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.