Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

ஜன.5ல் 2,000 பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’.. அமித் ஷா பங்கேற்கிறார்..

'Modi Pongal' celebration: தமிழகத்தில் பாஜக பெரிய அளவிலான அரசியல் நிகழ்சிக்கக்காக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜனவரி 5ஆம் தேதி “மோடி பொங்கல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!

Union Minister Amit Shah To Visit Tamil Nadu: மத்திய உள்துறை அமித் ஷா வரும் ஜனவரி 4- ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் .

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

AIADMK district secretaries meet: திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் தற்போது வரை வாய்திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

வாக்குறுதியை நிறைவேற்றியதா திமுக..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்துவரி, மின்கட்டண வரியை உயர்த்த மாட்டோம் என சொன்னார்கள். ஆனால், மின்சாரத்தை தொட்டால் அல்ல, மாறாக மின்கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அந்தவளவிற்கு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. படிப்படியாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்போம் என்று சொல்லி மதுவானது இலக்கு வைத்து விற்கப்படுகிறது” என்றார்.

பெரும்பான்மையினரின் உரிமைகளும் முக்கியம்.. தமிழக அரசை சாடிய வினோஜ் பி செல்வம்!

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டிசம்பர் 25ஆம் தேதி பதிவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பெரும்பான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். சிறுபான்மையினர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் போதிக்க வேண்டாம். மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசாங்கம் மதம் பாராமல் ஒவ்வொரு தனிநபருடனும் ஒரு இந்தியராக நிற்கிறது” என்று தெரிவித்தார். 

அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை.. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க இபிஎஸ் ஒப்புதல்?

AIADMK-BJP discussion: பாமக உள்ளிட்ட பிற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, திமுகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்காக பழைய கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது

மதச்சார்பின்மையில் முரண்பாடு.. திமுகவிற்கு எதிராக சரத்குமார் கருத்து!

திமுகவை விமர்சித்த சரத்குமார், ”கிறிஸ்துமஸ் கொண்டாடியும், தீபாவளி மற்றும் பிற இந்து பண்டிகைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தும், மதச்சார்பின்மை பற்றிப் பேசுவது முரண்பாடாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விரும்பும் பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினையில் ஒரு நேர்மறையான தீர்வு காணப்படும்”என்று தெரிவித்தார். 

அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி..!

மத்திய அமைச்சரும், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். இந்தப் பதவி நியமனத்திற்குப் பிறகு கோயல் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ”நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். 2026 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், நமது அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது குறித்தும் மிக நல்ல விவாதங்களை நடத்தினோம்.” என்றார். 

விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்

TVK Vijay: பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் குறித்தான பேச்சின் போது அவர் ஒரு ஸ்பாயிலர் என பியூஶ் கோயல் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..

ADMK BJP: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை பெரிதளவில் அதிகரித்து, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

BJP Meet: பாஜக மையக்குழு கூட்டத்தில், தமிழக பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன, எந்தெந்த தொகுதிகள் வலுவாக உள்ளன, எந்தெந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளன, பலவீனமான தொகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதுடன், அதிமுகவுடன் நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? வானதி சீனிவாசன் கேள்வி!!

Did cm mkstalin participate in Thaipusam festival: கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரை பாராட்டுவதாகக் கூறிய அவர், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளில் முதலமைச்சர் பங்கேற்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். குறைந்தபட்சம் வாழ்த்து கூட தெரிவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 18ம் அதேதி மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்ற இளைஞர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. சென்னையில் இன்று நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்..

BJP High Level Meet: சென்னையில் இன்று பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த உயர்மட்ட குழு கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

PM Modi To Visit Tamil Nadu In January 2026 | 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு வர உள்ளார்.