AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

Bharatiya Janata Party (BJP) – Tamil Nadu

பாரதிய ஜனதா கட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி பல்வேறு தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அசைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் தொடர்ச்சியாக 3வது முறை பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த 11 ஆண்டுகளில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை காட்டும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் கட்சியாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பேர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த தொகுப்பில் தமிழக பாஜக தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?

தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

அமித்ஷா கூட்டத்தில் அத்துமீறி பறந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு அதிகாரிகள்.. காரைக்காலில் பரபரப்பு!!

Drone flies over Amit Shahs rally: மத்திய அமைச்சர் அமித்ஷா சரியாக பகல் 12.30 மணியளவில் பேச ஆரம்பித்தார். அவர் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில், பொதுக்கூட்ட மேடை அருகே 50 மீட்டர் தொலைவில் யாரும் எதிர் பாராதவிதமாக ‘டிரோன்’ ஒன்று அத்துமீறி வட்டமடித்தபடி பறந்தது.

தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..

Amit Shah speech in karaikal: காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய்திறக்க மாட்டார்கள். மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது.

நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!

TVK Condemn Nainar Nagendran : தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது .

பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!

BJPs innovative campaign: பாஜக கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சமூக ஊடகப்பிரிவு என்று பெயரில் திருச்சி மாநகரில் முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் எந்த வாசகமும் இன்றி 6 வித்தியாசமான கியூஆர் கோடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை..2 நாள்கள் விசிட்…பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேர்வு?

Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, பாஜக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

விசில் சத்தத்திற்கு பயப்படுகிறது திமுக.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

சிவகங்கையில் தூய்மைப்பணியாளர்கள் இனிமேல் இந்த வார்டில் விசில் ஊதக்கூடாது என கூறிய தி.மு.க கவுன்சிலர் கூறியது தொடர்பாக பேசிய முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “விசில் சத்தத்திற்கு கூட பயப்படுகிற அளவுக்குதான் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை, இதனால்தான் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!

BJP holding talks with dmdk: தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?

NDA Alliance Conference: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சிகளிம் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை காணப்பட்டது. இந்த ஒற்றுமை வருகிற சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெருவதற்கு முன்னுதாரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகள் நம்பிக்கை இழந்து வருகின்றன…தமிழிசை செளந்தர ராஜன் தாக்கு!

Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகள் நம்பிக்கை இழுந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் .

வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறை.. திமுக தலைவர்களே தூண்டுகோல்.. நயினார் நாகேந்திரன் ஆதங்கம்!

Nayinar Nagendran alleges DMK leaders: பொது வெளியில் வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் இழிவாகப் பேசுவதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

Nainar Nagendran criticize vijay: விஜய் காட்டமாக அதிமுகவை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அவர், இன்னும் விசிலை வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!

Prime Minister Narendra Modi: தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்காக இரு நாள்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Minister PK Sekarbabu Pressmeet: வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் மீண்டும் முதல் அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகினார் அண்ணாமலை..

Annamalai: தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விளக்கமளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.