பொங்கல் பண்டிகை
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகையாகும். தமிழ் மாதமான தை மாதம் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு, குறிப்பாக சூரியன், மழை, மண், மாடுகள் ஆகியவற்றிற்கு நன்றி கூறும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. தை மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் 4 நாட்கள் இந்த பொங்கல் விழா நடைபெறும். முதல் நாளான போகி, பழையவற்றை அகற்றி, புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக இருக்கிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம். அடுத்த நாள்தான் பெரும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி செலுத்தி, புதுப்பானையில் பொங்கல் சமைக்கும் முக்கிய நாளாகும். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் உதவும் மாடுகளை போற்றி வழிபடும் நாளாக உள்ளது. கடைசி பொங்கலானது, காணும் பொங்கலாகும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழும் நாளாக கொண்டாடப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!
Pongal Gift Set: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு விநியோகிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை சுமார் 6 லட்சம் பேர் பெற வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Feb 1, 2026
- 17:51 pm IST
ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!
Jallikattu Competitions: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் உள்ள சில விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துபவர்கள் மற்றும் மாடு பிடி விீரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அது என்ன தளர்வுகள் என்பதை பார்க்கலாம்.
- Gowtham Kannan
- Updated on: Jan 24, 2026
- 06:30 am IST
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா?.. மீண்டும் ஒரு சான்ஸ்.. இன்னைக்கே ரேஷன் கடைக்கு போங்க!
Pongal Gift Distribution Resumes Today | தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசை பெறாதவர்களுக்கு அரசு மேலும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு பரிசை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jan 19, 2026
- 08:11 am IST
முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..
Chennai Traffic Congestion: பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால், சென்னை – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 19, 2026
- 07:50 am IST
திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..
massive crowd at Tirupati: அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க தரிசன வரிசைகளில் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 18, 2026
- 08:31 am IST
காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 17ம் தேதி மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குதிரைகள் மற்றும் மாட்டு வண்டிகள் பங்கேற்ற 46வது ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
- Mukesh Kannan
- Updated on: Jan 17, 2026
- 21:16 pm IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி!
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வின்போது குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் இந்த வீர விளையாட்டின்போது அவசரகாலக் குழுக்கள் உஷார் நிலையில் இருந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
- Mukesh Kannan
- Updated on: Jan 17, 2026
- 20:50 pm IST
தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!
Madhavaram & Manali lakes boat ride: புதிதாகத் திறக்கப்பட்ட மாதவரம் மற்றும் மணலி ஏரிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். கடந்த 2 நாட்களை விட இன்றைய தினம் அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றப்படி இரண்டு ஏரிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 17, 2026
- 12:30 pm IST
பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கம், சிறப்பு பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா?.. ஸ்பெஷல் அறிவிப்பு!!
Rs3000 Pongal cash at ration shop: இந்த பொங்கல் ரொக்கத்தொகை மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களில் எந்த தேதியில் அவர்கள் பொங்கல் பரிசை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 17, 2026
- 11:18 am IST
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..
Traffic Diversion: காணும் பொங்கல் நாளில், பொதுமக்கள் மாட்டுப் பொங்கலை முடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். குறிப்பாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், காணும் பொங்கல் முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 17, 2026
- 06:53 am IST
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்..!
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
- Mukesh Kannan
- Updated on: Jan 16, 2026
- 21:49 pm IST
Kaanum Pongal: காணும் பொங்கலுக்கு குடும்பத்துடன் சுற்றுலா விசிட்.. சென்னையை சுற்றி சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள்!
Top 5 Places To Visit Near Chennai: காணும் பொங்கலின் முக்கிய நோக்கம் சமூக பிணைப்பு ஆகும். இது வெவ்வேறு வயதினரிடையேயும் இடங்களிலும் குடும்ப உறவுகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இந்தநிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் குடும்பத்துடன் சுற்றி பார்க்கக்கூடிய இடங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
- Mukesh Kannan
- Updated on: Jan 16, 2026
- 19:18 pm IST
பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறி பாயும் காளைகள், அடக்கும் வீரர்கள்.. முன்னிலை நிலவரம்!!
2026 Madurai Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது, 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, காலை 9 மணிக்கு தொடங்கியது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 16, 2026
- 13:10 pm IST
சென்னை செல்வோர் கவனத்துக்கு…நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்…நாளை முன்பதிவு தொடக்கம்!
Nagercoil To Tambaram Special Train: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொது மக்களுக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஜனவரி 18- ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை ஜனவரி 17- ஆம் தேதி தொடங்க உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Jan 16, 2026
- 13:04 pm IST
மாட்டு பொங்கல் கொண்டாட்டம்.. உணவளித்து வழிபாடு!
தை 1ம் தேதி உலகத்தமிழர்களால் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கையை வழிபடுவதே தைப்பொங்கலில் நோக்கம். குறிப்பாக சூரியனை வழிபட்டு பொங்கல் படைப்பார்கள், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்து நன்றி சொல்லப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகாலை முதலே மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது
- C Murugadoss
- Updated on: Jan 16, 2026
- 12:12 pm IST