Tamil Nadu News Live Updates: விஜய்யுடன் கூட்டணியா? – இபிஎஸ் சொன்ன பதில்
Tamil Nadu Breaking news Today 18 July 2025, Live Updates: 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் வேகமாக சென்று கொண்டிருக்க தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LIVE NEWS & UPDATES
-
Edappadi Palanisamy: தவெக உடன் கூட்டணியா? – எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் உத்திகளை இப்போது வெளியில் சொல்ல முடியாது என அவர் பதிலளித்துள்ளார்.
-
ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை .. பள்ளியை சூறையாடிய மக்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் 10ம் வகுப்பு மாணவன் கவின் குமார் உடற்கல்வி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளியின் இரண்டு பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் படிக்க
-
Tirunelveli: இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு கொடுக்காததால் சிறுவன் மீது தாக்குதல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு கொடுக்காததால் சிறுவனை மூன்று இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க
-
Tamilnadu Day: தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. முதலமைச்சர் நெகிழ்ச்சி பதிவு
ஜூலை 18ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 18, 1967: திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்” என நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் வார்டுகள் விவரம்!
தேனாம்பேட்டை மண்டலத்தில், சூசைபுரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர் தேவாலய வளாகம்
.வளசரவாக்கம் மண்டலத்தில், மதுரவாயல் பகுதியிலுள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி திருமண மண்டபம் முகாம்
ஆலந்தூர் மண்டலத்தில், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சனில் உள்ள சமூக நலக் கூடம் -
Ungaludan Stalin : முதல் 3 வார்டுகள் என்னென்ன?
மணலி மண்டலத்தில், மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறும்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஆர்.வி. நகர் குருமூர்த்தி பள்ளியில் முகாம் நடைபெறும்.
திருவிக்க நகர் மண்டலத்தில், சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் நடக்கவுள்ளது.
-
சென்னையில் உங்களுடன் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சியில் இன்று 2025 ஜூலை 18 திட்டம் முகாம் 6 வார்டுகளில் நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் உங்களது அடிப்படை ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
-
பயணிகள் ரயில்கள் சேவையில் தற்காலிக மாற்றம்
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் காரணமாக, அந்த நாளில் இயங்க வேண்டிய சில மின்சார விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு, ஈரோடு நோக்கிச் செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Train Updates : ஜோலார்பேட்டையில் ரயில் ரத்து
பராமரிப்பு பணிக்காக ஜோலார்பேட்டையில் நாளை ஜூலை 19 அன்று சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. பெங்களூரு மற்றும் ஈரோடு நோக்கி செல்லும் ரயில்கள் சோமநாயக்கன்பட்டி மற்றும் திருப்பத்தூரில் நிறுத்தப்படுகிறது. பயணிகள் முன்னே ஏற்பாடு செய்து பயணிக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது
-
முன்பு கோவை.. இப்போது ஈரோடு
தமிழகத்தின் மாவட்ட அளவில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சுஜாதா தொடங்கி வைத்தார்.
-
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம்
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
-
எந்தெந்த ரயில்களில் இந்த வசதி தெரியுமா?
அதன்படி, மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631), திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் (20632), சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627), நாகர்கோவில் – சென்னை எழும்பூர் (20628), கோயம்புத்தூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்ட்ரல் – மட்காவ் (20646), மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்ட்ரல் – விஜயவாடா (20677) ஆகிய ரயில்களில் இந்த புக்கிங் செய்து கொள்ள முடியும்
-
8 வந்தே பாரத் விரைவு ரயில்களில் அமல்
இந்த புக்கிங் வசதி தற்போது 8 வந்தேபாரத் விரைவு ரயில்களில் அமலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், திடீர் பயணத் தேவைகளுக்கும், பயணிகள் நேரத்தை வீணாக்காமல் பயணம் செய்யவும் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
-
Vande Bharat Train Booking : வந்தே பாரத் புது அப்டேட்
Southern Railway புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம் (Introducing the ‘last minute booking’ feature) செய்யப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பும் பயணிகள் டிக்கெட்டை பதிவு செய்யலாம்.
-
கனமழை இருக்கலாம் – வெதர்மேன் கணிப்பு
அடுத்து வரும் சில நாட்களுக்கு காஞ்சிபுரம் ,திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
Chennai Rains : சென்னை வானிலை நிலவரம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரப்படி, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
Tamil Nadu Weather : இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா?
தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை (Rain Update) பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் மழையின் தாக்கம் இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் 12 மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, வானிலை நிலவரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் நிலவி வருகிறது. கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டியும், மதிமுகவில் உட்கட்சி பிரச்னையும் நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. எனவே, தேர்தல் களம் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டு, அவர் சாலையில் நடந்து சென்றதாக கூறப்படும் சம்பவமும், அதன்பிறகு உயர் அதிகாரிகள் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தமிழக்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் மற்றும் இன்றைய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Published On - Jul 18,2025 7:00 AM