AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வந்தே பாரத் ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம்

Southern Railway: வந்தேபாரத் ரெயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது 8 முக்கிய ரெயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. திடீர் பயணத் திட்டங்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இத்திட்டம், திடீர் பயணத் தேவைகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது.

வந்தே பாரத் ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம்
வந்தே பாரத் ரெயில்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 18 Jul 2025 06:42 AM IST

தமிழ்நாடு ஜூலை 18: தெற்கு ரெயில்வே (Southern Railway) புதிய முயற்சியாக, வந்தேபாரத் ரெயில்களில் (Vande Bharat trains)  ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம் (Introducing the ‘last minute booking’ feature) செய்யப்பட்டுள்ளது. ரெயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பும் பயணிகள் டிக்கெட்டை பதிவு செய்யலாம். இந்த வசதி தற்போது 8 வந்தேபாரத் விரைவு ரெயில்களில் அமலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், திடீர் பயணத் தேவைகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. பயணிகள் நேரத்தை வீணாக்காமல் பயணம் செய்ய வழிவகுக்கும். இந்த நடைமுறை பயணிகள் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே (Southern Railway) என்பது இந்திய ரெயில்வேயின் ஆறு மண்டலங்களில் ஒன்றாகும்.

பயணிகள் சேவையை மேம்படுத்தும் வகையில், புதிய முயற்சி

தெற்கு ரெயில்வே பயணிகள் சேவையை மேம்படுத்தும் வகையில், புதிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சில வந்தே பாரத் விரைவு ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ (Current Reservation) எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ரெயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பே கூட பயணிகள் டிக்கெட்டை பதிவு செய்து பயணிக்கச் செய்யும் வகையில் அமையப்பட்டுள்ளது.

8 முக்கிய வந்தே பாரத் ரெயில்களில் அமல்

தற்போது இந்த வசதி, 8 முக்கிய வந்தே பாரத் ரெயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை: மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631), திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் (20632), சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627), நாகர்கோவில் – சென்னை எழும்பூர் (20628), கோயம்புத்தூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்ட்ரல் – மட்காவ் (20646), மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்ட்ரல் – விஜயவாடா (20677) ஆகியவை ஆகும்.

Also Read: சாதி ரீதியில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு… சென்னை ஐகோர்ட் உத்தரவு

மங்களூரு சென்டிரல் – திருவனந்தபுரம் சென்டிரல் (20631)

திருவனந்தபுரம் சென்டிரல் – மங்களூரு சென்டிரல் (20632)

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627)

நாகர்கோவில் – சென்னை எழும்பூர் (20628)

கோயம்புத்தூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் (20642)

மங்களூரு சென்டிரல் – மட்காவ் (20646)

மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் (20671)

சென்னை சென்டிரல் – விஜயவாடா (20677)

வந்தே பாரத் ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம்

இந்த புதிய நடவடிக்கை, கடைசி நேரத்தில் பயணத் திட்டங்களை ஏற்படுத்தும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, விரைவு பயணத் தேவைகளுக்கு ஏற்ப, நேரத்தை வீணாக்காமல் பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்க இந்த வசதி உதவுகின்றது. இது தெற்கு ரெயில்வே பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது.

தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே (Southern Railway) என்பது இந்திய ரெயில்வேயின் ஆறு மண்டலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் மற்றும் பழமையான ரெயில்வே மண்டலமாகும். 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, மட்ராஸ் மற்றும் தெற்கு மகாராட்டா ரெயில்வே, தெற்கு இந்திய ரெயில்வே மற்றும் மட்ராஸ் ரெயில்வே ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக இது உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னை எழும்பூர் ரெயில்வே நிலையத்தில் அமைந்துள்ளது.

Follow Us