30 ஆண்டுகள் தொடர்ந்து பிஎஃப் செலுத்தினால், இறுதியில் எவ்வளவு பணம் கிடைக்கும்?
ஒரு ஊழியரின் மாத அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 ஆக இருந்து, அவர் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இபிஎஃப் திட்டத்தில் பங்களிப்பு செய்தால், ஓய்வுபெறும் நேரத்தில் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். தற்போதைய ஆண்டு வட்டி விகிதமான 8.25 சதவிகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
மாத வருமானம் பெறும் தனிநபர்களுக்கு மிகவும் நம்பகமான ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஒரு ஊழியரின் மாத அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 ஆக இருந்து, அவர் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இபிஎஃப் திட்டத்தில் பங்களிப்பு செய்தால், ஓய்வுபெறும் நேரத்தில் அவரது பிஎஃப் நிதி ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும். தற்போதைய ஆண்டு வட்டி விகிதமான 8.25 சதவிகிதத்தின் அடிப்படையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியரின் கணக்கில் சுமார் ரூ.1.12 கோடி சேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை உருவாவதற்கான முக்கிய காரணம் காம்பவுண்ட் வட்டி ஆகும். இது காலப்போக்கில் முதலீட்டின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்
இபிஎஃப் பணம் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது?
இபிஎஃப் விதிகளின்படி, ஒரு ஊழியர் தனது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவிகிதத்தை ஒவ்வொரு மாதமும் இபிஎஃப் கணக்கில் பங்களிப்பாகச் செலுத்துகிறார். அதே அளவு தொகையை நாம் பணியாற்றும் நிறுவனமும் செலுத்தும். இருப்பினும், நிறுவனம் செலுத்தும் முழுத் தொகையும் இபிஎஃப் சேமிப்பு திட்டத்துக்கு செல்வதில்லை. அதில் ஒரு பகுதி ‘ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது, மீதமுள்ள பகுதி இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்தொகை ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியுடன் சேர்ந்து வளர்கிறது.
இதையும் படிக்க : தமிழ்நாடு எதிர்காலம் என்ன: பட்ஜெட் 2026-ன் மாஸ் பிளான்!




30 ஆண்டுகளில் ரூ.1.12 கோடி நிதி எவ்வாறு உருவாகும்?
முழு காலக்கட்டத்திலும் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 ஆக இருந்து, அவர் 30 ஆண்டுகளுக்குத் தடையின்றி இபிஎஃப் திட்டத்தில் பணம் செலுத்தி வந்தால், ஊழியர் மற்றும் பணியாளர் ஆகியோரின் மொத்தப் பங்களிப்பு சுமார் ரூ.33.26 லட்சமாக இருக்கும். அதே வேளையில், இக்காலக்கட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகை சுமார் ரூ.78.49 லட்சத்தை எட்டக்கூடும். இதன் விளைவாக, ஓய்வுபெறும் நேரத்தில் ஊழியரிடம் சுமார் ரூ.1.12 கோடி அளவிலான மொத்த பிஎஃப் நிதி சேர்ந்திருக்கும்.
நீண்ட கால அடிப்படையில், வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ஆரம்ப முதலீட்டுத் தொகையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. பிஎஃப் திட்டத்தின் மிகப்பெரிய பலம் அதன் கூட்டு வட்டி வசதியாகும். ஆரம்ப ஆண்டுகளில் சேமிப்புத் தொகை மெதுவாகவே வளரும். ஆனால் கணக்கில் உள்ள இருப்புத் தொகை அதிகரிக்கத் தொடங்கும்போது, அதன் மீதான வட்டியும் வேகமாக உயரத் தொடங்குகிறது. இதனால்தான், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்திற்குள் கணிசமான தொகையைச் சேர்த்துவிடுகிறார்கள். இடையில் PF தொகையை எடுக்காமல் தொடர்ந்து பங்களிப்பு செய்துவந்தால், இறுதியில் கிடைக்கும் தொகை மிக அதிகமாக இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இருப்பினும், ரூ.1.12 கோடி என்ற இந்த மதிப்பீடு என்பது, ஊதிய உயர்வு, இபிஎஃப்ஓ அறிவிக்கும் வருடாந்திர வட்டி விகிதம், பணிபுரிந்த காலம் மற்றும் பங்களிப்பு செலுத்துதலின் சீரான தன்மை போன்ற காரணிகளைச் சார்ந்திருக்கும். காலப்போக்கில் அடிப்படை ஊதியம் உயர்ந்தாலோ அல்லது ஊழியர் மூலம் கூடுதல் முதலீடுகளைச் செய்தாலோ, ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் தொகை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இபிஎஃப் என்பது வெறும் கட்டாயச் சேமிப்புத் திட்டம் மட்டுமல்லாமல், வலுவான ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கான ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியாகவும் விளங்குகிறது.