முதல்வர் விஜய் திருச்சி வருகை – ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மே 31, 2026 நாளை திருச்சிக்கு வரவுள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி, மே 31 : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மே 31, 2026 நாளை திருச்சிக்கு வரவுள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய் மே 31, 2026 அன்று திருச்சி வரவிருக்கிறார்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதல்வர் விஜய் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார்.இந்த நிகழ்ச்சி திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் மே 31, 2026 மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது.