AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர் – அசாம் காவல்துறை பாராட்டு

மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷிடம் அசாம் மாநிலத்தில் இணையதளங்களில் பரவி வரும் பெண்களுக்கு எதிரான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க அம்மாநில காவல்துறை உதவி கோரியது. இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.

இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர் – அசாம் காவல்துறை பாராட்டு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Aug 2026 07:17 AM IST

திருவாரூர், ஆகஸ்ட் 11 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷ், ஷெட்பீக் என்ற பெயரில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சைபர் கிரைம் கிரைசஸ் ரெஸ்பான்ஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் இணையதளங்களில் பரவும் பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் படங்கள், அவதூறு கருத்துகள் போன்ற குற்றங்களை கண்டறிந்து நீக்கி வருகிறார்.

இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர்

இந்த நிலையில் பிரகதீஷிடம் அசாம் மாநிலத்தில் இணையதளங்களில் பரவி வரும் பெண்களுக்கு எதிரான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க அம்மாநில காவல்துறை உதவி கோரியது. இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து 200க்கும் மேற்பட்ட கண்டென்ட்களை நீக்கியுள்ளனர். இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினரை அம்மாநில சைபர் கிரைம் காவல்துறை அதிகாரி எஸ்பிசி.ஆர்.சிங் பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : லஞ்ச புகாரில் கட்சியிலிருந்து நீக்கம்.. செங்கல்பட்டில் கணவரின் பதவி மனைவிக்கு அளிப்பு.. தவெகவில் வெடித்த சர்ச்சை!

அவரது கடிதத்தில், இணை​யதளங்களில் பரவிய 200க்​கும் மேற்​பட்ட பதிவுகளை அகற்​றி​யுள்ள உங்​களது குறிப்​பிடத்​தக்க சாதனையை நாங்​கள் அங்​கீகரித்து பாராட்​டு​கிறோம். உங்​களது நடவடிக்​கைகள், எண்​ணற்ற பெண்​களின் கண்​ணி​யம், தனி​யுரிமை மற்​றும் பாது​காப்பை காப்​ப​தில் முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளன. மேலும், சமூகத்​தில் ஏற்​படக்​கூடிய தொடர்ச்​சி​யான பாதிப்​பு​களை​யும் தடுக்க உதவி​யுள்​ளன.

இணை​யக் குற்​றங்​களும், ஆன்​லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதி​கரித்து வரும் இக்​கால​கட்​டத்​தில் உங்​களின் இந்த செயல் தைரி​யம், பொறுப்​புணர்வு மற்​றும் மனித நே​யத்​தின் சிறந்த முன்​னு​தா​ரணம் ஆகும். பெண்​களுக்​கும், குழந்​தைகளுக்​கும் அவர்​களது பிரைவசியை காப்பாற்றி, மரி​யாதை​யான டிஜிட்​டல் சூழலை உரு​வாக்​கும் எங்​களது முயற்​சிக்கு தாங்​கள் வழங்கி வரும் ஆதரவை அசாம் காவல்​துறை பெரிதும் மதிக்​கிறது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்? கடலின் அழகை ரசிக்க ஏற்பாடு.. அதிகாரிகள் தீவிர ஆய்வு!

இந்த பணி​யில் நீங்​கள் தொடர்ந்து வெற்றி பெற எங்​களது வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். உங்​களுக்கு எங்​களது தொடர்ச்​சி​யான ஆதரவு எப்​போதும் உண்​டு. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக பிரகதீஷ் கூறும்​போது, டிஜிட்​டல் குற்​றங்​களை பொருத்​தவரை விரை​வாக செயல்​பட்​டால்​தான் குற்​றத்தை முற்​றி​லும் தடுப்​பதுடன், இணை​யத்​திலிருந்து அகற்றி பாதிப்​பு​களை குறைத்​து, விரை​வாக தீர்வு காண​முடி​யும். அந்​தப் பணி​யை​தான் செய்​கிறோம் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இணை​யத்​தில் அத்​து​மீறி பரவிய பெண்​கள் தொடர்​பான ஆபாச வீடியோ புகைப்​படங்​கள் மற்றும் அவதூறு போன்ற சைபர் குற்​றங்​களை கண்​டறிந்து அவற்றை நீக்​கிய தற்​காக மன்​னார்​குடியைச் சேர்ந்த மென்​பொறி​யாளர் நடத்திவரும் அமைப்​புக்கு அசாம் மாநில காவல் துறை பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

Follow Us