எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. இங்கேயும் சோதனை பண்ணுங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றிய அண்ணாமலை!
Annamalai About Anti Corruption Raid: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடை இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து, மேலும் சில சோதனைகளை நடத்த வேண்டும் என்றார் அண்ணாமலை.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் திமுக அமைச்சர் எ. வ. வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக வெற்றிக் கழக அரசின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 25) சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் எழுந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்படுவதையும், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள் – நயினார் நாகேந்திரன் கேள்வி..




பல்வேறு மோசடிகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும்
இந்த சூழ்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த பின்வரும் முறைகேடுகள் குறித்தும் தவெக அரசு கவனம் செலுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதில்,
- பிஜிஆர் எனர்ஜி (BGR Energy) முறைகேடு – விதிகளை மீறி ஒப்பந்தத்தை மீண்டும் வழங்குதல் மற்றும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த பிறகு அதை ரத்து செய்தல்.
- சத்துணவு தொகுப்பு முறைகேடு – ஆவின் நிறுவனம் அதனை தயாரிக்க முன் வந்த போதிலும், தனியார் விற்பனையாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டது.
- பொங்கல் வேஷ்டி முறைகேடு – பருத்திக்கு பதிலாக அதிகப்படியான பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழக போக்குவரத்து துறையில் பல முறைகேடுகள் – பிரதிபலிக்கும் பலகைகள் மற்றும் வாகனங்களின் பின்புற குறியீட்டுத் தகடுகள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவை.
- டாஸ்மாக் முறைகேடு – பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடு.
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the… pic.twitter.com/HYsnKLFlfc
— K.Annamalai (@annamalai_k) June 26, 2026
உதயநிதி ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல் நிறுவனமும்
வெகு நாள்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு மர்மத்தை விடுவிப்பதற்கும் தவெக அரசு நேரம் ஒதுக்கும் என்று நம்புகிறேன். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும், ஒரே முகவரியில் செயல்பட்ட விசித்திரமான ஒற்றுமை குறித்தும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்று வந்த உடனேயே நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம். இந்த முதலீடும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?