Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஆவார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர் யுபிஎஸ்சி 2011 ஆம் ஆண்டிற்கான தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியை கர்நாடகா மாநிலத்தில் பணியை தொடங்கினார். அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே பாஜக மாநில தலைவராக உயர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தேசிய பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

Read More

ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..

Annamalai: அண்ணாமலையில் எக்ஸ் வலைத்தள பதிவில்,” திமுக அரசின் கீழ் நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடமிருந்து உடனடி பொறுப்புக்கூறலைக் கோருகிறது. நீதித்துறையால் கண்காணிக்கப்படும் ஒரு முழுமையான சிபிஐ விசாரணை மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மாரி செல்வராஜின் பைசன் படத்தை வாழ்த்திய அண்ணாமலை!

K Annamalai Praises Bison: தமிழில் கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் பைசன். இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க, துருவ் விக்ரம் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இப்படமானது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாழ்த்தி பாஜக நிர்வாகி அண்ணாமலை எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..

Annamalai: ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..

Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டும் – அண்ணாமலை பேச்சு

2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் நயினார் இன்று முதல் பரப்புரையை தொடங்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டுமென தெரிவித்தார்

நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நிறைய மாறியுள்ளது.. லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை..

Annamalai on DMK: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ போடுவது என மாறி உள்ளது. 2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கட்டிலில் அமர வைக்க மோடி முடிவெடுத்து அமித்ஷா அறிவித்து விட்டார்கள்” என பேசியுள்ளார்.

அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..

Admk TVK Alliance: அதிமுக தவெக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியபோது, “ எல்லோருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கின்றன. தமிழக வெற்றி கழகம் ஒரு லைனில் இருக்கிறது; நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம். அது எந்த அளவிற்கு ஒருங்கிணையும் என தெரியவில்லை — பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை – விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை

Karur Stampede : கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், கரூர் செல்ல அனுமதி எதற்கு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியிருப்பது நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்.. அரசை விமர்சித்த அண்ணாமலை

வேலூர் அணைக்கட்டு பகுதியில் ஆற்று வெள்ளத்தால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அடிப்படை வசதிகளான பாலங்கள் இல்லாததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கிராம மக்கள் அரசு உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தையும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்ய பாலம் கட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது – திருமாவளவன் விளக்கம்..

Thirumavalavan: கடந்த சில நாட்களுக்கு முன் திருமாவளவனின் கார் வழக்கறிஞர் வாகனம் மீது மோதியது தொடர்பாக பேசிய அவர், “ வண்டியில் நான் அமர்ந்திருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே வம்பு செய்ய வந்தார். கட்சியைச் சேர்ந்த ஒருவரை தள்ளிப் போகச் சொல்லி வம்பு இழுத்து பேசினார். பின்னர் விசிகவினர் அவரை ஒதுங்கச் சொல்லி ஓங்கி அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதான் நடந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை பெயரில் மிரட்டல்.. பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

Annamalai: கோவையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கோவை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் சாமிநாதனும் ஒருவர். சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் பெற்ற காப்பீட்டுத் தொகை கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை – காரணம் இதுவா?

Karur Stampede : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் விவகாரம்.. உங்களுக்கு ஏன் பதட்டம்? – செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி!

Senthil Balaji vs Annamalai: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையில், அண்ணாமலை அவரைப் பதற்றப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் மீதும் தவறிருக்கிறது – கரூர் கூட்ட நெரிசல் குறித்து அண்ணாமலை!

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து பேசிய அண்ணாமலை, விஜய் மீதும் தவறு இருக்கிறது. அதே நேரத்தில் அரசும் தோற்றுவிட்டது என்றார்.

சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!

TVK Chief Vijay : சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் வாதிகளில் முதலிடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளார். இவருக்கு அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உள்ளனர்.