
அண்ணாமலை - K. Annamalai
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஆவார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர் யுபிஎஸ்சி 2011 ஆம் ஆண்டிற்கான தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியை கர்நாடகா மாநிலத்தில் பணியை தொடங்கினார். அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே பாஜக மாநில தலைவராக உயர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தேசிய பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
Annamalai: பால் பண்ணை.. இயற்கை விவசாயம்.. எதிர்கால முயற்சிகள் குறித்து ஓபனாக பேசிய அண்ணாமலை!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், இயற்கை விவசாய முயற்சிகளுக்காகவும் சில விஷயங்களை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விரைவில் பால் பண்ணை அமைக்க மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 12, 2025
- 15:21 pm IST
சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் என்றால் ஏற்கத்தக்கது அல்ல – விஜயின் பிரச்சாரம் குறித்து அண்ணாமலை கருத்து..
Annamalai On Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13, 2025 முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் வரும் டிசம்பர் 20, 2025 வரை சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 10, 2025
- 11:46 am IST
சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அண்ணாமலை!
Annamalai On New DGP Appointment : தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து திமுக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..
AIADMK District Secretaries Meeting: அதிமுக பொதுச்செயலாளர் கூட்டம் ஆகஸ்ட் 30, 2025 தேதியான இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன் – பரபரப்பு சம்பவம்
Political Controversy: புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன், அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
BJP Annamalai: காதல் திருமணம் செய்ய வேண்டுமா..? பாஜக அலுவலகம் வரலாம்.. அண்ணாமலை ஆதரவு!
Tamil Nadu Caste Violence: திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக் கொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து சமூகத்தில் சாதிப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது என தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
திமுக எங்களைப் பார்த்து பயப்படுகிறது – அண்ணாமலை விமர்சனம்
திருநெல்வேலியில் ஆகஸ்ட் 22, 2025 அன்று பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
- Karthikeyan S
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..
Annamalai On Vijay: நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டிகள் மாநாட்டில் பேசிய முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை பொது வெளியில் அங்கிள் என கூப்பிடுவது சரியல்ல. இப்போது பேசும் விஜய் கடந்த 50 ஆண்டுகளாக எங்கே இருந்தார் என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:06 pm IST
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது – அண்ணாமலை..
Annamalai On Edappadi Palaniswami: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 22, 2025 தேதியான இன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST
ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..
Annamalai Condemns Dmk: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலை கண்டித்து, இது திமுகவினரின் தரங்கெட்ட நாடகம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST
‘வெறும் விளம்பரம் தான்’ மாநில கல்விக் கொள்கையை விமர்சித்த அண்ணாமலை
Annamalai On State Education Policy : தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்று இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST
பிரதமரின் வருகை ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது – அண்ணாமலை..
பிரதமர் மோடியின் வருகை குறித்து பேசிய அண்ணாமலை, ” பிரதமர் தமிழகத்திற்கு வருகை தந்தது ஒரு வரலாற்று முக்கியமான சம்பவமாகும். ஒரு பின் தங்கிய மாவட்டமான அரியலூர் மிகவும் அற்புதமான மாவட்டமாகும். ஆட்சியாளர்கள் அரியலூர் மீது தனி கவனம் வைக்கவில்லை. இன்று பிரதமரின் வருகைக்கு பிறகு மீண்டும் ஒரு மையப் புள்ளியாக இந்த மாவட்டம் அமையும். மேலும் சுற்றுலா தளம் மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி விமான நிலையத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான இரவு நேர சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST
பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை..
Annamalai Pressmeet: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST
நாமக்கலில் கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய விசாரணை தேவை! அண்ணாமலை கோரிக்கை!
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண மக்களை ஏதோ ஒன்றை கூறி ஏமாற்றி சிறுநீரக திருட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலர் இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு எஸ்.ஐ.டி என்னும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து உண்மையை வெளியே கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Sep 8, 2025
- 17:07 pm IST