AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஆவார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர் யுபிஎஸ்சி 2011 ஆம் ஆண்டிற்கான தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியை கர்நாடகா மாநிலத்தில் பணியை தொடங்கினார். அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே பாஜக மாநில தலைவராக உயர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தேசிய பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

Read More

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!

Tamilnadu assembly election 2026: திமுக கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.

இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை..

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?” என கடுமையாகத் தாக்கியுள்ளார்.

6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. யார் யாருக்கு வழங்கப்படும்.. பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகள்!

Rajya Sabha MP Seats: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் யார் யாருக்கு வழங்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

“அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!

Vijay - Sangeetha divorce case: மேலும், தேவைப்பட்டால், நடிகையுடன் விஜய் இருக்கும் ஆதாரங்களையும் தரத் தயார் என்றும் குறிப்பிட்டு, தனக்கு விவாகரத்து பெற்று தருவதோடு, அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படியும் சங்கீதா விவாகரத்து மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!

Annamalai Criticized DMK : கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளதாகவும், இதற்கான பதிலை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெளிபடுத்துவார்கள் என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

எந்த ஊருடா… வட மாநில பணியாளர் மீது காவலர் தாக்குதல்… வைரலாகும் வீடியோ – அண்ணாமலை கண்டனம்

Migrant Workers Assault Case : ஈரோட்டில் பாஸ்ஃபுட் கடையில் வடமாநில இளைஞர் மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!

TNPSC Group 2 exams postponed; டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

விஜயை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை.. அண்ணாமலை ஆக்ரோஷம்..!

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதாவது 2026 பிப்ரவரி 2ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவிடமாவது டபுள் இன்ஜின் இருக்கிறது. ஆனால், தவெக தலைவர் விஜயிடம் இன்ஜின் இருக்கிறதா என்பது கூட தெரியவில்லை. விஜயை இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை, தவெகவிற்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை. அதேநேரத்தில், தவெகவின் 2 மற்றும் 3 கட்டத்தை சேர்ந்தவர்களை கொண்டு விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகினார் அண்ணாமலை..

Annamalai: தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விளக்கமளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தமிழக பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு..களமிறங்கிய எல்.முருகன்- அண்ணாமலை!

BJP Tour In Charges: தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் நிலை என்ன? மீண்டும் NDA கூட்டணியில் இணைவாரா?.. அண்ணாமலை பளீச்!!

Will ops rejoin the NDA alliance: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது தை முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்கிறார்

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்…அண்ணாமலை ஆவேசம்!

Bjp Former President Annamalai: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

“தம்பி அண்ணாமலைக்கு கொள்கையை கடந்து துணை நிற்போம்”.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.

திருத்தணி ரயில் நிலையத்தில் மேலும் வன்முறைச் சம்பவம்.. வியாபாரி மீது கொடூரத் தாக்குதல்.. பரபரப்பு வீடியோ!!

Another violence incident at Thiruthani: சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களே இன்னும் ஆறாத நிலையில், மாநிலத்தின் மனசாட்சி மீண்டு வருவதற்கு முன்பே திருத்தணியில் நேற்று மற்றொரு  வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி, எந்தவித காரணமுமின்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

77 லட்சம் பெயர் நீக்கம்… அதிர்ச்சியாக இருக்கு… அதிரடி குறித்து அண்ணாமலை கருத்து

Annamalai : தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், மேலும் 12.5 சதவிகிதம் வாக்களர் பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியமாக மட்டும் இல்லாமல் அதிர்ச்சியாக இருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.