அண்ணாமலை - K. Annamalai
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஆவார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர் யுபிஎஸ்சி 2011 ஆம் ஆண்டிற்கான தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியை கர்நாடகா மாநிலத்தில் பணியை தொடங்கினார். அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே பாஜக மாநில தலைவராக உயர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தேசிய பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
சட்டமன்ற தேர்தல்… ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள்!
Tamilnadu Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர் .
- Gowtham Kannan
- Updated on: Apr 23, 2026
- 10:43 am IST
திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது.. வில்லிவாக்கத்தில் அண்ணாமலை பேச்சு!
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அனைத்து இடத்திலும் திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது. அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமென மக்கள் கேட்கிறார்கள். மேலும், சென்னையில் காலி இடம் இருந்தால் அதை பட்டா போட்டு ஜி ஸ்கொயருக்கு திமுக விற்று விடுகிறது. வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 2014 தேர்தலில் தயாநிதி மாறனை வீழ்த்தியவர், அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் வில்லிவாக்கம் மக்களுக்கு தேவையானதை செய்வதோடு , மக்களோடு இருப்பார்” என கூறினார். தொடர்ந்து, தவெகவின் ஆதவ் அர்ஜுனா காலை முதல் மாலை வரை பொய் மட்டுமே பேசுவார் எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 21, 2026
- 13:20 pm IST
ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.
Annamalai criticized MK Stalin : தமிழகத்தில் மு. க. ஸ்டாலினுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரசாரம் செய்ய வரவில்லை, அவர்கள் வந்தது தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 20, 2026
- 10:41 am IST
தீவிர தேர்தல் பிரசாரம்.. கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த அண்ணாமலை!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 18, 2026
- 20:59 pm IST
“தீய சக்தி திமுக” – விஜய் பாணியில் வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. அனல் பறந்த பேச்சு!
Annamalai Latest Speech: தமிழக சட்டமன்ற தேர்தலில் தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை விரட்டி அடித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 16:22 pm IST
வேடசந்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 17, 2026
- 14:24 pm IST
பிரதமர் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறார்.. அண்ணாமலை பேச்சு!
உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என கூறுவார். பிரதமர் நேரந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ராமநாதபுர தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 16, 2026
- 20:03 pm IST
மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 16, 2026
- 18:21 pm IST
பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..
நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை மற்றும் பிரதிநிதித்துவம் வழங்க பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2023 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்கள் தொடர்பான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போது பெண்கள் பாதிக்கப்படாத வகையில் அதை விரைவாக அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்,
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 15:55 pm IST
தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
Tamilnadu Assembly Election: திமுக அரசின் மீது தான் கொடுத்த ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 11, 2026
- 12:36 pm IST
உதகை பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற அண்ணாமலை.. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரசாரம் மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- Vinalin Sweety
- Updated on: Apr 10, 2026
- 23:19 pm IST
உதகமண்டலத்தில் வெற்றி எங்களுக்கு தான்.. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
உதக மண்டலம் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக, பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மக்கள் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தும் , அவர்கள் எந்த விதமான அடிப்படை வேலைகளையும் செய்யவில்லை. எனவே இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான். காரணம் மக்களுடைய அன்பு எங்கள் பக்கம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 10, 2026
- 20:59 pm IST
“திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கத் திட்டம்”.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!!
Tamilnadu Assembly Election: புதுச்சேரியின் முதலமைச்சர் என்.ஆர். சுவாமி அவர்கள் 'வாழும் காமராஜர்' போல ஒவ்வொரு தெருவாகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதையும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜய்யை விட அதிகமுறை புதுச்சேரிக்கு வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்திருப்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 5, 2026
- 07:38 am IST
தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..
இந்த தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக என் பெயரை பரிந்துரைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை மே 4ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கிறேன்” என கூறினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 4, 2026
- 10:53 am IST
ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் – அண்ணாமலை பதிவு..
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 3, 2026
- 16:35 pm IST