Udhayanidhi Stalin
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
Aadhav Arjuna criticized M.K. Stalin in Legislative Assembly: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவையில் அப்பாவை காணோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இது கூச்சல் குழப்பத்தை எழுப்பியது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 7, 2026
- 14:55 pm IST
“பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டின் உயிர்ச்சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான பிரச்சினை என்றும், இதில் அரசியல் செய்யும் எண்ணமோ அவசியமோ தமது அரசுக்குத் துளிக்கூட இல்லை என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 7, 2026
- 10:51 am IST
Vishal: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!
Vishal on Udhayanidhis Arrest: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்துவருபவர்தான் விஷால். இவர் இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ள மகுடம் படம் விரைவில் வெளியாகிறது. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், உதயநிதியை போலீஸ் கைது செய்தது குறித்து பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Aug 6, 2026
- 18:21 pm IST
மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
Edappadi Palaniswami : தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற முயன்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, இது போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 6, 2026
- 15:01 pm IST
“தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
தேர்தல் பிரசாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் ரூ.50,000 என்றும், பின்னர் ரூ.75,000 என்றும் மாற்றி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அரசு மௌனம் காக்கிறது என விமர்சனம்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 6, 2026
- 13:04 pm IST
கைது முதல் விடுதலை வரை.. ஒரே நாளில் அரங்கேறிய பரபரப்புகள்.. உதயநிதி ஸ்டாலின் வழக்கின் முழு பின்னணி!
Udhayanidhi Stalin Arrest to Release: தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி காலையிலேயே கைது செய்யப்பட்டு, 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேர அலைக்கழிப்புக்குப் பின் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 5, 2026
- 08:14 am IST
“தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
தமிழக வெற்றி பெற்ற கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், திமுகவின் வாரிசு அரசியலையும், பெண்களைப் பற்றிய அவர்களின் பேச்சுகளையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். அதோடு, தவெக கூட்டத்தில் திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியது குறித்து முழுமையாக அறியலாம்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 5, 2026
- 06:32 am IST
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டியில் விசாரணை? மறுப்பு தெரிவித்த உதயநிதி
தஞ்சையில் திமுகவினரின் போராட்டம் வலுத்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் புகார் பதிவான காவல் நிலையத்திற்கே விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, வேனில் இருந்து கீழே இறங்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Aug 4, 2026
- 19:29 pm IST
உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பேசியதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பதிவிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆபாசமாக எதுவும் பேசவில்லை. ஆவணம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Aug 4, 2026
- 17:25 pm IST
உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து காவல்நிலைய ஜாமீனில் அவர் வெளியே அனுப்பப்படுவார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Aug 4, 2026
- 14:54 pm IST
இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான திமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 4, 2026
- 11:57 am IST
விசாரணை நிறைவு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு
DMK Udhayanidhi Stalin Arrest Latest Updates in Tamil : முதல்வர் விஜய் குறித்தும் நடிகை ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் ஆங்காங்கே திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- C Murugadoss
- Updated on: Aug 4, 2026
- 20:38 pm IST
வைகை ஆற்றில் இருக்கும் மாசு விட மோசமானது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு – அண்ணாமலை விமர்சனம்..
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அண்ணாமலை, "நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும்போது, இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா என நினைத்தேன். பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், வைகை ஆற்றில் இருந்த மாசை விட உதயநிதி ஸ்டாலினின் பேச்சே மிகவும் கீழ்த்தரமானது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 4, 2026
- 10:40 am IST
முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!
Udhayanidhi Stalin Arrest : முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவரது வீட்டில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .
- Gowtham Kannan s
- Updated on: Aug 4, 2026
- 12:01 pm IST
உதயநிதி ஸ்டாலினின் தரமற்ற பேச்சு.. போராட்டம் நடத்தி புகார் அளிக்க தவெக முடிவு..
அப்போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக தொண்டர்கள் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்டனர். இதையடுத்து, சிரித்தபடி, "தண்ணீர் வேறு எங்கு போனாலும் பரவாயில்லை, அங்கே போய்ச் சேர வேண்டும்" என்று கூறிவிட்டு, பின்னர் "நான் காவிரி தண்ணீரைத்தான் சொன்னேன்" என்று விளக்கம் அளித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 4, 2026
- 07:53 am IST