AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..

எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார்? அவருக்கு சொந்தமாக பங்களா இருப்பதால் அரசு பங்களா வழங்க முடியாது என்று கூற முடியுமா? நீங்கள் வேண்டுமானால் கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் வீடும் காரும் இல்லாதவர்கள் உள்ளனர். ” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

“59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

DMK MLAs Refuse Govt Car: தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், அரசு அறிவித்துள்ள புதிய வாகனங்களை திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெறமாட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

TN Assembly: ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” – பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி

Udhayanidhi Speech: மேலும், “கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது மட்டுமின்றி பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. முதலமைச்சர் கோப்புகள் தொடர்பாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கோப்புகளை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஜோசியர் சொன்னால்தான் அவற்றை வெளியிடுவீர்களா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!

CM Vijay Apologizes in Assembly: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையைத் தொடங்கும் முன் "சாரி" கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்காக ரூ.6,220 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தார். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

“ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!

Aadhav Arjuna Assembly Speech: தமிழ்நாடு சட்டமன்றத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போக்சோ வழக்குகள் உயர்வு குறித்து காவல்துறை அறிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் நகல்களை ஆதாரமாகக் காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷமாக உரையாற்றினார். திமுக ஆட்சியில் தான் போதை கலாச்சாரம் அதிகரித்தது என அவர் சாடியதால் பேரவையில் திமுக உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதம் வெடித்தது.

“100 நாள் சாதனை எனப் பெருமை பேசுவது வேடிக்கை!”.. சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!!

Udhayanidhi Stalin Slams TN Govt: தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் காட்டமான விவாதத்தை முன்னெடுத்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்த கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்கள் பலியாவது குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார். 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசுவது வேடிக்கையானது என அவர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் பள்ளி மாணவர் கொடூரக் கொலை.. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!!

Chennai School Student Murder: சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு தோற்றுவிட்டதாகச் சாடியுள்ள அவர், போதைப்பொருளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

“தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!!

Udhayanidhi Stalin Assembly Speech: தொகுதி மறுவரையறையால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் 25 ஆண்டுகளுக்கு இதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலைக்கு எண்டு கார்டு? அடுத்த CM தனுஷா, விஜய்யா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் போட்ட குண்டு!

CM Joseph Vijay And Dhanush Political : தமிழக அரசியலில் வரும் காலத்தில் நடிகர் தனுஷின் அரசியல் வருகை இருக்கும் எனவும், அப்போது, முதல்வர் விஜய்க்கு போட்டியாக தனுஷ் இருப்பார் என்று ஜோதிட ரிக்கி ரத்தன் பண்டிட் தெரிவித்தார் .

அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!

Aadhav Arjuna criticized M.K. Stalin in Legislative Assembly: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவையில் அப்பாவை காணோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இது கூச்சல் குழப்பத்தை எழுப்பியது.

“பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!

CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டின் உயிர்ச்சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான பிரச்சினை என்றும், இதில் அரசியல் செய்யும் எண்ணமோ அவசியமோ தமது அரசுக்குத் துளிக்கூட இல்லை என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Vishal: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!

Vishal on Udhayanidhis Arrest: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்துவருபவர்தான் விஷால். இவர் இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ள மகுடம் படம் விரைவில் வெளியாகிறது. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், உதயநிதியை போலீஸ் கைது செய்தது குறித்து பேசியுள்ளார்.

மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!

Edappadi Palaniswami : தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற முயன்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, இது போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

“தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

தேர்தல் பிரசாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் ரூ.50,000 என்றும், பின்னர் ரூ.75,000 என்றும் மாற்றி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அரசு மௌனம் காக்கிறது என விமர்சனம்.

கைது முதல் விடுதலை வரை.. ஒரே நாளில் அரங்கேறிய பரபரப்புகள்.. உதயநிதி ஸ்டாலின் வழக்கின் முழு பின்னணி!

Udhayanidhi Stalin Arrest to Release: தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி காலையிலேயே கைது செய்யப்பட்டு, 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேர அலைக்கழிப்புக்குப் பின் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.