AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

உதயநிதி, கமல், விஜய் வீடுகள் கட்டுமானத்தில் விதிமீறல்கள் உள்ளனவா? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ECR Illegally Construction: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் சென்ன உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், அரசியல் தலைவர்களான உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் வீடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா – விருதுகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

State Film Awards : கடந்த 2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சிறந்த திரைப்பட, சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 13, 2026 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறந்த கலைஞர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கினார்.

தமிழ்நாட்டில் வெட்டிக்கூட்டம் சுற்றுகிறது… அதனால் யாருக்கும் பலனில்லை… உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

DMK Youth Wing Meet: விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் வெட்டிக்கூட்டம் சுற்றுவதாகவும், அதனால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக துணிநூல் துறைக்கு ரூ.912.97 கோடி முதலீடு: 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

Textile Conference: புதிய ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, போட்டித்திறன், தொழில் தொடங்கும் எளிமை, நிலைத்தன்மை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றில் அரசின் கவனத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் துணிநூல் துறை முக்கிய தூணாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் இன்று முதல் சர்வதேச சைக்கிளிங் போட்டி.. தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

சர்வதேச சைக்கிளிங் போட்டியை சென்னை மேலகோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று அதாவது 2026 ஜனவரி 29ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச சைக்கிளிங் போட்டியில் பங்கேற்கும் 11 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

“அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்”.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!

Udhayanidhi Stalin; இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம். இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக தான்.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்…அண்ணாமலை ஆவேசம்!

Bjp Former President Annamalai: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? சி.ஆர். கேசவன் கேள்வி!

சனாதன தர்மம் குறித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பாஜக தலைவர் அமித் மால்வியா மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது. இது தொடர்பாக பாஜக தலைவர் சி.ஆர். கேசவன் கூறுகையில், "தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தி, அவமதித்த தனது விஷம் நிறைந்த வெறுப்புப் பேச்சுக்காக, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா? திமுகவின் இந்து விரோத மனப்பான்மை இந்த அளவுக்கு அப்பட்டமாகவும் வெட்கமற்றதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

வெகு விமர்சையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜனவரி 16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டியை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும்.

பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

Deputy CM Udhayanidhi Stalin: பாலமேடு ஜல்லிக்கட்டை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதாவது 2026 ஜனவரி 14ம் தேதி 49வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியைப் பார்வையிட்டார். திராவிடர் தளம் மற்றும் SFD இணைந்து திராவிட வாழ்க்கை முறை விழாவில் வெளியிட்ட "மரண சாசனம்" நூலை பரிசாக வழங்கிய நிலையில், பலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு..! இது நம்ம ஆட்டம் 2026க்கான முன்பதிவு தொடக்கம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே..

Udhayanidhi Stalin: தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிசுத் தொகையாக ரூ. 22,50,000, வழங்கப்படும்

ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு

Free Laptop Scheme : தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஏஐ ஒரு போதும் மனிதனுக்கு மாற்று இல்லை என பேசினார்.

சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..

DMK Youth Wing Meet: அண்மையில் திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிசம்பர் 23, 2025 தேதியான இன்று மாலை நடைபெற இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

Deputy CM Udhaynidhi Stalin: மெரினா கடற்கரை அண்ணா பூங்கா அருகில் முதற்கட்டமாக 86 நபர்கள் தங்கும் வகையில் 2500 சதுர அடி பரப்பளவில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.86.40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.