AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

மாணவரின் கண்ணீர் வீடியோ – சமூகநீதி நாளில் சமூக அநீதியா?- உதயநிதி கண்டனம்

Udhayanidhi Criticizes TVK Government : அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை கிடைக்காமல் கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக பாரதிதாசன் என்ற மாணவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியீட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு சமூகநீதி நாளில் சமூக அநீதியா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை, அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்… தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

VCK Leader Thol Thirumavalavan Latest Pressmeet : தமிழகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அநாகரிகமாக பேசி வரும் திமுகவினரை கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

ஆபாச பேச்சு தான் DMK-வின் DNA.. மு.க.ஸ்டாலின் & உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்!

Minister Ramesh Criticizes M. K. Stalin : பெற்ற மகனை முறையாக வளர்க்க தெரியதாவர் மு.க. ஸ்டாலின் என்றும், ஆபாச பேச்சு திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி. என். ஏ. என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.

முதல்வர் விஜய்யை விமர்சிக்கக்கூடாது.. ஸ்டாலின் போட்ட கோட்டை தாண்டிய திமுகவினர்.. தடுத்தும் அடங்காத கொந்தளிப்பு!

DMK Members Violated M. K. Stalin Directive : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜயை விமர்சிப்பது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் உத்தரவை அவரது கட்சியினர் மீறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்!

P. K. Sekar Babu Criticized CM Vijay : திராவிட முன்னேற்றக் கழகம் அடிபட்ட புலியாக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதற்கு நிச்சயமாக வட்டியும், முதலுமாக சேர்த்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்பி கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!

K Veeramani Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக அரசின் 4 மாத ஆட்சி காலம் சாதனை கிடையாது. பெரும் வேதனை என்று திராவிட கழகத்தின் தலைவர் கி . வீரமணி கடுமையாக விமர்சித்து உள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.

என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!

Chennai Mayor Priya Speech : எனது தலைவரை தொட்டவர்களை விடமாட்டோம் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டத்தில் மேயர் பிரியா இவ்வாறு கூறினார். முழு விவரத்தை பார்க்கலாம்.

“திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!

CTR Nirmal Kumar Press Meet: உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த நபர்கள் மற்றும் பவர் புரோக்கர்கள் மூலம் அரசுத் துறைகள் இயக்கப்பட்டதாகக் கூறி, திமுக ஆட்சிக் கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை அமைச்சர் நிர்மல் குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார்.

புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

Dayanidhi Maran criticizes CM Vijay : புலி திரைப்படத்தின் வருவாயை மறைத்த உத்தமர் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது என்று சென்னை திமுக எம். பி. தயாநிதி மாறன் காட்டமாக விமர்சித்தார்.

கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்.. திமுக பரந்தாமன் கடும் விமர்சனம்!

DMK Paranthaman Criticism CM Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு சிறை வாசம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்திருக்கும் என்று திமுகவை சேர்ந்த பரந்தாமன் கடுமையாக விமர்சித்தார் .

முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!

Udhayanidhi Stalin Share Sura Scene : தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய் நடித்த சுறா படத்தின் காமெடி காட்சி ஒன்றை ஸ்டோரியாக பதிவிட்டு உள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி..

“அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பதிலற்ற பதிலுரை, பழிபோடும் பேச்சு, டைவர்ஷன் டாபிக்ஸ். மொத்தத்தில் எந்த பிரிபரேஷனும் இல்லாமல் ‘ரோல், கேமரா, ஆக்‌ஷன்’ மோடில் கிரிஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். டம்மி சி.எம். என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“சினிமா ஷூட்டிங் போல பஞ்ச் டயலாக் பேசும் டம்மி முதல்வர்!”.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!!

Udhayanidhi Stalin Direct Attack on CM Vijay: "முதலமைச்சரின் சட்டப்பேரவை உரை வெறும் சினிமா ஷூட்டிங் பஞ்ச் டயலாக் போல உள்ளது" எனப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பான எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், சர்க்காரியா கமிஷன் எனப் பழைய பொய்யான குற்றச்சாட்டுகளைப் பேசி திசைதிருப்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“முதல்வர் சொன்னாலும் அனுமதி கிடையாது!”.. திமுக-வுக்கு வாய்ப்பளிக்க சபாநாயகர் மறுப்பு.. பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு!

Tamilnadu Assembly Drama: "முதலமைச்சர் அனுமதிக்கச் சொன்னாலும், கூச்சல் போட்ட எதிர்க்கட்சிக்குப் பேச அனுமதி அளிக்க முடியாது" எனச் சபாநாயகர் கறாராக மறுத்துவிட்டார். முதலமைச்சர் உரைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்த திமுகவின் போக்கைக் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பேச வாய்ப்பளிக்கச் சபாநாயகர் மறுத்ததால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.