AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

ஆளுங்கட்சியின் இரட்டை வேடம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை மற்றும் மதுரையிலும் மாணவ அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..

சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சொன்னதைச் செய்துகாட்டிய முதல்வர் விஜய்”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!!

எதற்கெடுத்தாலும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர முயற்சி செய்கிறார்கள் என்று தினமும் காலையில் எழுந்து ஒரு டயலாக்கை பேசி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், நாம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த அரசு மற்றும் ஆட்சி நடக்கும் லட்சணத்தைப் பார்த்தால் நாமெல்லாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை, மக்களே இந்த ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள்.

தமிழகத்தின் உரிமைகளை மாற்றம் என்ற பெயரில் தாரை வார்க்க வேண்டாம்.. தவெக அரசு மீது உதயநிதி விமர்சனம்!

Udhayanidhi criticized Tvk Govt: தமிழகத்தில் மாற்றம் என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்க்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்தார். ஆளுனர் அர்லேகர் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்ட இந்த கருத்தை அவர் தனது அறிக்கையலி் தெரிவித்து உள்ளார்.

தவெக எம்எல்ஏக்கள் 15 பேருக்கு குறி? ரூ.35 கோடி பேரம்.. திமுக மீது நிர்மல் குமார் பெரும் குற்றச்சாட்டு!

Dmk Bargaining Tvk Mla: தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 15 எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி ரூபாய் பேரம் பேசி தங்கள் கட்சியில் இணை வைப்பதற்காக திமுக முயற்சித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின் – வெளியான முக்கிய தகவல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் வருகிற ஜூலை 5, 2026 லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இன்பன் உதயநிதி படித்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளறல்நிதியின் மற்றொரு நாள்.. மற்றுமொரு உளறல் – த.வெ.க ஐ.டி விங் தாக்கு..

தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "உளறல்நிதியின் மற்றொரு நாள்... மற்றுமொரு உளறல்" என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும், திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "மற்றொரு நாள்... மற்றுமொரு ராஜினாமா. சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர். விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

“ஒரே மாதத்தில் தவெக-வின் போலி பிம்பம் உடைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே தமிழகத்தில் குதிரை பேரங்களும், பல்வேறு முறைகேடுகளும் தங்கு தடையின்றி அரங்கேறத் தொடங்கிவிட்டன. தவெக அரசுக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கும் நோக்குடன் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாக சாடினார்.

எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. இங்கேயும் சோதனை பண்ணுங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றிய அண்ணாமலை!

Annamalai About Anti Corruption Raid: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடை இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து, மேலும் சில சோதனைகளை நடத்த வேண்டும் என்றார் அண்ணாமலை.

முதல்வர் விஜய்யின் சைகைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன் பரபர கருத்து!

CPI Secretary Veerapandian : தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், சைகை காண்பித்த முதல்வர் விஜய்யின் செயலை இந்திய கம்யூன்ஸ்டி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் .

சட்டசபையில் முதல்வர் விஜய்யின் ஆக்சன் மரபு மீறலா? பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!

Chief Minister Vijay Action : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மு.க.ஸ்டாலின் சைகையை முதல்வர் ஜோசப் விஜய் செய்தது அவை மரபு மீறலா என்பது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து உள்ளார்.

“திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை ஏவுவது; அதுவே, தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க-வினர் என்றால் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பதா? இதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா?" என த.வெ.க அரசை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி தவெக அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!

TRB Rajaa Latest Speech: தவெக ஆட்சியாளர்கள் அனைத்து விவகாரத்திலும் 6 மாதம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டியாக இருப்பதாக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில் முதலீடு குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்றார்.