AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!

DMK Internal Election Crisis: திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி வரும் நிலையில், மாவட்ட செயலாளர் தேர்தலை தள்ளிவைத்துவிட்டு தற்காலிக பொறுப்பாளர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உட்கட்சித் தேர்வை நடத்துவதில் திமுக தலைமைக்கு முக்கோண சிக்கல் எழுந்துள்ளது.

“யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!

CM Vijay vs Udhayanidhi Stalin: சட்டப்பேரவையில் டிஜிபி நியமனம், போக்சோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த முதல்வர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பேரவையில் பதிலளிப்பதாகச் சவால் விடுத்து உறுதியளித்தார்.

“116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!

TN Assembly debate: தமிழகச் சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது தூத்துக்குடியில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர் என். ஆனந்த், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

“100 நாட்கள் வரை காத்திருக்கப் போகிறீர்களா?”.. தூய்மைப் பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி!!

Sanitation Workers Strike TN Assembly: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து இரு தரப்பும் அளித்த விளக்கங்களின் தொகுப்பு இதோ.

அனிதா நினைவேந்தலுக்கு ஏன் அனுமதி இல்லை? உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே விவாதம்..

TN Assembly: செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பத்தினர் சார்பில் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!

Global Sports City Project: தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து தவெக அரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும், 46 விளையாட்டுகளுடன் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட்டு 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதேவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.. சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பதிலளித்தார். ஈரான் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். வெங்காயம் உள்ளிட்ட 41 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

“ஊழல் ஃபைல்கள் எங்கே?”.. 10 மணிக்கே சட்டமன்றம் போய்விட்டேன்.. முதல்வர் வாயே திறக்கல.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்!!

Udhayanidhi Slams CM Vijay: சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் ஊழல் ஃபைல்களைப் பற்றி சட்டமன்றத்தில் வாயே திறக்கவில்லை எனச் சாடியுள்ளார். மேலும், திமுக மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைக்க முடியும் என்றும், தற்போதைய அமைச்சர்கள் பட்டப்பெயர்களால் மட்டுமே பிரபலமாகி வருகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin On Parandur Airport: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழலும் ஏற்படக்கூடும் எனவும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!

Minister Ramesh Criticized Opposition Parties : தமிழக சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..

எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார்? அவருக்கு சொந்தமாக பங்களா இருப்பதால் அரசு பங்களா வழங்க முடியாது என்று கூற முடியுமா? நீங்கள் வேண்டுமானால் கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் வீடும் காரும் இல்லாதவர்கள் உள்ளனர். ” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

“59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

DMK MLAs Refuse Govt Car: தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், அரசு அறிவித்துள்ள புதிய வாகனங்களை திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெறமாட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

TN Assembly: ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” – பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி

Udhayanidhi Speech: மேலும், “கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது மட்டுமின்றி பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. முதலமைச்சர் கோப்புகள் தொடர்பாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கோப்புகளை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஜோசியர் சொன்னால்தான் அவற்றை வெளியிடுவீர்களா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!

CM Vijay Apologizes in Assembly: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையைத் தொடங்கும் முன் "சாரி" கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்காக ரூ.6,220 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தார். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

“ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!

Aadhav Arjuna Assembly Speech: தமிழ்நாடு சட்டமன்றத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போக்சோ வழக்குகள் உயர்வு குறித்து காவல்துறை அறிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் நகல்களை ஆதாரமாகக் காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷமாக உரையாற்றினார். திமுக ஆட்சியில் தான் போதை கலாச்சாரம் அதிகரித்தது என அவர் சாடியதால் பேரவையில் திமுக உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதம் வெடித்தது.