AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. இங்கேயும் சோதனை பண்ணுங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றிய அண்ணாமலை!

Annamalai About Anti Corruption Raid: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடை இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து, மேலும் சில சோதனைகளை நடத்த வேண்டும் என்றார் அண்ணாமலை.

முதல்வர் விஜய்யின் சைகைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன் பரபர கருத்து!

CPI Secretary Veerapandian : தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், சைகை காண்பித்த முதல்வர் விஜய்யின் செயலை இந்திய கம்யூன்ஸ்டி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் .

சட்டசபையில் முதல்வர் விஜய்யின் ஆக்சன் மரபு மீறலா? பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!

Chief Minister Vijay Action : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மு.க.ஸ்டாலின் சைகையை முதல்வர் ஜோசப் விஜய் செய்தது அவை மரபு மீறலா என்பது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து உள்ளார்.

“திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை ஏவுவது; அதுவே, தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க-வினர் என்றால் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பதா? இதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா?" என த.வெ.க அரசை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி தவெக அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!

TRB Rajaa Latest Speech: தவெக ஆட்சியாளர்கள் அனைத்து விவகாரத்திலும் 6 மாதம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டியாக இருப்பதாக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில் முதலீடு குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்றார்.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை? முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு உதயநிதி கடும் விமர்சனம்!

Udhayanidhi Condemned CM Vijay Story: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுகே தெரியும் என்று விமர்சனம் செய்தார்.

பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!

Udhayanidhi Stalin Spoke: தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பவர் ஷேரிங் கொடுத்த தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பவர் இல்லை என்று எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பேரவை உறுப்பினர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர் .

இது தான் மாற்றமா? பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில், அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்..

'தகுதி, தகுதி' என்று கூறி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மையங்களின் கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வறை சோதனைகள் என மாபெரும் உயிர்கொல்லும் மோசடியாக மாறியுள்ளது. மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது விவகாரம்.. முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு!

Mekedatu issue: ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், அடுத்த காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குரிய நீரை விரைவாகப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் அரசு”.. தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!!

கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர், நிதி ஆய்வு கூட்டத்தில் தமிழகம் கடந்த சில ஆண்டுகளில் பெற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதனைகளை பெருமையாகப் பேசிவிட்டு வந்துள்ளார். அது ஒரு மாத கால ஆட்சியின் சாதனை அல்ல, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஆகும்.

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மேலும் 4 பேர் இருந்ததால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.

“திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!

திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, தங்களது சாதனைகள் என்பது போல தவெக அரசு சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "திமுகவின் சாதனைகள் மீது தங்களது லேபிளை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்ளும் ஒரு 'ஸ்டிக்கர் அரசு' தான் இந்த தவெக அரசு" என்று சாடினார்.

“ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போடவா சிங்கப்பெண் பிரிவு?”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளர். அதோடு, இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாசிசத்தின் மற்றொரு Version.. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் சோபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..

Udhayanidhi on TVK Government: தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து மூன்று தனியார் செய்தி சேனல்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.