AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மிக முக்கிய இடத்தில் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதி தொடங்கிய திமுக இன்று அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் பிரவேசித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பு, திரைப்பட நடிப்பு என ஆர்வம் காட்டி வந்த உதயநிதி 2018 முதல் தீவிர அரசியலில் களமிறங்கினார். நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் 2019ல் திமுக இளைஞர் அணிச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருவல்லிக்கேனி எம். எல்.ஏ. ஆனார். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார் உதயநிதி. இவர் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Read More

முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!

Tamilisai Soundararajan:l தமிழகத்தில் வாக்களித்தவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஓய்வுக்காக சுற்றுலா சென்றுள்ளதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் விமர்சனம் செய்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் – வருமான வரித்துறை..

தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். மேலும், 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.

துபாய் பயணம்.. குடும்பத்துடன் சென்னை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 23, 2026) நடந்து முடிந்த நிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவருடன் மனைவி கிருத்திகா மற்றும் மகள் ஆகியோர் இருந்தனர். 

“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக இருங்கள்”.. தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..

Tamilnadu Assembly Election: மே 4ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும். நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல நாட்களாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்த கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும்.

சேப்பாக்கத்தை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

என்றைக்குமே நான் உங்களுடன் தான் பயணிக்க போகிறேன். அனைவரும் சேர்ந்த்து பயணிப்போம். சேப்பாக்கம் தொகுதியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம் என்று சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் துணை முதலமைச்சர் பிரசாரம்!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மு.பே.சாமிநாதன் மற்றும் இந்திராணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!

Nainar Nagendran Latest Speech: தமிழகத்தின் முதல்வராக உதயநிதியை அமர வைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஒற்றை நோக்கமாக இருந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

‘தமிழ்நாடு அணி’ நிச்சயம் வெற்றி பெறும்.. துணை முதல்வர் உதயநிதி உறுதி!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "டெல்லி நமது மாநிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு அவர்கள் எந்த நிதியையோ அல்லது திட்டங்களையோ வழங்குவதில்லை; மாறாக, அதிமுகவின் வாயிலாக மாநிலத்தின் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்ட அவர்கள் முயல்கின்றனர். இதனால்தான், இந்தத் தேர்தல் என்பது 'டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும்' இடையிலான ஒரு போட்டியே என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; மேலும், 'தமிழ்நாடு அணி' நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்று தெரிவித்தார்.

பூர்வீக சொத்து ஏதுமில்லை.. துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடி என்றும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும், பூர்வீக சொத்து எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலினும்தான் வெற்றியாளர்கள்.. பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அப்போது மக்களிடம் பேசிய அவர், ” வருகின்ற 2026 ஏப்ரல் 23 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு சவால் விடும் அணிகள் எதுவாக இருந்தாலும், திமுகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்தான் உண்மையான வெற்றியாளர்கள் என்பதை திமுக நிரூபிக்கும்” என்றார்.

மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் களம் காணும் உதயநிதி ஸ்டாலின்.. நீட் தேர்வு ரத்து குறித்து ஓபனாக சொன்ன பதில்..

இந்த நிலையில், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார். அதேபோல், காட்பாடியில் துரைமுருகன், கோவையில் செந்தில் பாலாஜி, போடியில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின்!

தமிழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 70 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!

Udhayanidhi Stalin: கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு அளித்தார்.