Team India: இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. கடுமையாக சாடிய கவாஸ்கர்!
Sunil Gavaskar Statement: முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அணியில் உள்ள அனைத்து 'சராசரி' ஃபீல்டர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்திய டி20 அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதில், இந்திய அணி (Indian Cricket Team) பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்துள்ளது. அதன்படி, இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள பல புதிய மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பலர் கூறி வருகின்றனர். பல புதிய வீரர்கள் அணியில் அதிகளவில் அறிமுகமானார்கள். இதுவும் சர்ச்சையாக பேசப்பட்டது. ஜிம்பாப்வேக்கு (IND vs ZIM) எதிரான முந்தைய தொடரை அணி வென்றது. ஆனாலும், அணியில் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன. தற்போது, முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் இந்திய அணியை பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ALSO READ: சாம்சனுக்கு ஒரு விதி.. அபிஷேக்கிற்கு ஒரு விதியா..? வாய்ப்பு குறித்து முன்னாள் இந்திய வீரர் காட்டம்!
இந்திய அணியை சாடிய கவாஸ்கர்:
முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அணியில் உள்ள அனைத்து ‘சராசரி’ ஃபீல்டர்களையும் உடனடியாக நீக்க வேண்டும். நவீன கிரிக்கெட்டில், எந்த கேப்டனாலும் பலவீனமான ஃபீல்டர்களை களத்தில் மறைக்க முடியாது, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க இதுவே சரியான நேரம். அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்குச் சென்ற சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் ஃபீல்டிங் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்துள்ளது என்றார். இந்த 3 சுற்றுப்பயணங்களில் இந்திய அணி மொத்தம் 8 போட்டிகளில் தோல்வியடைந்து, 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீரர்கள் 10 எளிதான கேட்சுகளை விட்டுக்கொடுத்ததுதான் மிக மோசமான விஷயம். இந்த மோசமான செயல்பாடு, இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சி ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஆதரவு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.




டி. திலீப் தற்போது தலைமை ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார், ஆனால் அவரது தரம் குறைந்து வருவதால் அவர் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட்டும் ஒரு ஃபீல்டிங் நிபுணராகக் கருதப்படுகிறார். இந்தநிலையில் இந்திய அணியின் பீல்டிங் குறித்து கவாஸ்கர் கூறுகையில், “ஒரு வீரர் சுமாரான ஃபீல்டராக இருந்தால், அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அது கட்டாயமாக்கப்பட வேண்டும். பந்து தங்களைச் சென்றடையாது என்ற நம்பிக்கையில் 3-4 வீரர்களை ஒரு கேப்டன் மறைத்து வைக்க முயற்சிப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச அளவில் இதுபோன்ற சலுகைகளை வழங்குவது அணிக்குத் தீங்கு விளைவிக்கும்.” என்றார்.
ALSO READ: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்.. யார் இந்த சரண்ஷ் ஜெயின்?
வருகின்ற 2026 ஆகஸ்ட் மாதம் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ள நிலையில், கவாஸ்கர் கூறுகையில், “பதட்டமடைவதற்குப் பதிலாக, நேர்மையான சுயபரிசோதனையும், ஷாட் தேர்வில் முன்னேற்றமும் தேவைப்படுகிறது. குறைகளையும் அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகளையும் விவாதிக்கும் ஒரு நல்ல மற்றும் நேர்மையான மறுஆய்வு, தற்போதைய தேவையாகும். ஷாட் தேர்வு மிகவும் முக்கியமானது; இங்கு பேட்ஸ்மேன் தனது அகந்தையைக் கட்டுப்படுத்தி, தனது பிம்பத்திற்கு ஏற்ப விளையாடுவதற்குப் பதிலாக, பந்தின் தரத்திற்கு ஏற்ப விளையாட வேண்டும்” என்றார்.