இருசக்கர வாகனத்தில் விநாயகர் சிலையை அழைத்துச் சென்ற நபர்.. வைரல் வீடியோ..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பூஜைக்காக விநாயகர் சிலையை வாங்கியுள்ளார். அந்த சிலையை தனது இருசக்கர வாகனத்தில் சக பயணியைப் போல அமர வைத்து, அன்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பூஜைக்காக விநாயகர் சிலையை வாங்கியுள்ளார். அந்த சிலையை தனது இருசக்கர வாகனத்தில் சக பயணியைப் போல அமர வைத்து, அன்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொதுவாக விநாயகர் சிலைகள் லாரி அல்லது ஆட்டோக்களில் எடுத்துச் செல்லப்படும் நிலையில், வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சிலையை அமர வைத்து அழைத்துச் சென்ற காட்சி பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
