Health Tips: மாரடைப்பு vs பானிக் அட்டாக்.. குழப்பத்தில் மக்கள்.. இதன் வேறுபாடுகள் என்ன?
Heart Attack vs Panic Attack: நெஞ்சு வலியின் காரணமாக நடப்பதற்கோ, படிக்கட்டுகளில் ஏறுவதற்கோ அல்லது எதையாவது தூக்குவதற்கோ உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அது மாரடைப்பாக இருக்கலாம். பானிக் அட்டாக் பொதுவாக உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது படுத்திருக்கும்போதோ ஏற்படும். எனவே, எப்போதும் கவனத்துடன் இருப்பது முக்கியம்.
மாரடைப்பு மற்றும் பானிக் அட்டாக்கின் அறிகுறிகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றுக்கிடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். இன்றைய நவீன காலத்தில் இதய நோய்க்கு வயது வரம்பு இல்லை. இளம் ஆண்கள் (Mens Health) மற்றும் பெண்கள் மத்தியிலும் இதய நோய் அதிகரித்துள்ளது. மாரடைப்பு தற்போது ஒரு சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால், மாரடைப்புக்கும் பானிக் அட்டாக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை. அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு நெஞ்சு வலி (Chest Pain), படபடப்பு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை மாரடைப்பு என்று தவறாகக் கருதுகிறார்கள்.
ALSO READ: காலையில் எழுந்ததும் கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?
வேறுபாடு என்ன..?
மாரடைப்புக்கும் பானிக் அட்டாக்கிற்கும் உள்ள வேறுபாட்டைப் பலர் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இதயத்திற்கு இரத்தம் வழங்கும் இரத்த நாளம் அடைபடும்போது, ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது. இது மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதீத மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் போது, உடலின் ‘போராடும்’ எதிர்வினையும் தவறாக வழிநடத்தப்படுகிறது. இதன் விளைவாக, நாம் சுவாசிப்பதில் சிரமம், மார்பில் கடுமையான அழுத்தம் மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். இதில், இரண்டாவது வகைதான் பானிக் அட்டாக்.




மாரடைப்பின் வலி ஒரே இடத்தில் மட்டும் இருப்பதில்லை. இந்த வலி பொதுவாக மார்பெலும்பில் தொடங்கி, படிப்படியாக இடது தோள்பட்டை, இடது கை, தாடை மற்றும் தோள்பட்டை வரை பரவுகிறது. பானிக் அட்டாக்கின் போது, வலி முக்கியமாக மார்பின் நடுப்பகுதி என்ற ஒரே இடத்தில் மட்டும் இருக்கும்.
நெஞ்சு வலியின் காரணமாக நடப்பதற்கோ, படிக்கட்டுகளில் ஏறுவதற்கோ அல்லது எதையாவது தூக்குவதற்கோ உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அது மாரடைப்பாக இருக்கலாம். பானிக் அட்டாக் பொதுவாக உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது படுத்திருக்கும்போதோ ஏற்படும். உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், திடீரென தலைசுற்றல், குமட்டல் போன்றவை ஏற்பட்டு, உடல் முழுவதும் குளிர்ந்தாலும் வியர்வை கொட்டும். மேலும், அதீத சோர்வை கொடுத்து, உங்கள் உடல் முற்றிலும் செயலிழந்துவிடும்.
பானிக் அட்டாக்:
பானிக் அட்டாக்கின் போது, சுவாசம் வேகமடைகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைகிறது. இது தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. முகம் மற்றும் விரல்களைச் சுற்றி கூச்ச உணர்வு உண்டாகிறது. பீதித் தாக்குதல்கள் சுமார் 30 நிமிடங்கள் நீடிக்கும். அட்ரினலின் சுரக்கும்போது, உடலால் அந்தப் பதற்றத்தை நீண்ட நேரம் தாங்க முடியாது. அதனால், அரை மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தணிந்துவிடும்.
ALSO READ: 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே உஷார்.. உங்கள் கருவுறுதல் பாதிக்க இதுவே காரணம்!
உங்களுக்குக் கடுமையான நெஞ்சு வலி இருந்து, அது மற்ற பகுதிகளுக்கும் பரவி, 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அந்த நேரத்தில், அதிகமாக நடமாடவோ அல்லது வாகனம் ஓட்டவே கூடாது. உடனடியாக மருத்துவனைக்கு செல்வது நல்லது.