இரும்புத்திரை படத்தின் கதையை அர்ஜுன் சார் கேட்கவே மறுத்துவிட்டார் – பி.எஸ்.மித்திரன்
PS Mithran talks about Irumbu Thirai movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் அர்ஜுன் இரும்பு திரை படத்தின் கதையை கேட்கவே மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் இரும்புத்திரை. இந்தப் படத்தை இயக்குநர் பிஎஸ் மித்திரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநர் பி.எஸ்.மித்திரன் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் டெக் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன், சமந்தா ரூத் பிரபு, டெல்லி கணேஷ், ஸ்ரீஜா ரவி, ரோபோ சங்கர், தர்ஷனா ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சுமன், சத்யன், காளி வெங்கட், சரத் லோஹிதஸ்வா, வின்சென்ட் அசோகன், மைம் கோபி, மதுசூதன ராவ், சம்பத் ராம், கவிதாலயா கிருஷ்ணன், விவேக் பிரசன்னா, ஜி.மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, மகாநதி சங்கர், ராகுல் தாத்தா, அப்துல், சத்யா என்.ஜே.
ஜெர்மி ரோஸ்கே, பிரதீப் கே விஜயன், கோதண்டம், சரத் ரவி, அறந்தாங்கி நிஷா, ரிஷிகாந்த், அசோக் பாண்டியன், விஜய் வரதராஜ், ஹரிஷ், ரயில் ரவி, ஜெமினி மணி, சூப்பர் குட் சுப்ரமணி, வணக்கம் கந்தசாமி மற்றும் பி.எஸ்.மித்ரன் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி சார்பாக தயாரிப்பாளர் விஷால் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்திரன் அர்ஜுன் இந்தப் படத்தின் கதையை கேட்கவே விருப்பம் இல்லாமல் இருந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இரும்புத்திரை படத்தின் கதையை அர்ஜுன் சார் கேட்கவே மறுத்துவிட்டார்:
அதன்படி அவர் கூறியதாவது, ஆரம்பத்தில், இந்தக் கதையைக் கேட்பதில் தனக்கு விருப்பமில்லை என்று அர்ஜுன் சார் எங்களிடம் கூறினார். விஷால் சாரிடம் நான் இதைப் பற்றிச் சொன்னபோது, ”நீ யாரைக் கேட்கப் போகிறாய் என்று உனக்குத் தெரியுமா?” என்று அவர் என்னிடம் கேட்டார். ஏனெனில், சிறுவயதிலிருந்தே அர்ஜுன் சார் அவரை ‘அங்கிள்’ என்றுதான் அழைத்து வந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் சார் நடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் கதையைக் கேட்கவே இல்லை. விஷால் சார் ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்களைப் பரிந்துரைத்தார்; நானும் வேறு சிலரை அணுகினேன். ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் சார் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
குறைந்தபட்சம் ஒரு முறையாவது கதையைக் கேட்குமாறு நான் அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன், ஆனால் அப்போதும் அவர் மறுத்துவிட்டார். வில்லன் யார் என்பதை முடிவு செய்யாமலே நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அதற்குள்ளாகவே கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கட்டப் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன. அந்தக் காலகட்டத்தில், அர்ஜுன் சார் நிபுணன் (Nibunan) படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் டிரெய்லரை ரூபன் எடிட் செய்திருந்தார்; அந்த டிரெய்லர் அர்ஜுன் சாருக்கு மிகவும் பிடித்திருந்தது, ரூபனின் பணியையும் அவர் பாராட்டினார். அப்போது அவர் ரூபனிடம், “உனக்காக நான் ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு ரூபன், “தயவுசெய்து மித்ரனின் கதையை ஒரு முறை கேளுங்கள்” என்று அவரிடம் கூறினார். ரூபன் அப்படிச் சொன்னதும், அர்ஜுன் சார் கதையைக் கேட்க ஒப்புக்கொண்டார். “ரூபன் கேட்டுக் கொண்டதற்காகத்தான் நான் இந்தக் கதையைக் கேட்கிறேன்” என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவருக்குக் முழு கதையையும் விவரித்தேன். அதற்கு நீண்ட நேரம் பிடித்தது. நான் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவர் முழு படத்தையும் தன் மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். கதையைக் கேட்ட பிறகு, மாற்றப்பட வேண்டிய சில விஷயங்களை அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அதன்பிறகு நான் அங்கிருந்து கிளம்பி என் காரில் ஏறினேன். சிறிது நேரத்திலேயே அவரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் சுருக்கமாக, நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.
Also Read… PS Mithran: ஹீரோ படம் பிளாப் ஆனபோது வருத்தம் இருந்தது.. ஆனால் – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#PSMithran About #Arjun Sir – #IrumbuThirai
Arjun Sir initially told us that he wasn’t interested in listening to the story. When I told Vishal Sir about it, he asked me, ‘Do you know who you’re going to ask?’ Arjun Sir had been calling him ‘Uncle’ since he was young.
I told… pic.twitter.com/IfZVzBDFrx
— Movie Tamil (@_MovieTamil) August 22, 2026
Also Read… பப்ளியாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணன்.. அட இந்த ஹீரோதான்!