AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆல்கஹால் புகையிலையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது - கனிமொழி சந்தோஷ் பேச்சு

ஆல்கஹால் புகையிலையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது – கனிமொழி சந்தோஷ் பேச்சு

Sekaran S
Sekaran S | Updated On: 23 Aug 2026 15:50 PM IST

Kanimozhi Santhosh : கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழ்நாட்டு பெண்கள் என்றாலே அழகு அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் அல்லவா என்று தெரிவித்தார்.தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் நலம் குறைந்து கொண்டே இருக்கும் என்றார்.

ஈஷா சார்பில் கிராமப்புற மக்கள், இளைஞர்களிடையே விளையாட்டுகளைன்ஊக்குவிக்கும் வண்நம் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மண்டல அளவிலான போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழ்நாட்டு பெண்கள் என்றாலே அழகு அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் அல்லவா என்று தெரிவித்தார்.தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் நலம் குறைந்து கொண்டே இருக்கும் தற்பொழுது உள்ள குழந்தைகள் காலையில் மொபைல் போனை எடுத்தால் இரவு வரை அதில்தான் இருக்கிறார்கள் ஒரு வகையில் அது நல்லது என்றாலும் மற்றொரு வகையில் அதை உடல் நலத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டினார். ஆல்கஹால் புகையிலை காட்டிலும் மொபைல் போன்கள் மிகவும் ஆபத்தானது என்றார். தற்போது நவீன கால உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகிறார்கள் அப்பொழுது குழந்தைகளுக்கு இது போன்ற செயல்பாடுகள் எதுவும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டு பேசிய அவர் ஈஷா போன்றவர்கள் இது போன்ற விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் போது அனைவரும் வந்து பங்கேற்பை தாருங்கள் என்றார்.

Published on: Aug 23, 2026 03:44 PM
Follow Us