Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Operation Sindoor

Operation Sindoor

உலக நாடுகளிடையே போர் என்பது காலம் காலமாக பல்வேறு பிரச்னைகளுக்காக நடந்து வருகிறது. அதில் தவிர்க்க முடியாதது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் தாக்குதல்களாகும். சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. அன்று தொடங்கி 1947 முதல் 2025 வரை பல்வேறு காலக்கட்டங்களில் இருநாட்டுக்கும் இடையே போரானது நடைபெற்றுள்ளது. இருநாடுகளாக பிரிந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் பாகிஸ்தானுக்கு துளியும் விருப்பமில்லாமல் இருந்தது. இதனால் ஏற்பட்ட பகை உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் உருவாக காரணமாக அமைந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர், 2016ல் நடந்த உரி தாக்குதல், 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் என அடுத்தடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

Read More

தொடர்கிறது போர் நிறுத்தம்… உறுதி செய்த இந்திய ராணுவம்.. முடிந்ததா பிரச்னை?

India Pakistan Ceasefire : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்கிறது என்று இந்தியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், 2025 மே 18ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், இந்தியா ராணுவம் தற்போது அதற்கு மறுத்துள்ளது.

கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர்.. ரஷ்யா விரையும் திமுக எம்பி.. என்ன மேட்டர்?

ALL party delegation on Operation sindoor : ஆபேரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குகிறார். மேலும், தமிழகத்தில் இருந்து இந்த குழுவுக்கு தேர்வான ஒரே பிரதிநிதியாக திமுக எம்.பி கனிமொழி உள்ளார்.

வரலாற்றில் முதல்முறை… தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Jaishankar Speaks To Taliban Foreign Minister : இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதட்டம் தற்போது தணிந்து வரும் நிலையில் இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தே வருகிறது. பஹல்காம் தாக்குதலின்போதும், ஆபரேஷன் சிந்தூர் பதிலடியின்போதும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்த நாடுகளை இந்தியா கவனித்து வருகிறது. அந்த நட்பை பேணுவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு.. இந்தியா முடிவு என்ன?

Pakistan PM Shehbaz Sharif : இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த இராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்தியா என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Colonel Sophia Qureshi: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சர் விஜய் ஷா மீது எஃப்ஐஆர் போட உத்தரவு!

MP Minister Vijay Shah Faces FIR: மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததையடுத்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி, 4 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஷாவின் கருத்து நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை மே 19 அன்று நடைபெறுகிறது.

Pakistani Supports India: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான்.. இந்தியாவிற்கு ஆதரவாக ஒலித்த பாகிஸ்தானியரின் குரல்!

India Pakistan Conflict: 2025 ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பின்னர் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது. ஒரு பாகிஸ்தானிய வியாபாரி இந்தியாவின் செயலை ஆதரித்து, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை கண்டித்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டன, ஆனால் சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டன.

Operation Keller: ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைத்த இந்திய இராணுவம்.. 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற சம்பவம்..!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினருக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

பாதுகாப்பு முக்கியம்.. 8 நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ!

India Pakistan Ceasefire : பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான சேவை 2025 மே 13ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு, லே, அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

PM Modi on India Pakistan Relation: தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக பாய முடியாது.. பாகிஸ்தான் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு!

PM Modi's Strong Warning to Pakistan: பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும், பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் உறுதியாகக் கூறினார்.

PM Modi’s Nation Address: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு.. பிரதமர் மோடி பெருமிதம்!

PM Modi on Operation Sindoor : இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைக்கு தலை வணக்குகிறேன். இந்தியாவின் வலிமையும், பொறுமையையும் நாம் பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திய இந்திய இராணுவத்திற்கு எனது சல்யூட். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Operation Sindoor: பயங்கரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தான்..! இந்தியா மீது தாக்க முயற்சித்ததால் பதிலடி.. இந்திய இராணுவம் விளக்கம்!

India Pakistan Tensions: இந்திய ராணுவம், கடந்த மே 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்துர் குறித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே தாக்கியதாகவும், பாகிஸ்தானின் பதிலடி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையாக செயல்பட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல்கள் தோல்வியடைந்ததாகவும் கூறப்பட்டது.

‘அங்கிருந்து துப்பாக்கி, இங்கிருந்து பீரங்கி’: பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு மோடி உத்தரவு!

Modi's Stern Warning: பாகிஸ்தான் எல்லை மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி ராணுவத்திற்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். "ஆபரேஷன் சிந்துர்" மூலம் ராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு கடும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.. டிஜிஎம்ஓ லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்..!

DGMO Lieutenant General Rajiv Ghai: இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது என அறிவித்தார். பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Operation Sindoor: ராவல்பிண்டி வரை அச்சுறுத்தல்! இதுதான் இந்தியா இராணுவம்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

BrahMos Aerospace Facility Opens in Lucknow: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வசதி இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும். ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

India – Pakistan Tension: பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தம் வரை.. பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்டு கார்கே, ராகுல் கடிதம்!

Special Parliament Session: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இதற்கான ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சி அவசியம் எனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!...
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!...
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!...