Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Operation Sindoor

Operation Sindoor

உலக நாடுகளிடையே போர் என்பது காலம் காலமாக பல்வேறு பிரச்னைகளுக்காக நடந்து வருகிறது. அதில் தவிர்க்க முடியாதது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் தாக்குதல்களாகும். சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. அன்று தொடங்கி 1947 முதல் 2025 வரை பல்வேறு காலக்கட்டங்களில் இருநாட்டுக்கும் இடையே போரானது நடைபெற்றுள்ளது. இருநாடுகளாக பிரிந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் பாகிஸ்தானுக்கு துளியும் விருப்பமில்லாமல் இருந்தது. இதனால் ஏற்பட்ட பகை உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் உருவாக காரணமாக அமைந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர், 2016ல் நடந்த உரி தாக்குதல், 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் என அடுத்தடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

Read More

பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

India-Pakistan Border Tension: இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். "ஆபரேஷன் சிந்து" மூலம் பாகிஸ்தானின் விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் குறிவைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பொய்யான தகவல் பரப்புதலை கண்டித்ததாகவும் அவர் கூறினார்.

300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி – அதிர்ச்சி தகவல்

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் மேற்கு எல்லையில் இந்திய வான்வெளி பகுதியில் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்து இராணுவ உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!

India-Pakistan Border Clash: ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஆந்திர வீரர் முரளி நாயக் வீரமரணமடைந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தியது. பாகிஸ்தானின் டிரோன், ஏவுகணை தாக்குதல்களை இந்தியா S-400 அமைப்பால் முறியடித்தது. முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல் தெரிவித்தார். இந்த மோதல் தொடர்ந்து உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.. வரலாறு மற்றும் பின்னணி என்ன?

India Pakistan wars: பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வது இது முதல் முறை அல்ல, 1947 இந்திய சுதந்திரம் பெற்றது முதல் பல முறை சண்டை வெடித்துள்ளது.

ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா?.. மத்திய அரசு கூறுவது என்ன?

ATM Closure Rumors Debunked by Government | இந்தியா - பாகிஸ்தான் மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் ரேன்சம்வேர் தாக்குதல் காரணமாக இந்தியாவில் மூன்று நாட்கள் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தீவிரமாகும் தாக்குதல்.. .ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!

India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராணுவ தளபதி எப்போது வேண்டுமானாலும் பிராந்திய ராணுவத்தை அழைத்து கொள்ளவும், ஆட்களை சேர்க்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.

இந்தியாவிற்குதான் முன்னுரிமை… கலை காத்திருக்கட்டும் – தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்த கமல் ஹாசன்!

Actor Kamal Haasan: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவிற்குதான் முன்னுரிமை என்றும் கலை காத்திருக்கட்டும் என்று கூறி தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை நடிகர் கமல் ஹாசன் ஒத்தி வைத்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள்.. சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்.. எல்லையில் பரபரப்பு!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக 7 பயங்கரவாதிகளை பாதுகாப்ப படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.

IPL 2025 : இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்… ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

IPL 2025 Suspended : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதி போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் ​​எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. விரைவில் முழு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது

India – Pakistan Conflict : பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

Stock Market Crash, Sensex and Nifty Plunge | இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலால் பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையும் சரிவை சந்தித்துள்ளது.

காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. உதவி எண்களை அறிவித்த அரசு.. மீட்க நடவடிக்கை!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75503 31902, 80690 09901 என்ற எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தள்ளாடும் பொருளாதாரம்.. உலக நாடுகளை உதவிக்கு அழைப்பு.. கதிகலங்கும் பாகிஸ்தான்!

India Pakistan Conflict : பாகிஸ்தான் கடும் அழிவுகளை சந்தித்து வருவதாகவும், இதில் இருந்து மீண்டு வரை உல நாடுகள் நிதியுதவி செய்யுமாறு பாகிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு பொருளதார சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

India – Pakistan Conflict : அரப்பிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இந்திய கடற்படை!

Indian Navy Force took Control of Arabian Sea | இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் விரிசலைடைந்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரபிக்கடலை இந்திய அகடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

ராணுவத்திற்காக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்.. நாளை சென்னையில் மாபெரும் பேரணி!

Tamil Nadu CM MK Stalin : இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2025 மே 10ஆம் தேதியான நாளை மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 10ஆம் தேதி ( நாளை) மாலை 5 மணிக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை பேரணி நடைபெற உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்…. அடுத்து என்ன? டெல்லியில் ராஜ்நாத் சிங் முக்கிய மீட்டிங்!

India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தானுக்கு போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி...
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...