
Operation Sindoor
உலக நாடுகளிடையே போர் என்பது காலம் காலமாக பல்வேறு பிரச்னைகளுக்காக நடந்து வருகிறது. அதில் தவிர்க்க முடியாதது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் தாக்குதல்களாகும். சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. அன்று தொடங்கி 1947 முதல் 2025 வரை பல்வேறு காலக்கட்டங்களில் இருநாட்டுக்கும் இடையே போரானது நடைபெற்றுள்ளது. இருநாடுகளாக பிரிந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் பாகிஸ்தானுக்கு துளியும் விருப்பமில்லாமல் இருந்தது. இதனால் ஏற்பட்ட பகை உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் உருவாக காரணமாக அமைந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர், 2016ல் நடந்த உரி தாக்குதல், 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் என அடுத்தடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
’இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்’ பிரதமர் மோடி பேச்சு
PM Modi On Operation Sindoor : பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியது என்றும் இந்திய ரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jun 24, 2025
- 15:08 pm
PM Modi Meets All-Party Delegation: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. அனைத்து கட்சி குழுக்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி!
Operation Sindoor: பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்த அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை சந்தித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்த குழுவின் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீவிரமான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Jun 10, 2025
- 22:56 pm
BrahMos Missile : அடித்து தூக்கிய பிரம்மோஸ்.. குழப்பத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு!
China Air Defense Weakness : இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான்-சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் துல்லியத் தாக்குதலால், சீனாவின் HQ-9B மற்றும் HQ-16 வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து பாகிஸ்தான் பல கேள்வி எழுப்பியுள்ளது.
- C Murugadoss
- Updated on: Jun 7, 2025
- 09:09 am
CDS Anil Chauhan: எவ்வளவு இழப்பு என்பது முக்கியமல்ல! வெற்றிதான் முக்கியம்.. ஆபரேஷன் சித்தூர் குறித்து ஜெனரல் அனில் சவுகான் விளக்கம்!
Operation Sindoor: ஜெனரல் அனில் சவுகான் புனே பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி குறித்து விளக்கினார். 48 மணி நேர போரை 8 மணி நேரத்தில் முடித்ததாகவும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையும், போர் வெறும் தாக்குதல் மட்டுமல்ல, அரசியலின் ஒரு அங்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
- Mukesh Kannan
- Updated on: Jun 3, 2025
- 17:52 pm
ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
Operation Sindoor All Party delegation Meet PM Modi : ஆபரேஷன் சிந்தூர் எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9,10ஆம் தேதிகளில் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 எம்.பிக்கள் கொண்ட குழு ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்க உலக நாடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: Jun 3, 2025
- 09:51 am
”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!
Indus Water Treaty : சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் விளக்கியது.
- Umabarkavi K
- Updated on: Jun 1, 2025
- 10:45 am
CDS Chauhan on Operation Sindoor: 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!
India-Pakistan Conflict: இந்திய பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கியது, துல்லியமான தாக்குதல்கள், ஆரம்பகால இழப்புகள் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய மாற்றங்கள் பற்றி விளக்கியுள்ளார். அணு ஆயுத பயன்பாட்டின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், மே 7, 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தியா பெருமளவில் பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: May 31, 2025
- 19:09 pm
பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டிய கொலம்பியா – சசி தரூர் அதிர்ச்சி
India's Colombia Trip: இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானியர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.
- Sivasankari Bose
- Updated on: May 30, 2025
- 17:13 pm
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை..! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி!
PM Narendra Modi’s Warning To Pakistan: மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். "ஆபரேஷன் சிந்தூர்" இன்னும் முடியவில்லை என்றும், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் மூன்று முறை ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். பயங்கரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்தார்.
- Mukesh Kannan
- Updated on: May 29, 2025
- 17:37 pm
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர்.. சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்!
Rajasthan Govt official arrest of spying Pakistan : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஷகுர் கான் மங்கானியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தான் தூதுரக அதிகாரி ஒருவரிடம் தொடர்பில் இருப்பதாகவும், 7 முறை பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 29, 2025
- 14:49 pm
வெறும் 45 நிமிடங்கள்.. ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்த ராணுவ வீரர்கள்.. யார் இவர்கள்?
Operation Sindoor Logo : ஆபரேஷன் சிந்தூர் லோகோவை இரு ராணுவ வீரர்கள் வடிவமைத்துள்ளனர். இவர்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அவர்கள் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சிந்தூர் லோகோவை 45 நிமிடங்களில் வடிவமைத்துள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: May 28, 2025
- 08:35 am
தண்ணீர் பஞ்சம்.. பேச்சுவார்த்தைக்கு ரெடி.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்!
India Pakistan Conflict : காஷ்மீர் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும், இந்தியா போர் பாதையைத் தேர்ந்தெடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 27, 2025
- 11:24 am
ஆபரேஷன் சிந்தூர் துவங்கிய 30 நிமிடங்களில் பாகிஸ்தானை தொடர்பு கொண்டோம் – வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
Jaishankar clarifies Pakistan alert timeline : 'ஆப்பரேஷன் சிந்தூர்' தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பின் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு, இந்தியாவின் தாக்குதல் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே என்பதையும் தெரிவித்தோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாராளுமன்ற குழுவில் விளக்கம் அளித்தார்
- Karthikeyan S
- Updated on: May 26, 2025
- 18:49 pm
பாகிஸ்தானுக்காக உளவு.. டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் அதிரடி கைது!
CRPF வீரர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2023 முதல் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும், பாகிஸ்தானிடம் இருந்து நிதி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை வெளியிட்டதாக பலர் கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 26, 2025
- 17:14 pm
PM Modi’s Gujarat Roadshow: குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ.. மலர்தூவி வரவேற்ற கர்னல் சோபியா குடும்பத்தினர்!
Colonel Sophia Qureshi's Family: ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னர் குஜராத்தில் பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். சோபியாவின் தந்தை, சகோதரி மற்றும் தாய் ஆகியோர் பிரதமரின் செயலைப் பாராட்டினர். இந்த நிகழ்வு பெண்களின் சாதனையை பறைசாற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் இந்த ரோடுஷோ 'சிந்தூர் சம்மன் யாத்திரை' என அழைக்கப்பட்டது.
- Mukesh Kannan
- Updated on: May 26, 2025
- 15:11 pm