’இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்’ பிரதமர் மோடி பேச்சு
PM Modi On Operation Sindoor : பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியது என்றும் இந்திய ரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லி, ஜூன் 22 : பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை உலகிற்கு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தெளிவுபடுத்தியது என பிரதமர் மோடி (PM Modi) தெரிவித்துள்ளார். தேசிய நலனுக்காக அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். டெல்லியில் ஸ்ரீ நாராயண் குருதேவ் மற்றும் மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியர்களின் ரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். எந்தவொரு பாகுபாடும் இல்லாத வலுவான இந்தியாவை கொள்கைகளின் அடிப்படையில் தனது அரசாங்கம் வழிநடத்தி வருகிறது.
”இந்தியாவின் உண்மையான பலத்தை உலகம் கண்டது”
கடந்த 11 ஆண்டுகளில் தனது அரசு சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவை வலிமையாக்க பாடுபட்டுள்ளது. இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளை நம்பியிருப்பது குறைந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது.




பஹல்காமில் பயங்கரவாதிகளால் பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தியது.
இந்திய இராணுவம் 22 நிமிடங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வைத்தது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் வரவேற்கப்படும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
பிரதமர் மோடி பேச்சு
New Delhi: Prime Minister Narendra Modi says, “Today, the country is moving on this very path. India is rapidly progressing to become the world’s third-largest economy. Recently, the world witnessed India’s true strength. Operation Sindoor has clearly showcased to everyone… pic.twitter.com/NoTKeAhTqR
— IANS (@ians_india) June 24, 2025
சமீபத்தில், இந்தியாவின் உண்மையான பலத்தை உலகம் கண்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியுள்ளது. இந்திய இரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்” என்று கூறினார்.
ஸ்ரீ நாராயண் குருதேவ் மற்றும் மகாத்மா காந்தியைப் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், “சுதந்திரத்தின் நோக்கத்திற்கும் புதிய அர்த்தத்தை அளித்த ஒரு வரலாற்று நிகழ்வு. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயண் குரு மற்றும் மகாத்மா காந்தியின் அந்த சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சந்திப்பு, சமூக நல்லிணக்கத்திற்கும், வளர்ந்த இந்தியாவின் கூட்டு இலக்குகளுக்கும் இன்னும் ஒரு சக்தியாக உள்ளது” என்று கூறினார்.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டியது. இதனை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. அதன்பிறகு, பயங்கரவாதிகள் முகாம்மிகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.