AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ரத்தா? பைனலுக்கு யார் தகுதி?

South Africa vs Newzealand: ஐ.சி.சி விதிகளின்படி, அரையிறுதி ரத்து செய்யப்பட்டால், இறுதி போட்டியானது சூப்பர் 8 சுற்றின் முடிவில் குரூப் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு வழங்கப்படும். சூப்பர் 8 இன் குரூப் ஏ-யில் முதலிடத்தில் இருந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

T20 World Cup 2026: தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ரத்தா? பைனலுக்கு யார் தகுதி?
தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Mar 2026 09:40 AM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதல் அரையிறுதிப் போட்டி (Semi Final) தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது நாளை அதாவது 2026 மார்ச் 4 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். சூப்பர் 8 இன் குரூப் ஏ-யில் முதலிடம் பிடித்து தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் முதல் அணியாக தனது இடத்தைப் பிடித்தது. இதற்கிடையில், நியூசிலாந்து, குரூப் பி-யில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போது இந்த இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதி போட்டி எந்த தடையும் இன்றி நடந்தால், ஏதேனும் ஒரு போட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இந்த போட்டி ஏதாவது காரணத்தால் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டால் எந்த அணி இறுதிப் போட்டியில் விளையாடும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி.. மழை பெய்தால் யாருக்கு சாதகம்..? விதிகள் கூறுவது என்ன?

தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?


2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் , மழை காரணமாக ரிசர்வ் நாளுக்குப் பிறகும் போட்டி முடிவடையவில்லை என்றால், போட்டி கைவிடப்பட்டதாக கருதப்படும். ஐசிசி விதிகளின்படி, அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், குரூப் 1ல் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

அதாவது, ஐ.சி.சி விதிகளின்படி, அரையிறுதி ரத்து செய்யப்பட்டால், இறுதி போட்டியானது சூப்பர் 8 சுற்றின் முடிவில் குரூப் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு வழங்கப்படும். சூப்பர் 8 இன் குரூப் ஏ-யில் முதலிடத்தில் இருந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  இதற்கிடையில், நியூசிலாந்து அணி குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் இருந்த அணியாகும்.

ALSO READ: 3வது முறையாக அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. இதுவரை யார் ஆதிக்கம்?

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி யாருக்கு சாதகம்?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், இதே விதிகள் பொருந்தும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், சூப்பர் 8 பிரிவில் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us