Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டிய கொலம்பியா – சசி தரூர் அதிர்ச்சி

India's Colombia Trip: இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானியர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.

பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டிய கொலம்பியா – சசி தரூர் அதிர்ச்சி
ஆபரேஷன் சிந்தூரை நேரில் விளக்க எம்பிக்கள் குழுவுடன் வெளிநாடு பயணம் Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 30 May 2025 17:13 PM

கொலம்பியா மே 30: பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வெளிநாடுகளுக்கு விளக்குவதற்காக, இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை (Group of Members of Parliament of India) அமைத்து, அவற்றை வெளிநாடு பயணத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த அணியில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் (Former Union Minister Shashi Tharoor) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சசி தரூர் தலைமையிலான குழு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்குச் சென்று அங்குள்ள அரசுத் தரப்பினருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை விளக்கி, சிந்து நதி ஒப்பந்தம் மீதான மறுபரிசீலனை பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்திய பின்னரே சாத்தியம் எனவும் தரூர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அனுதாபம் – கொலம்பியாவின் வாக்குமூலம் அதிர்ச்சி: சசி தரூர்

இந்த சந்திப்பின் போது, கொலம்பியா அரசு, இந்திய தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தானியர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது. இதனால் இந்திய எம்பிக்கள் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான எந்தவிதமான அனுதாபமும் அவர்கள் காட்டவில்லை என சசி தரூர் தெரிவித்து, இது தவறான சிந்தனையை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் ஆதரவு தந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இந்திய அரசிடம் உள்ளன. இது இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். கொலம்பியாவில் இந்த நிலைப்பாட்டை விளக்க சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நாங்கள் மகிழ்கிறோம்,” என்றார்.

கொலம்பியாவில் சசி தரூரின் உரையால்

 சிந்து நதி ஒப்பந்தம் மீதான மறுபரிசீலனை – பயங்கரவாதம் தொடரும் வரை வாய்ப்பு இல்லை

சசி தரூர் தொடர்ந்து கூறியதாவது, “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ல் அமலுக்கு வந்தது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கி வருகிறது. நாங்கள் இதை பொறுமையுடன் சகித்தோம். ஆனால் பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் பகிர்வு நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை கைவிட்டு, உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்யவே இல்லை” என்றார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் நோக்கம் – தாக்குதல் தான், தற்காப்பு அல்ல

மேலும் அவர், “பாகிஸ்தானிடம் உள்ள ராணுவ தளவாடங்களில் 81 சதவிகிதம் சீனாவில் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவம் தற்காப்புக்காக அல்ல; தாக்குதலுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பொதுமக்கள் அல்ல. அவர்கள் மீது கொண்ட அனுதாபம் தவறானது. இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக உலகிற்கு விளக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம்,” எனத் தெரிவித்தார்.

இந்த சுற்றுப் பயணம் மூலம், இந்தியா பயங்கரவாதத்தை எதிர்க்கும் உறுதியான நிலைப்பாட்டை சர்வதேச அளவில் வலியுறுத்தும் முயற்சி மேற்கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு அழைப்பு, ஆனால் கூட்டணி இல்லை – பாஜக திட்டம் என்ன?
விஜய்க்கு அழைப்பு, ஆனால் கூட்டணி இல்லை – பாஜக திட்டம் என்ன?...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?...
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?...
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!...
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!...
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?...
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?...
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!...
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!...
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!...
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!...