CDS Anil Chauhan: எவ்வளவு இழப்பு என்பது முக்கியமல்ல! வெற்றிதான் முக்கியம்.. ஆபரேஷன் சித்தூர் குறித்து ஜெனரல் அனில் சவுகான் விளக்கம்!
Operation Sindoor: ஜெனரல் அனில் சவுகான் புனே பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி குறித்து விளக்கினார். 48 மணி நேர போரை 8 மணி நேரத்தில் முடித்ததாகவும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையும், போர் வெறும் தாக்குதல் மட்டுமல்ல, அரசியலின் ஒரு அங்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

புனே, ஜூன் 3: புனே பல்கலைக்கழகத்தில் (Pune University) எதிர்காலப் போர் மற்றும் போர் என்ற தலைப்பில் உரையாற்றிய பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் (CDS Anil Chauhan), ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியா 48 மணிநேரப்போரை வெறும் 8 மணிநேரத்தில் முடித்ததாகவும், இந்த நேரத்தில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்ததாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை போர் என்பது வெறும் தாக்குதல் மட்டுமல்ல, அரசியலின் ஒரு பகுதி என்பதையும் காட்டுகிறது என்றார்.
சிந்தூர் ஆபரேஷன் குறித்து பேசிய சிடிஎஸ் அனில் சவுகான்:
சிந்தூர் ஆபரேஷன்போது இந்திய ஆயுதப்படைகள் சந்தித்த இழப்புகள் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த தலைமை தளபதி அனில் சவுகான், “ ஒரு கிரிக்கெட் அணியில் ஒரு போட்டியில் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பது முக்கியம். ஒரு அணி வெற்றி பெறும்போது, எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை. தொழில்முறை சக்திகளாகிய நாம் இழப்புகள் மற்றும் பின்னடைவுகளால் பாதிக்கப்படுவதில்லை. நமது தவறுகளை புரிந்துகொண்டு அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும், திரும்பிப் பார்க்கக் கூடாது.




சிந்தூர் ஆபரேஷனின்போது போரும் அரசியலும் ஒன்றாகவே நடந்தது. நமது எதிரிகள் (பாகிஸ்தான்) நோக்கம் என்பது, ஆயிரக்கணக்கான காயங்களை ஏற்படுத்தி இந்தியாவை இரத்தம் சிந்த செய்வதாகும். பஹல்காமில் நடந்ததற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிராக விஷயத்தை கக்கினார். 1966ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும்போது, சுல்பிகர் அலி பூட்டோ இந்தியாவிற்கு எதிராக ஆயிரம் ஆண்டுகால போரை அறிவித்தார். அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான புதிய பாதையை வரைந்துள்ளோம். ” என்றார்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை:
#WATCH | Pune | Chief of Defence Staff (CDS) General Anil Chauhan says, “…On the 10th of May, at about 1 am, their (Pakistan) aim was to get India to its knees in 48 hours. Multiple attacks were launched and in some manner, they have escalated this conflict, which we had… pic.twitter.com/hBqlz912cU
— ANI (@ANI) June 3, 2025
தொடர்ந்து பேசிய ஜெனரல் அனில் சவுகான், “கடந்த 2025 மே 7ம் தேதி பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு நாங்கள் பாகிஸ்தானுக்கு தேவையான தகவலை தெரிவித்தோம். பாகிஸ்தான் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பாகிஸ்தான் நம்மை தாக்கினாலோ, இந்திய இராணுவத்தை தாக்கினாலோ, நாங்களும் பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை மேலும் பலமாக தாக்குவோம் என்று கூறியிருந்தோம்.
தொடந்து, 2025 மே 10ம் தேதி அதிகாலை 1 மணியளவில் பாகிஸ்தான் 48 மணிநேரத்தில் இந்தியாவை மண்டியிட வைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இதனால், இந்தியா மீது பல தாக்குதலை நடத்த முயற்சிகள் நடந்தது. அதையெல்லாம், முறியடித்தோம். எங்களது நோக்கம் என்பது பயங்கரவாத மறைவிடங்களை அழிப்பது மட்டுமே. 48 மணிநேரம் நீடிக்கும் என்று பாகிஸ்தான் நினைத்த தாக்குதல்களை சுமார் 8 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. பின்னர், பாகிஸ்தான் தொலைபேசி மூலம் சமரசம் பேசி தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தார்.