Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Nainar Nagendran

Nainar Nagendran

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனாவார். இவர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள தண்டையார்குளம் என்ற ஊரில் பிறந்தார். திருநெல்வேலி மக்களால் அன்போடு பண்ணையார் என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர். ஆரம்பத்தில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்த அவர் 2001 ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து,தொழில், மின்சாரம், கிராமப்புற தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் தோற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதேசமயம் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது மாநில தலைவராக பதவியேற்றுள்ளார். அவர் பற்றிய செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

டெல்லியில் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை.. அதிமுகவிடம் 54 தொகுதிகள் கேட்க முடிவு!!

BJP decides to demand 54 constituencies: பாஜக 54 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகளை பட்டியலிட்டு, சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

தேங்காய் விவசாயிகளுக்கான சூப்பர் நியூஸ்.. தோள் கொடுக்கும் பிரதமர் – நயினார் நாகேந்திரன்..

Coconut Farmers: 2018–19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அனைத்து பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதன்படி, 2026 பருவத்திற்காக நியாயமான சராசரி கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,277 ஆகவும், பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,500 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து

Rajinikanth birthday: மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்டாக்காரன் என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன்..

Nainar Nagendran: அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!

Free Laptops For College Students: திமுக அரசு ஆட்சிக்கு வந்து 55 மாதங்களாக தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சொன்ன, மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தற்போது அறிவிப்பது ஏன் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சட்டத்தை மதிக்காத ஆட்சியை தொடரவிடக்கூடாது”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!!

Thiruparankundram issue: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். இதில், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணைந்தனர். அதோடு, அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் அவருடன் தவெகவில் இணைந்தார். அவர்களுக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, பாஜக மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்ல… பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம்… – தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

Nainar Nagendran Replies to TVK : திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

Nainar Nagendran: அரியலூர் மாவட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..

Nainar Nagendran On Madurai: பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான மர்மம் எப்போது விலகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டும் – அண்ணாமலை பேச்சு

2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் நயினார் இன்று முதல் பரப்புரையை தொடங்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டுமென தெரிவித்தார்