AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Nainar Nagendran

Nainar Nagendran

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனாவார். இவர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள தண்டையார்குளம் என்ற ஊரில் பிறந்தார். திருநெல்வேலி மக்களால் அன்போடு பண்ணையார் என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர். ஆரம்பத்தில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்த அவர் 2001 ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து,தொழில், மின்சாரம், கிராமப்புற தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் தோற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதேசமயம் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது மாநில தலைவராக பதவியேற்றுள்ளார். அவர் பற்றிய செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? சவால் விடுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள் – நயினார் நாகேந்திரன் கேள்வி..

அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர், நட்டநடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால், துறை எப்படி முன்னேறும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி அதிகரிக்கும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் பலி.. “முதல்வர் விஜய் நேரில் செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது”.. நயினார் நாகேந்திரன் சாடல்!!

தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகப் புகாரளித்துள்ள நயினார் நாகேந்திரன், அதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த சில அதிர்ச்சித் தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23, 2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!

Bjp Leader Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைப்பதற்காக எந்தெந்த கட்சிகளுடன் தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான பட்டியலை வெளியிடவா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Nainar Nagendran Condemned: திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் தீப எற்றுவதறக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக அரசு மேல் முறையீடு செய்யதாக கூறப்படும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சின் மாநில தலைரர் நயினார் தெரவித்தா்.

பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த பாட்டி வரை பாதுகாப்பில்லை.. ஈரோடு மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு நயினார் கண்டனம்!

Erode Elderly Woman Harassment: ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி இரு போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை என்று தவெக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!

Union Home Minister Amit Shah : மத்திய உள்துறை அமித் ஷா ஜூலை 2- ஆவது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகையின்போது, தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்களி நிகழ போவதாக கூறப்படுகிறது .

பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி கைது.. சட்டம் ஒழுங்கு எங்கே? நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு!

Tiruvarur TVK Offical Arrest : திருவாரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உள்பட இருவர் 22 வயது இளம் பெண்ணிடம் அத்து மீறிய சம்பவத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தவெக ஆட்சியில் 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வர் ஜோசப் விஜய் ப்ரோ! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Nainar Nagendran Criticizes CM Vijay: தமிழகத்தில் கடந்த 48 மணி நேர்த்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Nainar Nagendran Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமையை ஆரம்பித்தால் தடுக்காவிட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..

சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வும், தவெக அமைச்சருமான நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார். தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கொடுக்கிறார் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

வேறு எந்த கட்சிக்கும் செல்ல வேண்டாம் என கட்சியினரிடம் கூறியுள்ளேன்.. நயினார் நாகேந்திரன் பேச்சு!

உலகின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. நம்மிடம் உலகின் நம்பர் 1 தலைவர் இருக்கிறார். எனவே வேறு எந்த கட்சிக்கோ இயக்கங்களுக்கோ செல்ல வேண்டாம் என்று கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!

Nainar Nagendran : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்ணாமலை விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக பாஜகவின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், கட்சி, அண்ணாமலை குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தார் .

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் – நயினார் நாகேந்திரன்..

நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை” என்றார்.