Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Nainar Nagendran

Nainar Nagendran

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனாவார். இவர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள தண்டையார்குளம் என்ற ஊரில் பிறந்தார். திருநெல்வேலி மக்களால் அன்போடு பண்ணையார் என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர். ஆரம்பத்தில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்த அவர் 2001 ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து,தொழில், மின்சாரம், கிராமப்புற தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் தோற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதேசமயம் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது மாநில தலைவராக பதவியேற்றுள்ளார். அவர் பற்றிய செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக பிளான் என்ன?

Amit Shah Tamil Nadu Visit : மத்திய உள்துறை அமித் ஷா 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி (நாளை) தமிழகத்திற்கு வருகை தருகிறார். திருநெல்வேலியில் நாளை நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். மேலும், தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

திமுக கூட்டணிக்குள் சிக்கி தவிக்கிறார் திருமாவளவன்.. நயினார் நாகேந்திரன் பளீச் பதில்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், பற்றும் உள்ளது. திமுக கூட்டணிக்குள் திருமாவளவன் சிக்கி தவிக்கிறார். திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று திருமாவளவனின் மன வருத்தத்தின் வெளிப்பாடு இது” என்று தெரிவித்தார்.

கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!

AIADMK BJP Alliance : அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், கூட்டணிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இப்படியான சூழலில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் ஒரே மேடையில் ஏறுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

79வது சுதந்திர தினம்.. பாஜக சார்பில் ஒரு வாரம் கொண்டாட்டம் தொடக்கம்!

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் தமிழக பாஜக சார்பில் சேவை வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியேற்றி வைத்து கைவினைப் பொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாக, அதன் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்தியா என்னும் நாடு இருக்கும் வரை பாஜக ஆட்சிதான்.. சிவகாசியில் நயினார் நாகேந்திரன் பேச்சு!

சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

நான் மெசேஜ் அனுப்பவில்லையா? ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரனுக்கு பதில்

O panneerselvam Sent Message To Nainar Nagendran : தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காண்பித்துள்ளார். 2025 ஜூலை 24, ஏப்ரல் 12ஆம் தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Nainar Nagendran: ஓபிஎஸ் அணியை சமாதானம் செய்ய முயற்சி? – நயினார் நாகேந்திரன் பதில்!

ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் விருப்பப்பட்டால் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குஷ்புவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக பாஜகவில் நிர்வாகிகள் நியமனம்.. அதிரடி அறிவிப்பு

Tamil Nadu BJP Vice President Kushboo : தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. வரவேற்க பாஜக போடும் பிரமாண்ட பிளான்!

2025,ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளார். புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கும் அவரை வரவேற்க தமிழக பாஜக மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ராஜேந்திர சோழன் போல உலகநாடுகளிடையே பிரதமர் மோடி வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

’வருங்கால துணை முதல்வரே’ பதறிய நயினார் நாகேந்திரன்.. நிர்வாகி செய்த சம்பவம்!

Tamil Nadu BJP Chief Nainar Nagendran : வருங்கால துணை முதல்வரே என மேடையில் நயினார் நாகேந்திரனை பாஜக நிர்வாகி வரவேற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையிலேயே, தன்னை துணை முதல்வர் என்றெல்லாம் சொல்லக் கூடாது என நயினார் நாகேந்திரன் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை துணை முதல்வர் என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை திருவல்லிக்கேணியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை சந்திக்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நியாயம் கேட்டும் ஆசிரியர்களை கைது செய்தது அராஜகமான செயல். திமுக அரசு அளித்த வாக்குறுதியில் இருந்ததை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். நிரந்தர பணி நியமனம் என்ன ஆனது” என்று கேள்வி எழுப்பினார்.

‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ அமித் ஷா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

Edappadi Palanisamy On AIADMK BJP Alliance : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா மீண்டும் கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா

AIADMK BJP Alliance : தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என மத்திய உள்துறை அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைவர்கள் மறுத்து வரும் நிலையில், மீண்டும் அமித் ஷா திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்.. நயினார் நாகேந்திரன் பேட்டி!

பாஜகவின் டம்மி வாய்ஸ்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு மதுரை விமான நிலையத்தில் பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி பேச வேண்டியதை சரியாக பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

’தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி’ கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு

AIADMK BJP Alliance : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுபோன்று கூறியிருக்கிறார்.