பிப்ரவரி 7 அன்று கலிபோர்னியாவின் சாண்டா க்ரூஸ் லைட்ஹவுஸ் அருகே ஒரு சிறிய படகு கவிழ்ந்தபோது, அருகில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த உள்ளூர் சர்ஃபர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களை கடலில் இருந்து காப்பாற்றினர். மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே இந்த துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதியம் சுமார் 12 மணியளவில் படகு கவிழ்ந்ததாக சாண்டா க்ரூஸ் போலீசாரிடமிருந்து தகவல் கிடைத்ததாக அமெரிக்க கடற்கரை காவல்படை தெரிவித்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் மற்றும் சிறிய படகு மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.