Anbumani Ramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.
‘5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ, அமைச்சராக போகிறீர்கள்’.. பரபரப்பை கிளப்பிய அன்புமணி!
Anbumani ramadoss; ஏற்கெனவே, பாமக 2 அணிகளாக பிரிந்து உள்ளது. ஆனால், அன்புமணி ராமதாஸ் அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல், தேர்தல் பணிகளை பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டார். எனினும், கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே, தேர்தலில் அவர்கள் நினைத்தது நடக்கும் சூழல் ஏற்படும் என்கின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 13, 2025
- 15:48 pm IST
‘வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுங்க’ டிச.17ல் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்!
ஏற்கெனவே, கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்போம் என்றும், எங்களுக்கு தேர்தல் நேரத்தில் சீட்டு வேண்டாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம் எனவும் தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் எச்சரித்திருந்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 12, 2025
- 15:34 pm IST
அன்புமணியை அமைச்சராக்கியது தவறு: வேதனை வெளிப்படுத்திய ராமதாஸ்!!
PMK Intrenal issue: ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை அன்புமணி ஆதரவாளர்கள், வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல், அடிதடி தாக்குதல் வரை சென்றுள்ளது. இவ்விவகாரத்தில், இருதரப்பு மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 6, 2025
- 12:16 pm IST
‘ராமதாஸூடன் இணைய மாட்டேன்’ காரணம் சொல்லி பரபரப்பை கிளப்பிய அன்புமணி!!
Pmk internal issue: பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து, கட்சி ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் போட்டி போட்டு இழுத்து வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 5, 2025
- 07:46 am IST
கூட்டணி பேச்சுவார்த்தை.. சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி ராமதாஸ்!!
Anbumani ramadoss about alliance: சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தற்போது அதுபற்றி கூற முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது, பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை தேர்தலை சந்தித்த அக்கட்சி, இம்முறை திமுகவுடன் கைக்கோர்க்குமா? அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்குமான என்ற கேள்வி எழுந்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Oct 31, 2025
- 08:53 am IST
சாக்கடையாக மாறிய ஆறுகள் – திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும் அன்புமணி மறுபக்கம் தமிழகத்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவை பயணத்தில் பேசிய அன்புமணி, திமுக ஆட்சியில் ஆறுகள் சாக்கடையாக மாறிவிட்டதாக தெரிவித்தார்
- C Murugadoss
- Updated on: Oct 26, 2025
- 13:42 pm IST
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..
Bomb Threat To Ramadoss House: அக்டோபர் 19, 2025 அன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி வசிக்கும் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 19, 2025
- 16:38 pm IST
கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..
Ramadoss vs Anbumani: என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அவர் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி தொடங்கலாம். இதுவரை எட்டு மாதங்களில் மூன்று முறை நான் தனிக் கட்சி தொடங்குமாறு சொல்லியுள்ளேன் என ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 17, 2025
- 07:52 am IST
‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!
Anbumani Ramadoss : 2025 அக்டோபர் 5ஆம் தேதி இருதய பிரச்னை காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, யார் யாரோ ராமதாஸை சந்தித்ததாகவும், ராமதாஸ் அய்யாவுக்கு எதாச்சு ஆனால் தொலைச்சிடுவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 10, 2025
- 16:26 pm IST
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. பார்க்க சென்ற அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் பாமக கட்சித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை தற்போது மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறினார்.
- Mukesh Kannan
- Updated on: Oct 6, 2025
- 23:26 pm IST
மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!
Ramadoss Hospitalized : உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். மேலும், ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் அன்புமணி கேட்டறிந்தார்.
- Umabarkavi K
- Updated on: Oct 6, 2025
- 09:27 am IST
அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என சொன்ன அன்புமணி.. காட்டமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. நடந்தது என்ன?
செப்டம்பர் 30, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் […]
- Aarthi Govindaraman
- Updated on: Sep 30, 2025
- 06:40 am IST
மாம்பழச் சின்னம் வைத்து ஜப்பானில் கூட போட்டியிடட்டும் – அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்..
PMK Ramadoss: பீகார் மாநில தேர்தலில் பாமக போட்டியிடுவது தொடர்பாக பேசிய ராமதாஸ், “ பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து அன்புமணி தரப்பு மாம்பழச் சின்னம் பெற்றுள்ளனர். பீகாரிலே அல்ல, மொரீஷியஸ், தென் கொரியா, ஜப்பான் கூட போய் மாம்பழச் சின்னத்தில் நிற்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 26, 2025
- 11:57 am IST
ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிர்ச்சியில் ராமதாஸ்.. பாமகவில் பரபரப்பு
PMK Internal Issue : சட்டப்பேரவையில் பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக ஜி.கே மணி இருந்தார். இந்த நிலையில், அவரின் கட்சி பொறுப்பை பறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை புதிய தலைவராக அன்புமணி நியமித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலரிடம் வழக்கறிஞர் பாலு கடிதம் கொடுத்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 25, 2025
- 14:09 pm IST
நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..
Robo Shankar Demise: நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமலை நோயால் பாதிகப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 19, 2025
- 07:59 am IST