AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!

Anbumani Latest Pressmeet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது என்றும், அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் பாமக செயல்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், மகனுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதை பார்க்கலாம்.

“அரசியலில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்”.. ராமதாஸ் அறிவிப்பு

PMK founder Ramadoss political retirement: மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் பாமக அன்புமணி வசம் மொத்தக் கட்சியையும் ஒப்படைப்பதாகத் தனது 88-வது பிறந்தநாளில் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிர உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து முற்றிலும் விலகும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது… பாமக தலைவர் அன்புமணி!

Mekedatu Issue: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

முடிவுக்கு வந்த தந்தை – மகன் மோதல் – வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். மேலும் தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!

PMK leader Anbumani: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது என்று அந்த கட்சியை சேர்ந்த அருள் தரப்பினர் போர் கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அருள் பல்வேறு காரணங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..

இந்த நிகழ்ச்சியில் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் பேட்மிண்டன் விளையாடினர். பின்னர் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?”… பாமகவில் அடுத்த சலசலப்பு.. அவசரக் கூட்டம் கூட்டும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்!

PMK Arul: பாமக-வின் முன்னாள் எம்.எல்.ஏ அருள் நாளை சேலத்தில் தனது 2000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அன்புமணி ராமதாஸ் தரப்புடன் பிற நிர்வாகிகள் இணையும் வேளையில், தங்களது தனித்துவமான அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை நாளைக்கே அறிவிக்கப் போவதாக அருள் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு.. 45 நிமிடம் நடந்தது என்ன?

Anbumani Meet Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி இன்று இரவு திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில், என்ன பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உரசும் விசிக.. நெருங்கும் பாமக.. தவெக கூட்டணியின் அதிரடி நகர்வுகள்.. அடுத்தடுத்த ட்விஸ்ட்!!

தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. பாமக தவெக-வை நோக்கித் தனது அரசியல் காய்களை நகர்த்தி வரும் சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே விசிக எடுத்துள்ள நிலைப்பாடு கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதன் முழுப் பின்னணி இந்தத் தொகுப்பில்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி.. தற்போதைய நிலை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்புதான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணையும் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாமக-வில் நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி?.. ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு.. ஜி.கே.மணியின் ரியாக்ஷன்!!

கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்தும், கட்சியில் நிலவும் இரட்டை மாவட்டச் செயலாளர்கள் போன்ற நிர்வாகக் குழப்பங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜி.கே.மணி, "தற்போது மருத்துவர் ஐயா அவர்களும், அன்புமணி அவர்களும் சந்தித்திருப்பதுதான் மிக முக்கியமான செய்தி. மேற்கொண்டு கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இனி நல்லது நடக்கும்.. அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்..

Anbumani Meets Ramadoss: தந்தையின் திருமண நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "இனி நல்லது நடக்கும்" எனத் தெரிவித்தார்.

“ஜென்சி தலைமுறையினருக்கு மேதாது பிரச்சனை பற்றிய புரிதல் இல்லை”.. அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தை!!

கர்நாடக அரசு இதுவரை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையோ ஒருமுறை கூட மதித்தது கிடையாது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய்யின் வருகைக்காக வாசலில் காத்திருந்த அன்புமணியும், சௌமியா அன்புமணியும்..

முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியா அன்புமணி ராமதாஸும் வாசலுக்கே வந்து நேரில் வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸ், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..

முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியா ராமதாஸும் வாசலுக்கே வந்து நேரில் வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸ், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.