Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More
0

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..

Bomb Threat To Ramadoss House: அக்டோபர் 19, 2025 அன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி வசிக்கும் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..

Ramadoss vs Anbumani: என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அவர் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி தொடங்கலாம். இதுவரை எட்டு மாதங்களில் மூன்று முறை நான் தனிக் கட்சி தொடங்குமாறு சொல்லியுள்ளேன் என ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!

Anbumani Ramadoss : 2025 அக்டோபர் 5ஆம் தேதி இருதய பிரச்னை காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, யார் யாரோ ராமதாஸை சந்தித்ததாகவும், ராமதாஸ் அய்யாவுக்கு எதாச்சு ஆனால் தொலைச்சிடுவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. பார்க்க சென்ற அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் பாமக கட்சித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை தற்போது மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறினார்.

மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!

Ramadoss Hospitalized : உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். மேலும், ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் அன்புமணி கேட்டறிந்தார்.

அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என சொன்ன அன்புமணி.. காட்டமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. நடந்தது என்ன?

செப்டம்பர் 30, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் […]

மாம்பழச் சின்னம் வைத்து ஜப்பானில் கூட போட்டியிடட்டும் – அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்‌ஷன்..

PMK Ramadoss: பீகார் மாநில தேர்தலில் பாமக போட்டியிடுவது தொடர்பாக பேசிய ராமதாஸ், “ பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து அன்புமணி தரப்பு மாம்பழச் சின்னம் பெற்றுள்ளனர். பீகாரிலே அல்ல, மொரீஷியஸ், தென் கொரியா, ஜப்பான் கூட போய் மாம்பழச் சின்னத்தில் நிற்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிர்ச்சியில் ராமதாஸ்.. பாமகவில் பரபரப்பு

PMK Internal Issue : சட்டப்பேரவையில் பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக ஜி.கே மணி இருந்தார். இந்த நிலையில், அவரின் கட்சி பொறுப்பை பறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை புதிய தலைவராக அன்புமணி நியமித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலரிடம் வழக்கறிஞர் பாலு கடிதம் கொடுத்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

Robo Shankar Demise: நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமலை நோயால் பாதிகப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவராக அன்புமணிக்கே அதிகாரம்.. தேர்தல் ஆணையம் கடிதம் குறித்து பாமக பாலு விளக்கம்!

பாமகவின் உண்மையான அதிகாரம் யாருக்கு உள்ளது என்று பாமக வழக்கறிஞர் பாலு இன்று அதாவது 2025 செப்டம்பர் 15ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதன்படி, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸே தொடரச் செய்யும் தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மட்டுமின்றி, அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.” என்று தெரிவித்தார். 

பாமக தலைவர் அன்புமணி தான்… அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.. வழக்கறிஞர் பாலு பேட்டி!

PMK Internal Issues : பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாகவும், அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் தான் கட்சியின் கொடியை பயன்படுத்த முடியும் எனவும் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில், பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கிய நிலையில், தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது.

‘ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை’ அன்புமணி நீக்கம் குறித்து வழக்கறிஞர் பாலு பேச்சு

PMK Internal Issues : பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாமகவை கட்டுப்படுத்த ராமதாஸுக்கு அதிகாரமில்லை எனவும் கட்சி விதி மற்றும் தேர்தல் ஆணைய விதியின்படி, இது செல்லாது எனவும் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு

Anbumani Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணி வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் எனவும் தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு கொடுத்த கெடு.. கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கும் ராமதாஸ்?

PMK Ramadoss: அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் 10, 2025க்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணி பதில் அளிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..

Ramadoss Campaign: அன்புமணி தரப்பில் "100 நாள் நடைபயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். அன்புமணி தரப்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸும் "கிராமங்களை நோக்கி" என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கினார்.