
Anbumani Ramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.
Anbumani Ramadoss: யாருக்கும் யாரும் அடிப்பணிந்தவர்கள் கிடையாது.. அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளிடம் பேச்சு!
PMK Internal Rift: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கியதாக அறிவித்த நிலையில், அன்புமணி, பொதுக்குழுவால் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jun 1, 2025
- 17:15 pm
PMK Intra-Party Row: பாமக கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்! ராமதாஸ் நம் குலதெய்வம்.. தந்தையை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!
Anbumani Ramadoss Addresses PMK Crisis: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளை இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். ராமதாஸ் குறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, அன்புமணி, அய்யா ராமதாஸை குலதெய்வம் எனக் குறிப்பிட்டு, கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றி வெற்றி பெறுவோம் என உறுதியளித்தார். கட்சி அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், சமீபத்திய குழப்பங்களைத் தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: May 31, 2025
- 15:26 pm