Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்.. தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் – அன்புமணி காட்டம்..

Anbumani Statement: ஊழல் குறித்தும், ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்ட இரு ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெறச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..

PMK Internal Issue: பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராமதாஸ் மகன் என்பதைத்தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. விரைவில் மாம்பழச் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது”.. அன்புமணி தரப்பு பளார்!!

அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லி போலீஸ் துணை ஆய்வாளரிடம், ராமதாஸ் சார்பில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று புகார் மனு அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை என அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவின் தலைவர் அன்புமணி தான் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Anbumani Ramadoss : கடந்த சில மாதங்களாக பாமக தலைவர் யார் என்பதில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி தான் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. சேலம் அருகே பரபரப்பு!!

திமுக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சர்வ சாதாரணமாக துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு தமிழ்நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படியும் இங்கு சாதாரணமாக படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

+2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்ததால் +2 மாணவி ஒருவர் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் முனிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சித்துள்ளனர்.

‘5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ, அமைச்சராக போகிறீர்கள்’.. பரபரப்பை கிளப்பிய அன்புமணி!

Anbumani ramadoss; ஏற்கெனவே, பாமக 2 அணிகளாக பிரிந்து உள்ளது. ஆனால், அன்புமணி ராமதாஸ் அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல், தேர்தல் பணிகளை பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டார். எனினும், கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே, தேர்தலில் அவர்கள் நினைத்தது நடக்கும் சூழல் ஏற்படும் என்கின்றனர்.

‘வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுங்க’ டிச.17ல் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்!

ஏற்கெனவே, கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்போம் என்றும், எங்களுக்கு தேர்தல் நேரத்தில் சீட்டு வேண்டாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம் எனவும் தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் எச்சரித்திருந்தார்.

அன்புமணியை அமைச்சராக்கியது தவறு: வேதனை வெளிப்படுத்திய ராமதாஸ்!!

PMK Intrenal issue: ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை அன்புமணி ஆதரவாளர்கள், வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல், அடிதடி தாக்குதல் வரை சென்றுள்ளது. இவ்விவகாரத்தில், இருதரப்பு மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

‘ராமதாஸூடன் இணைய மாட்டேன்’ காரணம் சொல்லி பரபரப்பை கிளப்பிய அன்புமணி!!

Pmk internal issue: பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து, கட்சி ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் போட்டி போட்டு இழுத்து வருகின்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை.. சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி ராமதாஸ்!!

Anbumani ramadoss about alliance: சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தற்போது அதுபற்றி கூற முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது, பல்வேறு  வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை தேர்தலை சந்தித்த அக்கட்சி, இம்முறை திமுகவுடன் கைக்கோர்க்குமா? அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்குமான என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாக்கடையாக மாறிய ஆறுகள் – திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும் அன்புமணி மறுபக்கம் தமிழகத்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவை பயணத்தில் பேசிய அன்புமணி, திமுக ஆட்சியில் ஆறுகள் சாக்கடையாக மாறிவிட்டதாக தெரிவித்தார்

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..

Bomb Threat To Ramadoss House: அக்டோபர் 19, 2025 அன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி வசிக்கும் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..

Ramadoss vs Anbumani: என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அவர் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி தொடங்கலாம். இதுவரை எட்டு மாதங்களில் மூன்று முறை நான் தனிக் கட்சி தொடங்குமாறு சொல்லியுள்ளேன் என ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!

Anbumani Ramadoss : 2025 அக்டோபர் 5ஆம் தேதி இருதய பிரச்னை காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, யார் யாரோ ராமதாஸை சந்தித்ததாகவும், ராமதாஸ் அய்யாவுக்கு எதாச்சு ஆனால் தொலைச்சிடுவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.