AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?.. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்.. காரணம் என்ன?

PMK Anbumani Ramadoss: சென்னையில் கடுமையான இடநெருக்கடி நிலவும் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 26 ஏக்கரில் 15 மாடி கட்டிடம் அமைப்பது சாத்தியமற்றது என்றும், சென்னைக்கு வெளியே தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அருகே 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை – அரசின் தோல்வி… அன்புமணி கண்டனம்

ATM Robberies in Chennai : சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 இடங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளன. வட மாநிலக் கொள்ளையர்களின் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாமக தலைவர் அன்புமணியுடன் சந்திப்பு.. அரசியல் பின்னணி என்ன?

அரூர் தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ வேலழகன், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ மோகன், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பழனிசாமி மற்றும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஆகியோர், தங்களது வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாகக் கூறி, அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக MLA-க்கள் எண்ணிக்கை 351- ஆக உயரும்.. தொகுதி மறுவரையறையால் மெகா மாற்றம்.. அன்புமணி கணிப்பு!

Anbumani On Constituency Delimitation : மக்களவை தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 351- ஆக உயரும் எனவும், இதில், கட்டாயமாக 117 பெண்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வருவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

“இது தவெக பிரச்சனை இல்லை, தமிழ்நாட்டின் பிரச்சனை!”.. மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Anbumani Ramadoss: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“அதிமுக, பாஜக தயவில் 4 எம்எல்ஏ-க்கள்!”.. அன்புமணி ராமதாஸுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

Manickam Tagore MP Slams Anbumani Ramadoss: மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை என மத்திய அரசு கூறியதை எதிர்த்து ராஜ்யசபாவில் பாஜக அரசுக்கான ஆதரவை பாமக வாபஸ் பெறுமா என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி.. பாமக தலைவராக மீண்டும் அன்புமணி ராமதாஸ் தேர்வு.. பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

PMK President Anbumani Ramadoss: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த உட்கட்சி பிணக்குகள் முடிவுக்கு வந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் 2வது முறையாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!

Anbumani Latest Pressmeet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது என்றும், அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் பாமக செயல்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், மகனுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதை பார்க்கலாம்.

“அரசியலில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்”.. ராமதாஸ் அறிவிப்பு

PMK founder Ramadoss political retirement: மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் பாமக அன்புமணி வசம் மொத்தக் கட்சியையும் ஒப்படைப்பதாகத் தனது 88-வது பிறந்தநாளில் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிர உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து முற்றிலும் விலகும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது… பாமக தலைவர் அன்புமணி!

Mekedatu Issue: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

முடிவுக்கு வந்த தந்தை – மகன் மோதல் – வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். மேலும் தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!

PMK leader Anbumani: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது என்று அந்த கட்சியை சேர்ந்த அருள் தரப்பினர் போர் கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அருள் பல்வேறு காரணங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..

இந்த நிகழ்ச்சியில் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் பேட்மிண்டன் விளையாடினர். பின்னர் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?”… பாமகவில் அடுத்த சலசலப்பு.. அவசரக் கூட்டம் கூட்டும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்!

PMK Arul: பாமக-வின் முன்னாள் எம்.எல்.ஏ அருள் நாளை சேலத்தில் தனது 2000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அன்புமணி ராமதாஸ் தரப்புடன் பிற நிர்வாகிகள் இணையும் வேளையில், தங்களது தனித்துவமான அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை நாளைக்கே அறிவிக்கப் போவதாக அருள் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு.. 45 நிமிடம் நடந்தது என்ன?

Anbumani Meet Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி இன்று இரவு திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில், என்ன பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.