Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!

PMK Internal lssues : 16 குற்றச்சாட்டுகளுக்கு 2025 செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் கடந்த பாமக நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு, நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

அன்புமணி நீக்கமா? எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? .. செப். 3ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கிறார்..

Ramadoss VS Anbumani Ramadoss: பாமக தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக முன்வைக்கப்பட்டு அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை பதிலளிக்காத நிலையில் வரும் செபடம்பர் 3, 2025 அன்று நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Anbumani Ramadoss : விடியல் எங்கே என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை அளித்த திமுக அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பதவி.. பா.ம.கவில் அதிரடி டிவிஸ்ட்..

PMK Ramadoss Daughter Srikanthi Posting: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பாமக நிர்வாக குழுவில் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 நாட்கள் தான்.. அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்.. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு!

Ramadoss vs Anbumani : பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையில், அண்மையில் நடந்த பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த குற்றச்சாட்கள் குறித்து பதிலளிக்க அன்புமணிக்கு ராமதாஸ் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..

Anbumani Support To C.P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் பதிவுக்கு அவர் சரியான தேர்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

PMK Issue: ராமதாஸின் பொதுக்குழு.. அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

Pattali Makkal Katchi: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை..

Allegations Against Anbumani Ramadoss: ஆகஸ்ட் 17, 2025 தேதியான இன்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எதிராக 16 வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.

ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்.. பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம்..

PMK General Committee Meeting: ஆகஸ்ட் 17, 2025 தேதியான இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 37 தீர்மானங்கள் உடன் நிறைவேற்றப்பட்டது.

வதந்திகளை நம்ப வேண்டாம்.. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் – ராமதாஸ் அறிவிப்பு!

PMK Ramadoss : 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான நாளை நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், பொதுக்குழு நடைபெறாது என சில விஷமிகள் வதந்தி பரப்புவதை நம்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

முடிந்த ராமதாஸ் – அன்புமணி மோதல்? தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோ!

PMK Anbumani Ramadoss Issue : விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயின் பிறந்தநாளை கேக் வெட்டி பாமக தலைவர் அன்புமணி கொண்டாடினர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருந்துள்ளார். ஆனாலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் பேசிக்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை மகன் மோதலுக்கு நடுவில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Tamil Nadu News Updates: தேர்தல் ஆணையம் கதவை தட்டிய ராமதாஸ்.. நடந்தது என்ன?

Tamil Nadu Breaking News Today 12 August 2025, Updates: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9ல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் புகாரளித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..

PMK Women's Conference: பூம்புகாரில் நடந்த பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பூம்புகாரில் அன்புமணி இல்லாமல் நடக்கும் மகளிர் மாநாடு.. ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு..

PMK Women Conference: பூம்புகாரில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 10, 2025 தேதியான இன்று மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வன்னியர் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. விரக்தியுடன் பதிலளித்த நிறுவனர் ராமதாஸ்..

Ramadoss Vs Anbumani: அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9, 2025 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணியில் தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுகாலம் நீடித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.