Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?

ADMK BJP Alliance: இந்த நிலையில், கடந்த முறை அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த முறை அதனை இரட்டிப்பாக்கி கூடுதல் தொகுதிகளை பாஜக கோரியுள்ளது. அதாவது, அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுராந்தகத்தில் இன்று NDA-வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. 5 லட்சம் பேர் திரள வாய்ப்பு..

PM Modi visiting Tamil Nadu today: இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கேரளாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

பாமக எங்களுக்கே சொந்தம்…. உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு

PMK Leadership Dispute : பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி மீதான உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தன்னிடமே முழு உரிமை இருப்பதாக அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

PMK Contesting Constituencies: 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் தயாராகி உள்ளதா கூறப்படுகிறது. இந்த பட்டியலில் எந்தெந்த தொகுதிகள் உள்ளன என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

“அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!

ramadoss on pmk issue: தந்தைக்கே துரோகம் செய்த, தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். நேற்று நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது.

அதிமுக – பாமக இயற்கையான கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி!

அதிமுக - பாமக இயற்கையான கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில் இன்றைய தினம் நானும், அன்புமணியும் சந்தித்து வெற்றிக்கூட்டணிக்கான அச்சாரமிட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து.. பாமக பொதுக்குழுவை சாடிய கே.பாலு!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பாமக செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் மலக் பேசிய நிறுவனர் ராமதாஸ்..

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  திங்கள்கிழமை ( டிசம்பர் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  பேசிய அவர், என்னை மார்பிலும், முதுகிலும் அன்புமணி ஈட்டியால் குத்துவது போல குத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, அவரை அறியாமல் ராமதாஸ் கண்ணீர் சிந்தினார். உடனிருந்த காந்திமதி மற்று கட்சியின் கெளவரத் தலைவர் ஜி.கே.மணி அவரை ஆசுவாசப்படுத்தினர்.

அன்புமணி நெஞ்சில் குத்துகிறார்…கண்ணீர் சிந்தி அழுத ராமதாஸ்!

Pmk Anbumani And Ramdoss Clash: அன்புமணி நெஞ்சில் குத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அப்போது, அவர் திடீரென கண்ணீர் சிந்தி அழுதார். கூட்டணி அறிவிப்பு எப்போது என்றும் தெரிவித்தார்.

பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..

Anbumani Ramadoss: அன்புமணி தரப்பில் பாமகவிலிருந்து ஜி.கே. மணியை நீக்கி அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை பாமக இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இருவரும் தனித்தனியாக தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..

PMK Internal Issue: தேர்தல் ஆணையம் செப்டம்பர் 9 மற்றும் நவம்பர் 27 அன்று வெளியிட்ட உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், அவை சட்ட அதிகாரம் அற்றவை என்றும் உயர் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும் மருத்துவர் அன்புமணி அல்லது வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி செய்வது வேதனையாக உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Ramadoss: அன்புமணி தரப்புக்கு சின்னமும் கிடையாது, கட்சியும் கிடையாது என கூறி, இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணி தற்போது பாமக உறுப்பினரே அல்ல என்றும், அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறினார். கட்சியை கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“அன்புமணி விருப்ப மனு பெறுவது மோசடி வேலை”.. யாரும் ஏமாற வேண்டாம்.. ராமதாஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

PMK internal issue: பாமகாவுக்காக ராமதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சிறைக்கு சென்றதாகவும் தெரிவித்த அவர், அன்புமணி எத்தனை முறை சிறைக்கு சென்றார் என்றும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்குமாறு கூறி ராமதாஸை தானே சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவத்தார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்..

PMK Nomination: மிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..

PMK - TVK: பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்துக்கு சென்று, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை நேரில் வழங்கினர். வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கைகோர்க்கக்கூடும் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.