AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

இந்த தேர்தல் பாஜக – திமுகாவுக்கானது அல்ல.. திமுக – அதிமுகாவுக்கானது.. அன்புமணி ராமதாஸ்!

இந்த தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்குமானது அல்ல, இந்த தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கானது. பாஜகவுக்கும், திமுகவுக்குமான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

எம்எல்ஏ பதவி விவகாரம்.. அன்புமணி ஆதரவாளர் – ராமதாஸ் பேரன் முகுந்தன் பேசிய ஆடியோ வைரல்!

Ramadoss Grandson Mukundan Audio: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, ராமதாஸ் பேரன் முகுந்தனுக்கு எம்எல்ஏ பதவி தருவதாக அவரது ஆதரவாளர் கூறியிருந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம்.

“தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!

Tamilnadu Assembly Election: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப் பேசிய அன்புமணி, "அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளன. அவர் அதிமுக கூட்டணி வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுகிறார்" என்று அவர் குறிப்பிட்டார்.

“என் மரணத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது”.. ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

பாமகவை என்னிடம் இருந்து அபகரித்து விட்டனர். எப்போது எனக்கு மரணம் வரும் என ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மகன், மருமகள், பேத்திகள் கூட அப்படி நினைக்கின்றனர். அன்புமணி நல்ல பிள்ளை இல்லை. ‘எனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறுகிறார். என்னுடைய படத்தை அவர்கள் போடக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக பலவீனமடையாது என்றார்.

அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

Ramadoss Files Petition: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு எதிராக, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கும், அன்புமணிக்கும் தொடர்பு இல்லை என்பன உள்ளிட்ட வார்த்தைகளை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா..? வீடியோ வெளியிட்டு பாமக வேட்பாளர் திலகபாமா குற்றச்சாட்டு!

வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, அந்தந்த பகுதியை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை, ரோடு ஷோ, பொதுக்கூட்டம், மாநாடு என தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், தங்களது நடவடிக்கையால் அதிரடியால் தடுக்கப்பட்டதாகவும் பாமக வேட்பாளர் திலகபாமா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளாது. இதுகுறித்து பேசிய அவர், “தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பொதுமக்களுக்கு கூட இந்த பண விநியோகம் தெளிவாக தெரியும் நிலையில், அதிகாரிகளுக்கு அது தெரியாதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.

ராமதாஸ் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவர் கொடுத்த அப்டேட்.. அடுத்த 2 நாட்கள் மிக முக்கியம்!

PMK Founder Ramadoss Health Issue: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்து மருத்துவர் விளக்கம் அளித்து உள்ளார். இதில், என்ன விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

ராமதாஸ் உடல்நிலை.. யாரையும் சும்மா விடமாட்டேன்.. அன்புமணி பகிரங்க எச்சரிக்கை!

PMK Founder Ramadoss Ill Health: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவு விவகாரத்தில் தொடர்புடை நபர்களை சும்மா விடமாட்டேன் என்று அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்பு மணி ராமதாஸ் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“அதிமுக, பாமகவிற்கு செக்”.. சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் புதிய தேர்தல் வியூகம்.. வெடிக்கும் அரசியல் போர்!!

Tamilnadu Assembly Election: அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார். அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, சசிகலா தரப்பில் ஏ.எல்.சுரேஷ் போட்டியிடுகிறார்.

மாம்பழம் கை நழுவியது.. சிலிண்டர் சின்னம் கை கொடுத்தது.. 30 தொகுதிகளில் களமிறங்கும் ராமதாஸ் படை!

Ramadoss Team Cylinder Symbol Allotted: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியில் 30 தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி தரப்பில் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

“பனையூர் வாசலில் நிற்கப் போகிறீர்களா?”.. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் காட்டம்..

Tamilnadu Assembly Election: திமுக அரசின் ஐந்தாண்டு கால நிர்வாகத்தைச் கடுமையாகச் சாடிய அன்புமணி, சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். ஒரு நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்துப் போகிறது. மக்கள் பாதுகாப்பிற்காகப் படகுகளை வாங்கி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அன்புமணி.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

ஏப்ரல் 4ஆம் தேதி (நாளை), சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரூ.5 ஆயிரம் உதவித்தொகை – பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் ஏராளமான வாக்குறுதிகள்.. பாமக தேர்தல் அறிக்கையில் தகவல்!

Pmk Election Manifesto : தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார்.

பாமகவில் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு… செளமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!

Ramadoss PMK Candidate: ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 10 பேர் அடங்கிய 2- ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அன்புமணி தரப்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் செளமியா அன்புமணிக்கு எதிராக அ. சரவணன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.