AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1968ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவரின் மனைவி பெயர் சௌமியா. இந்த தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் எம்.பி.பி.எஸ் படித்த அன்புமணி ராமதாஸ், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பெருநிலைப் பொருளாதாரம் படித்தார். மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக 2 வருடம் பணி புரிந்தார். கடந்த 2004ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரம் அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியில் வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதே தர்மபுரி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.

 

Read More

ராமதாஸ் – சசிகலா அமைக்கும் புது கூட்டணி?… தைலாபுரத்தில் நடந்த திடீர் சந்திப்பு… பின்னணி என்ன!

PMK Ramadoss Sasikala Meet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுடன், புதிதாக கட்சி தொடங்கி சசிகலா திடீர் சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

ராஜ்ய சபா தேர்தல்.. அதிமுக-திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்!

Rajya Sabha Elections Nominations: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனுக்களை அதிமுக கூட்டணியை சேர்ந்த தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர் .

மாநிலங்களவை தேர்தல்.. வேட்பாளரை அறிவித்த அதிமுக.. ஒரு சீட் பாமகவிற்கு ஒதுக்கீடு..

MP Election: 2மாநிலங்களவைத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலும் இணைந்து அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்கச் செய்துள்ளன. தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவினாலும், பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி கடுமையாக உள்ளது.

மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகார்… பரிதவிப்பில் பாமகவினர்!

PMK Mango Symbol: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

பிப்ரவரி 27, 2026ஆம் தேதியான நேற்று ராமதாஸ் தரப்பில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மாம்பழச் சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்யக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் திரும்பப் பெற்றார்.

அன்புமணிக்கு எதிரான வழக்கு… பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Pmk Founder Ramados : மாம்பழம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருந்த கடிதத்தை ரத்து செய்யக் கோரி பா. ம. க தலைவர் அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார்.

பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்.. அறிவிப்பு எப்போது வெளியாகும்.. ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பு!

PMK Founder Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற தகவலை அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவை இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

துரோகத்தின் பெயரால் காங்கிரஸை தோற்கடிப்பது திமுக தான் – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு..

திமுக தரப்பில், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என தெளிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பாக அகில இந்திய தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.

நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல்.. மீனாட்சி அம்மன் கோயிலில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அதாவது 2026 பிப்ரவரி 11ம் தேதி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,”அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெறும்” என்று தெரிவித்தார்.

அன்புமணிக்கு தான் பாமக தலைவர் – தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி

EC Reaffirms Anbumani As PMK Leader : பாமக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தொடர்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாக மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!

TNPSC Group 2 exams postponed; டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வு…பாமகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்!

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் மாவட்டம் வாரியாக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நேர்காணலானது வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?

ADMK BJP Alliance: இந்த நிலையில், கடந்த முறை அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த முறை அதனை இரட்டிப்பாக்கி கூடுதல் தொகுதிகளை பாஜக கோரியுள்ளது. அதாவது, அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுராந்தகத்தில் இன்று NDA-வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. 5 லட்சம் பேர் திரள வாய்ப்பு..

PM Modi visiting Tamil Nadu today: இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கேரளாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.