AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Mar 2026 17:35 PM IST

சென்னை, மார்ச் 9, 2026: மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளரான கிறிஸ்டோபர், தேமுதிக வேட்பாளரான எல்.கே. சுதீஷ், அதிமுக வேட்பாளரான தம்பிதுரை, பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் ஆகிய ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்:

தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆறு இடங்களில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் வகையில் அரசியல் கட்சிகள் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்திருந்தன.

மேலும் படிக்க: “விஜய் மக்கள் சந்திப்பை முடக்க சதி”.. தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

அதன்படி, திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மற்றொரு புறம் அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு ஒரு இடமும், பாமகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான எம். தம்பிதுரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்புமனு தாக்கல்:

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்த நிலையில், போட்டியிட வேறு எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யாததால், மேற்கண்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நோயை விட கொடிய மருந்து – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு செல்லும் புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியும் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியும் இடையே ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆறு இடங்களும் போட்டியின்றி நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us