பள்ளி நிகழ்ச்சியில் கயிறு அறுந்து கீழே விழுந்த அமைச்சர் – நண்பர்களுடன் விளையாடியபோது விபத்து
சேலம் உடையாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 69ஆவது விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சேலம் உடையாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 69ஆவது விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், முன்னாள் மாணவர்களான அமைச்சரின் நண்பர்களுடன் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அமைச்சரை காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
